கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் சில தேவைகள் நிறைவேற்றப்பட்டது.

 

கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் சில தேவைகள் நிறைவேற்றப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு உதவி செய்வதன் பொருட்டு ஏறத்தாழ $ 2000 சேகரித்திருந்தது. இதன் மூலம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்குத் தேவையான உபகரணங்களும் மகப்பேற்றுத் தாய்மார்களை கிளினிக்கில் பார்வையிட வசதியாக ஒரு பகுதியினைப் புனரமைத்து மின்சார வசதிகள்,வர்ணப்பூச்சு வேலைகள்,கூரைகள் என்பனவற்றை எமது மன்றம் காரை அபிவிருத்திச் சபையூடாக நிறைவேற்றியிருந்தது. இதற்கு காரைநகர் இளையோர் அமைப்பு சிரமதானம் மூலம் அதனை நிறைவேற்றியிருந்தார்கள். மகப்பேற்று வைத்திய நிபுணர் திரு.N.சரவணபவன் தற்போது வாரந்தோறும்  காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதந்து கர்ப்பிணிகளை பார்வையிடுகின்றார். இதற்கான Ultrasound Scan இயந்திரத்தை திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அன்பளிப்பு செய்துள்ளார். இவற்றை ஜூலை மாதம் 2ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலை  பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தி சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார்.

இதனை நிறைவேற்றுதற்கு உதவி செய்த கனடா வாழ் காரைநகர் மக்களுக்கும்  “ஒருத்தி” திரைப்பட இயக்குனர் P.S.சுதாகரன் அவர்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.