காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவின் நூல் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற 70 ஆயிரம் ரூபா நிதியிலிருந்து இரண்டாம் கட்டமாக மேலும் 50 மாணவர்களுக்கு காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காரைநகர் நாகமுத்துப்  புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவின் நூல் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற 70 ஆயிரம் ரூபா நிதியிலிருந்து இரண்டாம் கட்டமாக மேலும் 50 மாணவர்களுக்கு காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காரைநகர் பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் கல்வியில் ஆர்வமுடைய மிக வறிய மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் இரண்டாம் கட்டமாக காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் வழங்கப்பட்டது.

காரைநகர் பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் கல்வியில் ஆர்வமுடைய மிக வறிய மாணவர்களின் விபரம் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளரின் ஊடாக பாடசாலை அதிபர்களிடமிருந்து 300 மாணவர்களின் விபரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதில் முதற் கட்டமாக 70 மாணவர்களுக்கு திரு த.பரமானந்தராஜா அவர்களின் நிதி உதவியுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மேலும் நிதி உதவிகள் கிடைக்கப்பெறுமிடத்து அடுத்த கட்ட மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.அதனையடுத்து காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளை செயலாளர் கனக சிவகுமாரன் அவர்கள் காரைநகர் நாகமுத்துப்  புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவில் நூல் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற நிதியினை கரைநகர் அபிவிருத்திச் சபையிடம் கையளித்து அதன் ஊடாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குமாறு கேட்டிருந்தார்.

அவருடைய கோரிக்கைக்கமைய கற்றல் உபகரணங்கள் பாடசாலை மாணவர்களில் இரண்டாவது தொகுதியினருக்கு வழங்கப்பட்டது. அடுத்த தொகுதி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 9ம் திகதி மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற உள்ள கும்பாபிஷேக தின சங்காபிஷேக உற்சவத்தின் போது வழங்கப்பட உள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13