சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை பிரதான மண்டபத்தின் முற்பகுதி அலுமினியம் வலை பொருத்தப்பட்டு இரண்டு நுழை வாயில்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. பாடசாலை அதிபரின் கோரிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட இந்த வேலைகளை நிறைவு செய்வதற்கு கனடா-காரை கலாசார மன்றம் நான்கு இலட்சத்து இருபத்தேழாயிரத்து தொழாயிரத்து ஐம்பது ரூபாவினை (427950.00 ரூபா) காரை அபிவிருத்திச் சபையின் ஊடாக உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைகள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட பிரதான மண்டபத்தின் புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்: