காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் பஞ்சரத பவனி 10.01.2017 செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசமும் பெருந்திரளான தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் நாதகான மழையும் முளங்க பத்திபூர்வமாக இடம்பெற்றது.
காலை 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் தொடர்ந்து திருவெம்பாவை ஓதலும் இடம்பெற்று காலை 9.00 மணிக்கு நடேசப் பெருமான் தனது பரிவாரமூர்திகளுடன் பஞ்சரதங்களில் எழுந்தருளி பத்தர்களுக்குக் காட்சி கொடுத்தார்.