காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில்
(ஈழத்துச் சிதம்பரம்)
நடேசர் ஆருத்திரா அபிஷேக விஞ்ஞாபனம்
காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் (ஈழத்துச் சிதம்பரம்) திருவாதிரை உற்சவத்தின் விஷேட உற்சவமான நடேசர் ஆருத்திரா அபிஷேகம் கடந்த 10ம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணி முதல் நடைபெற்றது. இரவு 12.30 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து 1.00 மணி தொடக்கம் நடேசர் ஆருத்திரா அபிஷேகமும் தொடர்ந்து மறுநாள் புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஆருத்திரா தரிசனமும் இடம்பெற்றது.
விஷேட நிகழ்வாக தமிழக, ஈழத்து தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் தவில் நாதஸ்வரக் கச்சேரி இடம்பெற்றது.
திருப்புன்கூர் தவில் மேதை கலைமாமணி T.G.முத்துக்குமாரசுவாமி,தவில் மேதை இனுவில் N.R.S.சுதாகரன், தவில் வித்துவான் B.நறுமதன்(மது), நாதஸ்வர வித்துவான் K.K.பவப்பிரியன், நாதஸ்வர வித்துவான் தாவடி K.நாகதீபன் ஆகியோர் தவில் கச்சேரியில் பங்கெடுத்தனர்.மாலை 4.00 மணியளவில் ஊடல் உற்சவமும் தீர்த்த உற்சவமும் சிறப்பாக இடம்பெற்றது.இதில் பெருமளவான பத்தர்கள் பங்கபற்றினர்.