காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக்கூட்டம் இன்று 27ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் நடைபெற்றது.
காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவரும் ஓய்வுநிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காரைநகர் அபிவிருத்தி தொடர்பபன கருத்துப் பகிர்வுகளும் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவும் இடம்பெற்றது.
சபையின் புதிய தலைவராக சிவா தி.மகேசன்,உப தலைவராக ஓய்வுநிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலர் ப.விக்னேஸ்வரன் செயலாளராக பாலாவோடை இந்துத் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ஆ.யோகலிங்கம்,உப செயலாளராக ஓய்வு பெற்ற நீதிமன்ற உத்தியோகத்தர் க.நாகராசா,பொருளாளராக ஓய்வுநிலை காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை ஆகியோரும்
நிர்வாக சபை உறுப்பினர்களாக ஓய்வு நிலை கால்நடை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் ஆ.சிவசோதி,மருத்துவர் சு.நடராசா,காரைநகர் பிரதேச சபை முன்னாள் தலைவர் வே.ஆணைமுகன்,மற்றும்,ந.பாரதி,சி.குமாரசேகரம்,க.கிருஸ்ணகுமார்,
க.பாலச்சந்திரன்,தி.செந்தூரன்,மு.பரம்தில்லைராசா, ந.பாலகிருஸ்ணன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சபையின் காப்பாளர்களாக சுப்பிரமணியம் கதிர்காமநாதன்,தியாகராசா பரமேஸ்வரன்,விசுவலிங்கம் பரமானந்தம் ஆகியோர் சபையினரால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உள்ளகக் கணக்காய்வாளர்களாக கனகசுந்தரம் உமைநேசன்,சுந்தரலிங்கம் அகிலன் ஆகியோரும் தெரிவாகினர்.