காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழா இன்று திங்கட்கிழமை பல நூற்றுக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசத்துடன் பத்திபூர்வமாக ஆரம்பமானது.
இந்த உற்சவம் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற உள்ளது.இந்த உற்சவத்தில் எதிர்வரும் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை பஞ்சரத பவனியும் மறுநாள் புதன் கிழமை அதிகாலை 2.00 மணி முதல் நடேசப் பெருமானுக்கு ஆருத்திரா அபிஷேகமும் அதிகாலை 5.30 மணிக்கு ஆருத்திரா தரிசனமும் இடம்பெற்று மாலை 3.30 மணிக்கு திருவூடல் உற்சவமும் தொடர்ந்து தீர்த்த உற்சவமும் இடம்பெற உள்ளது.