Tag: CKCA

கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாட்டு அறிக்கை. (Sept 24, 2022 –  April 27, 2024)

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

செயற்பாட்டு அறிக்கை

Sept 24, 2022 –  April 27, 2024

  • கனடா காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் 24.09.2022 அன்று முற்பகல் 10.00 மணிக்கு ஸ்காபுரோ Civic Centreஇல் மன்றத்தின் உப- தலைவரான திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
  • கனடா காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகசபை சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் அமையப் பெற்றது.
  • கனடா காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள் 2022ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதியும் 2023ம் ஆண்டு செப்டெம்பர்  17ம் திகதியும் நடாத்தப்பட்டன.
  • கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டு தோறும் பெருமையோடு வழங்கப்பட்டு வருகின்ற காரை வசந்தம் கலை விழா 2022ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதியும் 2023ம் ஆண்டு டிசம்பர் 02ம் திகதியும் இரு கலை விழாக்களும் தமிழிசைக் கலா மன்ற அரங்கில் நடைபெற்றது. 2022ம் ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற கலை விழாவில் தமிழ்மொழித் திறன் போட்டியின் ஓர் அங்கமாக நடாத்தப்பட்டிருந்த பேச்சுப்போட்டியில் பங்குபற்றி முதலாவது இடத்தினைப் பெற்ற சிறியோர் மற்றும் இளையோரின் பேச்சுக்கள் நிகழ்ச்சிகளின் இடையே இடம்பெற்றிருந்தன, அதேவேளையில் தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில் ஆறுபிரிவுகளிலும் முதலாம் இடத்தினைப்பெற்ற வெற்றியாளர்களிற்கு தங்கப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் இரண்டாம் மூன்றாம் இடத்தினைப் பெற்ற வெற்றியாளர்களிற்கும் பங்குபற்றிய போட்டியாளர்களிற்கும் அரங்கில் பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.காரை மண்ணின் சிறார்களும் இளையோரும் மூத்த கலைஞர்களும் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.

2023ம் ஆண்டு நடைபெற்ற கலை விழா காரைதீவு காரைநகராக பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டுச் சிறப்பு விழாவாக  நடைபெற்றதோடு காரைச் சிறார்களும் இளையோரும் தமது கலைப் படைப்புக்களினால் சபையோரை கட்டிப்போட்டிருந்த விழா அமையப்பெற்றதும். அத்தோடு காரை.மண்ணின் பெருமையினையும் மகிமையினையும் பிரபலிக்கின்ற இருபத்தைந்துக்கு மேற்பட்ட ஆக்கங்கள், வரலாற்றுத் தகவல்கள், மண்ணின் நினைவுகளை சுமந்து வருகின்ற புகைப்படங்கள் உள்ளிட்ட மண் சார்ந்த பல்வேறு விடயங்களைத் தாங்கிய கனதியான சிறப்பு மலராக காரைவசந்தம் மலர் வெளியிடப்பெற்றிருந்தது. தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின் வெற்றியாளர்களிற்கும் பங்குபற்றிய போட்டியாளர்களிற்கும் அரங்கில் பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.

  • கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) 2023ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதியும் அதே ஆண்டு டிசம்பர் 27ம் திகதியும் நடைபெற்றன. இரு திருவிழாக்களின் போது காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.
  • கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் பெருந்திரளான காரை உறவுகளின் பங்குபற்றுதலுடன் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 05ம் திகதி Morningside பூங்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகமான இளையோரின் ஈடுபாடு இருந்ததை அவதானிக்கமுடிந்தது. இது பாராட்டக்கூடிய மகிழச்சியான மாற்றமாகும். சுவிற்சலாந்து, லண்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் தாயகத்திலிருந்தும் வருகை தந்தவர்கள் இந்நிகழ்வில் காரை. மண்ணின் உணர்வோடும் ஆர்வத்தோடும் கலந்துகொண்டு ஊரின் நினைவுகளை மீட்டி மகிழ்ந்தனர். சிறுவர்களிற்கான விளையாட்டுக்களும் முதியோருக்கான மெதுநடைப் போட்டியும் இடம்பெற்றிருந்ததுடன் குழுநிலைப் போட்டிகளாக ஆண் பெண் அணிகளுக்கிடையேயான தாய்ச்சிப் போட்டியும் தாம்பிழுவைப் போரும் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்திருந்தன. 18 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணிக்கு எதிராக பெண்கள் அணிகள் தாம்பிழுவைப் போரில் பங்குகொண்டிருந்தன. இரு பிரிவுகளிலும் பெண்கள் அணி ஆண்கள் அணியை வெற்றி கொண்டு சாதனை படைத்திருந்தன. இவ்வணிகளுக்கு முறையே வாரிவளவு நல்லியக்கச் சபையின் முன்னாள் செயலாளர் அமரர் பத்மநாதன் (பட்டு மாமா) ஞாபகார்த்த வெற்றிக் கேடயமும் காரை விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் வீரர் அமரர் குலேந்திரன் ஞாபகார்த்த வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டன. வெற்றிபெற்றவர்களிற்கான பரிசில்கள் வழங்கப்பட்டது. போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துச் சிறார்களிற்கும் Tim Hortons Gift Card வழங்கப்பட்டு ஊக்குவிக்கிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • கனடா காரை கலாச்சார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி நடைபெற்றது. ஈராண்டுப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவினை தயார் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • இங்கு அமரத்துவமடைந்த காரைநகரைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகளில் மன்றம் கண்ணீர் அஞ்சலி படம்  வைத்து அஞ்சலி செலுத்துவது வழமைபோல் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றது.

 

கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட

திட்டங்களும் வழங்கப்பட்ட உதவிகளும்.  

(24.09.2022 தொடக்கம் 27.04.2024 வரை)

  1. யுத்தத்தின் போது தாய் தந்தையை இழந்த சிறுவன் நக்கீரனுக்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் உதவியுடன் மே/2010 தொடக்கம் கனடா காரை கலாச்சார மன்றத்தால் உதவிப் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. மாதாந்த உதவிப்பணம் ரூபா 5,000 இருந்து ஜுலை மாதம் /2023 தொடக்கம்  ரூபா 7,000 அதிகரிக்கப்பட்டு கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றன.
  2. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து அறிக்கைகள் மன்றத்திற்கு கிடைக்கப்பெற்று வருகின்றது.
  3. சிவன்கோயில் நித்திய பூசைக்காக கனடா காரை கலாச்சார மன்றத்தின் பெயரில் ஹட்டன் நஷனல் வங்கியில் வைப்பில் இடப்பட்டுள்ள 5 இலட்சம் ரூபாய்களில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி காரைநகர் அபிவிருத்தி சபையின் நடைமுறைக் கணக்கிற்கு வருடந்தோறும் நவம்பர் 28ம் திகதி வைப்பில் இடப்படுகின்றது. இத்தொகை கனடா காரை கலாச்சார மன்றத்தினரின் அறிவித்தலின் பிரகாரம நித்திய பூசைச் செலவிற்காக ஆலய நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  4. காரைநகர் அபிவிருத்திச் சபை நூலக உதவியாளர்களிற்கான மாதாந்த ஒருபகுதி கொடுப்பனவாக ரூபா 10,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  5. காரைநகர் மாணவர்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்திச் சபை நூலகத்திலுள்ள இரண்டு போட்டோப் பிரதி இயந்திரத்திற்கு தேவைப்பட்ட ரோனர் அக்டோபர் (2022) நவம்பர் (2022), ஜனவரி (2024) மாதங்களில் வாங்கி உதவப்பட்டது. ஆகஸ்ட் (2023) மாதம் சிறிய மற்றும் பெரிய போட்டோப் பிரதி இயந்திரங்கள் திருத்தம் செய்ய மன்றத்தால் நிதி வழங்கப்பட்டது. அத்துடன் ஆகஸ்ட்,செப்டெம்பர், அக்டோபர்,நவம்பர், டிசம்பர் (2023), பெப்ரவரி (2024), மார்ச் (2024), ஏப்ரல் (2024) மாதங்கள் மாணவர்கள் போட்டோப் பிரதிகள் எடுப்பதற்கான பேப்பர் வாங்கி கொடுக்கப்பட்டது.
  6. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்றும் 2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமையும் இடம்பெற்றது.
  7. ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலைக்கு அத்தியாவசிய நீர் பாவனைக்காக மோட்டார் இயந்திரம் வாங்கிக் கொடுக்கப்பட்டதுடன் மோட்டார் அறையும் (மார்ச் /2023) கனடா காரை கலாச்சார மன்றத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டது.
  8. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் கணித,விஞ்ஞான பாடத்திலான முன்னோடிப் பரீட்சை 2024ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடாத்தப்பட்டுள்ளது.
  9. க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
  10. ஒருத்தி 2 படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாச்சார மன்றம் 13.06.2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரதேச வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.செந்தூரன் அவர்களிடம் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட் டன. 2வது தொகுதி மருந்துப் பொருட்கள் ஆகஸ்ட் மாதம் பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1ம், 2ம் கட்டமாக ரூபா 415,600 பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
  11. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகரைச் சேர்ந்த பத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. ஐந்து மாணவர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் ரூபா 10,000 வீதமும் ஐந்து மாணவர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் ரூபா 7,500 வீதமும் மாதாந்த வழங்கப்பட்டு வருகின்றது. இதில் பத்து மாணவர்களில் மூன்று மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் படிப்பு நிறைவுபெற்றுள்ளபடியால் நிதி தேவையில்லை என மன்றத்திற்கு அறியத்தந்துள்ளனர். ஆகவே தற்போது ஏழு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் இரண்டு மாணவர்களிற்கு மன்ற உறுப்பினரின்  நிதி உதவியுடன் வழங்கப்பட்டு வருகின்றது.
  12. வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் கல்விக்கான உதவியாக க.பொ.த உயர்தர பரீட்சை முடியும் வரை ரூபா 5000, 2023ம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  13. காரைநகர் அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட “காரைநகர் “ நூற்றாண்டு விழாவிற்கு அனுசரணையாக கனடா காரை கலாச்சார மன்றம் ரூபா 200,000 வழங்கியது.
  14. வறிய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை முடியும் வரை தனியார் வகுப்புகளுக்கான நிதியுதவியாக ரூபா 5000 நவம்பர் (2023) மாதம் தொடக்கம் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஒருவர் க.பொ.த உயர்தர பரீட்சை எடுத்துள்ளபடியால் மற்றவருக்கு தற்போது ரூபா 2500 படி மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது.
  15. வறிய குடும்பங்களைச் சேர்ந்த மூன்று க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் பரீட்சை முடியும் வரை தனியார் வகுப்புகளுக்கான நிதியுதவியாக ரூபா 3100, ரூபா 2500, ரூபா 2500 வீதப்படி மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது.
  16. வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் தனியார் வகுப்புகளுக்கான நிதியுதவியாக ரூபா 3000 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  17. வறிய குடும்பங்களைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களுக்கு தனியார் வகுப்புகளுக்கான நிதியுதவியாக 2024ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தொடக்கம் மாதாந்தம் ஒவ்வொரு மாணவருக்கு ரூபா 2000 வழங்கப்பட்டு வருகின்றது. (2024/மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ் உதவி ஒரு வருடத்திற்கு மட்டும் மன்றத்தால் வழங்கப்படும்)
  18. 2024/பெப்பவரி மாதம் வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் யாவும் ஐந்து இலட்சத்து ஐம்பத்தொராயிரம் ரூபா (551000.00 ரூபா) செலவில் பூர்த்தி செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது.
  19. 2024/மார்ச் மாதம் சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் நான்கு இலட்சத்து இருபத்தேழாயிரத்து தொழாயிரத்து ஐம்பது ரூபா (427950.00 ரூபா) செலவில் பூர்த்தி செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது.
  • கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2022 / 2023 ஆண்டு காலப்பகுதி நிர்வாகத்தினால் நக்கீரன், பல்கலைக் கழக மாணவர்கள், க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கல்விக் கருத்தரங்கு, முன்னோடிப் பரீட்சை மற்றும் காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சில முக்கியமான மருந்துகள் ஆகியனவற்றுக்கு நேரடியாக அவர்களிடம் மன்றம் தொடர்புகொண்டு ஏப்ரல்,மே,ஜூன் (2023) மாதங்களில் ரூபா 979,600 (ஒன்பது லட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து அறுநூறு) வழங்கப்பட்டன. அத்துடன்  ஆகஸ்ட்/2023, ரூபா 500,000 (ஐந்து லட்சம்), நவம்பர்/2023 ரூபா ஒரு மில்லியன்  (பத்து லட்சம்), மார்ச்/2024 ரூபா ஒரு மில்லியன்   (பத்து லட்சம்) என  மூன்று  தடவைகள் காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு காரைநகரில் மேற்கொள்ளப்படவேண்டிய உதவிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
  • நக்கீரன் (மாணவன்), காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் மாணவர்கள் போட்டோப் பிரதிகள் எடுப்பதற்கான பேப்பர் வாங்குவதற்கு, காரைநகர் அபிவிருத்திச் சபை நூலக உதவியாளர்களிற்கான மாதாந்த ஒருபகுதி சம்பளம், பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கொடுப்பனவுகளுக்காக ரூபா 400,000 (நான்கு  லட்சம்),  நீலங்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மீன்பிடி கட்டுமரம் வாங்க நிதியுதவியாக ரூபா 500,000 (ஐந்து லட்சம்),  கலாநிதி விளையாட்டுக் கழகத்திற்கு நிதியுதவியாக ரூபா 100,000  (ஒரு லட்சம்) ஆகிய உதவித் திட்டங்களுக்கு  ரூபா ஒரு மில்லியன் (பத்து லட்சம்) காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு (26.04.2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய உதவிகளுக்கு 24.09.2022 தொடக்கம் 27.04.2024 வரை 4.4796 மில்லியன் (4,479,600) ரூபா அனுப்பி வைக்கப்பட்டன.
  • எமது நிர்வாகத்தின் பதவிக்காலமான இரண்டு ஆண்டுகளிலும் காரைநகரின் பல்வேறு வேலைத் திட்டங்களுக்கும் உதவப்பட்டிருந்த 4.4796 மில்லியன் ரூபாவும் காரை வசந்தம் இரு கலை விழாக்களினூடாகப் பெற்ற நிகர இலாபம், உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள் ஆகியோரின் நன்கொடைகள், ஒருத்தி திரையிட்டதன் ஊடாகப் பெற்ற வருமானம் என்பவற்றிலிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒன்றுகூடல்,தமிழ் திறன் பண்ணிசைப் போட்டிகள்,காரை வசந்தம், ஆருத்திரா தரிசனம் ஆகிய நிகழ்வுகளுக்கு நிதியுதவி மற்றும் பொருள் உதவி செய்தவர்களுக்கும், பல வழிகளிலும் உதவி செய்த அனுசரணையாளர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், வர்த்தகபெருமக்களுக்கும், மன்றத்தால் காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகளை செய்து உதவிய காரைநகர் அபிவிருத்திச் சபையினருக்கும்,தொண்டர்கள், ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து நிர்வாகசபை உறுப்பினர்கள், இளையோர் ஒருங்கிணைப்பாளருக்கும்,போசகர் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் மற்றும் பழைய நிர்வாக சபையினர்களுக்கும், அனைத்துக் கனடா வாழ் காரை மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

“Working together is success”

                         நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்
27.04.2024

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – (நிகழ்ச்சி நிரல்) 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு.

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – 2024

இடம்: ஸ்காபுரோ சிவிக் சென்டர் (Scarborough Civic Centre)
(Committee Rooms 1 & 2)
150 Borough Dr, Scarborough, ON M1P 4N7

காலம்: 28.04.2024 (Apr 28, 2024) ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.30 மணிக்கு

நிகழ்ச்சி நிரல்

1. அங்கத்தவர்கள் பதிவும் அங்கத்தவர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க நேரம் பதிவு செய்தலும்.

2. கடவுள் வணக்கம்.

3. அகவணக்கம்.

4. தலைவர் உரை.

5. செயலாளர் அறிக்கைகள். (சென்ற பொதுக்கூட்ட அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை)

6. பொருளாளர் அறிக்கை.

7.  1. நிர்வாக சபையின் பதவிக்காலத்தில் மன்றத்தின் பொதுச்சபை அங்கத்தவர்கள் மன்ற யாப்பு விதிகளை மீறி நிர்வாகத்தில் தலையீடு செய்து நிர்வாகத்தினை குழப்ப முயற்சி செய்தலை முற்றாக தவிர்க்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுதல்.

       2. கனடா காரை கலாச்சார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராக திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் நஸ்டஈடு கோரி ஒன்ராறியோ உயர் நீதிமன்றில் ( Ontario Superior Court Justice) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மன்ற நிர்வாகத்தால் மன்ற அங்கத்தவர்களுக்கு விளங்கப்படுத்தலும் தீர்மானம் நிறைவேற்றுதலும் மற்றும் உபகுழு நியமித்தல்.

8. மன்றத்தின் யாப்பு திருத்தம் மற்றும் உபகுழு நியமித்தல்.

9. இலங்கை ஹட்டன் நேஷனல் (HNB) வங்கியில் உள்ள மன்றத்தின் நிலையான வைப்பு பணம் ஐந்து (5) மில்லியன் ரூபா ஒவ்வொரு மில்லியனாகவும், பத்து லட்சத்து நாற்பத்தைந்தாயிரம் (1,045,000) ரூபா, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் (150,000) ரூபா மற்றும் ஒரு லட்சம் (100,000) ரூபா அத்துடன் சிவன் கோவில் நித்திய பூசைக்குரிய நிலையான வைப்பு ஐந்து லட்சம் (500,000) ரூபா என ஒன்பது (9) நிலையான வைப்புச் சான்றிதழ்கள் உள்ளன. அறுபத்து இரண்டு லட்சத்து தொன்னூற்று ஐந்தாயிரம் (6.295 மில்லியன் ரூபா – எட்டு நிலையான வைப்புச் சான்றிதழ்கள்) ரூபாக்களை ஒரு சான்றிதழாக மாற்றுவதுடன் கூடிய வட்டி கிடைக்கும் வண்ணம் ஒழுங்கு செய்து அதற்குரிய வட்டிப் பணத்தை மாணவர்களின் கல்விக்கு உதவுவது மற்றும் மற்றைய தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் காரைநகர் அபிவிருத்திச் சபை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக கிடைக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுதல்.

10. அங்கத்தவர்கள் கருத்துக்களை தெரிவித்தல் மற்றும் வேறு பிரேரணைகளும் தீர்மானம் நிறைவேற்றுதலும்.

11. மன்றத்தின் இருப்புக்கள் (Tent)தொடர்பாக தீர்மானித்தல்.

12. புதிய நிர்வாக சபை தெரிவு.
தலைவர், உபதலைவர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர், உப பொருளாளர், 13 நிர்வாக சபை உறுப்பினர்கள், 6 தயார்நிலை உறுப்பினர்கள், 3 திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள் மற்றும் கணக்காய்வாளர் நியமனம்.
இளையோர் ஒருங்கிணைப்பாளர் தெரிவு. (சென்ற பொதுக் கூட்டத்தில் (24.09.2022) எடுத்த தீர்மானத்திற்கு இணங்க)

13. புதிய நிர்வாக சபைத் தலைவர் உரை.

14. அங்கத்தவர் வருட சந்தா மற்றும் ஆயுள் சந்தா பணம் தீர்மானித்தல்.

15. புதிய நிர்வாக சபையின் எதிர்கால திட்டங்கள்.

16. புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்தல்.

17. நன்றியுரை.

                                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்.

 

 

கனடா-காரை கலாசார மன்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட கோரிக்கை மனுவினையும் (Amended Statement of Claim)அதனை அடுத்து இக்கோரிக்கை மனுவுக்கு எதிராக பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள திருத்தப்பட்ட பதில் மனுவையும் (Fresh as Amended Statement of Defense) கீழே பார்வையிடமுடியும்:

 

கனடா-காரை கலாசார மன்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட கோரிக்கை மனுவினையும் (Amended Statement of Claim)அதனை அடுத்து இக்கோரிக்கை மனுவுக்கு எதிராக பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள திருத்தப்பட்ட பதில் மனுவையும் (Fresh as Amended Statement of Defense) கீழே பார்வையிடமுடியும்:

Plaintiff’s Amended Statement of Claim Issued 23.01.31

 

 

Fresh as Amended Statement of Defence – Defendants – Canada-Karai et al- 02-MAR-2023

 

 

 

காரை வசந்தம் 2023 மலர்

 

காரை வசந்தம் 2023 மலர்

பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://drive.google.com/file/d/1vzK1djo2GcXe6MSuiC60khH36gpTpv1Q/view?usp=sharing

காரை வசந்தம் 2022 மலர்

காரை வசந்தம் 2022 மலர்

பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/KARAI-VASANTHAM-2022-BOOK.pdf

 

 

KARAI VASANTHAM 2022 BOOK

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை காரை வாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை காரை வாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொத. சாதாரண தரப் பரீட்சைக்கு காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம்,விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை 30.03.2024, 31.03.2024, 10.04.2024, 11.04.2024, 12.04.2024, 20.04.2024 ஆகிய திகதிகளில் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடைபெற்றிருந்தது. காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பூரண அனுசரணையில் நடைபெற்ற இவற்றில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

மன்றத்திற்கு காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதம் கீழே எடுத்துவரப்பட்டுள்ளது.

final Report

வழக்குத் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட தவறான தகவலும் அதன் திருத்தமும்.

 

வழக்குத் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட தவறான தகவலும் அதன் திருத்தமும்.

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்டு நடந்து வரும் வழக்குத் தொடர்பிலான சென்ற 7ஆம் திகதி நடைபெற்றிருந்த ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்துரையாடலிலும் வழக்காளிக்கு எதிராக பிரதிவாதிகளினால் கொண்டு வரப்பட்டிருந்த நகர்த்தல் பத்திரத்தின் விசாரணை யூன் மாதம் 28இல் நடைபெறும் என தலைவரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தவறானதாகும். விசாரணைக்கான திகதி யூன் மாதம் 26 என்பதே சரியானதாகும். தவறுக்கு வருந்துகிறோம்.

கனடா-காரை கலாசார மன்றம்.

 

 

மக்களின் நலன்களுக்காக உழைத்து வருகின்ற சேவையாளர்களை பாதுகாக்க உதவுவது சமூகத்தின் தார்மீகக் கடமை என்ற கருத்து மேலோங்கிக் காணப்பட்ட வழக்குத் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் கலந்துரையாடலும்:

மக்களின் நலன்களுக்காக உழைத்து வருகின்ற சேவையாளர்களை பாதுகாக்க உதவுவது சமூகத்தின் தார்மீகக் கடமை என்ற கருத்து மேலோங்கிக் காணப்பட்ட வழக்குத் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் கலந்துரையாடலும்:

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துக்கும் அவற்றின் செயற்பாட்டாளர்கள் ஏழு பேருக்கும் எதிராக நஸ்ட்ட ஈடு கோரி ஒன்ராறியோ உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள  வழக்குத் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை Scarboorough Civic Centre  மண்டபத்தில் (Chamber)  கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021 ஆம் ஆண்டு திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் தொடரப்பட்ட இவ்வழக்கினை சேவை அமைப்புக்களும், அதன் செயற்பாட்டாளர்களும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கில் சட்டரீதியாக எதிர்கொண்டதில் இன்று வரைக்கும் நடைபெற்ற அனைத்து விடயங்களையும் விபரமாகவும் விளக்கமாகவும் தவைரினால் சபைக்கு எடுத்துக் கூறப்பட்டிருந்த அதேவேளை இவ்வழக்கினை சமாதானமான முறையில் முடிவுறுத்துவதற்கு  முன்னெடுக்கப்பட்டிருந்த  முயற்சிகள் குறித்தும்  விளக்கமளித்தார்.

வழக்காளியான திரு.முத்து பொன்னம்பலம் அவர்களுக்கு இவ்வழக்கினை   நடாத்துவதற்கு நிதிரீதியாக தகமை (Security for Costs) உள்ளதா என்பது குறித்து பிரதிவாதிகள் தரப்பில் நகர்த்தல் பத்திரம் (Motion) தாக்கல் செய்யப்பட்டு அதற்கான விசாரணைக்கு எதிர்வரும் யூன் மாதம் 28ம்  திகதியிடப்பட்டுள்ளதாகவும் சபைக்கு தலைவரினால் தெரிவிக்கப்பட்டது.

வழக்கிற்கு ஏற்பட்டுள்ள செலவினை எவ்விதம் ஈடுசெய்வது, சமாதான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பது என்பன தொடர்பில் பலரும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். சேவை அமைப்புக்களுக்கும் அவ் அமைப்புக்கள் ஊடாக மக்களின் நலன்களுக்காக தொண்டு அடிப்படையில் உழைத்து வருகின்ற சேவையாளர்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறித்திய பலரும் இவர்களுக்கு பொருளாதாரச் சுமையோ அன்றி மனச் சுமையோ ஏற்படுத்தப்படுவதை சமூகம் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

சமாதானமான முறையில் இவ்வழக்கு முடிவுறுத்தப்படுமானால் அதனை ஏகோபித்த ரீதியில் சபை வரவேற்றிருந்தது. முன்னர் எடுக்கப்பட்டிருந்த சமாதான முயற்சிகள் தோல்வியடைந்திருந்தாலும் சமாதானத்துக்கான கதவுகள் இன்னும் திறந்தே உள்ளதாக தலைவர் சிவநாதன் அவர்கள் தெரிவித்தார். சமாதான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லையானால் வழக்கினை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாததாகும் என்ற வகையில் இவ்வழக்கிற்கு ஏற்படக்கூடிய சட்டச் செலவுளை காரைநகர் சமூகமாக ஒன்றிணைந்து உதவவேண்டும் என்ற பகிரங்க விண்ணப்பத்தை முன்வைக்கவேண்டும் என்ற ஆலோசனை அனைவராலும் எற்றுக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் காரணமாக ஏற்பட்டுள்ள கால, நேர, பண விரயமும் மக்கள் மன்றப் பணிகளில் ஈடுபடக் காட்டி வருகின்ற தயக்கமும் நலிவுற்ற மக்களுக்கு உதவும் நலன்புரிப் பணிகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன் தடையின்றி மக்களுக்கான உதவிகள் சென்றடைவதற்கும் மக்கள் தயக்கமின்றி பணிகளில் ஈடுபடுவதற்கும் ஏற்ற சூழ்நிலையினை ஏற்படுத்த முடிந்தவரை சமாதானமான முறையிலோ சாத்தியப்படாதவிடத்து சட்டரீதியாக எதிர்கொண்டோ விரைவில் வழக்கினை முடிவுறுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

2024, மார்ச் மாதம் வரைக்கும் வழக்கிற்கு ஏற்பட்ட சட்டச் செலவான 57,728.00 டொலரில் பிரதிவாதிகளும், காரை.மக்களும் வழங்கிய தொகையான 25,822.00 டொலர்கள் சட்டவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 31,906.00 டொலர்கள் சட்டவாளர்களுக்கு வழங்கப்படவேண்டியுள்ளது. பிரதிவாதிகளிடமிருந்து அவர்களால் வழங்கப்படக்கூடிய இயன்றளவு தொகையினைப் பெறுவதுடன் மக்களிடமிருந்தும் நன்கொடைகளைப் பெற்று கொடுக்குமதியாகவுள்ள  31,906.00 டொலர்களையும் ஈடுசெய்ய வேண்டும் என்ற ஆலோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைபெறவுள்ள கனடா-காரை கலாசார மன்றத்தின் பொதுக் கூட்டத்தில் இவ் ஆலோசனையை பிரேரணையாகச் சமர்ப்பிப்பதென முடிவுசெய்யப்பட்டது.

இவ்வழக்குத் தொடர்பிலும் இவ்வழக்கு குறித்து கனடா-காரை கலாசார மன்றத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு மன்றத்துக்கும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக தீவிர பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்தும் சுட்டிக்காட்டிய சில உறுப்பினர்கள் இவர்களது நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் மன்றம் உண்மைநிலையை தெளிவுபடுத்தவும் மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கவும் மக்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு விளக்கவேண்டும் என்ற கோரிக்கையும் சில உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்தப் பதிலளித்த தலைவர் சிவநாதன் அவர்கள், இது குறித்து கனடா-காரை கலாசார மன்றமும் கரிசனை கொண்டுள்ளதுடன் சமூகப் பொறுப்புடன் நடந்துகொண்டு அவ்வப்போது இவ்வழக்குத் தொடர்பிலான விபரத்தினையும் உண்மைநிலையினையும் உத்தியோகபூர்வ இணையத்தளமாகிய karainagar.com  ஊடாக வெளிப்படுத்தியும் வந்துள்ளது. இன்று கூட்டப்பட்டுள்ள கூட்டம்கூட மக்களுக்கு தெளிவுபடுத்தலுக்கான ஓர் நடவடிக்கையேயாகும். கரிசனை உள்ளவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்த்து சமூகப் பொறுப்பற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றமை கவலையளிப்பதாகும். இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளமுடியாதவர்கள் மன்றத்தின் மின்னஞ்சல் முகவரியாகிய karainagar@gmail.com உடனோ அன்றி தொலைபேசி இலக்கம் 416 418 5697 உடனோ தொடர்புகொண்டால் விளக்கமளித்து அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்கு எமது நிர்வாகம் எப்போதும் தயாராகவே உள்ளது. தொடர்ந்து இவ்வழக்கு குறித்த விபரங்கள் karainagar.com  இணையத்தளம் ஊடாக அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு வரும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வழக்குத் தொடர்பிலான முழுமையான விபரத்தையும் முன்னெடுக்கப்பட்டிருந்த சமாதான முயற்சிகளையும் உள்ளடக்கிய கனடா-காரை கலாசார மன்றத்தின் விரிவான அறிக்கை விரைவில் இவ்விணையத்தளம் ஊடாக எடுத்து வரப்படவுள்ளது.

 

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 13ம்,14ம்,15ம்,16ம்,17ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 13ம்,14ம்,15ம்,16ம்,17ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே /நவம்பர்  ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

அதன் அடிப்படையில் 13வது தடவையாக 05.11.2021 அன்று 13ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 23,750 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

14வது தடவையாக 05.05.2022 அன்று 14ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 26,250 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

15வது தடவையாக 08.11.2022 அன்று 15ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 73,750 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

16வது தடவையாக 08.05.2023 அன்று 16ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 70,062.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

17வது தடவையாக 06.05.2023 அன்று 17ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 70,062.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 13ம்,14ம்,15ம்,16ம்,17ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பார்வையிட கீழேயுள்ள இணைப்புகளை அழுத்தவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/Primary-Schools-Report-05-May-2021-05-Nov-2021.pdf

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/Primary-Schools-Report-05-Nov-2021.pdf

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/Primary-Schools-Report-2022-2023.pdf

 

வங்கியிடமிருந்து பெறப்பட்ட வட்டிக்குரிய முழு விபரம்

கீழே எடுத்து வரப்பட்டுள்ளது.

                                                                                    (NOV 2015 – NOV 2023)

A–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023 B–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023 CKCA-Karainagar Scools Bank Intrest Report – final

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இனிய சித்திரை வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற  வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே /நவம்பர் ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

குறிப்பு :  பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு 20.07.2015 அன்று நிரந்தர வைப்பில் இடப்பட்டது. பின்னர் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி மற்றைய  பாடசாலைகள் போன்று மே /நவம்பர்   கிடைக்கப்பெற 07.11.2016 அன்று நிரந்தர வைப்பில் இட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மூன்று  தடவைகள் வங்கி மற்றும் மன்றத்தால் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக வட்டிக்குரிய நிதி வழங்கப்பட்டது.  பாலாவோடை இ.த.க.பாடசாலையில் மாணவர்கள் தொகை மிகக் குறைவடைந்ததன் காரணமாக  வங்கிக் கணக்கிலிருந்து வட்டிப்பணத்தினை மீளப்பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களினால் குறித்த வட்டிப்பணம் 05.05.2021 தொடக்கம் காரை அபிவிருத்திச் சங்கக் கணக்கிற்கு வைப்பிலிடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பாடசாலைக்கு தேவையேற்படும்போது இப்பணம் காரை அபிவிருத்திச் சபையால் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இப்பணம் காரைநகர் மாணவர்களுக்கு கல்வித் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பு : வியாவில் சைவ வித்தியாலயத்திற்கு மூன்று  தடவைகள் மன்றத்தால் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக வட்டிக்குரிய நிதி வழங்கப்பட்டது. 07.11.2016 அன்று கனடா காரை கலாச்சார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ஒவ்வொரு வருடமும் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

                         நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்.

 

மேலும் விபரங்களைகாரை வசந்தம் – 2023″ மலரில் பார்வையிடலாம்.

 

வங்கியிடமிருந்து பெறப்பட்ட வட்டிக்குரிய முழு விபரம்

கீழே எடுத்து வரப்பட்டுள்ளது.

                                                                                    (NOV 2015 – NOV 2023)

A–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023 B–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023

CKCA-Karainagar Scools Bank Intrest Report – final

சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை பிரதான மண்டபத்தின் முற்பகுதி அலுமினியம் வலை பொருத்தப்பட்டு இரண்டு நுழை வாயில்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. பாடசாலை அதிபரின் கோரிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட இந்த வேலைகளை நிறைவு செய்வதற்கு கனடா-காரை கலாசார மன்றம் நான்கு இலட்சத்து இருபத்தேழாயிரத்து தொழாயிரத்து ஐம்பது ரூபாவினை (427950.00 ரூபா) காரை அபிவிருத்திச் சபையின் ஊடாக உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைகள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட பிரதான மண்டபத்தின் புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:

 

கனடா காரை கலாச்சார மன்றம் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல். (28.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி)

கனடா காரை கலாச்சார மன்றம்

நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்

28.04.2024 (Apr 28, 2024) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி

கனடா  காரை கலாச்சார மன்ற நிர்வாக சபைபோஷகர்  சபைகணக்காய்வாளர்

2024 – 2025 அங்கத்தவர்கள் தேர்வுக்கான  பொதுத் தேர்தல்

நடைமுறை வழிகாட்டல் ஆவணம்

பின்வரும் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிகளிற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  1. தலைவர்
  2. உப தலைவர்
  3. செயலாளர்
  4. உப செயலாளர்
  5. பொருளாளர்
  6. உப பொருளாளர்
  7. 13 நிர்வாக சபை உறுப்பினர்கள்
  8. 6 தயார்நிலை உறுப்பினர்கள்
  9. 3 திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்கள்

கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். இத் தேர்தலில் பங்கு பற்றி போட்டியிடும் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் 2023, 2024ம் ஆண்டிற்கான வருட சந்தா கட்டி அங்கத்துவம் பெற்று, பொது சபை உறுப்பினர் அந்தஸ்த்தில் உள்ள அனைவருக்கும் உண்டு. ஆனாலும் 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

சேவை மனப்பான்மை உடைய அனைவரும் எந்த பதவிகளுக்கும் விண்ணப்பம் செய்யலாம்.

மேற்படி தேர்தலில் பங்குபற்ற விரும்பும் அனைவரும் 26.04.2024 (Apr 26,2024) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.

தேர்தல் எதிர்வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொது சபை கூட்டத்தின் (28.04.2024) போது நடைபெறும்.

இத் தேர்தலில் தெரிவு செய்பவரின் பதவிக்காலம் தேர்தல் தினத்தில் இருந்து 2026 ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும்.

பொது சபை அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் எத்தனை பதவிக்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர் விண்னப்பித்த பதவிகளில் எதாவது ஒரு பதவிக்கு தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்டால், அதன் பின்பு வரும் பதவிகளுக்குகான அவருடைய விண்ணப்பங்கள் பரிசீலன செய்யப்படமாட்டாது. தெரிவு செய்யப்பட்ட பதவியில் இருந்து, குறித்த நபர் தன்னை விலக்கிக் கொண்டாலும் மற்றும் பதவிகளுக்கான போட்டியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதாகவே கருதப்படும்.

குறித்த பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.

குறித்த ஒரு பதவிக்கு விண்ணப்பம் கிடைத்திருந்தும், தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக யாராவது ஒருவர் விண்னப்பத்தினை வாபஸ் செய்தால், அப் பதவிக்கு கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்படுவர்.

மேற் குறித்த பதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பதவிகளிற்கான தெரிவு மட்டுமே கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.

குறிப்பு:

கணக்காய்வாளர் பொது சபை அங்கத்தவர்களினால் கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து நியமிக்கப்படுவார்.

விண்ணப்ப படிவத்தில் உள்ள சகல கேள்விகளுக்குமான பதில்களும் நிரப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரிக்கு பொருத்தமற்ற வினாக்கள் இருப்பின் N/A என குறிப்பிட வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை 26.04.2024 (Apr 26, 2024) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக ckcaelection2024@karainagar.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பபடிவங்கள் ஒப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.

நன்றி

          திட்டமிடல் போசகர் சபை
கனடா காரை கலாச்சார மன்றம்.

 

விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/CKCA-Election-Application-2024.pdf

 

 

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும். (28.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி)

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்.

(28.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் 2024/2025 ஆண்டிற்குரிய புதிய நிர்வாக சபை தெரிவு ஆகியன 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் 2023ம், 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பி அத்துடன் உடனடியாக karainagar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு e-Transfer மூலம் பணத்தினை ($20.00) செலுத்தலாம். மேலும் மன்ற மின்னஞ்சல் Karainagar@gmail.com என்ற முகவரியுடன் தொடர்புகொண்டு தங்கள் அங்கத்துவதை பெற்றுக்கொள்ளலாம்.

நிர்வாக சபை பதவிக்கான அறிவித்தல் மற்றும் நிகழ்ச்சி நிரல் பின்னர் மன்ற இணையத்தளத்தில் எடுத்துவரப்படும்.

காலமும் நேரமும்: 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி

இடம்: Scarborough Civic Centre
Committee Rooms 1 & 2

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியிலும், கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒற்றுமையிலும், காரை மண்ணின் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும்கொண்டுள்ள அனைத்து கனடா வாழ் காரை மக்களும் குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு மூன்று தினங்களிற்கு முன்னர் அங்கத்துவ பணத்தினை செலுத்தி இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

                              நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள இணைப்பை அழுத்தி அதில் உள்ள படிவத்தை நிரப்பி Karainagar@gmail.com என்ற மன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/02/CKCA-MEMBERSHIP-FORM-.pdf

 

திருமதி கந்தையா சிவமணி அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும். (07.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி)

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும்

அதன் செயற்பாட்டாளர்களுக்கும்

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும்

எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான

கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும். 

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராக நஸ்டஈடு கோரி திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் ஒன்ராறியயோ உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு மன்றத்தினதும் காரைநகர் மக்களினதும் நலன்களை நிலைநாட்டும் வகையில் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்குத் தொடர்பில் தெளிவான புரிதலை பொது மக்களுக்கு ஏற்படுத்துவதும் அதற்குச் செலவு செய்யப்படும் நிதி தொடர்பில் தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் உண்மை நிலை குறித்து பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டியதும் மன்றத்தின் பொறுப்பும் கடமையுமாகும். கனடா-காரை கலாசார மன்றத்தின் ஈராண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டத்தில் இவ்வழக்குத் தொடர்பிலான உறுதியான தீர்மானம் எடுக்கப்படவேண்டியுள்ளது.

எனவே மேற்குறித்த அனைத்து விடயங்களுக்காகவும் ஓர் ஆலோசனைக் கூட்டத்தினையும் கலந்துரையாடலையும் நடாத்தி நடைபெறவுள்ள ஈராண்டுப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவினை தயார் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கானது மன்றத்தினதும் அதன் செயற்பாட்டாளர்களினதும் நலன்களை மட்டுமல்லாது காரைநகர் மக்களினதும் நலன்களை பாதிப்பதாகவுள்ளதால் கனடா வாழ் காரை மக்களை இதில் கலந்துகொண்டு மன்றத்தையும் அதன் செயற்பாட்டாளர்களையும் பாதுகாக்க உதவுவதுடன் மண்ணின் செயற்பாட்டாளர்கள் எவ்வித தயக்கமோ அச்சமோ இன்றி மண்ணுக்கான பணியில் ஈடுபடுகின்ற நிலையினை ஏற்படுத்த ஆதரவளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

காலமும் நேரமும்: 07.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி

இடம்: Scarborough Civic Centre
Committee Rooms 1 & 2

நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் தலைவர் மு.காசிப்பிள்ளை அவர்களின் மறைவினால் நாளைய தினம் (10.03.2024) நடைபெறவிருந்த கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் தலைவர் மு.காசிப்பிள்ளை அவர்களின் மறைவினால் நாளைய தினம் (10.03.2024) நடைபெறவிருந்த கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பில் நாளைய தினம் (10.03.2024) முற்பகல் 9.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் மன்றத்தின் முன்னாள் தலைவரான திரு.முருகேசு காசிப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இவ் ஆலோசனைக் கூட்டமும் கலந்துரையாடலும் மீண்டும் நடைபெறவுள்ள திகதியும் இடமும் விரைவில் அறியத்தரப்படும்.

நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.

 

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும்  காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும்.

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும்

அதன் செயற்பாட்டாளர்களுக்கும்  

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும்

எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான

கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும்.

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும்  எதிராக நஸ்டஈடு கோரி திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் ஒன்ராறியயோ உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு மன்றத்தினதும் காரைநகர் மக்களினதும் நலன்களை நிலைநாட்டும் வகையில் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்குத் தொடர்பில் தெளிவான புரிதலை பொது மக்களுக்கு ஏற்படுத்துவதும் அதற்குச் செலவு செய்யப்படும் நிதி தொடர்பில் தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் உண்மை நிலை குறித்து பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டியதும் மன்றத்தின் பொறுப்பும் கடமையுமாகும். கனடா-காரை கலாசார மன்றத்தின் ஈராண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டத்தில் இவ்வழக்குத் தொடர்பிலான உறுதியான தீர்மானம் எடுக்கப்படவேண்டியுள்ளது.

எனவே மேற்குறித்த அனைத்து விடயங்களுக்காகவும் ஓர் ஆலோசனைக் கூட்டத்தினையும் கலந்துரையாடலையும் நடாத்தி நடைபெறவுள்ள ஈராண்டுப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவினை தயார் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கானது மன்றத்தினதும் அதன் செயற்பாட்டாளர்களினதும் நலன்களை மட்டுமல்லாது  காரைநகர் மக்களினதும் நலன்களை பாதிப்பதாகவுள்ளதால் கனடா வாழ் காரை மக்களை இதில் கலந்துகொண்டு மன்றத்தையும் அதன் செயற்பாட்டாளர்களையும் பாதுகாக்க உதவுவதுடன் மண்ணின் செயற்பாட்டாளர்கள் எவ்வித தயக்கமோ அச்சமோ இன்றி மண்ணுக்கான பணியில் ஈடுபடுகின்ற நிலையினை ஏற்படுத்த ஆதரவளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

காலமும் நேரமும்: 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி

இடம்: Scarborough Civic Centre
Committee Rooms 1 & 2

                              நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.

 

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்.

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் 2024/2025 ஆண்டிற்குரிய புதிய நிர்வாக சபை தெரிவு ஆகியன இடம்பெறவுள்ளது. நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் 2023ம், 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பி அத்துடன் உடனடியாக karainagar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு e-Transfer மூலம் பணத்தினை ($20.00) செலுத்தலாம். மேலும் மன்ற மின்னஞ்சல் Karainagar@gmail.com என்ற முகவரியுடன் தொடர்புகொண்டு தங்கள் அங்கத்துவதை பெற்றுக்கொள்ளலாம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவிற்கான அறிவித்தல் (காலம், இடம்) கூடிய விரைவில் அறியத்தரப்படும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியிலும், கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒற்றுமையிலும், காரை மண்ணின் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ள அனைத்து கனடா வாழ் காரை மக்களும் குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு மூன்று தினங்களிற்கு முன்னர் அங்கத்துவ பணத்தினை செலுத்தி இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

                             நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள இணைப்பை அழுத்தி அதில் உள்ள படிவத்தை நிரப்பி Karainagar@gmail.com என்ற மன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/02/CKCA-MEMBERSHIP-FORM-.pdf

 

 

வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தில் அமைந்துள்ள சமையலறை மிகுந்த சேதமடைந்திருந்ததனால் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பல்வேறு அசளகரியங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். சமையலறையின் குசினிப்பகுதியில் சமைக்கமுடியாத நிலை இருந்ததனால் பாடசாலைக்கு வெளியிலிருந்தே உணவு சமைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டிருந்தது. மழைகாலங்களில் கூரையூடாக ஒழுக்கிருந்ததனால் மாணவர்கள் அங்கிருந்து உணவருந்துவதில் அசளகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

சமையலறையினை திருத்தம் செய்யப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறித்தி முன்னாள் அதிபரான திருமதி கௌ.அருள்மொழி அவர்களினால் கனடா-காரை கலாசார மன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைத் திருத்திக்கொடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அருள்மொழியைத் தொடர்ந்து வந்த அதிபர் திரு.நல்லதம்பி கிஸ்ணபவன் அவர்களுடன் கனடா-காரை கலாசார மன்றம் தொடர்புகொண்டு திருத்த வேலைகளை முன்னெடுக்கவிருந்த தருணத்தில் அவர் இடமாற்றலாகிச் செல்ல புதிய அதிபராக திரு.கே.துஸ்யந்தன் பதவியேற்றிருந்தார். துஸ்யந்தன் அவர்கள் எடுத்துக்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக காரை அபிவிருத்திச் சபையின் மேற்பார்வையில் சமையலறையின் திருத்த வேலைகள் யாவும் ஐந்து இலட்சத்து ஐம்பத்தொராயிரமம் ரூபா செலவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இப்பணிக்கு சில அன்பர்களும் முன்வந்து நன்கொடையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இப்பணியின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு உதவிசெய்த கனடா-காரை கலாசார மன்றத்துக்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து அதிபர் திரு.துஸ்யந்தன் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இக்கடிதத்தினை கீழே பார்வையிடலாம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

திரு.சபாரத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) 27.12.2023 புதன்கிழமை அதிகாலை 4.:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) 27.12.2023 புதன்கிழமை அதிகாலை 4.:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற ஆதிரை அபிசேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி மற்றும் புல்லாங்குழல் இசைக் கச்சேரி இடம்பெற்றது. தொடர்ந்து மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம முறைப்படி நடத்தினர்.

தொடர்ந்து தவில் நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க தில்லை நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடியவண்ணம் வீதியுலா வந்த அருள் காட்சியைக் கண்டு சிவனடியார்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு பேரானந்தம் அடைந்தனர்.

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/EQS5su7tXkdQSXct5

கலை உணர்வோடு காரை.மண்ணின் உணர்வும் பெருக்கெடுத்தோடி வரலாற்றுப் பெருவிழாவாக அமைந்துவிட்ட காரைவசந்தம் – 2023.

கலை உணர்வோடு காரை.மண்ணின் உணர்வும் பெருக்கெடுத்தோடி வரலாற்றுப் பெருவிழாவாக அமைந்துவிட்ட காரைவசந்தம் – 2023.

கனடா-காரை கலாசார மன்றத்தினால் ஆண்டுதோறும் பெருமையோடு வழங்கப்பட்டு வருகின்ற காரை வசந்தம் கலை விழா இம்முறை 21வது ஆண்டாக சென்ற டிசம்பர் 02 ஆம் திகதி சனிக்கிழமை மாலை தமிழிசைக் கலா மன்ற அரங்கில் நடைபெற்று பலவகையிலும் வரலாறு படைத்து பெருவிழாக அமைந்துவிட்டது.

காரைதீவு காரைநகராக பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டுச் சிறப்பு விழா – காரைச் சிறார்களும் இளையோரும் தமது கலைப் படைப்புக்களினால் சபையோரை கட்டிப்போட்டிருந்த விழா – காரை.மண்ணுக்கு பெரும் புகழினைத் தேடித் தந்து கொண்டுள்ள காரை.மாதாவின் புதல்வனான முன்னாள் சுவீடன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த விழா – கனடா-காரை கலாசார மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காரை.உறவுகளின் நலன்பேணுகின்ற திட்டங்களுக்கு சிறப்பாக கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பேராதரவினை வழங்கிய விழா – காரை.மண்ணின் பெருமையினையும் மகிமையினையும் பிரபலிக்கின்ற இருபத்தைந்துக்கு மேற்பட்ட ஆக்கங்கள், வரலாற்றுத் தகவல்கள், மண்ணின் நினைவுகளை சுமந்து வருகின்ற புகைப்படங்கள் உள்ளிட்ட மண் சார்ந்த பல்வேறு விடயங்களைத் தாங்கிய கனதியான சிறப்பு மலராக காரைவசந்தம் மலர் வெளியிடப்பெற்றிருந்த விழா – கலை உணர்வோடும் மண்ணின் உணர்வோடும் வருகைதந்த காரை.உறவகளினால் அரங்கம் நிரம்பி வழிந்த விழா – என அனைத்து அம்சங்களிலும் பொலிவுபெற்று வரலாறாகிய காரை.வசந்தத்தின் பெருவெற்றி குறித்து இவ்விழாவின் வெற்றிக்காக உழைத்த கனடா-காரை கலாசார மன்றமும் கனடா வாழ் காரை உறவுகளும் பெருமிதமும் பெரு மகிழ்ச்சியும் அடையமுடியும்.

இவ்விழாவின் சிறப்பினை இங்கே முன்னர் பதிவிடப்பட்டிருந்த காணொளி வாயிலாக பார்த்து தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புவதுடன் தற்போது, விழாவின் சிறப்பினை மேலும் வெளிப்படுத்துகின்ற நூற்றுக்கு மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/WmNefqfKeXyE7hST8

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா! (27.12.2023 – புதன்கிழமை)

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும்

திருவாதிரைத் திருவிழா! (27.12.2023 – புதன்கிழமை)

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple)எதிர்வரும் 27ஆம் திகதி(27.12.2023) புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4..30 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் மன்ற மின்னஞ்சல் karainagar@gmail.com (e- transfer) ஊடாக அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மின்னஞ்சல்: karainagar@gmail.com

            நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

“காரை வசந்தம் 2023” (DEC 02, 2023)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் மலரில் 2007ம் ஆண்டு வெளியான கட்டுரை- நமது வாழ்வும் வளமும் – பேராசிரியர் கலாநிதி நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா

நமது வாழ்வும் வளமும்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் மலரில் 2007ம் ஆண்டு வெளியான கட்டுரை- காரைதீவு – பேராசிரியர் கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி

காரை தீவு

ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2023” இன் பிரதம விருந்தினர் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் மன்றத்தின் முன்னைநாள் பொருளாளர் ஆகியோர் வரவேற்றனர்.

ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2023” இன் பிரதம விருந்தினர் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் மன்றத்தின் முன்னைநாள் பொருளாளர் ஆகியோர் வரவேற்றனர்.

காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக காரைநகர் மக்கள் ஒன்றிணைந்து எடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக 21 வது காரை வசந்தம் எதிர்வரும் சனிக்கிழமை (DEC 02, 2023) மாலை 5.00 மணிக்கு 1120,Tapscott Road, Unit 3 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தின் தமிழ்க் கலை அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இளையவர் முதல் பெரியோர் வரை கலந்து ஊர் நினைவுகளை மீட்டு, உறவு கொண்டாடி மகிழும் இனிமையானதொரு வசந்தமாக அன்றைய தினம் அமையவுள்ளது.

இந்நாளில் எம் காரை மண்ணின் நினைவாக கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து கனடா காரை நல்லுள்ளங்களையும் கேட்டுக் கொள்கின்றேம்.