Tag: காரைச் செய்திகள்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை காரை வாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை காரை வாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொத. சாதாரண தரப் பரீட்சைக்கு காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம்,விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை 30.03.2024, 31.03.2024, 10.04.2024, 11.04.2024, 12.04.2024, 20.04.2024 ஆகிய திகதிகளில் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடைபெற்றிருந்தது. காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பூரண அனுசரணையில் நடைபெற்ற இவற்றில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

மன்றத்திற்கு காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதம் கீழே எடுத்துவரப்பட்டுள்ளது.

final Report

காரைநகர் வாரிவளவு நல்லியக்கச் சபை “பட்டு மாமா ஞாபகார்த்த விழா” 16.04.2024 செவ்வாய்க்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி திறந்தவெளியரங்கில் நடைபெற்றது.

சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை பிரதான மண்டபத்தின் முற்பகுதி அலுமினியம் வலை பொருத்தப்பட்டு இரண்டு நுழை வாயில்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. பாடசாலை அதிபரின் கோரிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட இந்த வேலைகளை நிறைவு செய்வதற்கு கனடா-காரை கலாசார மன்றம் நான்கு இலட்சத்து இருபத்தேழாயிரத்து தொழாயிரத்து ஐம்பது ரூபாவினை (427950.00 ரூபா) காரை அபிவிருத்திச் சபையின் ஊடாக உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைகள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட பிரதான மண்டபத்தின் புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:

 

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 08.04.2024 திங்கட்கிழமை நடைபெற்ற தீர்த்த திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 07.04.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 06.04.2024 சனிக்கிழமை நடைபெற்ற சப்பறத் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 06.04.2024 சனிக்கிழமை நடைபெற்ற 13ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழா 07.04.2024 ஞாயிற்றுக்கிழமை சிவன் தொலைக்காட்சி ஊடாக இலங்கை நேரம் காலை 5.30 மணி முதல் நேரலையாக காண்பிக்கப்படும்.

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் – 2024

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 05.04.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 12ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 04.04.2024 வியாழக்கிழமை நடைபெற்ற 11ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 03.04.2024 புதன்கிழமை நடைபெற்ற 10ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 02.04.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 9ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 01.04.2024 திங்கட்கிழமை நடைபெற்ற 8ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 31.03.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 7ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.03.2024 சனிக்கிழமை நடைபெற்ற 6ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 29.03.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 28.03.2024 வியாழக்கிழமை நடைபெற்ற 4ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 27.03.2024 புதன்கிழமை நடைபெற்ற 3ஆம் நாள் திருவிழா காணொளி!

S.K.சதாசிவம் அவர்கள் எழுதிய “வரலாற்றில் காரைநகர்” என்ற நூல் வெளியீட்டு விழா 31.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 26.03.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் பகல் திருவிழா காணொளி!

வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தில் அமைந்துள்ள சமையலறை மிகுந்த சேதமடைந்திருந்ததனால் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பல்வேறு அசளகரியங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். சமையலறையின் குசினிப்பகுதியில் சமைக்கமுடியாத நிலை இருந்ததனால் பாடசாலைக்கு வெளியிலிருந்தே உணவு சமைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டிருந்தது. மழைகாலங்களில் கூரையூடாக ஒழுக்கிருந்ததனால் மாணவர்கள் அங்கிருந்து உணவருந்துவதில் அசளகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

சமையலறையினை திருத்தம் செய்யப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறித்தி முன்னாள் அதிபரான திருமதி கௌ.அருள்மொழி அவர்களினால் கனடா-காரை கலாசார மன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைத் திருத்திக்கொடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அருள்மொழியைத் தொடர்ந்து வந்த அதிபர் திரு.நல்லதம்பி கிஸ்ணபவன் அவர்களுடன் கனடா-காரை கலாசார மன்றம் தொடர்புகொண்டு திருத்த வேலைகளை முன்னெடுக்கவிருந்த தருணத்தில் அவர் இடமாற்றலாகிச் செல்ல புதிய அதிபராக திரு.கே.துஸ்யந்தன் பதவியேற்றிருந்தார். துஸ்யந்தன் அவர்கள் எடுத்துக்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக காரை அபிவிருத்திச் சபையின் மேற்பார்வையில் சமையலறையின் திருத்த வேலைகள் யாவும் ஐந்து இலட்சத்து ஐம்பத்தொராயிரமம் ரூபா செலவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இப்பணிக்கு சில அன்பர்களும் முன்வந்து நன்கொடையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இப்பணியின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு உதவிசெய்த கனடா-காரை கலாசார மன்றத்துக்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து அதிபர் திரு.துஸ்யந்தன் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இக்கடிதத்தினை கீழே பார்வையிடலாம்.

காரைநகர் களபூமி கல்வி அபிவிருத்திக் கழகத்தின் ஆண்டு நிறைவும் பரிசளிப்பு விழாவும் 04.02.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு களபூமி கலையகத்தில் நடைபெறவுள்ளது!

காரைநகர் அபிவிருத்திச் சபை நடாத்திய “காரைநகர்” நூற்றாண்டு விழா காணொளி! (24.09.2023)

காரைநகர் அபிவிருத்திச் சபை நடாத்தும் “காரைநகர்” நூற்றாண்டு விழா அழைப்பிதழ்! (24.09.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு)


காரைநகர் வலந்தலை இளையோர் அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட இலவசக் கல்வி விரிவு மையம் திறப்பு விழா நிகழ்வு! (13.08.2023)

காரை.மண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி -1 காரை.இந்துவில் மண்டபம் நிரம்பி வழிந்த மக்கள் மத்தியில் திரையிடப்பட்ட நிகழ்வு குறித்த சிறு பார்வை. – காரைக் கூத்தன் –

 

காரை.மண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி -1

காரை.இந்துவில் மண்டபம் நிரம்பி வழிந்த மக்கள் மத்தியில்

திரையிடப்பட்ட  நிகழ்வு குறித்த சிறு பார்வை.

– காரைக் கூத்தன் –

எமது மண்ணின் கலைஞர் P.S.சுதாகரனின் இயக்கத்தில் வெளிவந்து ஒன்பது நாடுகளில் திரையிடப்பட்ட ஒருத்தி -1 திரைப்படமானது காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரிச் சமூகத்தின் ஏற்பாட்டில் சென்ற 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று திரையிடப்பட்டிருந்தது. திரையிடல் 12.00 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நேரத்திற்கு நடராசா ஞாபகார்த்த மண்டபம் மாணவர்களினாலும் பொது மக்களினாலும் நிரம்பி வழிந்தது. பலரும் இருக்கைகள் இன்றி அவதிப்பட்டுக்கொண்டிருந்ததை காணமுடிந்தது. ஆயினும் மாணவர்கள் பலரை நிலத்தில் அமரவைத்ததன் மூலம் அவர்களிற்கான இருக்கைகளை கல்லூரியின் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்து கொடுத்துக்கொண்டிருந்தனர். இத்திரையிடல் நிகழ்விற்கு யாழ்ற்ரன் கல்லூரியின் அதிபர், இக்கல்லூரியின் உயர்வகுப்பு மாணவர்கள், ஆரம்பப் பாடசாலைகளின் அதிபர்கள், கலைஞர்கள், அமைப்புக்களின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்டோரும் வருகை தந்திருந்தமை சிறப்பானதாகும்.

காட்சி தொடங்குவதற்கு முன்னதாக கலைஞர் P.S.சுதாகரன் அவர்களிற்கு கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் பாராட்டு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. காரை.மண் தந்த மற்றொரு கலைஞரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் யாழ்.F.M.வானொலியின் கட்டுப்பாட்டாளரான திரு.முருகேசு ரவீந்திரன் சிறந்த வாழ்த்துரையை வழங்கியிருந்தார். இவர் தமது வாழ்த்துரையை வழங்குவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டமை திரைப்படத்தை காண ஆவலாக இருந்தவர்களிற்கு சிறிது சலிப்பினை ஏற்படுத்தியிருந்தாலும் தமது அழகான அடுக்குத் தமிழிலே கவர்ந்திழுக்கும் பேச்சாற்றலினால் கொடிகட்டிப் பறந்த வானொலிக் கலைஞர்கள் காரைநகர் மண்ணை எவ்விதம் பெருமைப்படுத்தியுள்ளார்கள் என்பதை விரிவாக எடுத்துக் கூறியதுடன் அவர்கள் வரிசையில் வந்த P.S.சுதாகரனின் பெருமைகளையும் எடுத்துக் கூறி மிகச் சிறப்பானதொரு வாழத்துரையை வழங்கியபோது பலரும் ஆவலோடு செவிமடுத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. சுதாகரன் அவர்கள் தனது பதிலுரையில் தான் பிறந்த மண்ணில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு இம்மண்ணின் மக்கள் பார்வையிடவேண்டும் என்ற தமது கனவு நனவாவதையிட்டு பேருவகையடைவதாகவும் இன்றைய நாள் தனது வாழ்நாளில் மறக்கமுடியாதது என்பதுடன் இச்சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தந்த காரைநகர் இந்துக் கல்லூரிச் சமூகத்திற்கு சிறப்பாக அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் உளமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். தனது படைப்புக்கள் மூலமாகக் கிடைக்கும் நிதியினை காரைநகர் மண்ணின் அபிவிருத்திக்கு உதவுவதே தனது குறிக்கோள் எனக் குறிப்பிட்ட போது மக்கள் பலத்த கரகோசம் செய்து பாராட்டி வரவேற்றனர். காரைநகர் இந்துக் கல்லுரியின் அதிபரிடம் நன்கொடையாக ஒருதொகைப் பணத்தினையும் சுதாகரன் கையளித்திருந்த அதே வேளை அவரது இப்பயணத்தின்போது தான் கல்வி கற்ற யாழ்ற்ரன் கல்லூரிக்கும் ஒருதொகைப் பணத்தினை உதவியதாக அறியமுடிந்தது. நாட்டில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மண்டபத்தில் நிலவிய அதிக புழுக்கநிலையையும் பொருட்படுத்தாது திரைப்படத்தோடு மக்கள் அனைவரும் ஒன்றிப் போயிருந்திருந்தனர் என்றே கூறலாம். திரைப்படம் தொடங்கி முடியும் வரையுள்ள இரண்டு மணி நேரத்திற்கும் ஒருவரேனும் வெளியேறாது அதனைக் கண்டு களித்திருந்தமையும் படம் முடிவுற்றதும் வரிசையில் சென்று சுதாகரனை பாராட்டி வாழ்த்தியிருந்தமையும் திரைப்படத்தின் சிறப்பினை புலப்படுத்துவதாகவுள்ளது. படத்தின் நிறைவில் ஒருசிலர் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டதையும் பார்க்கமுடிந்தது. காரைநகர் மக்கள் திரளாகக் கூடிய இது போன்ற நிகழ்வு காரைநகரில் அண்மைக் காலத்தில் நடைபெற்றதில்லை என பலரும் கூறிச் சென்றதையும் கேட்க முடிந்தது. சுமார் 800க்கு மேற்பட்டோர் இத்திரைப்படத்தைக் கண்டு களித்ததாக மதிப்பிடப்படுகிறது. உண்மையில் சுதாகரன் அவர்கள் திரைப்படத் துறையில் ஒரு வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்திய கலைஞராகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றார்.

காரைநகர் மண்ணில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு பெருந்திரளான மக்களின் ஆதரவினையும் பாராட்டினையும் பெற்றமை குறித்து கலைஞர் சுதாகரன் அவர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

13வது வயதில் ஈழத்தின் காரைநகர் மண்ணைவிட்டு கனடா வந்து 34 வருடங்கள் ஆகிவிட்டன. வாழ்க்கையின் பாதைகள் மாறின…. பயணங்கள் மாறின…. ஆனாலும் எனது ஊரின் பசுமையான நினைவுகள் மறக்கவில்லை. கடந்த பலவருடங்களாக எனது ஊடகம் சார்ந்த அனுபவங்களைக்கொண்டு எனது இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த ‘ஒருத்தி’ திரைப்படத்தின் மூலம் உலகெங்கும் பரந்துவாழும் எனது காரைநகர் மண்ணைச் சேர்ந்த நண்பர்களின் நட்பு கிடைத்தது. அவர்களின் முழு ஆதரவு காரணமாகவே எனது திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக உலகெங்கும் உள்ள எனது ஊரின் சங்கங்கள், மன்றங்கள் நிறையவே உதவி செய்துள்ளார்கள். 10 நாடுகளுக்குமேல் திரைப்படம் திரையிட்டுஇருந்தாலும் எனது ஊரில் என் மண்ணில் எனது திரைப்படத்தை என் மக்கள் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. அதற்கு Covid நோயும் ஒரு காரணம். இந்தவருடம் “ஒருத்தி-2” திரைப்படம் வெளிவந்து பல நாடுகளில் திரையிடப்படுகிறது . இம்முறை நான் தாயகம் செல்லும்போது எப்படியும் திரையிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதை அருமை நண்பரும் சிறந்த சமூகச் செயற்பாட்டாளருமாகிய கனக சிவகுமாரன் அவர்களிடம் தெரிவித்தேன் அவரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் நிச்சயமாக திரையிடுவோம் என்று எனக்கு கூறியிருந்தார் அதன்படி எனக்கு முன்னதாகவே அவர் தாயகம் சென்றிருந்தார் அங்கு சென்று இதற்கான பணிகளில் ஈடுபட்டார் பின்னர் ஜூன் மாதம் 13 ஆம் தேதி காரை-இந்து கல்லூரியில் திரைப்படம் திரையிடப்பட்டது 1000இக்கும் அதிகமான மாணவர்கள், பெற்றோர்கள், கலைஞர்கள் என பலரும் வந்து பார்த்து பாராட்டிச் சென்றமை எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள். இந்த திரைப்படத்தை அங்கே திரையிடுவதற்கு அனைத்து வழிகளிலும் உதவி புரிந்தவர் திரு கனக சிவகுமாரன் அவர்கள். அவரோடு காரை.இந்துக் கல்லூரி அதிபர், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் ஒரு கலைஞனின் படைப்பு அவனின் சொந்த ஊரில் ஊர் மக்கள் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இது எனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பாக்கியமாகும். நன்றி.

திரையிடல் தொடர்பான சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:

 

ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாசார மன்றம் உதவியுள்ளது.

 

ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம்

காரைநகர் வைத்தியசாலைக்கு அவசிய மருந்துப் பொருட்களை

கனடா காரை கலாசார மன்றம் உதவியுள்ளது.

காரை மண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் 2வது வரலாற்றுப் படைப்பான ஒருத்தி 2 என்ற திரைப்படம் சென்ற மாதம் திரையிடப்பட்டு அதன் ஊடாக ஒரு தொகைப் பணம் திரட்டப்பட்டிருந்தது. காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சில முக்கியமான மருந்துகள் இல்லாது வறிய நோயாளர்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்கொள்வதாக நோயாளர் நலன்புரிச் சங்கம் கனடா காரை கலாசார மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் திரைப்படக் காட்சி மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து ஒரு தொகுதி மருந்துப் பொருட்களை இம் மன்றம் உதவியுள்ளது.

குறிப்பிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் 13.06.2023 செவ்வாய்க்கிழமை பிரதேச வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.செந்தூரன் அவர்களிடம் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட் டன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் உப தலைவர் இக்கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு
உரையாற்றுகையில் இவ் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கனடா-காரை கலாசார மன்றம் பல சந்தர்ப்பங்களிலும் உதவி செய்து வந்துள்ளதாகவும் சிறப்பாக 2006 ஆம் ஆண்டு ஆண், பெண் நோயாளர்கள் விடுதிகளிற்குத் தேவையான கட்டில்கள் ,மெத்தைகள் மற்றும் சக்கர நாற்காலிகளை உதவியதுடன் இரு ஆண்டுகளிற்கு முன்னர் P.S.சுதாகரனின் ஒருத்தி 1 திரையிடப்பட்டதன் மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்கி உதவப்பட்டதாகத் தெரிவித்தார். தற்போது வழங்கப்பட்டது முதலாவது தொகுதி மருந்துகள் எனவும் அடுத்த தொகுதி மருந்துகள் தேவைப்படும்போது வழங்கி வைக்கப்படும் எனவும் தெரிவித்ததுடன் சிறந்தமுறையில் சேவையாற்றி வருகின்ற வைத்திய அதிகாரி Dr.செந்தூரனதும் ஏனைய மருத்துவர்கள்,அனைத்து வைத்தியசாலை அலுவலர்களதும் சேவையினையும், நோயாளர் நலன்புரிச் சங்கத்தினது சிறப்பான பணிகளையும் கனடா-காரை கலாசார மன்றத்தின் சார்பில் பாராட்டி நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு.நா.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்து உரையாற்றியதுடன் கலைஞர் P.S.சுதாகரனும் உரையாற்றியிருந்தார்.

இந்நிகழ்வில் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள், வைத்தியசாலை அலுவலர்கள் மற்றும் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்க நிர்வாகத்தைச் சேர்ந்த திரு,வி.நாகேந்திரம், திரு. K.K.நாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

காரை மண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி-1 திரைப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் திரையிடப்படவுள்ளது.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 04.06.2023 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா காணொளி!