கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொத. சாதாரண தரப் பரீட்சைக்கு காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான் முன்னோடிப் பரீட்சை சென்ற 16-04-2023 அன்று இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடைபெற்றிருந்தது. காரை வாழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரண அனுசரணையில் நடைபெற்ற இவற்றில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். காரைநகர் இந்துக் கல்லூரி யாழ்ற்ரன் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த கணிதபாட ஆசிரியர்களின் முழுமையான உதவியுடனும் பங்களிப்புடனும்; நடாத்தப்பட்டிருந்த இம்முன்னோடிப் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டு அவர்களின் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருந்தன.