க.பொ.த (உயர் தரம்) 2016 பரீட்சையில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதல்நிலைப் பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டது
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவி செல்வி மனோகரி சுப்பிரமணியம் 3 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றும், மாவட்ட மட்டத்தில் 39வது நிலையைப்பெற்றும் யாழ்ற்ரன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க. பொ. த உயர்தரப் பரீட்சையில் 3A பெற்ற மாணவியாகவும், தீவகக் கல்வி வலயத்தில் இவ்வாண்டு முதல்நிலை பெற்ற மாணவியாகவும் திகழ்கிறார்.
மேலும் செல்வி. கருணிதா யோகராசா வர்த்தகப்பிரிவில் 2 A 1B சித்திகளையும் பெற்று மாவட்ட மட்டத்தில் 81வது இடத்தையும் பெற்றுள்ளார். இவ்விரு மாணவிகளும் இலங்கைப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்துக்கு தெரிவாவர்.
வர்த்தகப்பிரிவில் ஏனைய மாணவர் பெறுபேறுகள்
1. செல்வி. சிவகௌரி மயில்வாகனம் – 2B 1C
2. செல்வன். திருஞானசம்பந்தன் ரஜீவன் – 3S
வர்த்தகப்பிரிவில் இம்முறை 4 மாணவர்கள் தோற்றி 4 மாணவர்களும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர்.
விஞ்ஞானப்பிரிவுப் பேறுகள்
1. செல்வி. காயத்திரி ஆனந்தராசா – 2C 1S
2. செல்வன். சிவகுமாரன் சர்வணன் – 2C 1S
3. செல்வி. ஆரணி தர்மலிங்கம் – 2C 1S
விஞ்ஞானப்பிரிவிலும் 3 மாணவர்கள் தோற்றி மூவரும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். எனினும் சென்ற ஆண்டுக்கான வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் விஞ்ஞானப் பிரிவில் முதல் 2 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலைப்பிரிவுப் பெறுபேறுகள்
1. செல்வி. சசிகலா அம்பலவாணர் – 2B 1S
2. செல்வி. யுகன்யா கோணேஸ்வரன் – 1B 2C
3. செல்வி. லக்ஷிகா நவரட்ணம் – 1B 2S
4. செல்வி. சர்மினி சண்முகசுந்தரம் – 1C 2S
5. செல்வி. தர்ஜிகா விக்னேஸ்வரன் – 1C 2S
6. செல்வி. தனவதி சண்முகவடிவேல் – 2C
7. செல்வி. வனிதா ரவிக்குமார் – 1S
கலைப்பிரிவிலும் செல்வி சசிகலா அம்பலவாணர் சென்ற ஆண்டு வெட்டுப்புள்ளியின் பிரகாரம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கலைப்பிரிவில் 7 மாணவர்களில் 5 பேர்(71.4%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் மொத்தம் 14 மாணவர்கள் தோற்றி 12 பேர்(85.7%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். இம்முறை மொத்தம் 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவார்கள் (வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டதன் பின்னர் உறுதிப்படுத்தப்படும்). பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெறும் மாணவர்களையும், அவர்களுக்குக்கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகிறார்.
சென்ற ஆண்டு 4 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானர்.
கலைப்பீடம் – 1 மாணவி
நுண்கலைப்பீடம் – 2 மாணவர்கள்
கைத்தொழில் தொடர்பாடல் தொழில்நுட்ப பீடம் – 1 மாணவி (ஊவா வெல்லச பல்கலைக்கழகம், பதுளை)