காரைநகர் பிரதேசத்தில் தற்போதைய வரட்சியினால் வற்றி வரண்டு போயுள்ள கேணிகள் மற்றும் குளங்கள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் தூர்வாரி இறைத்துத் துப்புரவு செய்யும் பணி முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றது.

காரைநகர் பிரதேசத்தில் தற்போதைய வரட்சியினால் வற்றி வரண்டு போயுள்ள கேணிகள் மற்றும் குளங்கள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் தூர்வாரி இறைத்துத் துப்புரவு செய்யும் பணி முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றது.

 காரைநகரில் உள்ள நீலிப்பந்தனைக் கேணி,சடையாளிக் கேணி,சடையாளி தண்டாயுதபாணி கேணி,ஆலடிக் கேணி,திண்ணபுரம் தாமரைக் குளம் என்பன தூர்வாரி இறைத்துத் துப்புரவு செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து ஆலங்கன்று கேணி தூர்வாரி இறைத்து துப்புரவு செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்தும் ஏனைய பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் இறைத்து துப்புரவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட் உள்ளதாகவும் அவ்வாறு துப்புரவு செய்யும் பட்சத்தில் மாரிகாலத்தில் மழைநீர்நிறைந்து ஏனைய பிரதேசங்கள் நன்நீராக மாறும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகர் ஆலடிக் கேணி இறைத்துத் தூர்வாரித் துப்புரவு செய்யும்போது.

IMG_0358 (Copy) IMG_0364 (Copy) IMG_0368 (Copy) IMG_0373 (Copy)