மாணவர்கள் இருவரின் பல்கலைக்கழக மேற்படிப்பிற்கான நிதியுதவி கோரல்

மாணவர்கள் இருவரின்  பல்கலைக்கழக மேற்படிப்பிற்கான 

நிதியுதவி கோரல்

கடந்த ஆண்டு நடைபெற்ற க .பொ .த உயர்தர பரீட்சையில் தோற்றிய யாழ்ரன் கல்லூரி மாணவர்களில்  இருவர்  பல்கலைக்கழகத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாணவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்துக்கும், மற்றைய மாணவர் கிழக்கு மாகாணத்தின் ஒலுவில் பிரதேசம் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும்  இணைந்த கற்கைநெறியில் பட்டப்படிப்பை மேற்கொள்ளவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிருவருடைய குடும்ப சூழ்நிலை நான்கு வருட மேற்படிப்பை மேற்கொள்ளக்கூடிய   வகையில் அமைந்திருக்கவில்லை. ஆகையால் இவ்விரு மாணவர்களின்  முழுமையான கற்கைநெறிக்கு  நிதியுதவி அளிக்க விரும்புவோர்  (647) 818 7443  என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அன்றி  karainagar@gmail.com மன்றத்தின் மின்னஞ்சல் முகவரியுடனோ தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

                    நிர்வாகம்  

கனடா காரை கலாச்சார மன்றம்