காரைநகர் அபிவிருத்திச் சபையின் 01.04.2015 தொடக்கம் 27.03.2017 வரையான செயற்பணி அறிக்கை
01. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன்
எமது பாடசாலை மாணவர்களின் கல்வியினை கருத்திற் கொண்டும் நீண்டகால நோக்குடன் காரைநகரில் உள்ள 12 பாடசாலைகளுக்கு நிரந்தரவைப்பு பணமாக தலா பத்து இலட்சம் ரூபா வீதம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டு குறித்த வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டியினை ஒரு வருடத்தில் இரண்டு தடவைகள் பெற்று மாணவர்களின் கல்விக்கு செலவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதிபர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் விபரம்
1. ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம்
2. வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை
3. ஊரி அ.மி.த.க பாடசாலை
4. வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை
5. யாழ்ற்றன் கல்லூரி
6. யா.சுப்பிரமணிய வித்தியாசாலை
7. தோப்புக்காடு மறைஞான சம்பந்த வித்தியாலயம்
8. வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயம்
9. சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்
10. வியாவில் சைவ வித்தியாலயம்
11. மெய்கண்டான் வித்தியாலயம்
12. பாலவோடை இ.த.க.பாடசாலை
புலமைப்பரிசில் பரீட்சைமூலம் மாணவர்கள் காரைநகரில் கணிசமான அளவு சித்தியடைய வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கான முன்னோடி பாடங்களையும் , பரீட்சைகளையும் காரைநகரில் வசிக்கும் தரம் 5 மாணவர்களை ஒருங்கிணைத்து யாழ்ற்றன் கல்லூரியில் 06.07.2015, 19.07.2015, 31.07.2015 ஆகிய தினங்களில் 169 பிள்ளைகளுக்கான மேற்படி பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டது. இம் முன்னோடி நிகழ்வை யாழ் மாவட்டத்தில் உள்ள முன்னோடி ஆசிரியர் குளாம் 16 பேரைக் கொண்ட வளவாளர்கள் முன்னெடுத்திருந்தனர்.
அடுத்து காரை முத்தமிழ் பேரவையில் முன்னேற்றத்திற்காக அப் பேரவையின் முதல்வர் ந.இராசமலரிற்கு 262,075/= ரூபா வழங்கப்பட்டது.
அடுத்து நூலகத்தில் வாணி விழாவின் போது காரைநகரில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 2015,2016ம் ஆண்டுக்குரிய மாணவர்களை
கௌரவித்து பணப்பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்தோடு குறித்த ஆண்டுகளில் ஆண்டு 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களின் நடனம், பேச்சு, பாட்டு, கலைநிகழ்வுகளும் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி சார்ந்த வளவாளர்களால் சொற்பொழிவும் இடம்பெற்றது.
2016ம் ஆண்டு சர்வதேச விதவைகள் தினத்தையிட்டு யாழ் மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்க சமாசத்தின் வேண்டுதலின் பிரகாரம் 2016 யூலை மாதம் காரைநகரில் உள்ள விதவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் நோக்கில், குறித்த பெண்கள் அமைப்புக்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கான கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டு, ஒரு விதவைக்கு 2 தென்னம்பிள்ளைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வு எமது நூலகத்தில் நடாத்தப்பட்டது.
அடுத்து கனடா காரை கலாசார மன்றத்தின் காரை வசந்தம் விழாவிற்காக, காரைநகரில் உள்ள 13பாடசாலை அதிபருடனான நேர்காணல் ஒளிப்பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. 2017ம் ஆண்டு கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் தோப்புக்காடு மறைஞான சம்மந்த வித்தியாலயம், ஆயிலி சிவஞானோதயா வித்தியாலயம், வலந்தலை வடக்கு அ.மி.த.க வித்தியாலயம், வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயம், பாலாவோடை இ.த.க. பாடசாலை ஆகிய பாடசாலைகள் மற்றும் கோட்டக்கல்வி அலுவலகம் மற்றும் எம் சபைக்கும் மடி கணினி வழங்கப்பட்டது. மேலும் த.பரமானந்தராசா(தந்தையின் ஞாபகார்த்தமாக),கனக சிவகுமாரன்(நாகமுத்து புலவர் கவிதை வெளியீட்டின் மூலம்)சு.கதிர்காமநாதன் ஆகியோரின் நிதியைக் கொண்டு ஒவ்வொரு பாடசாலை அதிபர்களின் சிபாரிசுடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 170 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் கொண்ட பொதிகள்:-
1. 1ம் கட்டம் யாழ்ற்றன் கல்லூரியில் இடம் பெற்ற சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் அணுசரனையுடன் நடத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில் வழங்கப்பட்டது.
2. 2ம் கட்டம் காரைநகர் அபிவிருத்தி சபையின் மாணவர் நூலகத்தில் வழங்கப்பட்டது.
3. 3ம் கட்டம் மணற்காட்டு அம்மன் ஆலயத்தில் நடை பெற்ற கும்பாபிசேக தினத்தில் அன்று நடை பெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
02. சுவிஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன்
காரைநகரில் உள்ள 13பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் தியாகத்திறன் கேள்வி போட்டி பரீட்சையில் திருக்குறள், மனனப்போட்டி, இன்னிசை, பொது அறிவு, பேச்சு, கவிதை போன்ற விடயங்கள் காரைநகர் இந்துக்கல்லூரியில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வு
எதியோப்பிய பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் கலாநிதி விஐயரத்தினம் யோன்மனோகரன் கெனடி. அவர்கள் தலைமையில் வளவாளர்களை கொண்டு நடாத்தப்பட்டது.
அத்தோடு நூலகத்திற்கு 9,144/= ரூபாவிற்கான புத்தகங்களும் தரப்பட்டது. மேலும் காரைநகரில் உள்ள கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்கு கண்சத்திரசிகிச்சை இரு தடவைகள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் ரூபா 567,210/= மேற் கொள்ளப்பட்டது. இச் சிகிச்சையின் போது 31 பேர் பங்கு பற்றி பயனடைந்தனர்.
அத்தோடு எமது அலுவலக செயற்பாட்டிற்காகவும் ரூபா 52,000/= நன்கொடை வழங்கியுள்ளனர். மேலும் 2016 ம் ஆண்டுக்கான கலண்டர் விற்பனை செய்த வகையிலும் எமது சபைக்கு ரூபா 41,820/= கிடைத்துள்ளது.
திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் எமது சபையின் மூலமாக பிட்டியெல்லை கிராமத்தில் அமைந்துள்ள பேரம்பலம் முன்பள்ளிக்கும், இலங்கை போக்குவரத்துச் சபை காரைநகர் சாலையின் 50 வது ஆண்டு பொன்விழாவிற்கும் ,சாலையின் கட்டிடதிருத்த வேலைக்கும், தங்கோடை முன்பள்ளி கட்டிட வேலைக்கும் ரூபா 850,000/= நிதி உதவி தரப்பட்டு அவ் வேலைகள் முழுமை பெற்றுள்ளது.
03. லண்டன் காரை நலன்புரிச்சங்கதின் அனுசரனையுடன் பின்வரும் உதவிகள் வழங்கப்பட்டது.
01. தோப்புக்காடு மறைஞான சம்பந்த வித்தியாலயத்தின் தேவையினை கருத்திற் கொண்டு நிழல்பிரதி இயந்திரம் கொள்வனவு செய்வதற்காக நிதி வழங்கப்பட்டது.
02. வியாவில் சைவ வித்தியசாலை தொண்டர் ஆசிரியருக்கு 7 மாத உதவி தொகை வழங்கப்பட்டது.
03. ஒளிச்சுடர் விளையாட்டு கழகத்தின் கோரிக்கையின் பிரகாரம் அக் கழகத்திற்கு 325,000/= ரூபா வழங்கப்பட்டது.
04. காரைநகரில் வறுமை நிலையில் உள்ள கண்பார்வை குன்றியவர்களுக்கு கண்சத்திர சிகிச்சை மூளாய் கூட்டுறவு வைத்திய சாலையில் 28 பேருக்கான வைத்திய செலவு வழங்கப்பட்டது.
ஏற்கனவே லண்டன் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் வைத்தியசாலையின் செலவுக்காக பத்து இலட்சம் ரூபா இலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் நிலையான வைப்பில் உள்ளது.
04. பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன்
01. முன்பள்ளி ஆசிரியார்களின் மாதச்சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது.
02. காரைநகரில் உள்ள 13 பாடசாலைகளுக்கும் பிரதேச செயலகத்தால் பால் விநியோகம் நடைபெறுகின்றது. அவ் விநியோகத்தினை மேற் கொள்வதற்கான ஓட்டோ வாகனச் செலவினம் வழக்கப்பட்டது. (2016 மார்கழி)
03. பாலை எடுத்துச் செல்வதற்கான கொள்கலன் ஒன்றும் குறித்த பால் விநியோகத்திற்கு வாங்கி கொடுக்கப்பட்டது.
ஏற்கனவே பிரான்ஸ் காரை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் முன்பள்ளிகளின் செயற்பாட்டிற்கு பத்து இலட்சம் ரூபா இலங்கை வங்கியில் நிலையான வைப்பில் உள்ளது.
05. அவுஸ்திரேலியா காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன்
அவுஸ்திரேலியா காரை நலன்புரிச் சங்கத்தின் மூலம் காரைநகரில் உள்ள பாடசாலை மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அனைத்து பாடசாலை நூலகத்திற்கும் இரண்டு லட்சப் பெறுமதியான புத்தகங்கள் அதிபர்களின் ஆலோசனையின் பிரகாரம் வழங்கப்பட்டது.
06. நூல்நிலையம்
யாழ் மாவட்டத்தில் செயற்படும் நூலகங்களில் குறிப்பிடத்தக்க விசாலமான நூலகங்களில் எமது நூலகமும் ஒன்றாகும். இரண்டு நூலக உதவியாளர்களின் செயற்பாட்டுடன் நூலக குழுவின் மேற்பார்வையில் எமது நூலகம் செயற்படுகின்றது. இந் நூலகத்தில் சமயம், சரித்திரம், இலக்கியம், சிறுகதை, சஞ்சிகை, உசாத்துணைநூல்கள், சோதிடம், கவிதை, பாடசாலை பயிற்சி புத்தகங்கள் பொதுஅறிவு, கட்டுரை, வினாவிடை போன்ற இன்னும் பல விடயங்களை கொண்ட 9445 புத்தகங்கள் இருக்கின்றன. அத்தோடு உதயன், வீரகேசரி ஆகிய புதின பத்திரிகைகளும் நாளாந்தம் வாசகர்களின் பாவனைக்கு போடப்பட்டுள்ளது. 2016 மார்கழி வரை இந் நூலக பயன்பாட்டில் 163 மாணவர்கள் அங்கத்தவர்களாக பயன்பாட்டில் உள்ளனர். தினமும் காலை 9.00-1.00 பிற்பகல் 2.30-5.30 மணிவரை நூலக சேவை நடைபெறுகின்றது. மேலும் மாணவர்களின் கணிணி பயன்பாட்டை கவனத்தில் எடுத்து 20.03.2016 தொடக்கம் 16.10.2016 வரை கணிணியின் அடிப்படை பயிற்சி நடைபெற்றது. இப் பயிற்ச்சி வகுப்பில் காரைநகரை சேர்ந்த 17 மாணவர்கள் பயன் பெற்றனர். இப் பயன்பாட்டிற்கு 10 கணிணிகள் நூலகத்தில் இருக்கின்றது. இக் கற்கை நெறியினை தமது சொந்த பணத்தை வைத்திய அதிகாரி சுப்பிரமணியம் நடராசா அவர்கள் குறித்தி ஆசிரியைக்கு வழங்கியுள்ளார். எமது வெளிநாட்டு உறவுகள் காலத்திற்கு காலம் காரைநகருக்கு வரும் போது எல்லாம் எமது நூலகத்தை பார்வையிட்டு தமது ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கிவருகின்றார்கள். இருப்பினும் நூலகத்தை தொடர்சியாக பாரமரித்து வருவதற்கு குறிப்பிட்ட திரண்ட நிதி இல்லாது இருப்பது ஒரு குறைபாடக உள்ளது.
07. அலுவலகம், குடிநீர் விநியோகம்
காரைநகரில் உள்ள பொது மக்களின் குடிநீர் பாவனையின் பொருட்டு ஏற்கனவே அறவிட்ட ஒரு லீற்றருக்கான பணம் குறைக்கப்பட்டு பெரிய பவுசர் ஒரு லிற்றர் நாற்பது சதப்படி சிறிய பவுசர் ஒரு லிற்றர் அறுபது சதப்படி சேவை நடைபெறுகின்றது .அதேவேளை விளான் பகுதியில் அமைந்துள்ள நடைமுறையில் இருக்கும் குடிநீர் கிணற்று உரிமையாளர் கடந்த காலத்தில் இலவசமாக குடி நீரை தந்து உதவினார். நாம் மின்சார கட்டணத்தை மாத்திரம் செலுத்தி வந்தோம். தற்போது குடிநீர் கிணற்று உரிமையாளர் மாற்றப்பட்டுள்ளமையால் புதிய உரிமையாளரின் வேண்டுகோளின் பிரகாரம் யூலை 2016 இல் இருந்து பெரிய பவுசருக்கு ஒரு தடவைக்கு 200/= ரூபாவும் சிறிய பவுசருக்கு ஒரு தடவைக்கு 75/= ரூபாவும் வழங்கப்பட்டு வருகின்றது. மின்சாரக் கட்டணத்தை கிணற்று உரிமையாளரே செலுத்துகின்றார். இதன் காரணமாகவும் எமது வருமானம் குறைவடைந்துள்ளது. அத்துடன் வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலைக்கு தற்காலிக கட்டிட புனரமைப்பு வேலைக்கு ரூபா 30,000/= வழங்கப்பட்டது. மருத்துவ செலவுக்கான போக்குவரத்து செலவுக்காக ரவிச்சந்திரன் மல்லிகாதேவி என்பவருக்கு ரூபா 10,000/= வழங்கப்பட்டது. பனை தென்னை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் 500 தென்னங்கன்றுகள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக காரை வாழ் மக்களுக்கு எமது அலுவலகத்தில் வழங்கப்பட்டது. ஏம்மால் மருத்துவ போக்குவரத்து செலவுக்காக ஊரியை சேர்ந்த சிவலிங்கம் சிவரஞ்சன் என்பவருக்கு பத்தாயிரம் ரூபா வழங்கப்பட்டது.
தண்ணீர் கணக்கில் 36 இலட்சம் ரூபா நிலையான வைப்பில் இலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் உள்ளது.( 22 இலட்சம் தற்போதை நிர்வாக சபையில்)
08. வலந்தலை பஸ் தரிப்பு நிலையம்
வலந்தலை சந்தியில் அமைந்துள்ள பஸ்தரிப்பு நிலையம் பேருந்துகள் இலகுவாக வந்து செல்ல எம்மால் ஒரு பகுதி நிலம் பெற்று விஸ்தரிக்கப் பட்டது. அத்துடன் பஸ்தரிப்பு நிலைய பிரதேசம் கனராக வாகன உதவியுடன் சீர்செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பஸ் தரிப்பிடத்திற்கான மின் கட்டணம் எம்மால் செலுத்தப்படுவதோடு பஸ்நிலைய பகுதி மாதாந்தம் துப்பரவு செய்யப்படுகின்றது.
09. வங்கி கணக்குகள் ஒன்றிணைத்தல்
ஆரம்ப காலத்தில் புலம் பெயர்நாடுகளில் இருக்கும் காரை நலன்புரிச் சங்கத்தின் பெயரில் வங்கியில் தனித்தனியான கணக்குகள் பேணப்பட்டு வந்தது. சபையின் கணக்குகள் கணக்காய்வு செய்யப்படும் போது ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனியாக கணக்காய்வு செலவுகள் வழங்கப்பட்டு வந்தது. அத்தோடு ஒவ்வொரு நாட்டு கணக்கிலும் நடைமுறைக் கணக்கில் 15000/= ரூபாவுக்கு குறைவாக இருந்தால் வங்கி தனது பாரமரிப்பு செலவு என வருடா வருடம் பணம் கழித்து வருகின்றது. அத்தோடு காசோலை புத்தகத்திற்கு 750/= ரூபா என பல வகையான செலவினங்கள் ஏற்படுவதை கவனத்தில் எடுத்து எமது சபையின் கணக்குகளில் ஒவ்வொரு நாட்டு நலன் புரிச்சங்கத்தின் கணக்குகளை தனித்தனியாக வைத்து பேணுவது எனவும் வங்கியில் எமது சபையின் சார்பாக மாத்திரம் கணக்குகளை வைத்திருப்பது சபையோரால் ஒரு மனதாக திர்மானிக்கப்பட்டு செய்ற்படுத்தப்பட்டு வருகின்றது.
10. கூட்டங்கள்
எமது நிர்வாக சபையின் காலப்பகுதியில் 19 நிர்வாக சபைக் கூட்டங்கள் நடாத்தி எமது செயற்பாட்;டினை மேற்கொண்டோம். காலத்துக்கு காலம் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் காரை நலன் புரிச்சங்கங்களின் பிரமுகர்கள் காரைநகருக்கு வருகை தரும் சந்தர்பங்களில் எமது சபை அலுவலகத்தில் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுள்ளோம்.
11. நிறைவுரை
எமது அபிவிருத்திச் சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் 07.06.2015 அன்று நடை பெற்று செயலாளராக திரு.சிவா.தி.மகேசன் தெரிவு செய்யப்பாட்டார். பின்னர் அவரின் தனிப்பட்ட விடயம் காரணமாக பதவி விலகல் கடிதம் சபைக்கு சமர்பித்து அக் கடிதம் 16.07.2015 ஆம் திகதி நிர்வாக சபைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு உப செயலாளராக பதவி வகித்த திரு.இ.திருப்புகலூர்சிங்கம் அவர்கள் செயலாளராக பதவி ஏற்றார். எமது நிர்வாக சபையின் காலப்பகுதியில் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் எமக்கு கிடைத்த நிதியினை வைத்து எமது செயற்பாட்டினை மேற்கொண்டோம். அத்தோடு எமக்கு முன்னர் இருந்த நிர்வாக சபையினாரால் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் எமது கிளைச் சங்க நலன்புரிச்சங்கங்களின் பெயரில் எமது சபையின் பெயரில் நிரந்தர வைப்பாக வங்கியில் வைக்கப்பட்ட பணத்தில் எமது நிர்வாக சபை காலப்பகுதியில் எத் தேவைக்கும் அப் பணத்தில் இருந்து நாம் எதுவும் மிளப்பெறவில்லை என்பதையும் அப் பணத்தோடு எமது காலப்பகுதியில் குடிநீர் பகுதியில் 22 இலட்சம் நிரந்தர வைப்புச் செய்யப்பட்டது. அப் பணத்தோடு சேர்த்து மொத்தம் 17,500,000/=
(ஒரு கோடி ஏழபத்தைந்து இலட்சம்) ரூபாவும் அதற்குரிய வட்டியும் நிரந்தர வைப்பில் இருக்கின்றது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதோடு எமது காலப்பகுதியில் சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்த காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், எமது சபையின் நூலகம் உட்பட அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கும் மற்றும் கல்வி சார் அறிஞர்களுக்கும் மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் அனைத்து காரை நலன்புரிச்சங்கங்கள் அனைவருக்கும் மற்றும் எமது அபிவிருத்திச் சபை அங்கத்தவர்கள் அனைவருக்கும் எமது மானமார்ந்த நன்றிகளை தெரிவித்து இச் செயற்பணி அறிக்கையை நிறைவு செய்கின்றோம்.
சபையின் சார்பாக
செயலாளர்