கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள் 24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள்  24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக் கணணிகள் அண்மையில் காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் மற்றும் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மேலதிக இரு கணணிகள் வழங்கப்பட்டுள்ளது.

 காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் வைத்து காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் அவர்களால் பாடசாலை அதிபர் வே.முருகமூர்த்தி,பிரதி அதிபர் திருமதி கலைவாணி அருள்மாறன் ஆகியோரிடம் இந்த மடிக் கணணிகள் கையளிக்கப்பட்டது.

அண்மையில் காரைநகர் பாலாவோடை.இ.த.க.பாடசாலை,ஆயிலி சிவஞானேதய வித்தியாசாலை,தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்,வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை  என்பவற்றிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் தலா ஒவ்வொரு மடிக் கணணிகள் வழங்கப்பட்டதுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணணி வழங்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு கணணிகளும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் வழங்கப்பட்ட 43 கணணிகளில் இருந்து கடந்த நிர்வாக சபையினரால் தற்போதைய நிர்வாக சபையினரிடம் யூன் 11, 2016 அன்று மீள கையளிக்கப்பட்ட 13 கணணிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 10 கணணிகள் காரைநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1 2 3 4 5 6 7 8