Category: KDB செய்திகள்
கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக மாணவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டு மாணவர் நூலகத்திற்கு போட்டோபிரதி இயந்திரம் வாங்குவதற்கு நிதி அனுசரணை வழங்கியுள்ளது.
கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக மாணவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டு மாணவர் நூலகத்திற்கு போட்டோபிரதி இயந்திரம் வாங்குவதற்கு நிதி அனுசரணை வழங்கியுள்ளது.
போட்டோபிரதி இயந்திரம் வாங்குவதற்கு நிதி உதவி வழங்கிய கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் நன்றி தெரிவித்த கடிதத்தை கீழே பார்வையிடலாம்.
கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் பாடசாலைகளின் க.பொ.த (சா/த) வகுப்பு மாணவர்களுக்கு கணித பாட முன்னோடி பரீட்சை மற்றும் பரீட்சை வினாத்தாள் தொடர்பான செயலமர்வுகளும் 27.12.2020,31.12.2020,01.01.2021 ஆகிய திகதிகளில் நடாத்தப்பட்டது.
கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட காரைநகர் பாடசாலைகளின் க.பொ.த (சா/த) வகுப்பு மாணவர்களுக்கு 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கணித பாட முன்னோடி பரீட்சை ஒன்றும் 31.12.2020, 01.01.2021 ஆகிய திகதிகளில் பரீட்சை வினாத்தாள் தொடர்பான செயலமர்வுகளும் நடாத்தப்பட்டது.
செயற்திட்டத்திற்கு உதவிய காரைநகர் அபிவிருத்திச் சபையினருக்கும் மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கும் காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நன்றி தெரிவித்த கடிதத்தை கீழே பார்வையிடலாம்.
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்!
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்.
1.வீட்டுத் திட்டம்
காரைநகர் அல்வின் வீதியில் வசிக்கும் சிவானந்தராசா றூபரசி கண்பார்வையற்ற இவர் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றார். இவர் வீடு சிதைவடைந்த நிலையில் வீட்டில் வாழமுடியாது என காரை அபிவிருத்திச் சபை, கிராமசேவையாளரின் பரிந்துரைக்கேற்ப கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ரூபா 350,000.00 செலவில் திருத்தியமைத்துக் கொடுக்கப்பட்டது. இத் திட்டத்திற்கு உதவி செய்த அனைவருக்கும் மன்றம் நன்றி தெரிவிப்பதோடு மேலும் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செய்ய எமக்கு பொருளுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பழைய படத்தொகுப்பு:
புதிய படத்தொகுப்பு:
2.காரைநகர் பாடசாலைகளில் இருந்து கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான உதவி திட்டம்
நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக இவ்வருடம் கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பலவித கஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகியிருந்தார்கள். தற்போது October 11ம் திகதி பரீட்சை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். காரை இந்துக் கல்லூரியில் 28 பேரும், யாழ்ற்ரன் கல்லூரியில் 22 பேரும் காரைநகர் பாடசாலைகளில் இருந்து பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்குவிப்பு தொகையாக ரூபா 2500.00 பாடசாலை அதிபர்களினாலும் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களினாலும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வைத்து கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டது.
காரைநகர் இந்துக் கல்லூரி
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி
கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் சில தேவைகள் நிறைவேற்றப்பட்டது.
கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் சில தேவைகள் நிறைவேற்றப்பட்டது.
கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு உதவி செய்வதன் பொருட்டு ஏறத்தாழ $ 2000 சேகரித்திருந்தது. இதன் மூலம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்குத் தேவையான உபகரணங்களும் மகப்பேற்றுத் தாய்மார்களை கிளினிக்கில் பார்வையிட வசதியாக ஒரு பகுதியினைப் புனரமைத்து மின்சார வசதிகள்,வர்ணப்பூச்சு வேலைகள்,கூரைகள் என்பனவற்றை எமது மன்றம் காரை அபிவிருத்திச் சபையூடாக நிறைவேற்றியிருந்தது. இதற்கு காரைநகர் இளையோர் அமைப்பு சிரமதானம் மூலம் அதனை நிறைவேற்றியிருந்தார்கள். மகப்பேற்று வைத்திய நிபுணர் திரு.N.சரவணபவன் தற்போது வாரந்தோறும் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதந்து கர்ப்பிணிகளை பார்வையிடுகின்றார். இதற்கான Ultrasound Scan இயந்திரத்தை திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அன்பளிப்பு செய்துள்ளார். இவற்றை ஜூலை மாதம் 2ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தி சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார்.
இதனை நிறைவேற்றுதற்கு உதவி செய்த கனடா வாழ் காரைநகர் மக்களுக்கும் “ஒருத்தி” திரைப்பட இயக்குனர் P.S.சுதாகரன் அவர்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும், கனடா கலாச்சார மன்றமும் இணைந்து கொரோனா நிவாரணப் பணிக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கல்.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும், கனடா கலாச்சார மன்றமும் இணைந்து கொரோனா நிவாரணப் பணிக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கல்.
எமது தாய் சங்கமான காரைநகர் அபிவிருத்திச் சபையினரின் செயற்திட்டத்தின் கீழ் ஊரில் உள்ள பெண் தலைமைத்துவம், மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கான கொரோனா உதவித்தொகை கொடுப்பனவு சிட்டை வழங்கும் நிகழ்வு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
காரைநகரில் உள்ள ஓரு நபரை தலைமைத்துவமாக கொண்ட 605 குடும்ப உறுப்பினர்களுக்கு 650.00 ரூபாய்களும், இரண்டு நபரைத் தலைமைத்துவமாக கொண்ட 280 குடும்ப உறுப்பினர்களுக்கு 1000.00 ரூபாய்களும், மூன்று நபரைத் தலைமைத்துவமாக கொண்ட 370 குடும்ப உறுப்பினர்களுக்கு 1500.00 ரூபாய்களுமாக மொத்தமாக 1255 குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
“ஓன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற கூற்றிற்கு இணங்க இச் செயற்திட்டத்திற்கு கனடா கலாச்சார மன்றமும் எமது சபையினரும் பூரண நிதி வழங்கி சிறப்பித்திருந்தனர். எமது சகோதர அமைப்பான கனடா கலாச்சார மன்றத்தினருக்கும், இச் செயற்திட்டத்தை சிறந்தமுறையில் செயல்படுத்திய காரைநகர் அபிவிருத்திச் சபை நிர்வாக உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி
“ஆளுயர்வே ஊருயர்வு”
“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
16.05.2020
கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் வீடு முடித்துக் கொடுக்கப்பட்டது.
கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில்
வீடு முடித்துக் கொடுக்கப்பட்டது.
காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்த திருமதி கிருபாராணி அவர்கள் 5 வருடங்களுக்கு முன்னர் கணவர் இறந்த நிலையில் தாம் கட்ட ஆரம்பித்த வீட்டிற்கு கதவுகள் யன்னல்கள் இன்றி தமது வயது வந்த இரு பெண் பிள்ளைகள்,ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தார். இவர் தமது அன்றாட தேவைகளுக்காக தற்போது கமநல சேவைகள் திணைக்களத்தின் அம்மாச்சி உணவகத்தில் உணவு தயாரித்து விற்று தனது குடும்பத்தை பராமரித்து வருகிறார். காலை 8மணிமுதல் மாலை 6மணிவரை இங்கு இருப்பதால் வீட்டிற்கு பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என காரை அபிவிருத்திச் சபை பரிந்துரைப்பின்பேரில் மன்ற உபதலைவர் திரு பாலச்சந்திரன் அண்மையில் நேரில் பார்வையிட்டு செயற்குழுவிற்கு வழங்கிய அறிக்கையின் படி கனடா காரை கலாச்சார மன்றத்தினால் இவர்கள் வீட்டுக்கு தேவையான யன்னல்கள் கதவுகளும் ரூபா 225,000.00 செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. திருமதி கிருபாராணி அவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கும் கனடா வாழ் காரைநகர் மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
கீழ் காணும் படங்கள் முன்பிருந்ததையும் வீடுமுடித்தபின் குடும்பம் மகிழ்ச்சியாக காணப்படுவதையும் காணலாம்.
படங்கள்: சிந்துஜா வீடியோ
கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிப் பங்களிப்புடன் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை (Smart Classroom)31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிப் பங்களிப்புடன்
சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை
(Smart Classroom) 31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு இறுதியில் கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சி.சிவராமலிங்கம் காரைநகருக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தார். இதன்போது சில பாடசாலைகளின் முக்கியமான தேவைகளை இனம்கண்டுகொண்டதன் அடிப்படையில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு திறன் வகுப்பறை(Smart Classroom) ஒன்றினை அமைத்துக் கொடுப்பதென மன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு இதற்கான உதவி காரை அபிவிருத்திச் சபையின் ஊடாக வழங்கப்பட்டிருந்தது.
தற்போது இத்திறன் வகுப்பறையின் அனைத்து நிர்மாணப் பணிகளும் காரை அபிவிருத்திச்சபையினால் முன்னெடுக்கப்பட்டு பூர்த்திசெய்யப்பட்டு பாவனைக்காக சென்ற 31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. வித்தியாலயத்தின் அதிபர் திரு.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா வைபவத்தில் காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் பிரதம விருந்தினராகவும், தீவக வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு.ஆ.யோகலிங்கம் சிறப்பு விருந்தினராகவும், காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாக உறுப்பினர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.இ.சிவசுப்பிரமணியம் அவர்கள் நாடாவினை வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து விழாத் தலைவரும்(அதிபர்) விருந்தினர்களும் உரையாற்றினர். பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிரந்தனர். வித்தியாலயத்தின் முக்கியமான தேவைகளில் ஒன்றான திறன் வகுப்பறையின் அவசியத்தை உணர்ந்துகொண்டு அதனை அமைப்பதற்கான நிதியினை உதவிய கனடா-காரை கலாசார மன்றத்திற்கும், அமைப்புப் பணிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றித் தந்த காரை அபிவிருத்திச் சபைக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அதிபர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். வித்தியாலயத்தின் பரிணாம வளர்ச்சியின் மற்றொரு படிக்கல்லாக இத்திறன் வகுப்பறையின் உருவாக்கம் அமைந்திருப்பதுடன் மாணவர்களதும் ஆசிரியர்களதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை இலகுவாகவும் நேரமுகாமைத்துவத்தற்கு ஏற்பவும் சிறப்பான முறையில் முன்னெடுக்கமுடியும் எனவும் கருதப்படுகிறது. வைபவத்தின் இறுதியில் இத்திறன் வகுப்பறையின் மாதரிச் செயற்பாடும் ஆசிரியர்களினால் செய்து காண்பிக்கப்பட்டது.
கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரை அபிவிருத்திச் சபையினரால் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.
கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன்
காரை அபிவிருத்திச் சபையினரால்
காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில்
தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர்
16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.
கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் காரைநகர் விஜயத்தின் போது யாழ்ற்ரன் கல்லூரிக்கு சென்றிருந்தார்.
யாழ்ற்ரன் கல்லூரியில் பெளதீக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் திடீர் இடமாற்றத்தை தொடர்ந்து யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியரை நியமிப்பதற்கு பாடசாலையினால் வேண்டுகோள் விடப்பட்டது.
அதனடிப்படையில் 22.09.2019 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தின் போது தலைவர் அவர்களினால் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ளப்பட்ட விடயங்கள் நிர்வாக உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன் கனடா காரை கலாச்சார மன்றம் தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனடிப்படையில் யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக அடுத்து வரும் 6 மாதங்களிற்கு பெளதீக பாட ஆசிரியருக்குரிய தேவையான வேதனத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019
உ
சிவமயம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின்
தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019
குஞ்சி யழகுங் கொடுத்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு
நாலடியார்
அமரர் ஆ.தியாகராசா அவர்களின் பணியை நினைவுகூரும் வகையில் காரை அபிவிருத்திச்சபையின் “ஆளுயர்வே ஊருயர்வு” என்னும் மகுட வாசகத்திற்கிணங்க மொழி, கல்வி, கலை, மேம்பாட்டுச் சுவிஸ் குழுவினரின் ஒழுங்கமைப்பும் காரைநகர் அபிவிருத்திச்சபையின் தெரிவுக் குழுவினரும் சேர்ந்து வருடாவருடம் நடத்தி வரும் போட்டியாகும். இப்போட்டி மாணவச் செல்வங்களின் ஆளுமைத்திறன், மொழித்திறன், கலைத்திறன் என்பவற்றை வளர்ப்பதற்கு ஏதுவாகும். போட்டிகளாவன (2019)
- பேச்சுப்போட்டி
- கட்டுரைப்போட்டி
- திருக்குறள் மனனப் போட்டி
- இசைப்போட்டி – தனி, குழு
- பொதுஅறிவு வினாடி வினாப்போட்டி
- நாடகப்போட்டி
போட்டிப் பிரிவுகளாவன:
- ஆரம்பப்பிரிவு – தரம் 03,04,05 மாணவர்கள்
- கீழ்ப்பிரிவு– தரம் 06,07,08 மாணவர்கள்
- மத்தியபிரிவு– தரம் 09,10,11 மாணவர்கள்
- மேற்பிரிவு– தரம் 12,13 மாணவர்கள்
போட்டிகளுக்கான பொது விதிகள்
- காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் எப்பாடசாலையிற் கற்றாலும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். தேவை ஏற்படின் ஊராளன் என்பதை ஏற்பாட்டாளருக்கு உறுதிப்படுத்த வேண்டும்.
- விண்ணப்பிப்போர் காரைநகர்ப் பாடசாலை மாணவராயின் பாடசாலை அதிபர் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- ஏனைய மாணவர்கள் விண்ணப்பிப்பதாயின் விண்ணப்பப் பத்திரத்தை காரை அபிவிருத்திச்சபை அல்லது மாணவர் நூலகத்திடம் பெற்றுப் பூரணப்படுத்தி தான் கற்கும் கல்லூரி அதிபரிடம் கற்கும் தரம் பற்றி உறுதிப்படுத்தி அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பிப்போர் மென் பிரதியாயின் Swisskarai2004@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கும் காகிதப் பிரதியாயின் தலைவர், காரைநகர் அபிவிருத்திச்சபை, தியாகத்திறன் வேள்வி–2019, மணற்காட்டு அம்மன் வீதி, காரைநகர் என்ற முகவரிக்கு 09.20ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும்.
- மாணவர் ஒருவர் நாடகம் தவிர்ந்த 04 போட்டிகளில் பங்கு கொள்ளலாம். இசைப் போட்டியில் தனியும் குழுவும் ஒன்றாகக் கருதப்படும்.
- போட்டிகளுக்கான காலம்ää நேர அட்டவணைகள் கல்லூரி அதிபர் ஊடாகவும் இணையத்தளத்தினூடாகவும் அறிவிக்கப்படும்.
- மாணவர்கள் போட்டி நேரத்திற்கு 30 நிமிடங்;களுக்கு முன்னதாகச் சமுகமளிக்க வேண்டும்.
- போட்டியாளர்கள் பாடசாலைச் சீருடையில் வருகை தருதல் விரும்பத்தக்கது.
- போட்டிகள் காரைநகர் இந்துக்கல்லூரி அல்லது காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெறும்.
- போட்டியில் அதிகூடிய புள்ளிகள் எடுக்கும் ஐவருக்கு முதல் ஐந்து பரிசு வழங்கப்படும்.
- போட்டிகளில் 75 புள்ளிகள் எடுக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழும் பரிசுத் தொகையும் வழங்கிக் கௌரவிக்கப்படும்.
- போட்டிகளில் அதிகூடிய புள்ளி 65இற்குக் குறைவாக எடுக்கும் மாணவர்கள் போட்டியினின்றும் புறந்தள்ளப்படுவார்கள்.
- போட்டிகளில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
- போட்டிகள் யாவும் திருவுளச்சீட்டின் மூலம் பெற்ற தலைப்பில் பங்கு கொள்ளல் வேண்டும்.
இங்ஙனம்
தியாகத்திறன் வேள்விப் போட்டிக்குழுவினர்
காரைநகர் அபிவிருத்தி சபையின் புதிய நிர்வாக சபையினருக்கான வாழ்த்துக்களும் கடந்த நிர்வாக சபையினருக்கான நன்றியறிவிப்பும்
காரைநகர் அபிவிருத்தி சபையின்
புதிய நிர்வாக சபையினருக்கான வாழ்த்துக்களும்
கடந்த நிர்வாக சபையினருக்கான நன்றியறிவிப்பும்
காரைநகர் அபிவிருத்தி சபையின் நிர்வாகத்திற்கு 11.08.2019 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது தெரிவு ஆகியுள்ள திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாகசபையினருக்கு கனடா காரை கலாச்சார மன்றம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
கனடா வாழ் காரைநகர் மக்களின் சார்பாகவும், கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாகத்தின் சார்பாகவும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த நிர்வாகசபையினருக்கு மன்றத்தினதும் கனடா வாழ் காரை மக்களினதும் நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
காரை மண்ணிற்காக சிறப்புற சேவையாற்றி கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாகவும் நேரடி தொடர்புகளை பேணி முறையே காரை மக்களிற்கு சேவையாற்றியதுடன், சிறப்புற செயற்பாட்டு அறிக்கை மற்றும் கணக்கறிக்கையினை சமர்ப்பித்து காரை மக்களினதும் பேராதரவினை பெற்றுள்ளதை அறிந்து பெருமிதம் கொள்கின்றோம்.
காரைநகர் அபிவிருத்தி சபையின் வளர்ச்சியிலும் மண்ணின் சேவையிலும் மேலும் சிறப்புற பணியாற்றவும் நிர்வாக சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, ஒற்றுமை நிலைத்து மண் வளம்பெறவும் எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பரத்தான் தாழ் பணிந்து வாழ்த்துகின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.
நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்
காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவராக நூற்றுக்கணக்கான காரைநகர் மக்களின் மத்தியில் ஏகமனதாகத் தெரிவாகி உள்ளார் இராமநாதன் சிவசுப்பிரமணியம்.
காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவராக நூற்றுக்கணக்கான காரைநகர் மக்களின் மத்தியில் ஏகமனதாகத் தெரிவாகி உள்ளார் இராமநாதன் சிவசுப்பிரமணியம்.
காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் 11ம் திகதி (11.08.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு காரைநகர் சைவமகா சபை மண்டபத்தில் சபையின் தலைவர் நா.பாலகிருஸ்ணன் தலைமையில் இடம்பெறது. இக் கூட்டத்திலேயே சபையின் புதிய தலைவராக இடைப்பிட்டியைச் சேந்தவரும் ஓய்வு நிலை வங்கியாளரும் இலண்டனில் வசித்து தற்போது காரைநகரில் நிரந்தரமாகக் குடியேறி பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருபவருமான இராமநாதன் சிவசுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டார்.
இதில் செயலாளராக சுப்பிரமணியம் செந்தூரனும் (தங்கோடை),பொருளாளராக முருகேசு பரம்தில்லைராசாவும் (களபூமி), உப தலைவராக கணேசபிள்ளை அருள்ராசாவும் (சின்னாலடி), உப செயலாளராக கை.நாகராசாவும் (இலகடி) தெரிவு செய்யப்பட்டதுடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக 09 கிராம சேவையாளர் பிரிவகளில் இருந்தும் ஒவ்வொருவர் தெரிவாகி உள்ளனர்.
வரதராசா சிறிரங்கன்,
விக்னேஸ்வரன் ஜெயகாந்தன்,
இராசசிங்கம் திருப்புகழூர்சிங்கம்,
நித்தியானந்தம் சபேசன்,
வேலுப்பிள்ளை மாணிக்கம்,
கந்தசாமி விக்னேஸ்வரன்,
வேலுப்பிள்ளை சபாலிங்கம்,
நாகலிங்கம் பாலகிருஸ்ணன்,
ஆண்டிஜயா அருள்ராசா ஆகியோர் உறுப்பினர்களாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.