காரைநகர் அபிவிருத்திசபை நூலக திட்டம்
மேற்படி திட்டம் தொடர்பாக கலந்துரையாடலும் அங்குரார்ப்பணக் கூட்டமும் 29-08-2010 மாலை 4.00 மணியளவில் லண்டன் வெம்பிளியில் உள்ள Moore Spice Restaurant மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஏற்பாட்டாளர் திருDr. S நடராசா அவர்கள் தலைமை தாங்கினார். பின்வரும் அன்பர்கள் சமூகமளித்திருந்தனர்.
1. திரு இ. சிவசுப்பிரமணியம்
2. திரு தி. ஞானேஸ்வரன்
3. திரு பொ. தருமநாயகம்
4. திரு த. கமலதேவி
5. திரு வி. நாகேந்திரம்
6. திரு பொ. ஞானானந்தன்
7. திரு தி. இரகுபதிரஜா
8. கலாநிதி ச. சபாரட்ணம்
9. திரு சு. சரவணபவான்
10. திரு ச. ஞானப்பிரகாசம்
11. திரு சிவா. தி. மகேசன்
12. திரு ந. ரவீந்திரன்
13. திரு வே. கயிலைநாதன்
14. திரு ச. பிரபாகரன்
15. திரு க. அனந்தராஜ்
16. திரு செ. கிருபாகரன்
17. திரு க. பாலகிருஸ்ணன்
18. திரு மு. தங்கராஜா
Dr. S நடராசா அவர்கள் இத்திட்;டத்தின் நோக்கத்தினையும் அதனை செயல்படுத்தும் வழிமுறை பற்றியும் எடுத்துக்கூறினார். முதலாவதாக இத்திட்டத்திற்கு வேண்டிய நிதி சேகரிப்பதற்கும் மேற்கொண்டு அதனை நடைமுறைபடுத்துவதற்கும் பிருத்தானியாவில் ஒரு குழு அமைக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இக்குழுவில் இணைப்பாளர்கள் மூவரும் அங்கத்தவர்கள் பத்து பேரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இணைப்பாளர்களாக –
1. திரு நடராசா ரவீந்திரன்
2. திரு இராமநாதன் சிவசுப்பிரமணியம்
3. திரு முருகேசு தங்கராசா
அங்கத்தவர்களாக
1. கலாநிதி ச. சபாரட்ணம் 6. திரு தி. ரகுபதிராஜா
2. திரு வி.நாகேந்திரம் 7. திரு தி. ஞானேஸ்வரன்
3. திரு சிவா. தி. மகேசன் 8. திரு சு. சரவணபவான்
4. திரு பொ. ஞானானந்தன் 9. திரு ச. பிரபாகரன்
5. திரு க. பாலகிருஸ்ணன் 10. திரு பொ. தருமநாயகம்
தெரிவு செய்யப்பட்டனர்
நிதி சேகரிப்பு
1. முதலாம் கட்டமாக இத்திட்டத்திற்கு முழு ஈடுபாட்டுடன் ஆதரவளிக்கும் அன்பர்களை அணுகி அவர்களிடம் கணிசமான நிதியை திரட்டுவது என்றும் இரண்டாம் கட்டமாக லண்டன் வாழ் காரை அன்பர்கள் அனைவரிடமும் இத்திட்டத்தினை தெரியப்படுத்தி அவர்களிடமும் நிதியை திரட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
2. லண்டன் காரைநலன்புரிச் சங்கம் இங்கிலாந்திலுள்ள அறக்கட்டளையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குச் சேகரிக்கும் நிதி அவ்வறக்கட்டளையின் கோட்பாடுகளுக்குள் அமைவதால் திரட்டப்படும் நிதி லண்டன் காரைநலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் அதனூடாகச் செலுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன் நிமித்தம் காரைநலன்புரிச் சங்கம் தனிப்பட ஒரு வங்கிக் கணக்கினைத் துவக்கியுள்ளது. இந்தமுறையினைப் பின்பற்றுவதனால் நூலகத்திட்டத்திற்கு வரிச்சலுகைகள் கிடைக்கவுள்ளது. சேகரிக்கப்படும் நூலக நிதியினை லண்டன் காரைநலன்புரிச் சங்கம் மேற்கூறிய கணக்கில் வைப்பிலிட்டு நூலகத்திட்டக்குழுவின் அனுமதியுடன் தேவைக்கேற்பப் காரைநகரிலுள்ள அபிவிருத்திச் சபைக்கு அனுப்ப வேண்டுமென்றும் தீர்மானிக்கப் பட்டது.
3. நூலக திட்டப் பணிகள் காரைநகரிலுள்ள காரைஅபிவிருத்திச் சபையால் செயல்படுத்தப்படும் என்றும் இப்பணிகளிற்கு உதவியாக இணைப்பாளர் ஓருவரை தெரிவு செய்து அவரின் உதவியுடன் இத்திட்டத்தினை மேற்பார்வை செய்து செயற்படுத்த வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் இணைப்பாளராக Dr. S நடராசா அவர்கள் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இவ்விணைப்பாளர் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஏனைய சபைகளினால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் அவைகளுடன் தொடர்புகொண்டு இப்பணியினைத் துரிதப்படுத்வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப் பட்டார்.
4. இத்திட்டத்திற்கான நிதியை இலங்கையிலுள்ள காரைநகர் அன்பர்களிடமிருந்தும் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டதுடன் அதற்கான முயற்சியும் எடுக்கப் படவேண்டுமென்றும்
தீர்மானிக்னப்பட்டது
கடிதத்தலைப்பு
(Letterhead) –
காரைநகர் நூலகத் திட்ட குழுவிற்கென ஒரு தனியான Letterhead அச்சிடுவதென முடிவெடுக்கப்பட்டது.
பற்றுச்சீட்டு புத்தகம் –
இத்திட்டத்திற்குப் பெறப்படும் நிதிக்குப் பற்றுச்சீட்டு வழங்குவதற்குப் பற்றுச்சீட்டுப் பத்தகம் அச்சிடப் படவேண்டுமெனவும் அதில் காரைநலன்புரிச்சங்கத்தின் அறக்கட்டளை இலக்கத்தினையும் குறிப்பிடவேண்டமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
கணிசமான நிதி வழங்குவோர்
இத்திட்டத்திற்கு கணிசமான நிதி பங்களிப்பு செய்வோரின் விபரம் கட்டிடத்தில் பொருத்தமான இடத்தில் பொறிக்கப்படும்.
நூலகத்தினை நிர்வகிக்கும் பொறுப்பு
இந்நூலகத்தினை காரைநகர் அபிவிருத்திசபையே நிர்வகிக்கும் என்றும் காரைஅபிவிருத்திச் சபையின் அலுவலகமும் இக்கட்டிடத்தில் இயங்குவதே சிறந்தது என்றும் கூறப்பட்டது.
கூட்டம் நன்றி உரையுடன் பிப. 7.00 மணிக்கு நிறைவுபெற்றது.
இக் கூட்டத்தில் பங்கு பற்றியோர் நூலகத் திட்டத்திற்கு மொத்தம் £24,000 நிதி வழங்குவதாக உறுதி அளித்தனர்.
Dr S நடராசா
ஏற்பாட்டாளர்