கனடா காரை கலாச்சார மன்றத்தின் மனிதாபிமான உதவிகள் வழங்கும் செயற்பாடு மூலமாக வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட செல்வி நிலாமதி செல்வராசா அவர்களின் காது சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிதி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 30.05.2014 அன்று செல்வி நிலாமதி செல்வராசா மற்றும் அவரது தந்தையார் வே.செல்வராசா ஆகியோர் காரைநகர் அபிவிருத்தி சபை காரியாலயத்திற்கு சென்று மன்றத்தினால் சேர்த்து வழங்கப்பட்ட 3,68,000 (மூன்று இலட்சத்து அறுபத்து எட்டாயிரம்) ரூபாய்கான காசோலையினை பெற்றுக்கொண்டனர்.
காரைநகர் அபிவிருத்தி சபை செயலாளர் திரு.இ.திருப்புகழூர்சிங்கம் அவர்கள் காசோலையினை கையளித்தார். இந்நிகழ்வில் உபசெயலாளர் திரு.வே.சபாலிங்கம் மற்றும் பொருளார் திரு.ந.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வுதவியை பெற்றுக்கொண்ட திரு.வே.செல்வராசா அவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கும் இம்மன்றத்தின் ஊடாக நிதி வளங்கியவர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்து கடிதம் எழுதியனுப்பியுள்ளனர். கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக இம்மனிதாபிமான பணிக்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.
செல்வி நிலாமதி செல்வராசா அவர்களிற்கான சிசிச்சைக்காக இணையத்தளம் ஊடாகவும், நேரடியாகவும், வங்கி மூலமாகவும் வழங்கிய மொத்த தொகை 3098 கனடிய டொலர்களாகும். இப்பணிக்கு உதவியவர்கள் விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இணையத்தளம் ஊடாக அல்லது வங்கி மூலமாக நீங்கள் வைப்பில் இட்டிருந்தால் உங்கள் பெயர் இடம்பெறாது இருந்தால், அல்லது நீங்கள் வழங்கிய தொகை தவறுதலாக பிழையாக பதியப்பட்டிருந்தால், அல்லது நீங்கள் வழங்கிய நிதி கனடா காரை கலாச்சார மன்றத்தை வந்தடையவில்லையானால் தயவு செய்து விபரத்தினை பார்த்து சரி பார்த்துக்கொள்ளவும்.
நன்றி!
செல்வராசாவின் மகள் நிலாமதி (வயது 05) வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் காதுகேட்பதற்கான சிகிச்சைக்கு நிதியுதவி செய்தோர் விபரம்
தொடர்பு பட்ட செய்தி:
உறவுக்குக் கரம் கொடுப்போம்