"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்பு மீள்பார்வையும்
நினைவுப் போட்டியும்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரான அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் செய்யும் கருமத்தில் எப்போதும் செம்மை கண்டவர். கடமையே பெரிதென்று காலம் பார்க்காது உழைத்த மகான். அன்னார் காரைநகருக்கு ஆற்றிய தன்னலமற்ற கல்வி சமூக பொருளாதார சேவைகளை நன்றியறிதலோடு நினைவு கூர்ந்து பாராட்டி எமது சபையினரால் ஓழுங்கு செய்யப்பட்ட அமரரது நூற்றாண்டு விழாவும், அவ்விழாவையொட்டிய "தியாகச்சுடர்" நினைவுத் தொகுப்பு வெளியீடும் சூரிக்கில் கடந்த 17.07.2016 இல் St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றன.
இத் தொகுப்பு எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவினரால் மிக மிகக்குறுகிய காலத்தில் வடிவமைக்கப்பட்டு சுவிற்சர்லாந்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்ற எமது சபையின் முப்பெரும் விழாவில் கடந்த12.01.2017இல் இந்நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்நூலின் ஆக்கங்களை வாரம் தோறும் இணையதளங்களில் பிரசுரித்து வந்துள்ளோம். இவ் வெளியீட்டின் ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் வாசகர்களை ஊக்குவிக்கு முகமாக "தியாக நினைவுப் போட்டி" ஒன்றை ஏற்பாடு செய்கிறோம். அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் தனிப்பட்ட கல்வி சமூக அரசியல் வாழ்க்கை தொடர்பாக இத்தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட ஐம்பது வினாக்களடங்கிய கேள்விக் கொத்தினை இணைத்துள்ளோம்.
இக் கேள்விகளுக்கு சரியான பதில்களை 20.09.2017இற்கு முன்பதாக swisskarai2004@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். சரியான பதில்களை அனுப்பும் முதல் மூன்றுவெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் காத்திருக்கின்றன. ஒன்றுக்குமேற்பட்டவர்கள் சரியான பதில்களை அனுப்பும் சந்தர்ப்பத்தில் வெற்றியாளர்கள் திருவுளச் சீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எதிர் வரும் ஆதிரைத் விழாவின் போது இடம்பெறும் முத்தமிழ் விழாவில் வெற்றியாளர்கள் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள்.
இதுவரை எல்லா கட்டுரைகளும் இணையதளங்களில் வெளிவந்த நிலையில் போட்டியாளர்களின் வசதிக்காக இத்தொகுப்பின் மென்பிரதியை கேள்விக் கொத்துடன் இணைத்து வெளியிடுகின்றோம் என்பதை அறியத்தருகின்றோம்.
கிழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கொத்து அனைத்தும் "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை. போட்டியாளர்கள் கேள்வி இலக்கத்தை எழுதி சரியான முழுமையான விடையை மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
உதாரணம்:- கேள்வி இல: 3) அ) காரை நிலா
நன்றி
"ஆளுயர்வே ஊருயர்வு"
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
20. 08. .2017
1) சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மன்ற கீதத்தை இயற்றியவர் யார்?
அ) சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
ஆ) கலாபூஷணம். கலாநிதி தமிழ்மணி அகளங்கன்
இ) தமிழருவி த. சிவகுமாரன்
ஈ) யோகனந்த அடிகள் ச.பற்குணராஜா
2) மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது?
அ) உலக மரபு
ஆ) சங்ககால மரபு
இ) தமிழ் மரபு
ஈ) தெய்வ மரபு
3) தனிச்சிங்கள மொழிச் சட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு?
அ) 1920 ஆ) 1948 இ) 1960 ஈ) 1956
4) பிரபலமான கல்வியாளனாகவும் சமூக சேவையாளனாகவும் அரசியற்களம் இறங்கி வெற்றி கண்டவர் யார்?
அ) பிரான்சிஸ் ஐயாவு
ஆ) தோழர் சுந்தரம்
இ) கலாநிதி ஆ. தியாகராஜா
ஈ) தந்தை செல்வா
5) காரைநகர் இந்துக் கல்லூரியில் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு விழா எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது?
அ) 17. 04. 2016
ஆ) 17. 04. 1905
இ) 17. 04. 1998
ஈ) 17. 04. 2007
6) ஆங்கில இந்துப் பாடசாலையென அழைக்கப்பட்ட பாடசாலை எது?
அ) யாழ்ற்றன் கல்லூரி
ஆ) சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்
இ) காரைநகர் இந்துக்கல்லூரி
ஈ) வியாவில் சைவமகா வித்தியாலயம்
7) கலாநிதி ஆ. தியாகராஜா அவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரியில் எத்தனை ஆண்டுகள் அதிபராக கடமையாற்றினார்?
அ) 25 ஆண்டுகள் ஆ) 27 ஆண்டுகள் இ) 30 ஆண்டுகள் ஈ) 24 ஆண்டுகள்
8) நாவலர் வழிவந்த ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவர் யார்?
அ) யோகர் சுவாமிகள்
ஆ) பேப்பர் சுவாமிகள்
இ) அருணாசல உபாத்தியார்
ஈ) சயம்பு உபாத்தியார்
9) காரை மண் தந்த வித்துவான் பிரான்சிஸ் சேவியர் செல்லையா நடராசா அவர்கள் எழுதிய நூலின் பெயர் யாது?
அ) காரை மான்மியம்
ஆ) காரை நிலா
இ) வான் அலையின் வரிகள்
இ) பொருளாதார அறிவு
10) இந்துக் கல்லூரியில் முத்துவிழா கொண்டாடப்பட்ட ஆண்டு எது?
அ) 1950 ஆ) 1968 இ) 1963 ஈ) 1959
11) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் வடிவமைத்த அணைக்கட்டின் பெயர் என்ன?
அ) கரம்பன் அணை ஆ) வேணன் அணை
இ) பண்ணைப் பாலம் ஈ) பொன்னாலைப் பாலம்
12) எந்த ஆய்வு நூலைப் பாராட்டி கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களுக்கு
புதுடில்லிப் பல்கலைக்கழகம் கலாநிதிப்பட்டம் வழங்கியது?
அ) இலங்கையின் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பு;
ஆ) இலங்கைப் பொருளாதார அபிவிருத்தி
இ) கல்வியில் மாணவர்களின் முன்னேற்றம்
ஈ) மகான்களின் பெரும் பங்கு
13) யாருடைய காலத்தில் வியாவில் உப-தபால் நிலையம் திறக்கப்பட்டது?
அ) சேர்பொன். இராமநாதன் ஆ) அ. அமிர்தலிங்கம்
இ) கலாநிதி ஆ.தியாகராஜா ஈ) வைத்தீஸ்வரக் குருக்கள்
14) அரசியலில் அடிமட்ட மக்களின் காதல் வாகனம் எது?
அ) மாட்டுவண்டி ஆ) மோட்டார்வண்டி
இ) மூச்சக்கரவண்டி ஈ) துவிச்சக்கரவண்டி
15) தியாகராசா அவர்களின் பிறந்த திகதி மாதம் ஆண்டு எது?
அ) 17. 04. 1916 ஆ) 20. 02. 1920 இ) 05. 01. 1907 ஈ) 01. 10. 1910
16) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் காரை இந்துக் கல்லூரியில் அதிபராக
சேவை ஆற்றிய காலப்பகுதி எது?
அ) 1909 – 1920 ஆ) 1946 – 1970 இ) 1929 – 1972 ஈ) 1979 – 1987
17) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் உதவி பெற்றுக் கல்வி கற்று மருத்துவர் ஆகிய சிறுவன் பெயர் யாது?
அ) சின்னத்தம்பி ஆ) சிவபாதம் இ) பெரியசாமி ஈ) செல்லையா
18) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் 1970ஆம் ஆண்டு எந்தத் தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்?
அ) மானிப்பாய் ஆ) யாழ்ப்பாணம்
இ) வட்டுக்கோட்டை ஈ) காங்கேசன்துறை
19) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஆண்டு எது?
அ) 1980 ஆ) 1970 இ) 1981 ஈ) 1998
20) "அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம" என்ற கவி வரி எவ்விலக்கியத்தில் உள்ளது?
அ) ஆத்திசூடி ஆ) திருக்குறள் இ) நாலடியார் ஈ) முதுரை
21) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடம் எது?
அ) அராலி ஆ) சுழிபுரம் இ) மாவடி ஈ) தாவடி
22) "நேர்மையைத் தத்தெடுத்த ஞானக்கிறுக்கன் நீ அதனால் நேராகவே நடக்கத் தெரிந்தவன்" எனக் கவிதை எழுதியவர்?
அ) சைவப்புலவர் பத்மானந்தன் ஆ) புலவர் பூரணம் ஏனாதி நாதன்
இ) பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை ஈ) வித்துவான் மு. சபாரத்தினம்
23) காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தையென வர்ணிக்கப்படுபவர்?
அ) பேப்பர் சுவாமிகள் ஆ) அருணாசல உபாத்தியர்
இ) கலாநிதி ஆ.தியாகராஜா ஈ) கணபதிஸ்வரக் குருக்கள்
24) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைமாணிப்பட்டம் பெற்ற இடம் எது?
அ) இலங்கை ஆ) இந்தோனோசியா இ) இந்தியா ஈ) யப்பான்
25) தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு நூலின் அறிமுகவுரை எழுதியவர் யார்?
அ) வித்துவான் மு. சபாரத்தினம் ஆ) காரை சுந்தரம் பிள்ளை
இ) தமிழருவி த. சிவகுமாரன் ஈ) கலாநிதி கென்னடி விஐயரத்தினம்
26) கலாநிதி ஆ. தியாகராஜா அவர்களின் இறுதி பயணத்தில் கலந்து கொண்ட முக்கியஸ்த்தர் யார்?
அ) மறைந்த முன்னாள் பிரதம மந்திரி ஆர்.பிரேமதாஸ
ஆ) மறைந்த முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி
இ) சந்திரிக்கா குமாரதுங்கா
ஈ) மறைந்த முன்னாள் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா
27) கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம் எனப் பெயர்பெற்றிருந்த பாடசாலை காரைநகர் இந்துக் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்ற திகதி,மாதம்,ஆண்டு எது?
அ) 17-08-1950 ஆ) 15-09-1970 இ) 04-01-2016 ஈ) 07-10-1987
28) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் தாய் தந்தையர் நாமம் என்ன?
அ) ஆறுமுகம் பாக்கியவதி ஆ) ஆறுமுகம் அமிர்தவல்லி
இ) ஆறுமுகம் வள்ளியம்மை ஈ) ஆறுமுகம் சின்னப்பிள்ளை
29 கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் மனைவியாரின் திருநாமம் என்ன?
அ) மகேஸ்வரி ஆ) உமையாள் இ) விஜயலட்சுமி ஈ) சித்திராதேவி
30) காரைநகர் இந்துக் கல்லூரியில் எந்த அதிபரது ஓய்வுக்குப் பின்பு கலாநிதி ஆ.தியாகராசா அதிபரானார்?
அ) சிவதிரு அ. சீதாராமஐயர் ஆ) திரு.சரவணமுத்து
இ) திரு.ஏ.கனகசபை ஈ) திரு. பொ. வேலுப்பிள்ளை
31) இலங்கையில் யாரால் இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது?
அ) சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா ஆ) ஜே.ஆர் .ஜெயவர்த்தனா
இ) கலாநிதி ஆ.தியாகராஜா ஈ) திரு. அ. அமிர்தலிங்கம்
32) காரைநகர் சாமியார் பள்ளிக்கூடம் எத்தனையாம் ஆண்டு மூடப்பட்டது?
அ) 1919 ஆ) 1927 இ) 1945 ஈ) 1929
33) 1942 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சஞ்சிகையின் எது?
அ) சயம்பு ஆ) காரைநகர் இந்துக்கல்லூரி இ) காரைமண் ஈ) கல்விவளர்ச்சி
34) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் பதவி, உயர்நிலை, என்பவற்றுக்கு காத்திராது ஓய்வு பெற்ற ஆண்டு எது?
அ) 02.04.1970 ஆ) 24.06.1972 இ) 29.08.1974 ஈ) 20.07.1970
35) 'எல்லாம் எப்பவோ முடிந்த காரியம் ||என்று கூறியவர் யார்?
அ) பொய்யாப் மொழிப் புலவர் ஆ) யோகர் சுவாமிகள்
இ) வள்ளுவப் பெருந்தகை ஈ) செல்லப்பா சுவாமிகள்
36) காரைநகரையும் யாழ்ப்பாணக்குடா நாட்டையும் இணைக்கும் பொன்னாலைப் பாலத்தை அமைத்தவர் யார்?
அ) கு.ஆ ஆம்ஸ்ரோங் ஆ) தியாகச்சுடர் ஆ.தியாகராஜா
இ) திரு. நடராசா ஈ) திரு. வேலுப்பிள்ளை
37) காரைதீவாக இருந்த எம்மூர் காரைநகராக பெயர் மாற்றம் பெற்ற தினம்?
அ) 17.07.1969 ஆ) 19.01.1922 இ) 12.09.1923 ஈ) 24.12.1927
38) காரைநகரில் முன்னைய காலத்தில் துறைமுகமாக இருந்தது எது?
அ) வேலணை ஆ) ஊர்காவத்துறை இ) கோவளம் ஈ) தம்பாட்டி
39) "கையில் வெண்ணெய் இருக்க ஊரெல்லாம் அலைவார்கள்" என்ற கருத்தை கட்டுரைப் போட்டியில் முன் வைத்த மாணவி யார்?
அ) செல்வி தீபிகா நவரட்ணம் ஆ) செல்வி டிலானி கார்த்திகேசு
இ) செல்வி காரை ரதி குமார் ஈ) செல்வி உமையாள் பாரதி
40) யாரை காரை மணிவாசகர் சபை "சிவத்தமிழ்ச் செல்வி" என்ற பட்டழம் வழங்கி கௌரவித்தது?
அ) திருமதி தங்கம்மா நடராசா ஆ) திருமதி பாரதி சந்திரகுமார்
இ) திரு. வேலுப்பிள்ளை சேகரன் ஈ) செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
41) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் தனது 22ஆவது வயதில் பெற்றுக் கொண்ட பட்டம் என்ன?
அ) M.A பட்டம் ஆ) M:Lit பட்டம் இ) B .A பட்டம் ஈ) கலாநிதிப் பட்டம்
42) 19. 08. 1950ஆம் அன்று யாரால் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் திறந்து வைக்கப்பட்டது?
அ) திரு. கனகசபை ஆ) கௌரவ நீதி அமைச்சர் கலாநிதி எல்.ஏ.ராஜபக்ஷ
இ) திரு.மு.சீவரத்தினம் ஈ) திரு. அ. குலசிங்கம்
43) காரைநகர் இந்துக் கல்லூரியின் சயம்பு மண்டபம் கீழ் மாடி வகுப்பறை, நூலகம் இவற்றை அமைத்திட கலாநிதியுடன் கூடி ஈடுபட்டவர்?
அ) திரு.த. அருளையா ஆ) திரு.ச. பெரியதம்பி
இ) திரு. சு.கலைவாணர் ஈ) திரு.க.கனகசபை
44) காரைநகரின் வரலாற்று அதிபர் என்று அழைக்கப்பட்டவர்?
அ) சயம்பு ஆ) அருணாசல உபாத்தியார்
இ) திரு. த. தர்மசீலன் ஈ) கலாநிதி ஆ.தியாகராசா
45) "தற்காத்து தற்கொண்டான் பேணித் தகை சான்ற
சொற்காத்து சோர்விலான் பெண்"
என்பதை வள்ளுவப் பெருந்தகை எத்தனையாவது குறளில் மொழிந்துள்ளார்?
அ) 56 ஆ) 69 இ) 70 ஈ) 55
46) "கற்பது பெண்களுக்கு ஆபரணம்
கொம்புக் கல்வைத்த நகை தீராதரணம்" என்பதை கூறியவர்?
அ) பாரதி ஆ) பாரதிதாசன் இ) வள்ளுவர் ஈ) ஒளவையார்
47) முதன் முதலில் சர்வதேச மகளிர் தினமாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம்?
அ) 19.03.1911 ஆ) 08.03.1921 இ) 07.03.1975 ஈ) 28.03.1970
48) கல்வித் தாய் என்று குறிப்பிடப்படுபவர்?
அ) கீயூரி ஆ) நெலிசாக்ஸ் இ) வங்காரி மாதாய் ஈ) மரியா மொண்டிசோரி
49) சிவத்திரு. கணபதீஸ்வரக் குருக்களின் புதல்வர்?
அ) ஞானசம்பந்த குருக்கள் ஆ) சீனி ஐயர்
இ) நாகமுத்துப்புலவர் ஈ) வைத்தீஸ்வரக்குருக்கள்
50) தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பினை வெளியிட கரம் கொடுத்து உதவியவர்?
அ) கலைமாடக் கோன் திரு. ச. சிவஞானம்.
ஆ) கல்விக் காருண்யன் திரு. E.S. P. நாகரத்தினம்.
ஈ) அறக்கொடை அரசு திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன்.
இ) முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு. ப. விக்கினேஸ்வரன்.
காரைநகர் இந்துக் கல்லூரி
வெள்ளிவிழா அதிபர்
அமரர் கலாநிதி ஆ.தியாகராசா
M.A., M.Lit, Ph.D
நூற்றாண்டு நினைவுத் தொகுப்பு
(1916 – 2016)