கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற  வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே /நவம்பர் ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

குறிப்பு :  பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு 20.07.2015 அன்று நிரந்தர வைப்பில் இடப்பட்டது. பின்னர் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி மற்றைய  பாடசாலைகள் போன்று மே /நவம்பர்   கிடைக்கப்பெற 07.11.2016 அன்று நிரந்தர வைப்பில் இட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மூன்று  தடவைகள் வங்கி மற்றும் மன்றத்தால் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக வட்டிக்குரிய நிதி வழங்கப்பட்டது.  பாலாவோடை இ.த.க.பாடசாலையில் மாணவர்கள் தொகை மிகக் குறைவடைந்ததன் காரணமாக  வங்கிக் கணக்கிலிருந்து வட்டிப்பணத்தினை மீளப்பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களினால் குறித்த வட்டிப்பணம் 05.05.2021 தொடக்கம் காரை அபிவிருத்திச் சங்கக் கணக்கிற்கு வைப்பிலிடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பாடசாலைக்கு தேவையேற்படும்போது இப்பணம் காரை அபிவிருத்திச் சபையால் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இப்பணம் காரைநகர் மாணவர்களுக்கு கல்வித் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பு : வியாவில் சைவ வித்தியாலயத்திற்கு மூன்று  தடவைகள் மன்றத்தால் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக வட்டிக்குரிய நிதி வழங்கப்பட்டது. 07.11.2016 அன்று கனடா காரை கலாச்சார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ஒவ்வொரு வருடமும் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

                         நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்.

 

மேலும் விபரங்களைகாரை வசந்தம் – 2023″ மலரில் பார்வையிடலாம்.

 

வங்கியிடமிருந்து பெறப்பட்ட வட்டிக்குரிய முழு விபரம்

கீழே எடுத்து வரப்பட்டுள்ளது.

                                                                                    (NOV 2015 – NOV 2023)

A–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023 B–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023

CKCA-Karainagar Scools Bank Intrest Report – final