Category: காரைநகர் இந்துக் கல்லூரி
காரைநகர் இந்துக் கல்லூரி,யாழ்ற்ரன் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்!
காரைநகர் இந்துக் கல்லூரி,யாழ்ற்ரன் கல்லூரி
சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்
சென்ற ஆண்டு நடைபெற்றிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் இணையம் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன.
பெறுபேறுகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து கணித பாடப் பிரிவில் செல்வி கம்சிகா தேவராசா 3A சித்திகளைப் பெற்று தீவக வலயத்தில் முதன்மைப் பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்டதுடன் மாவட்ட ரீதியிலான தரவரிசைப் பட்டியலில் 37 வது இடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் செல்வி கிருத்திகா இராசலிங்கம் வர்த்தகப்பிரிவில் 2A C சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.
காரைநகர் இந்துக் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.
பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
செல்வி கம்சிகா தேவராசா கணிதப்பிரிவு 3A
செல்வி கிருத்திகா இராசலிங்கம் வர்த்தகப்பிரிவு 2A C
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.
பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்!
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்.
1.வீட்டுத் திட்டம்
காரைநகர் அல்வின் வீதியில் வசிக்கும் சிவானந்தராசா றூபரசி கண்பார்வையற்ற இவர் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றார். இவர் வீடு சிதைவடைந்த நிலையில் வீட்டில் வாழமுடியாது என காரை அபிவிருத்திச் சபை, கிராமசேவையாளரின் பரிந்துரைக்கேற்ப கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ரூபா 350,000.00 செலவில் திருத்தியமைத்துக் கொடுக்கப்பட்டது. இத் திட்டத்திற்கு உதவி செய்த அனைவருக்கும் மன்றம் நன்றி தெரிவிப்பதோடு மேலும் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செய்ய எமக்கு பொருளுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பழைய படத்தொகுப்பு:
புதிய படத்தொகுப்பு:
2.காரைநகர் பாடசாலைகளில் இருந்து கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான உதவி திட்டம்
நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக இவ்வருடம் கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பலவித கஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகியிருந்தார்கள். தற்போது October 11ம் திகதி பரீட்சை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். காரை இந்துக் கல்லூரியில் 28 பேரும், யாழ்ற்ரன் கல்லூரியில் 22 பேரும் காரைநகர் பாடசாலைகளில் இருந்து பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்குவிப்பு தொகையாக ரூபா 2500.00 பாடசாலை அதிபர்களினாலும் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களினாலும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வைத்து கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டது.
காரைநகர் இந்துக் கல்லூரி
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி
காரைநகர் பாடசாலை மாணவர்களின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளும் காரைநகர் கல்வி நிலைமையும்
காரைநகர் கல்வி நிலைமை
அண்மையில் வெளிவந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பாடசாலை பெறுபேறுகளின் படி தீவக வலயத்தில் 53.17% மாணவர்களே பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள். மன்னார் மாவட்டத்தில்74.17% மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.
காரைநகரில் உள்ள 4 பாடசாலைகளிலும் மொத்தம் 128 பேர் பரீட்சைக்குத் தோற்றி 64 மாணவர்கள் 50% மட்டுமே சித்தியடைந்துள்ளனர் அதிலும் 59 பேர் மட்டுமே உயர் கல்வியைத் தொடரமுடியும். இது கல்வியில் காரைநகர் எவ்வளவு தூரம் பின்னடைவாக உள்ளதென்பதைக் காணக் கூடியதாக உள்ளது.
நாம் ஒருசில மாணவர் பெற்ற அதிகூடிய பெறுபேறுகளை பார்த்து மட்டும் கல்வியின் தரத்தை நிச்சயிக்கமுடியாது. பாடசாலைகளில் கல்வியைத் தவிர்ந்து மற்றைய விடயங்களுக்காக நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காது கல்லூரி அதிபர்கள்,ஆசிரியர்கள் முழு அக்கறை எடுப்பார்களாயின் இந்த நிலைமையை மாற்றமுடியும். பாடசாலைகளில் உள்ள பணத்தை கொண்டு ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புச் சலுகைகள் அல்லது மேலதிக வகுப்புக்கள் என்பவற்றை நடத்துவதால் இந்த நிலைமையை மாற்றமுடியும் என நம்புகிறோம். எதிர்வரும் காலங்களில் விசேட வகுப்புக்களை நடத்த கனடா காரை கலாச்சார மன்றம் முன்வரும்.
[su_document url=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2020/05/KDS-OL-Results-9.pdf”]
காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து க.பொத. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்கள்.
காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து க.பொத. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்கள்.
சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இப்பரீட்சைக்கு காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிய 41 மாணவர்கள் சித்திபெற்று பல்கலைகக்கழகம் செல்லும் தகமையைப் பெற்றுள்ளனர். தீவக கல்வி வலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற முதன்மைப் பாடசாலையாக இக்கல்லூரி விளங்குகின்றது. இப்பெறுபேறுகளின் அடிப்படையில் 13க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு துறைகளிற்கும் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
No | Name | Results | stream | District rank |
1 | MissT.Kamsika | ABC | Maths | 112 |
2 | Mr.K.Vasantharuban | 2BC | Bio | 206 |
3 | Miss.B.Kulamathy | 2BS | Bio | 212 |
4 | MrK.Mirojan | 2BC | E.Tec | 15 |
5 | Mr.S.Thujavan | BCS | E.Tec | 19 |
6 | Mr.K.Kajanthan | B2C | E.Tec | 17 |
7 | Mr.P.Sinthuja | A2C | B.Tec | 20 |
8 | Miss.S.Ushanthini | ABC | Com | 169 |
9 | Miss.A.Ester | ABC | Arts | 12 |
10 | Miss.K.Priya | B2C | Arts | 32 |
11 | Mr.P.Alexan | ABC | Arts | 48 |
12 | Miss.S.Sinthuja | A2C | Arts | 134 |
13 | Miss.K.Thamilini | A2S | Arts | 205 |
காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்;த விளையாட்டுப் போட்டி 31.01.2018 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற உள்ளது.
காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்;த விளையாட்டுப் போட்டி 31.01.2018 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற உள்ளது.
கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் பிரதம விருந்தினராகவும்; காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் கௌரவ விருந்தினராகவும், தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.சகீலன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ள உள்ளனர்.
காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்
காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்
கடந்த ஆவணி 2017 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் எமது பாடசாலையில் இருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.
அம்மாணவர்களின் விபரம் வருமாறு:
1. செல்வன் தர்மலிங்கம் நாகரஞ்சன் – முகாமைத்துவ கற்கைகள், வணிகபீடம், யாழ் பல்கலைக்கழகம்.
2. செல்வன் கோமளேஸ்வரன் பாலசயந்தன் – உயிர்முறைமைகள் தொழினுட்பவியல், தென்கிழக்கு பல்கலைக்கழகம்
3. செல்வி டர்மிதா யோகநாதன் – உயிர்முறைமைகள் தொழினுட்பவியல், கொழும்பு பல்கலைக்கழகம்
4. செல்வி சரண்யா பேரின்பநாயகம் – கலைப்பீடம், யாழ்பல்கலைக்கழகம்.
5. செல்வி யுசிதா யோகரத்தினம் – கலைப்பீடம், கிழக்கு பல்கலைக்கழகம்.
உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவிற்கு முதல்முறையாக இரு மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.
சிறப்பாக நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும்
சிறப்பாக நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும்
காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 04.07.2018 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. இளங்கோ அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்க இருந்த திருமதி சுமதி ஸ்ரீசுந்தரராஜா அவர்கள் சுகயீன காரணத்தினால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத நிலையில் நினைவுப் பேருரையை எமது பாடசாலை ஆசிரியர் திருமதி பிரபா பிரபாகரன் அவர்கள் நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.
கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி. விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட “மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்” இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அனுசரணை வழங்கப்பட்டதுடன் “மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்பு விருதுகளாக
தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான பொதுத் தகைமைத்திறன் விருதுகள்
- ஆங்கிலத் துறைசார் தேர்ச்சிக்கான விருதினை செல்வி பிரியா கிருபானந்தராஜா பெற்றுக் கொண்டார்.
- மாகாண மட்ட கணித பாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதினை செல்வன் ஏ. கோபிநாத் பெற்றுக் கொண்டார்.
- மாகாண மட்ட கோலப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதினை செல்வி க. அபினோசா பெற்றுக் கொண்டார்.
- 2017ம் ஆண்டு மாகாண மட்ட 100m ஓட்டத்தில் 4ம் இடத்தினையும் 13.9செக்கன்களில் ஓடி முடித்தமைக்கான வர்ணச் சான்றிதழையும் (Colors award) பெற்றுக்கொண்ட மாணவன் செல்வன் கா. மயூரன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
மாகாண மட்ட Yarl Geek Challenge போட்டியில் Best Hardware விருதினை பின்வரும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்
- செல்வன் க. அனுசாந்
- செல்வன் க. கஜந்தன்
- செல்வன் சி. தூயவன்
சுவிஸ் காரை அபிவிருத்தச் சபையினால் நடாத்தப்பட்ட தியாகத்திறன் நாடகப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற பின்வரும் மாணவர்கள் விருதினைப் பெற்றுக் கொண்டனர்
- செல்வன் சி. அறிவரசன்
- செல்வன் ர. சயுவண்ணன்
- செல்வன் ஏ. துஸ்யந்தன்
- செல்வன் ச. யோன்
- செல்வன் த. சுகிர்தன்
- செல்வி க. டிலோசினி
- செல்வி தே. ஜென்சிகா
- செல்வி வ. பவீனா
பாடகர்கள்
1. செல்வி சி. புருசோத்தமி
2. செல்வி யோ. அஸ்மிலா
3. செல்வி கி. சர்மிளா
இப் போட்டிக்கு ஒத்துழைப்பு வழங்கிய செல்வி யோ. விம்சியா விருதினைப் பெற்றுக் கொண்டார்
இப் போட்டிக்கான பயிற்றுவிப்பாளர் திருமதி வி. ரமணன் ஆசிரியர் விருதினைப் பெற்றுக் கொண்டார்
2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது
1. செல்வன் ஏ. கோபிநாத் 9A
2. செல்வி பா. சிவராஜினி 9A
3. செல்வன் அ. பிரணவரூபன் 8A, B
4. செல்வி ச. தாரணி 4A, 3B, C, S
5. செல்வன் அ. ஜீவரங்கன் 4A, B, 2 C, S
6. செல்வி ஆ. அமிர்தா 4A, 3B, C
7. செல்வி கோ. பிருந்தா 3A, 2B, 3C, S
2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது
1. செல்வி பே. சரண்யா 2 A, B கலைத்துறை
2. செல்வன் த. நாகரஞ்சன் 2 A, B வர்த்தகத்துறை
3. செல்வி யோ. யுசிதா A, B, C கலைத்துறை
4. செல்வன் கோ. பாலசயந்தன் A, C, S தொழில்நுட்பப் பிரிவு
5. செல்வி யோ. டர்மிதா 2B, C தொழில்நுட்பத்துறை
6. செல்வி வி. விதுசா B, 2S விஞ்ஞானத்துறை
2017 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விருது
1. செல்வி கா. டிலானி வர்த்தகத்துறை
2. செல்வன் சி. கோகுலன் கலைத்துறை
3. செல்வி ந. யாழினி கலைத்துறை
4. செல்வன் ப. மகீபன் கலைத்துறை
5. செல்வன் க. வினோதன் கலைத்துறை
2015ம் ஆண்டின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விருது
1) செல்வி சிந்துயா பரமநாதன்
2) செல்வி டினோஜா நவரட்ணராஜா
3) செல்வி குயிலினி பேரானந்தம்
ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு :
அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய கணவரும் கல்லூரியின் முன்னாள் உப அதிபருமான அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்
1. செல்வன் ஏ. கோபிநாத்
2. செல்வி பா. சிவராஜினி
அமரர் வே. நடராசா ஞாபகார்த்தப் பரிசு
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் கல்லூரியின் முன்னாள் கணித பாட ஆசிரியர் திரு வே. நடராசா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற மாணவன் செல்வன் அ. பிரணவரூபன் பெற்றுக் கொண்டார்
அமரர் பொன்னம்பலவாணர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் கல்லூரியின் முன்னாள் கணிதபாட ஆசிரியர் பொன்னம்பலவாணர் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற மாணவி செல்வி ச. தாரணி பெற்றுக் கொண்டார்
அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களால் அவரின் அன்புக்குரிய தாயார் அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017ம் ஆண்டு க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் சிறப்புச் சித்தி (A சித்தி)பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
- செல்வி ஆ. அமிர்தா
- செல்வி கோ. பிருந்தா
- செல்வி சி. சர்மிளா
- செல்வி ச. தாரணி
அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபகார்த்தப் பரிசுகள்
திரு மாணிக்கம் கனகசபாபதி அவர்களால் தமது அன்புக்குரிய பெரியதந்தை அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசில்களை 2017 ஆம் ஆண்டின்
சிறந்தமெய்வல்லுன வீரனுக்கான விருதினை செல்வன் க. வசந்தரூபன் பெற்றுக் கொண்டார்
சிறந்தமெய்வல்லுன வீராங்கனைக்கான விருதினை செல்வி சு. சிந்துஜா பெற்றுக் கொண்டார்
அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு
திரு கனக சிவகுமாரன் அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் க. கஜந்தன் பெற்றுக் கொண்டார்
அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களால் மறைந்த தனது அன்புக்குரிய தந்தை அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் அவர்களது ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானத் துறை, தொழில்நுட்பத் துறையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
- செல்வி வி. விதுசா – விஞ்ஞானத்துறை
- செல்வன் கோ. பாலசயந்தன் – தொழில்நுட்பத் துறை
- செல்வி யோ. டர்மிதா – தொழில்நுட்பத் துறை
அமரர் R. கந்தையா மாஸ்ரர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சிவபாக்கியம் நடராஜா அவர்களால் தனது அன்புக்குரிய தந்தை அமரர் சு. கந்தையா மாஸ்ரர் அவர்களது ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை பின்வரும் ஆசிரியர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
- திருமதி கலாநிதி சிவனேசன்
- திருமதி கலாசக்தி றொபேசன்
- திரு இராசரத்தினம் ஜீவராஜ்
- திருமதி சகுந்தலா கேசவன்
- திரு முத்துத்தம்பி ஜெயானந்தன்
மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளான ஆங்கிலப்பாடல், குழு இசை, நாட்டிய நாடகம், நாடகம் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வானது பரிசளிப்பு விழாக் குழுவின் செயலாளர் திருமதி சி. லக்ஸ்மன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.
விழா நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்
சிறப்பாக நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும்
சிறப்பாக நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும்
காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 04.07.2018 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. இளங்கோ அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்க இருந்த திருமதி சுமதி ஸ்ரீசுந்தரராஜா அவர்கள் சுகயீன காரணத்தினால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத நிலையில் நினைவுப் பேருரையை எமது பாடசாலை ஆசிரியர் திருமதி பிரபா பிரபாகரன் அவர்கள் நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.
கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி. விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட “மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்” இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அனுசரணை வழங்கப்பட்டதுடன் “மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்பு விருதுகளாக
தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான பொதுத் தகைமைத்திறன் விருதுகள்
- ஆங்கிலத் துறைசார் தேர்ச்சிக்கான விருதினை செல்வி பிரியா கிருபானந்தராஜா பெற்றுக் கொண்டார்.
- மாகாண மட்ட கணித பாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதினை செல்வன் ஏ. கோபிநாத் பெற்றுக் கொண்டார்.
- மாகாண மட்ட கோலப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதினை செல்வி க. அபினோசா பெற்றுக் கொண்டார்.
- 2017ம் ஆண்டு மாகாண மட்ட 100m ஓட்டத்தில் 4ம் இடத்தினையும் 13.9செக்கன்களில் ஓடி முடித்தமைக்கான வர்ணச் சான்றிதழையும் (Colors award) பெற்றுக்கொண்ட மாணவன் செல்வன் கா. மயூரன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
மாகாண மட்ட Yarl Geek Challenge போட்டியில் Best Hardware விருதினை பின்வரும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்
- செல்வன் க. அனுசாந்
- செல்வன் க. கஜந்தன்
- செல்வன் சி. தூயவன்
சுவிஸ் காரை அபிவிருத்தச் சபையினால் நடாத்தப்பட்ட தியாகத்திறன் நாடகப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற பின்வரும் மாணவர்கள் விருதினைப் பெற்றுக் கொண்டனர்
- செல்வன் சி. அறிவரசன்
- செல்வன் ர. சயுவண்ணன்
- செல்வன் ஏ. துஸ்யந்தன்
- செல்வன் ச. யோன்
- செல்வன் த. சுகிர்தன்
- செல்வி க. டிலோசினி
- செல்வி தே. ஜென்சிகா
- செல்வி வ. பவீனா
பாடகர்கள்
1. செல்வி சி. புருசோத்தமி
2. செல்வி யோ. அஸ்மிலா
3. செல்வி கி. சர்மிளா
இப் போட்டிக்கு ஒத்துழைப்பு வழங்கிய செல்வி யோ. விம்சியா விருதினைப் பெற்றுக் கொண்டார்
இப் போட்டிக்கான பயிற்றுவிப்பாளர் திருமதி வி. ரமணன் ஆசிரியர் விருதினைப் பெற்றுக் கொண்டார்
2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது
1. செல்வன் ஏ. கோபிநாத் 9A
2. செல்வி பா. சிவராஜினி 9A
3. செல்வன் அ. பிரணவரூபன் 8A, B
4. செல்வி ச. தாரணி 4A, 3B, C, S
5. செல்வன் அ. ஜீவரங்கன் 4A, B, 2 C, S
6. செல்வி ஆ. அமிர்தா 4A, 3B, C
7. செல்வி கோ. பிருந்தா 3A, 2B, 3C, S
2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது
1. செல்வி பே. சரண்யா 2 A, B கலைத்துறை
2. செல்வன் த. நாகரஞ்சன் 2 A, B வர்த்தகத்துறை
3. செல்வி யோ. யுசிதா A, B, C கலைத்துறை
4. செல்வன் கோ. பாலசயந்தன் A, C, S தொழில்நுட்பப் பிரிவு
5. செல்வி யோ. டர்மிதா 2B, C தொழில்நுட்பத்துறை
6. செல்வி வி. விதுசா B, 2S விஞ்ஞானத்துறை
2017 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விருது
1. செல்வி கா. டிலானி வர்த்தகத்துறை
2. செல்வன் சி. கோகுலன் கலைத்துறை
3. செல்வி ந. யாழினி கலைத்துறை
4. செல்வன் ப. மகீபன் கலைத்துறை
5. செல்வன் க. வினோதன் கலைத்துறை
2015ம் ஆண்டின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விருது
1) செல்வி சிந்துயா பரமநாதன்
2) செல்வி டினோஜா நவரட்ணராஜா
3) செல்வி குயிலினி பேரானந்தம்
ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு :
அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய கணவரும் கல்லூரியின் முன்னாள் உப அதிபருமான அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்
1. செல்வன் ஏ. கோபிநாத்
2. செல்வி பா. சிவராஜினி
அமரர் வே. நடராசா ஞாபகார்த்தப் பரிசு
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் கல்லூரியின் முன்னாள் கணித பாட ஆசிரியர் திரு வே. நடராசா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற மாணவன் செல்வன் அ. பிரணவரூபன் பெற்றுக் கொண்டார்
அமரர் பொன்னம்பலவாணர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் கல்லூரியின் முன்னாள் கணிதபாட ஆசிரியர் பொன்னம்பலவாணர் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற மாணவி செல்வி ச. தாரணி பெற்றுக் கொண்டார்
அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களால் அவரின் அன்புக்குரிய தாயார் அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017ம் ஆண்டு க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் சிறப்புச் சித்தி (A சித்தி)பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
- செல்வி ஆ. அமிர்தா
- செல்வி கோ. பிருந்தா
- செல்வி சி. சர்மிளா
- செல்வி ச. தாரணி
அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபகார்த்தப் பரிசுகள்
திரு மாணிக்கம் கனகசபாபதி அவர்களால் தமது அன்புக்குரிய பெரியதந்தை அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசில்களை 2017 ஆம் ஆண்டின்
சிறந்தமெய்வல்லுன வீரனுக்கான விருதினை செல்வன் க. வசந்தரூபன் பெற்றுக் கொண்டார்
சிறந்தமெய்வல்லுன வீராங்கனைக்கான விருதினை செல்வி சு. சிந்துஜா பெற்றுக் கொண்டார்
அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு
திரு கனக சிவகுமாரன் அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் க. கஜந்தன் பெற்றுக் கொண்டார்
அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களால் மறைந்த தனது அன்புக்குரிய தந்தை அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் அவர்களது ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானத் துறை, தொழில்நுட்பத் துறையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
- செல்வி வி. விதுசா – விஞ்ஞானத்துறை
- செல்வன் கோ. பாலசயந்தன் – தொழில்நுட்பத் துறை
- செல்வி யோ. டர்மிதா – தொழில்நுட்பத் துறை
அமரர் R. கந்தையா மாஸ்ரர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சிவபாக்கியம் நடராஜா அவர்களால் தனது அன்புக்குரிய தந்தை அமரர் சு. கந்தையா மாஸ்ரர் அவர்களது ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை பின்வரும் ஆசிரியர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
- திருமதி கலாநிதி சிவனேசன்
- திருமதி கலாசக்தி றொபேசன்
- திரு இராசரத்தினம் ஜீவராஜ்
- திருமதி சகுந்தலா கேசவன்
- திரு முத்துத்தம்பி ஜெயானந்தன்
மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளான ஆங்கிலப்பாடல், குழு இசை, நாட்டிய நாடகம், நாடகம் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வானது பரிசளிப்பு விழாக் குழுவின் செயலாளர் திருமதி சி. லக்ஸ்மன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.
விழா நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்
காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து கடற்படையினரின் முகாமை அகற்ற மன்றமும் ஈடுபாடு
காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து கடற்படையினரின் முகாமை அகற்ற மன்றமும் ஈடுபாடு
காரைநகர் மக்களின் ஒப்பற்ற உயர் நிலைக்கு இந்துக் கல்லூரியின் பணி அருணாச்சல உபாத்தியாயர் காலத்திலிருந்து இன்றுவரை அளப்பரியது. பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மடத்துக்கரை அம்மன் அருளாட்சியும், கல்லூரி மண்டபத்தில் அமைந்துள்ள சரஸ்வதி தாயின் அருட்கடாட்ச்சமும் மாணவர்களை தொடர்ந்து அதிஉன்னத நிலைக்கு இட்டுச்சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு தீவக வலயத்தில் சிறந்த பாடசாலையாக சகல துறைகளில் திகழ்வதும் மற்றும் மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளும் சான்று பகர்கின்றன. இக்கல்லூரிக்கு ஊரவர்கள் மட்டுமல்லாது மூளாய், அராலி, சுழிபுரம், வட்டுக்கோட்டை போன்ற அயற்பிரசேதங்களில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் படித்தும், படிப்பித்தும் பயன்பெறுகின்ற சிறப்பும் அனைவரும் அறிந்ததே.
மண்ணின் மகத்தான பாடசாலை அண்மித்த பாடசாலை திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, அபிவிருத்தி பணிகள் தொடங்ககூடிய நிலையில்இருந்தன. இத்தகைய சூழ் நிலையில் பாடசாலை வளாகத்தில் கடற்படையினர் அத்துமீறி முகாமிட்டுருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முகாமை அகற்றி கல்விசார் சமூகத்தினதும், ஊரவர்கள் அனைவரதும் பீதியற்ற நிலைமையை உருவாக்க பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது தவிர்க்கமுடியாததொன்றாகும். மன்றத்தின் தலைவரும் கடற்படையினரின் முகாமை அகற்றுவதற்காக தொடர்ச்சியாக பிரதேச செயலாளர், பாடசாலை நிர்வாகம் மற்றும் உரிய அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்புகளை பேணி வருகின்றார். மேற்கொண்டு விரைவில் அரச அதிபர், மாவட்ட கட்டளை அதிகாரி, பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கும் மகஜர் அனுப்பப்படவுள்ளது.
காரைநகர் இந்துக் கல்லூரிக்கு விரைவில் தொழில்நுட்ப பீடம்
காரைநகர் இந்துக் கல்லூரிக்கு விரைவில் தொழில்நுட்ப பீடம்
காரைநகர் இந்துக் கல்லூரியில் தொழில்நுட்ப பீடம் ஒன்றினை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரகள் ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார்.
சிறந்த பாடசாலை அண்மித்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் காரைநகர் இந்துக் கல்லூரியம் தெரிவு செய்யப்பட்ட போதிலும் அதற்குரிய பணிகள் முன்னெடுப்பது தாமதமாகி வருகின்றது.
இதனால் காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் பெருமளவு மாணவர்கள் தொழில்நுட்பக் கற்கைக்காக யாழ் நகரப் பாடசாலைகளுக்கே செல்லவேண்டி உள்ளது.எனவே காரைநகர் இந்துக் கல்லூரியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விரைவில் தொழில் நுட்ப பீடத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் இந்த மாணவர்களை இணைத்து கற்பிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
எனினும் இப் பாடசாலைக்கு மாணவர்கள் இரு பஸ்களில் சென்றே கற்கமுடியும் இது மாணவர்களுக்குக் கடினமானதாக அமையும் எனச் சுட்டிக்காட்டியதை அடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் தொழில்நுட்ப பீடத்தினை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
அத்துடன் காரைநகர் ஊரி அ.மி.த.க. பாடசாலையினைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இப் பாடசாலையில் தரம் 5 வரையான வகுப்புக்களே தற்போது நடைபெற்று வருகின்றது. இங்கு 120 இற்கம் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் வருடாந்தம் 30 மாணவர்கள் தரம் ஆறுக்காக வெளியேறுகின்றனர்.
வெளியேறும் மாணவர்கள் நீண்ட தூரம் சென்றே தரம் ஆறில் கற்க வேண்டி உள்ளது. வேறு பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சீரின்றி இருப்பதுடன் வீதிகளும் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது.இதனால் இங்குள்ள வறுமைப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல இன்னல்களை அனுபவிப்பதுடன் கல்வியில் ஆர்வம் காட்டப் பின்னடிக்கினறனர்.எனவே இப்பாடசாலையில் தரம் 6 தொடக்கம் வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பில் மேலிடத்தில் ஆராயப்படும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
காரைநகர் பாடசாலைகளின் (இந்துக் கல்லூரி,யாழ்ற்ரன் கல்லூரி, சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்) க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் 2017
காரைநகர் இந்துக் கல்லூரி
HINDU COLLEGE
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி
YARLTON COLLEGE
காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்
SUNDARAMOORTHY VID
க.பொ.த சா-த பரீட்சையில் தீவக வலயத்தில் முதன்மைப் பெறு பேறு பெற்று காரை இந்து சாதனை
க.பொ.த சா-த பரீட்சையில் தீவக வலயத்தில் முதன்மைப் பெறு பேறு பெற்று காரை இந்து சாதனை
12 ஆண்டுகளுக்குப் பின்னர் இரு மாணவர்கள் 9A முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்
கடந்த டிசம்பர் மாதம் 2017 இல் நடைபெற்ற க.பொ.த சா-த பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன.
மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் 9A என்ற பெறுபெற்றினைப் பெற்றுக் கொண்டதன் மூலம் தீவக வலயத்தில் முதன்மைப் பெறுபெற்றினைப் பெற்ற பாடசாலையாக காரைநகர் இந்துக் கல்லூரி திகழ்கின்றது.
செல்வி சிவராஜினி பாலேந்திரா, செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் ஆகிய இரு மாணவர்களுமே எல்லாப் பாடங்களிலும் அதிசிறப்புச் சித்தி (9A ) பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு முன்னர் 2005 டிசம்பர் க.பொ.த சா-த பரீட்சையில் காரைநகர் இந்துக் கல்லூரிக்குக் கிடைக்கப்பெற் 9A முதன்மைப் பெறுபேற்றுக்குப் பின்னர் 2017 டிசம்பர் க.பொ.த சா-த பரீட்சையில் இரு மாணவர்கள் 9A முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் செல்வன் அமுதசிங்கம் பிரணவரூபன் என்ற மாணவன் 8A B என்ற பெறுபேற்றினையும், மேலும் 3 மாணவர்கள் 4A இனையும் பெற்றுள்ளனர்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற முதல் 7 மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு – 2017
மாணவர் பெயர் | பெறுபேறு | |
1. | செல்வி சிவராஜினி பாலேந்திரா | 9A |
2. | செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் | 9A |
3. | செல்வன் அமுதசிங்கம் பிரணவரூபன் | 8A B |
4. | செல்வி தாரணி சடாட்சரம் | 4A 3B C S |
5. | செல்வி அமிர்தா ஆனந்தராசா | 4A 3B C |
6. | செல்வன் அரியபுத்திரன் ஜீவரங்கன் | 4A B 2C S |
7. | செல்வி பிருந்தா கோவிந்தராசா | 3A 2B 3C S |
கீழே சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் படங்களையும் பாடசாலை முன்றலில் அதிபர், ஆசிரியர்களுடன் மாணவர்களின் படங்களையும் காணலாம்.
செல்வி சிவராஜினி பாலேந்திரா – 9A
செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் – 9A
செல்வன் அமுதசிங்கம் பிரணவரூபன் – 8A, B
செல்வி தாரணி சடாட்சரம் 4A 3B C S
செல்வி அமிர்தா ஆனந்தராசா 4A 3B C
செல்வன் அரியபுத்திரன் ஜீவரங்கன 4A B 2C S
செல்வி பிருந்தா கோவிந்தராசா 3A 2B 3C S
காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற வீதியோட்டப் போட்டிகள்.
காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற வீதியோட்டப் போட்டிகள்.
வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்ட போட்டிகள்
பாடசாலையின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் இப்போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். இப்போட்டிகளில் முதல் 5 இடங்களைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு.எமது பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்ப நிகழ்வான ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்டப் போட்டிகள் 19.01.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு இடம்பெற்றது.
ஆண்களுக்கான வீதியோட்டம்
1ம் இடம் – செல்வக் K. வசந்தரூபன் – தியாகராஜா இல்லம்
2ம் இடம் – செல்வன் S. சஜிந்தன் – பாரதி இல்லம்
3ம் இடம் – செல்வன் K. மயூரன் – நடராஜா இல்லம்
4ம் இடம் – செல்வன் A. கிருசிகன் – சயம்பு இல்லம்
5ம் இடம் – செல்வன் S. சஞ்ஜீவன் – நடராஜா இல்லம்
பெண்களுக்கான வீதியோட்டம்
1ம் இடம் – செல்வி S. அசந்தா – நடராஜா இல்லம்
2ம் இடம் – செல்வி M. ரூபிகா – சயம்பு இல்லம்
3ம் இடம் – செல்வி K. சுயாளினி – நடராஜா இல்லம்
4ம் இடம் – செல்வி S. சரண்யா – சயம்பு இல்லம்
5ம் இடம் – செல்வி S. சிந்துஜா – தியாகராஜா இல்லம்
டெங்கு காய்ச்சல் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலைக்கான போட்டியில் முலாவது இடத்தினைப் பெற்று காரை. இந்து சாதனை.
டெங்கு காய்ச்சல் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலைக்கான போட்டியில் முலாவது இடத்தினைப் பெற்று காரை. இந்து சாதனை.
ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமனையினால் நடத்தப்பட்டிருந்த டெங்கு காய்ச்சல் நோய் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலையை தெரிவு செய்வதற்கான போட்டியில் முதலாவது இடத்தினைப் பெற்றுக்கொண்ட காரைநகர் இந்துக் கல்லூரிக்கு பாராட்டு விருதும் ஐயாயிரம் ரூபா பணப் பரிசிலும் வழங்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் நிர்வாக எல்லைக்குட்பட்டு வருகின்ற காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தன. நாடளாவிய ரீதியில் பரவி வருகின்ற டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு தொடர்பில் மக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டின் ஓர் அங்கமாக இப்போட்டி நடத்தப்பட்டிருந்தது.
சுகாதாரத்தைப் பேணி நோய்கள் வராது தடுப்பது தொடர்பில் ‘நிலைபேறான அபிவிருத்தி’ என்கின்ற திட்டம் நாடுதழுவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்துள் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டு அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் தலைமையிலான ஆசிரியர்களை உள்ளடக்கிய குழு குறித்த திட்டச் செயற்பாடுகளை மாணவர்கள் மத்தியில் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.
இத்திட்டக் குழுவின் உப-குழுவே மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பிலான அறிவினை ஏற்படுத்தி அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் தெரியப்படுத்தி டெங்கு காய்ச்சல் அற்ற பாடசாலையாக எமது பாடசாலை விளங்குவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
அந்தவகையில் இவ் உப குழுவின் தலைவரான அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களையும் உப குழுவின் உறுப்பினர்களாகப் பணியாற்றி வருகின்ற ஆசிரியர்களான திரு ச. அரவிந்தன், திரு ஞா. கிரிதரன், திருமதி க. சுபத்திரா, திருமதி க. சந்திரமோகன், செல்வி வி. தாட்சாயினி, செல்வி சி. கிருபாலினி ஆகியோரையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.
பாடசாலையின் சார்பில் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் சுகாதார மருத்துவ அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்ட விருதினையும் சான்றிதழையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்:
காரை.இந்துவின் பழைய மாணவன் கலாநிதி கென்னடியின் மறைவிற்கு கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காரை.இந்துவின் பழைய மாணவன் கலாநிதி கென்னடியின் மறைவிற்கு கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் எத்தியோப்பியா மடவளபு பல்கலைக் கழகத்தின் ஆங்கில இணைப் பேராசிரியருமாகிய கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஐயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00மணிக்கு நடைபெற்றது.
கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்ட இவ் அஞ்சலிக் கூட்டத்தில் அன்னாரது ஆத்ம சாந்திக்காக இரு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் அஞ்சலி உரையும் இடம்பெற்றிருந்தது.
கலாநிதி கென்னடி அவர்கள் சிறந்த கல்விமானாகவும் மக்களின் தொண்டனாகவும் விளங்கி கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்பதுடன் தமிழ் மக்களுக்கான பணியிலும் காரை.மண்ணின் மக்களுக்கான பணியிலும் பல வரலாற்றுத் தடங்களை ஏற்படுத்தி அனைவர் நெஞ்சங்களிலும் நிலைபெற்றுவிட்ட உன்னதமான மக்கள் சேவையாளன் என திருமதி சிவந்தினி தமது அஞ்சலி உரையில் குறிப்பிட்டிருந்தார். கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அன்னாருக்கு அஞ்சலி தெரிவித்து பிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரை இந்து சாதனை!
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரை இந்து சாதனை!
உயிரியல் விஞ்ஞானம் – 1, உயிர் முறைமை தொழில்நுட்பம் – 2, வணிகம் – 1, கலைத்துறை – 4 உள்ளிட்ட 8 மாணவர்கள பல்கலைக்கழக அனுமதி பெறும் வாய்ப்பு!
முதல் தடவையாக உயிர்முறைமைகள் தொழினுட்பவியலில் 2 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லவுள்ளனர்!
சென்ற ஆகஸ்டு மாதம் நடைபெற்றிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் இணையம் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன.
இப் பெறுபேறுகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரைநகர் கோட்ட மட்டத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.
இப்பரீட்சைக்கு தோற்றியவர்களுள் 21 மாணவர்கள் குறித்த கற்கைநெறிகளுக்குரிய 3 பாடங்களிலும் சித்தியடைந்ததன் மூலம் பல்கலைக் கழகம் செல்வதற்கான தகமையினைப் பெற்றுள்ளனர். இவர்கள் பெற்றுள்ள மாவட்ட நிலையினை கருத்திற்கொள்ளும்போது குறைந்தது எண்மருக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைப்பது உறுதியானது எனக் கூறப்படுகிறது. வெட்டுப் புள்ளி நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
உயிரியல்(1), வணிகம்(1), கலை(4), உயிர் முறைமை தொழில்நுட்பம்(2), ஆகிய கற்கைநெறிப் பிரிவுகளைச் சேர்ந்த 8 மாணவர்களே பல்கலைக் கழகம் செல்கின்ற வாய்ப்பினை பெற்றுள்ள அதேவேளை உயிர் முiறைமை தொழில்நுட்பப் பிரிவுக்கு இக்கல்லுரியிலிருந்து முதல் தடவையாக இரு மாணவர்கள் செல்லவுள்ளதாக கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தெரிவித்தார்.
இக்கல்லூரி பெற்றுக்கொண்ட சிறந்த பெறுபேறுகள் குறித்து மகழ்ச்சியை வெளிப்படுத்திய அதிபர் இம்மாணவர்களுக்கும் இவர்களைக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பராட்டி வாழ்த்துகின்றது.
மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேற்றின் விபரங்களை கீழுள்ள அட்டவணையில் பார்வையிடலாம்:
No
|
Name | Subject stream | Results | District Rank | Entrance stream |
1 | Tharmalingam Nagaranjan | commerce | 2A B | 75 | Management |
2 | Vickneswaran Pathmini | commerce | BCS | – | – |
3 | Rasathurai Bavananthan | commerce | 2CS | – | – |
4 | Suntharalingam Umakanthan | commerce | 2CS | – | – |
5 | Krishnapillai Ajthkumar | commerce | C2S | – | – |
6 | Vickneswaran Kuruparan | commerce | C2S | – | – |
7 | Navaratnarajah Jasmina | commerce | 3S | – | – |
8 | Perinpanayakam Saranya | Arts | 2AB | 100 | Arts |
9 | Kantheeswaran Saransiya | Arts | 2BC | 374 | Arts |
10 | Yogaratnam Jusitha | Arts | ABC | 273 | Arts |
11 | Thevarasa Romila | Arts | 2BS | – | – |
12 | Kanagaratnam Abirami | Arts | 2BC | 360 | Arts |
13 | Uthayakumar Mehala | Arts | B2C | – | – |
15 | Kirishnapillai Dilakshan | Arts | C2S | – | – |
16 | Yoganathan Dharmitha | Bio Tec | 2BC | 21 | Bio Tec |
17 | Komaleswaran
Balasayanthan |
Bio Tec | ACS | 33 | Bio Tec |
18 | Somasuntharam
Jasitharan |
Eng.Tec | 3S | ||
19 | Krishnapillai
Ajithkumar |
Eng.Tec | 3S | ||
20 | Sriskantharasa Sarangan | Eng.Tec | 3S | ||
21 | Sivapatham Vithusa | Bio | B2S | 574 | Bio |
அதிபர், ஆசிரியர்களுடன் சாதனை மாணவர்கள் பாடசாலை முன்றலில் அமர்ந்திருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
காரைநகர் இந்துக் கல்லூரி அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
காரைநகர் இந்துக் கல்லூரி அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரச கல்விப்பகுதியால் நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற ‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை’ என்கின்ற மகுடத்துடனான பாரிய அபிவிருத்தித் திட்டத்தில் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததேயாகும். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட பரப்பளவுடைய காணி பாடசாலையின் பெயரில் அமைந்திருக்க வேண்டியது அவசியமானதாகும். பாடசாலையை சூழவுள்ள பொருத்தமான காணிகளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பாடசாலைச் சமூகம் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. மடத்துக்கரை அம்பாள் ஆலயத்திற்கு எதிர்ப்புறமாக பிரதான வீதியுடன் அமைந்துள்ள இரண்டு பரப்புக் காணியை சென்ற ஆண்டு கொள்வனவு செய்வதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உதவியிருந்தது. இக்காணியுடன்; இணைந்த மூன்று பரப்புக் காணியை கொள்முதல் செய்வதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை உதவியிருந்தது. பாடசாலையின் வடக்கு வளாகத்தின் கிழக்கு எல்லையில் பிரதான வீதியுடன் அமைந்திருக்கும் ஐந்தரைப் பரப்புக் காணியை கொள்முதல் செய்வதற்கு பெரிய பிரித்தானியா-காரை நலன் புரிச் சங்கத்தினர் உதவியிருந்தனர். குறிப்பிட்ட அபிவிருத்தித் திட்டம் எமது கல்லூரிக்குக் கிடைத்ததில் முன்னைநாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலனின் பங்களிப்பு பாராட்டப்படக்கூடியது என்பதுடன் இத்திட்டத்திற்கான அங்கீகாரம் கிடைத்தது முதலாக அதற்குரிய காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு மேற்குறித்த காணிகள் பாடசாலைக்கு கிடைக்கச் செய்திருந்தார். காணிக் கொள்வனவு தொடர்பில் வாசுகி தவபாலன் விட்டுச் சென்ற பணியினை தற்போதய அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அக்கறையோடு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.
தற்போது ஏழு பரப்பு பரப்பளவுடைய மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் சென்ற வாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காணிக்குரிய பெறுமதி பதினேழரை இலட்சம் ரூபாவும் முத்திரைச் செலவு அறுபத்தொன்பதாயிரம் ரூபாவும் ஆக மொத்தம் பதினெட்டு இலட்சத்து பத்தொன்பதாயிரம் ரூபா பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் உதவப்பட்டுள்ளது. வலந்தலைச் சந்திக்கு அண்மையாக மேற்கு பிரதான வீதியின் வடக்குப் பக்கமாக இக்காணி; அமைந்துள்ளது.
பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறையுடன் செயலாற்றி வருகின்ற பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் உப-தலைவரும் பிரபல தொழிலதிபருமான திரு.சிதம்பரப்பிள்ளை நேசேந்திரம் காணிகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அதிபருக்கும் பழைய மாணவர் சங்க நிர்வாகத்திற்கும் உறுதுணையாகவிருந்து செயற்பட்டு வருபவர். அத்துடன் கொள்முதல் செய்யப்பட்ட காணிகளை பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் துப்புரவு செய்வதற்கு தனது பக்கோ இயந்திரத்தின் சேவையை இலவசமாக வழங்கி உதவி வருகின்றார். இவரது பெரு முயற்சியே குறிப்பிட்ட ஏழு பரப்புக் காணியையும் பாடசாலை பெற்றுக்கொள்வதற்கு உதவியுள்ளது.
இக்காணிக்குரிய சட்ட ஆவணத்தினை (உறுதி) பாடசாலையின் பெயரில் எழுதிய பணி கல்லூரியின் பழைய மாணவியும் சட்டத்தரணியுமாகிய திருமதி சாந்தி சிவபாதம் அவர்களின் யாழ்ப்பாணத்திலுள்ள பணிமனையில் இடம்பெற்றிருந்த சமயம் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன், திரு.நேசேந்திரம் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி, தாய்ச் சங்கத்தின் செயலாளர் திரு.நடராசா பாரதி, பொருளாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன், உதவிச் செயலாளர் திரு.நாகராசா, நிர்வாக சபை உறுப்பினர் திரு.சுப்பிரமணியம் அகிலன், பழைய மாணவர் திரு.இ.சிவசுப்பிரமணியம் ஆகியோருடன் காணி உரிமையாளர்களினால் சட்டபூர்வமாக அதிகாரமளிக்கப்பட்டவரும் சமூகமளித்திருந்தனர். சட்டத்தரணி திருமதி சாந்தி சிவபாதம் காணிக்குரிய சட்ட ஆவணங்களை(உறுதி) எழுதும் பணியை இலவசமாகவே செய்து உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
காணிக்குரிய பெறுமதியின் கொடுப்பனவிற்கான காசோலையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் பொருளாளர் திரு.கனகசபாபதி காணிக்குரிய சட்டரீதியான அதிகாரத்தினை கொண்டுள்ளவரிடம் வழங்குவதையும் சட்டத்தரணியின் காரியாலயத்தில் சமூகமளித்திருந்த அதிபரையும் ஏனையோரையும் கீழேயுள்ள படங்களில் பார்க்கலாம்.
நல்லாசிரியர் விருது பெற்ற அரவிந்தன் அவர்களும் மாகாண மட்ட சாதனை மாணவர்கள் இருவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டனர்.
நல்லாசிரியர் விருது பெற்ற அரவிந்தன் அவர்களும் மாகாண மட்ட சாதனை மாணவர்கள் இருவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டனர்.
வடமாகாணக் கல்வி அமைச்சினால் மாகாணம் தழுவிய நிலையில் தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதான ‘குரு பிரதீபா பிரபா-2017’ விருதினைப் பெற்றுக்கொண்டு எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்த இரசாயனவியல் ஆசிரியர் திரு.சண்முகம் அரவிந்தன், மாகாண மட்டத்தில் கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் செல்வன் ஏகாம்பரம் கோபிநாத், மாகாண மட்டத்தில் கோலம் போடுதல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவி செல்வி அபினோசா கருணாகரன் ஆகியோரைப் பாராட்டி மதிப்பளித்த வைபவம் சென்ற வெள்ளிக்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையில் நடைபெற்றது.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி இவ்வைபவத்தில் கலந்துகொண்டு நல்லாசிரியர் அரவிந்தன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியதுடன் பாராட்டுக் கேடயத்தினையும் வழங்கி மதிப்பளித்தார். அதேவேளை கல்லூரியின் ஆசிரியர்கள்; நலன்புரிக் கழகத்தின் சார்பில் உப-அதிபர் திரு.தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்களாலும் பாராட்டு விருது வழங்கப்பெற்று நல்லாசிரியர் திரு.அரவிந்தன் மதிப்பளிக்கப்பட்டிருந்தார். சாதனை மாணவர்களான செல்வன் கோபிநாத், செல்வி அபினோசா ஆகியோருக்கான பாராட்டு விருதுகளும் ஊக்குவிப்புப் பரிசிலாக தலா ஐயாயிரம் ரூபா ரொக்கமும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் திரு.கனகசபாபதி அவர்களினால் வழங்கப்பெற்றிருந்தது.
இவ்வைபவத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய அதபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சி சார்ந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆற்றி வருகின்ற பணிகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். சிறப்பாக, சாதனை மாணவர்களுக்கு சங்கத்தினரால் வழங்கப்பட்டு வருகின்ற ஊக்குவிப்புப் பரிசில்கள் மாணவர்கள் மத்தியில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகவே மதிப்பிடப்படுகின்றது எனக் குறிப்பிட்ட அதிபர், அடைவு மட்டத்திற்கு அண்மித்த தரத்திலுள்ள மாணவர்கள்; மேம்பட்டநிலையை அடைந்து பரிசிலைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற ஆர்வத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தி; முயற்சியில் ஈடுபடுவதற்கான உந்துதலாக சங்கத்தினர் உதவி வருகின்ற ஊக்குவிப்புப் பரிசில்கள் அமைந்துள்ளன என மேலும் குறிப்பிட்டார். கல்லூரியின் தேவைகளை அறிந்து வழங்கி வருகின்ற அளப்பரிய உதவிகளுக்காக கல்லூரிச் சமூகத்தின் சார்பில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
இப்பாராட்டு வைபவத்தில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:
மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்குரிய பெருமையைப் பெற்றுக்கொண்ட காரை.இந்துவின் இரசாயனவியல் ஆசிரியர் சண்முகம் அரவிந்தன்
மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்குரிய பெருமையைப் பெற்றுக்கொண்ட காரை.இந்துவின் இரசாயனவியல் ஆசிரியர் சண்முகம் அரவிந்தன்
‘குரு பிரதீபாபிரபா’ என அழைக்கப்படுகின்ற நல்லாசிரியர் விருதினைப் பெற்றுக்கொள்வதற்காக வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தெரிவில் காரை இந்துவில் இரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றுகின்ற திரு.சண்முகம் அரவிந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு மேற்குறித்த விருதினைப் பெற்றுக்கொண்ட பெருமையைப் பெற்றதுடன் தாம் பணியாற்றிவருகின்ற காரைநகர் இந்துக் கல்லூரிக்கும் பெருமையை சேர்த்துக்கொண்டவராக விளங்குகின்றார்.
பாடவிதானம், இணைப்பாடவிதானம் ஆகியவற்றில் ஆசிரியரது செயற்பாடுகள் மற்றும் வரவு இஒழுக்கம் ஆகியன உள்ளிட்ட பல விடயங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வலய மட்டத்தில் முதற்கட்டத் தெரிவுகள் இடம்பெற்றதுடன் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாகாண மட்டத்திலான இறுதித் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.
யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் 28-10-2017இல் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விழாவின்போது திரு.அரவிந்தனுக்கான நல்லாசிரியர் விருது (குரு பிரதீபாபிரபா) வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு திரு.சண்முகம் அரவிந்தன் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
அயற்கிராமமான மூளாயைச் சேர்ந்த திரு.சண்முகம் அரவிந்தன் விஞ்ஞானப் பட்டதாரி என்பதுடன் பட்ட மேற்படிப்பு கல்வி டிப்ளோமா சான்றிதழும் பெற்றுக்கொண்டவர். விஞ்ஞான பாடத்துடன் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இரசாயனவியல் பாடத்தையும் சிறப்பாக கற்பித்து மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியராக விளங்குபவர். இக்கல்லூரியில் நீண்டகாலம் சேவையாற்றி புகழ்பெற்ற ஆசிரியர்களாக விளங்குகின்ற அமரர் ஆறுமுகசாமி அமரர் நாகபூசணி தியாகராசா, திருமதி. சிவபாக்கியம் அருமைநாயகம் ஆகியவர்கள் மூளாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
திரு.அரவிந்தன் அவர்கள் நல்லாசிரியர் விருது பெற்றமை குறித்து கல்லூரிச் சமூகம் பெருமகிழ்ச்சியடைவதுடன் திரு.அரவிந்தனை பாராட்டி வாழ்த்துகிறது. திரு.அரவிந்தனின் சிறந்த கல்விச் சேவையினால் மாணவர்கள் அடைந்துவரும் பயன்குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களையும் பாடசாலை முன்றலில் அதிபர், விருது பெற்ற சாதனை மாணவர்கள் ஆகியோருடன் நல்லாசிரியர் விருது பெற்ற திரு.ச. அரவிந்தன் அவர்களும் காணப்படுவதைப் படத்தில் காணலாம்.