சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய முப்பெரும் விழா கடந்த திங்கட்கிழமை யாழ்ற்ரன் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றது. அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக அதன் தலைவர் திரு. பரமானந்தராஜா தம்பிஐயா அவர்கள் தனது பெற்றோரின் நினைவாக வழங்கிய நிதியில் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய முப்பெரும் விழா கடந்த திங்கட்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி பிரதான மண்டபத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு நூல் அறிமுகம்,தியாகத் திறன் வேள்வி மாணவர் போட்டிகளுக்கான பரிசளிப்பு,சான்றோர் மதிப்பளிப்பு என்பன இடம்பெற்றது.
அதிகளவான பார்வையாளர்கள் கலந்தகொண்ட இவ் விழாவில் பிரதம விருந்தினராக மலாயா காரை ஒன்றியத் தலைவர் டத்தே சண்முகம் சிவானந்தனும் கௌரவ விருந்தினர்களாக தெய்வீகத் திருப்பணி அரசு சுப்பிரமணியம் கதிர்காமநாதன்,யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரத்தினம்.யாழ் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் செல்வி பரமேஸ்வரி கணேசன்,கிழவன்காடு கலாமன்ற ஸ்தாபகத் தலைவர் நடராசா சோதிநாதன் ஆகியோரும்.
கௌரவ விருந்தினராக காரைநகர் இந்தக் கல்லூரி முன்னாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் மற்றும் பன்னாட்டு காரை அபிவிருத்திச் சங்கங்களின் கௌரவ உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கலாபூசணம் நா.தர்மராஜா.கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை,கலாபூசணம் வே.நடராசா,ஓய்வு பெற்ற அதிபர் க.தில்லையம்பலம்,பேராசிரியர் ஆறுமுகம் நல்லைநாதன் ஆகியோர் இந்நிகழ்வில் மாண்பு பெற்றனர்.
அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக அதன் தலைவர் திரு. பரமானந்தராஜா தம்பிஐயா அவர்கள் தனது பெற்றோரின் நினைவாக வழங்கிய நிதியில் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.
காரைநகர் பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் கல்வியில் ஆர்வமுடைய மிக வறிய மாணவர்களின் விபரம் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளரின் ஊடாக பாடசாலை அதிபர்களிடமிருந்து 300 மாணவர்களின் விபரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதில் முதற் கட்டமாக 70 மாணவர்களுக்கு திரு பரமானந்தராஜா அவர்களின் நிதி உதவியுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மேலும் நிதி உதவிகள் கிடைக்கப்பெறின் அடுத்த கட்ட மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.