படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
காரைநகர் இந்துக் கல்லூரி,யாழ்ற்ரன் கல்லூரி
சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்
சென்ற ஆண்டு நடைபெற்றிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் இணையம் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன.
பெறுபேறுகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து கணித பாடப் பிரிவில் செல்வி கம்சிகா தேவராசா 3A சித்திகளைப் பெற்று தீவக வலயத்தில் முதன்மைப் பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்டதுடன் மாவட்ட ரீதியிலான தரவரிசைப் பட்டியலில் 37 வது இடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் செல்வி கிருத்திகா இராசலிங்கம் வர்த்தகப்பிரிவில் 2A C சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.
காரைநகர் இந்துக் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.
பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
செல்வி கம்சிகா தேவராசா கணிதப்பிரிவு 3A
செல்வி கிருத்திகா இராசலிங்கம் வர்த்தகப்பிரிவு 2A C
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.
பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்.
1.வீட்டுத் திட்டம்
காரைநகர் அல்வின் வீதியில் வசிக்கும் சிவானந்தராசா றூபரசி கண்பார்வையற்ற இவர் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றார். இவர் வீடு சிதைவடைந்த நிலையில் வீட்டில் வாழமுடியாது என காரை அபிவிருத்திச் சபை, கிராமசேவையாளரின் பரிந்துரைக்கேற்ப கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ரூபா 350,000.00 செலவில் திருத்தியமைத்துக் கொடுக்கப்பட்டது. இத் திட்டத்திற்கு உதவி செய்த அனைவருக்கும் மன்றம் நன்றி தெரிவிப்பதோடு மேலும் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செய்ய எமக்கு பொருளுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பழைய படத்தொகுப்பு:
புதிய படத்தொகுப்பு:
2.காரைநகர் பாடசாலைகளில் இருந்து கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான உதவி திட்டம்
நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக இவ்வருடம் கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பலவித கஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகியிருந்தார்கள். தற்போது October 11ம் திகதி பரீட்சை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். காரை இந்துக் கல்லூரியில் 28 பேரும், யாழ்ற்ரன் கல்லூரியில் 22 பேரும் காரைநகர் பாடசாலைகளில் இருந்து பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்குவிப்பு தொகையாக ரூபா 2500.00 பாடசாலை அதிபர்களினாலும் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களினாலும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வைத்து கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டது.
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி
சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற
க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்!
பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
Yalton College – Karainagar
A/L Results (New Syllabus)
Student Name Results
1) S.Sivapiriya 2CS
2) L.Kuruparan ACS
3) S.Jeevathas 3C
4) T.Sankavi 3C
5) V.Kajathiri C2S
6) N.Jeyanthini 3S
7) P.Yalini 2AB
8) S.Keerthana 2AS
9) M.Kalaichelvan 2BC
10) N.Sutharsini 2BC
11) R.Thayanithi 2BC
12) S.Pirasanthan A2C
13) K.Suganthini 2BC
14) S.Janaki 2CS
15) S.Pavithira 2CS
16) G.Keerthika B2S
17) T.Keerthika B2S
18) T.Vajuri C2S
19) S.Dinuja C2S
Yalton College – Karainagar
A/L Results (Old Syllabus)
Student Name Results
1) S.Navaneethan B2C
2) S.Senthuran BCS
3) P.Thuvaraga A2C
4) S.Nirojini BCS
5) N.Pirasanthan 2CS
6) S.Senthuran A2C
கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன்
காரை அபிவிருத்திச் சபையினரால்
காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில்
தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர்
16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.
கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் காரைநகர் விஜயத்தின் போது யாழ்ற்ரன் கல்லூரிக்கு சென்றிருந்தார்.
யாழ்ற்ரன் கல்லூரியில் பெளதீக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் திடீர் இடமாற்றத்தை தொடர்ந்து யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியரை நியமிப்பதற்கு பாடசாலையினால் வேண்டுகோள் விடப்பட்டது.
அதனடிப்படையில் 22.09.2019 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தின் போது தலைவர் அவர்களினால் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ளப்பட்ட விடயங்கள் நிர்வாக உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன் கனடா காரை கலாச்சார மன்றம் தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனடிப்படையில் யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக அடுத்து வரும் 6 மாதங்களிற்கு பெளதீக பாட ஆசிரியருக்குரிய தேவையான வேதனத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
யா/யாழ்ற்ரன் கல்லூரியிலிருந்து தெரிவாகி
பல்கலைக்கழகம் செல்வோர்
2018
யாழ்ற்ரன் கல்லூரியிலிருந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றிய மிகச் சிறந்த பெறு பேறுகளைப் பெற்ற மாணவர்களில் பின்வரும் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக் கொள்கின்றனர். இம் மாணவர்கள் கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்க கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் மனமகிழ்ந்து வாழ்துகின்றனர்.
பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கள்
1. சுரேஸ்குமார் கஜந்தன் : A2B மென்பொருள் பொறியியல்
களனி பல்கலைக்கழகம்
2. ரொபேன்சியா தேவலிங்கம் : 2BC முகாமைத்துவம்
யாழ்பாணம் பல்கலைக்கழகம்
3. கிர்ஷpகா மோகனநாதன்: 2BC கலை
கிழக்கு பல்கலைக்கழகம்
4. பிரதீபா சத்தியமூர்த்தி : B2C ICT
வவுனியா வளாகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
5. கமலசிறிஸ்கரன் கஜந்தன் : B2C Art
விபுலானந்த அழகியல் கற்கை மட்டக்களப்பு
6. தியாகராசா சயந்தன் : 2AC Q.S
மொரட்டுவ கணிய அளவையியல்
கல்வி அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடாத்திய “சில்ப நவோதா”–2018 அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப்போட்டி மற்றும் கண்காட்சி நிகழ்வில் எமது பாடசாலை மாணவிகள் மூவர் வெற்றியீட்டியுள்ளனர். இவர்களுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கும் நிகழ்வு 11.09.2018 காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.
வெற்றியீட்டிய மாணவர் விபரம்
மாணவர் பெயர் பெற்ற இடம் பரிசுத்தொகை
1. செல்வி இ.நிறோஜினி 2ம் இடம் ரூ15000.00
2. செல்வி.ப.யாழினி 3ம் இடம் ரூ10000.00
3. செல்வி.S.பிரியங்கா 3ம் இடம் ரூ 5000.00
கல்லூரி அதிபர் வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர் திருமதி. தமிழினி ஜோசப்மேரி அவர்களுக்கும் தனது நன்றி கலந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றார்.
2017 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில்
யா/யாழ்ற்ரன் கல்லூரியில் இருந்து தோற்றி நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.
1. செல்வி. காயத்திரி ஆனந்தராஜா- பௌதீக விஞ்ஞானம்
யாழ் பல்கலைக்கழகம்
2. செல்வி ஆரணி தர்மலிங்கம் - தகவல் தொடர்பாடல்
தொழில் நுட்பம்
ராஐரட்டைப் பல்கலைக்கழகம்
3. செல்வி துர்சியா மோகநாதன் - முகாமைத்துவ பீடம்
தகவல் தொடர்பாடல்
தொழில் நுட்பம்
தென்கிழக்கு பல்கலைக்கழகம்
4. செல்வி நவனிலா மகாதேவன் - கலைப்பிரிவு
யாழ் பல்கலைக்கழகம்
பௌதீக விஞ்ஞானப்பிரிவு, வர்த்தகப்பிரிவு, கலைப்பிரிவு ஆகிய ஒவ்வொரு துறைகளிலுமிருந்து மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்
பரிசில் தினம் 2018
எமது கல்லூரியின் வருடாந்த பரிசில் தின விழா கல்லூரியின் புதிய முதல்வர் திரு.தில்லையம்பலம் மதிவதனன் அவர்களின் தலைமையில் 2018.06.11 திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் திரு.இலட்சுமணன் இளங்கோவன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாண ஓய்வு நிலை கல்விப்;பணிப்பாளரும், வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளருமான திரு.பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக இ.போ.ச பொறியியல் பகுதி ஓய்வுநிலை முகாரி திரு.திருநாவுக்கரசு ஏகாம்பரநாதன் அவர்களும், காரை சக்தி மேம்பாட்டுக் கழக இயக்குனர் திரு.நாகலிங்கம் இந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கல்லூரியின் வரலாற்றில் மீளத் திறக்கப்பட்ட பின் முதன்முறையாக திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. இவ் விழாவில் ஓய்வு நிலை அதிபர்கள், கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், பல்வேறு ஓய்வு நிலை உத்தியோகத்தர்கள், கல்லூரியின் மூத்த பழைய மாணவர்கள், அயற்பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள், பல்வேறு திணைக்கள உத்தியோகத்தர்கள் ,பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன் விரும்பிகள், கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் நிறைந்திருந்தனர்.
மாணவர்களின் கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாகும் கீழைத்தேய ,மேலைத்தேய வாத்திய அணிகளின் அணிவகுப்பும், மும்மொழியிலான இயல் இசை நிகழ்வுகளும் அனைவரினதும் பாராட்டையும் பெற்றன.
விசேடமாக ‘கண்டனன் சீதையை’ எனும் நாட்டிய நாடகம் பலராலும் வெகுவாகப் பாராட்டுப் பெற்றதுடன் விருந்தினர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதும் சிறப்பாகும்.
திறந்த வெளி அரங்கில் நிகழ்வுகள் இடம் பெற்றமையை அனைவரும் பாராட்டியதுடன் அதனை ஊக்கப்படுத்தியும் சென்றனர்.
இப்பரிசில் தின நிகழ்வுகள் மிக சிறப்புற அமைய அரும்பாடுபட்ட அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,நலன் விரும்பிகள் மற்றும் வருடம் தோறும் அமரர் வை காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக நிகழ்வின் அனுசரணையாளராக விளங்கும் வைத்திய கலாநிதி ஸ்ரீதாரணி விமலன் குடும்பத்தினருக்கும்
கல்லூரிச் சமூகத்தினர் அனைவருக்கும் அதிபர் தனது பாராட்டையும், மனம் மகிழ்ந்த நன்றிகளையும் தெரிவிக்கின்றார்.
யா / யாழ்ற்ரன் கல்லூரி – காரைநகர்
கால்கோள் விழா- 2018
இடம்; :- ஆரம்பப்பாடசாலை மண்டபம்
காலம் :- 2018.01.15 திங்கட்கிழமை மு.ப 8.00
மணிதலைவர் :- திருமதி கலைவாணி அருள்மாறன்
மேற்படி நிகழ்வானது குறித்த நேரத்தில் சிறார்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்றலுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த திரு.T.மயூரன் (முகாமையாளர் தே.சே.வங்கி) அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாணவர்களால் தேசியக்கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி முதல்வர் அவர்களால் பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டு மாணவர்களால் பாடசாலைக்கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரந்தினர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு மாணவர்களால் இறைவணக்கம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தரம் 2 மாணவர்களுடைய வரவேற்பு நடனம் நடைபெற்றது.தொடர்ந்து தரம்2 மாணவன் தர்சிகன் அவர்களால் வரவேற்புரை நடாத்தப்பட்டது.தொடர்ந்து தலைமை உரையில் மாணவர்களுடைய மனப்பாங்கு பற்றி கூறப்பட்டு அவர்களை மகிழ்வுடன் வரவேற்கும் நிகழ்வு அதிபர் அவர்களால் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களது உரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தரம் 1 மாணவர்களுக்கு பரிசில் வழங்கி மகிழ்விக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் தரம்2 மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. தொடர்ந்து தரம் 1 மாணவன்லோ.ரதுர்சன் என்பவரால் ஏற்புரை நடாத்தப்பட்டது. தொடர்ந்து ஆரம்பப்பிரிவு பொறுப்பாசிரியர் செல்வி சுபத்திராதேவி அவர்களால் நன்றியுரை நடாத்தப்பட்டது. பின்னர் தரம் 1 மாணவர்களது கல்விச் செயற்பாடுகளை தரம் 1 ஆசழரழயர் அசர்கள் ஆரம்பித்த வைத்தார் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்வுடன் நிகழ்வுகள் யாவும் மு.ப 10.00 மணியளவில் இனிதெ நிறைவு பெற்றது.
கால்கோல்விழாவின் போது விருந்தினர்களை அழைத்துவரல்
தரம் 1 மாணவன் விருந்தினர்களை மாலை அணிவித்துக் கௌரவித்தல்
பாடசாலைக் கொடியினை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி க.அருள்மாறன் அவர்கள் ஏற்றி வைக்கின்றார்.
மங்கள விளக்கினை பிரதம விருந்தினரான T.மயூரன் அவர்கள் ஏற்றி வைக்கின்றார்.
கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் மங்கள விளக்கேற்றி சிறப்பிக்கின்றார்.
கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் செல்வராசா றஞ்சிதமலர் அவர்கள் மங்கள விளக்கேற்றி சிறப்பிக்கின்றார்
கல்லூரியின் பிரதி அதிபர் மங்கள விளக்கேற்றுகின்றார்.
தரம் 2 மாணவர்களின் வரவேற்பு நடன நிகழ்வு நடைபெறுகின்றது.
தரம் 1 மாணவர்களுக்கு எமது கல்லூரியின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர் பரிசு வழங்கி கௌரவிக்கின்றார்
தரம் 1 மாணவர்களுக்கு எமது கிராம அலுவலர்பரிசு வழங்கி கௌரவிக்கின்றார்
கொடி இறக்கத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெறுகின்றது.
யாழ்ற்ரன் கல்லூரியில் 2017ம் ஆண்டு க.பொ.த உ.த பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றோர் விபரம்
கணிதப் பிரிவு
1. செல்வன் தியாகராசா சயந்தன் A,2C
2. செல்வி காயத்திரி ஆனந்தராசா B,2C
3. செல்வி ஆரணி தர்மலிங்கம் B,2C
4. செல்வன் கருணேஸ்வரன் ஜெயமதுசன் C,2S
வர்த்தக பிரிவு
1. செல்வி துர்சிகா மோகநாதன் A,B,C
2. செல்வன் யோகேஸ்வரன் தினேஸ் C,2S
கலைப்பிரிவு
1. செல்வன் கிருபானந்தன் அஜந்தன் A,2B
2. செல்வி நவநிலா மகாதேவன் A,2B
3. செல்வி கீர்த்தனா ஜீவாகரன் B,2C
4. செல்வன் விஜயரத்தினம் மனோகரன் 3C
5. செல்வி சிந்துஜா கேதீஸ்வரன் 3C
6. செல்வி மாலினி மோகனராசா B,2S
7. செல்வி ரேவதி செல்வராசா B,2S
8. செல்வி நிஷாந்தினி கோபாலபிள்ளை C,2S
9. செல்வன் கோபாலன் மேராம்சன் C,2S
10. செல்வி பிரியதர்சினி சண்முகசுந்தரம் 3S
மேற்படி மாணவர்கள் 2017ம் ஆண்டு க.பொ.த உ.த பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றார்கள்.
இப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 4 பேர் தோற்றி 4 பேரும் பல்கலைக்கழத்திற்கு தெரிவானது சிறப்பானது என அதிபர் குறிப்பிட்டார்.
பதில் அதிபர் நியமனம்
யாழ்ற்ரன் கல்லூரியில் அதிபராகச் சேவையாற்றிய திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் 08.12.2017 ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அக் கல்லூரியின் பிரதி அதிபராகச் சேவையாற்றிக் கொண்டிருக்கும் திருமதி.கலைவாணி அருள்மாறன் அவர்கள் பதில் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சங்கானையைச் சேர்ந்த திரு திருமதி சிவானந்தன் (முன்னாள் மாவட்டக்கல்விப்பணிப்பாளர்) தம்பதிகளின் மகளும் திரு.ச.அருள்மாறன் (பொதுச்சுகாதார உத்தியோகத்தர்) அவர்களின் துணைவியும் ஆவார்.
யாழ்ற்ரன் கல்லுரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் சேவையில் இருந்து ஓய்வு பெறுவதையிட்டு நன்றி பாராட்டும் செய்தி
அன்பார்ந்த
யாழ்ற்ரன் கல்லூரியின் பழைய மாணவர்களே
புலம் பெயர் காரை மக்களே
07.09.2011 ஆம் ஆண்டில் இருந்து 07.12.2017 ஆம் ஆண்டு வரை சரியாக 75 மாதங்கள் (6 ¼ வருடங்கள்) நான் யாழ்ற்ரன் கல்லூரியில் அதிபராக சேவையாற்றியுள்ளேன். 08.12.2017 இருந்து ஓய்வு பெறுகின்றேன். இவ் 6 ¼ வருட காலப்பகுதியில்
1. கல்லூரியின் வளர்ச்சிக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்த கல்லூரியின் பழைய மாணவர்கள்
2. கல்லூரி வளர்ச்சிக்கு உதவி செய்த உள்ளூர் வர்தகப் பெருமக்கள்
3. கல்லூரி வளர்ச்சிக்கு உதவிய என்னிடம் கல்வி கற்ற காரைநகர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்கள்
4. மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வுகளுக்கு உதவி செய்கின்ற கல்லூரியின் பழைய மாணவர்கள்
5. கல்லூரியின் வளர்ச்சிக்கு அக்கறையுடன் செயற்பட்டு உதவி செய்த
1. லண்டன் காரை நலன் புரிச்சங்கம்
2. கனடா காரை கலாச்சார மன்றம்
3. சுவிஸ் காரை நலன்புரிச்சங்கம்
4. அவுஸ்திரேலியா காரை கலாச்சார மன்றம்
5. பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம்
ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.
6. பூரணமான ஒத்துழைப்பினை வழங்கிய பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
7. மேலும் கல்லூரியின் செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகின்ற கனடாவில் இயங்கிக் கொண்டிருக்கும் காரைநகர் சார்ந்த இணையத்தளங்களான
1. www.karainagar.com
2. www. karainews.com
3. www. karainagar.co
ஆகிய இணையத்தள உரிமையாளர்களுக்கும் எனது நன்றிகள். மேலும் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புக்கள் யாழ்ற்ரன் கல்லூரிக்கு தொடர வேண்டும் என்றும் உங்களை அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.
நன்றி
வணக்கம்
வே.முருகமூர்த்தி
அதிபர்
யா/யாழ்ற்ரன் கல்லூரி காரைநகர்
யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகத்தினதும் ஏனைய நலன் விரும்பிகளதும் பெருந்திரளான கூட்டத்துடன் மிக்கோலாகலமாக நடைபெற்ற
“சாதனையாளன்” யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர் திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் முருகோதயம் மலர் வெளியீடும்
வரவேற்பு
யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர்திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் “முருகோதயம்” மலர் வெளியீடும் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.30 மணிக்கு மணற்காட்டு முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பூசை வழிபாடுகளுடன் மேற்படி விழா ஆரம்பமானது. கல்லூரி மாணவர்களின் பான்ட் இசைக்குழு மற்றும் தமிழ்ப் பாரம்பரிய இசைக்குழுவினரின் வரவேற்புடன் விழா நாயகர் தம்பதிகள் அவரது குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் கல்லூரி வளாகத்திற்கு ஊர்வலமாக அழைத்துச்செல்லப் பட்டனர்.
விழாவின் ஆரம்ப நிகழ்வுகள்
கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இதற்கென அமைக்கப்பட்ட விசேடமான பந்தல் மற்றும் சிறப்பு மிக்க மேடை அலங்காரங்கள் ஆகியவற்றுடன் விழா நடைபெற்றது. விருந்தினர்கள் மற்றும் விழா நாயகத் தம்பதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமானது.
விழா நிகழ்வுகள்
கடவுள் வணக்கத்துடன் விழா ஆரம்பமாகி விருந்தினர்களின் ஆசியுரைகள், வாழ்த்துரைகள் சாதனையாளன் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர்திரு வே.முருகமூர்த்தி அவர்களுக்கு தொடர்ந்து நடைபெற்ற வண்ணமிருந்தன.
“முருகோதயம்” மலர் வெளியீடு
அதிபரினது சேவைகளையும் கற்பித்தல் பணிகளையும் பாராட்டி உள்ளடக்கியதும் மற்றும் கல்லூரியில் இவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பௌதீக வள வளர்ச்சிகள் மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வுகள் கல்லூரியின் கற்றல் அலகுகள் ஆகியவற்றின் படங்களை உள்ளடக்கியதாக இம்மலர் உள்ளது.
இம்மலருக்கான கௌரவப் பிரதி விழாவின் அனுசரணையாளரான காரைநகர் கோவளத்தைச் சேர்ந்த மதிப்புமிக்க திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு (சுவிஸ்நாதன்) வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழா நாயகரின் (அதிபர்) ஏற்புரை
அதிபர் தனது ஏற்புரையில் தனது காலத்தில் கல்லூரியில் ஏற்பட்ட வளர்ச்சி,மாணவர்களின் கல்வி சார் சாதனைகள் என்பவற்றை துல்லியமாக எடுத்துக்காட்டினார்.தனது காலத்தில் பௌதீக வள வளர்ச்சியில் ஈடுபாடுகளைக் காட்டிய அனைத்துப் பழைய மாணவர்களுக்கும் விசேடமாக கல்லூரிக்கு காணிகளை வாங்கி நன்கொடையாகக் கொடுத்துதவிய திரு.சு.கதிர்காமநாதன்( பிரபல வர்த்தகர் சுவிஸ்) திரு.சு.கணநாதன் (உரிமையாளர் Quency distributers Colombo) திருமதி தேவீஸ்வரி கமலச்சந்திரன் (கனடா) திரு.க விமலச்சந்திரன் (கனடா)ஆகியோருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
விழா நாயகர் இறுதியாக தனக்கு வாழ்த்துரைகள்,ஆசியுரைகள் வழங்கியவர்களுக்கும் இவ்விழாவினைத் திறம்பட நடாத்துவதற்கு முழுமையான நிதி அனுசரணையை வழங்கிய திரு.சு.கதிர்காமநாதன் (சுவிஸ்நாதன்) அவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் விழாக்குழு உறுப்பினர்களுக்கும் அதன் தலைவர் திரு.வே.சிற்சபேசன், செயலாளர் திரு.வே.சிவனேசன் ஆகியோருக்கும் தனது நன்றிப் பெருக்கினைத் தெரிவித்தார்.மற்றும் விழாவினைத் திறம்பட நடாத்துவதற்கு உதவிய அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.