காரைநகர் கலாநிதி விளையாட்டுக் கழகத்தினால் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடாத்தப்பட்ட பெரு விளையாட்டுக்களுக்கான பரிசளிப்பு விழாவும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியும் தைப்பொங்கல் தினமான 14.01.2017 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கழகத் தலைவர் வி.சங்கர் தலைமையில் நடைபெற்றது.
இப் போட்டிக்குப் பிரதம விருந்தினராக கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானமும் சிறப்பு விருந்தினராக பிரித்தானிய காரைநலன்புரிச் சங்க போஷகர் ப.தவராசா,காரைநகர் பிரித்தானிய காரைநலன்புரிச் சங்கத் தலைவர் க.சோமசேகரம்,தொழிலதிபர் ந.யோகநாதன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக வைத்தியக் கலாநிதி சு.நடராசாவும் கலந்துகொண்டதுடன் புலம் பெயர் தேசங்களில் இருந்து வருகைதந்த பலரும் கலந்துகொண்டு போட்டிகளில் பங்குபற்றி தங்கள் பசுமையான பழைய நினைவுகள மீட்டிப்பார்த்தமை சிறப்பு நிகழ்வாக அமைந்தது.