சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஒருங்கிணைப்பில் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டு விழாவும் 17.07.2016 ஞாயிறன்று சூரிக் நகரில் சிறப்புற நடைபெற்றன!

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஒருங்கிணைப்பில் 
அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் 
தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டு விழாவும் 17.07.2016 ஞாயிறன்று சூரிக் நகரில் சிறப்புற நடைபெற்றன 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஒருங்கிணைப்பில் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டு விழாவும் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 16.30 மணிக்கு St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürichமண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றன.

மங்கலச் சுடறேற்றலும், அகவணக்கமும், கடவுள் வணக்கமும், மன்றக் கீதமும்

சிவஸ்ரீ.த.சரஹணபவானந்தகுருக்கள், திரு, திருமதி. சுப்பிரமணியம் கதிர்காமநாதன், திரு, திருமதி  பூபாலபிள்ளை விவேகானந்தா ஆகியோர் ஒளிச் சுடர் ஏற்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களின் நிகழ்ச்சி அறிவித்தலுக்கு அமைய கடவுள் வணக்கத்தினை செல்வி பாரதி லோகதாஸன் அவர்கள் இனிமையான குரலில் பாடினார்.

அமரத்துவமான கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களுக்கும் ஏனைய உறவுகளுக்கும் எல்லோரும் எழுந்து நின்று நீத்தார் வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மன்றக் கீதம் இசைக்கப்பட்டது. வரவேற்பு நடனத்தினை செல்வி பைரவி லோகதாஸன் சிறப்புற நிகழ்த்தினார்.

                                                               வாழ்த்துரைகள்

எமது சபையின் போஷகரும் விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய பிரதமகுருவுமான ஸ்ரீ சரஹணானந்தக் குரக்கள் ஆசியுரை வழங்கி  இருந்தார். அவர் தனது உரையில் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் அரசியல்பணி, கல்விப்பணி, சமூகப்பணி பற்றி விரிவாக கூறியிருந்தார்கள். விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் தொடங்கியிருந்த பொழுதிலும் இன் நிகழ்வில் தனது வருகையை பதிவு செய்வதற்கு வந்திருப்பதாகவும் இது அன்னாருக்கு செலுத்தும் நன்றிக்கடனும் கடமையுமாகும் எனக் கூறியிருந்தார்கள். தொடர்ந்து சீவஸ்ரீ இராம சசிதரக்குருக்களது வாழ்த்துரை இடம் பெற்றது.

ஊடகவியலாளர் திரு.இளையதம்பி தயானந்தா அவர்கள் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய நீண்ட தலைமையுரையோடு விழா களை கட்டியது. 

நிகழ்வுகளின் வரிசையில் காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்ற்றன் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் வாழ்;த்துச் செய்திகளை திரு அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேரு மாஸ்டர்) அவர்கள் வாசித்திருந்தார்கள். முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.ப. விக்கினேஸ்வரன் அவர்களின் வாழ்த்துச் செய்தியனை திரு. கனகசபை சிவபாலன் அவர்கள் வழங்கியிருந்தார்கள். முன்னாள் அதிபர் ஓய்வுபெற்ற உதவிப் பரீட்சை ஆணையாளர் திருமதி பாலசிங்கம் தவநாயகி  அவர்களின் வாழ்த்துரையை திரு. முருகேசு பாலசுந்தரம் வழங்கியிருந்தார்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நினைவுத் தொகுப்பு மூன்று கிழமைகளில் ஆக்கங்கள் சேகரிக்கப்பட்டுத் துரித கதியில் வெளியிடப்பட்டது.  இதனால் காலம் தாழ்த்திக் கிடைக்கப்பெற்ற யாழ்ற்ரன் கல்லூரி முதல்வர் திரு.வே.முருகமூர்த்தி;;; காரைநகர் அவர்களின் நிறுவுநர் பக்தி மிக்க முதல்வர் என்ற ஆக்கம் உலக சைவப் பேரவைத் தலைவர் திரு.சதாசிவம்.பற்குணராஜா அவர்களால் வாசிக்கப்பட்டது. காரைநகர் அபிவிருத்திச் சபையின் வாழ்த்துச் செய்தி திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களால் வாசிக்கப்பட்டது. 
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு சார்பாக  இணைப்பாளர் கலாநிதி கென்னடி விஜரத்தினம் அவர்களின் வாழ்த்துச் செய்தியையும்   உலகில் பரந்து வாழும் காரைநகர் மாணவருக்கான வருடாந்தரப் போட்டிகளுக்கான தியாகத் திறன் வேள்வி 2016 புதிய திட்டம் பற்றிய செய்தியையும் திருவாளர். பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்கள் வாசித்தார். 

                                                                இசை அஞ்சலி
காரை மண்ணின் கலைஞரும், கைலாயக் கம்பர் அவர்களின் பேரனும், நம் மண்ணின் புகழ் பூத்த தவில் வித்துவான் வீராச்சாமி அவர்களின் மகனுமான கண்ணன் குழுவினரின் நாதஸ்வரக் கச்சேரி ஒரு மணிநேரம் இடம் பெற்றது. பார்வையாளர்கள் கானமழையில் நனையும் வண்ணம் மிக அற்புதமாக இசையமுது வழங்கியிருந்தார்கள்.
திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களின்  நிகழ்ச்சி அறிவிப்புக்கு அமைவாக தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடு செய்வதற்கு ஆரம்ப ஏற்பாடுகள் நடந்த வேளை செல்வி பாரதி லோகதாஸனின் இனிமையான பாடல் எல்லோரையும் கவரும் வண்ணம் ஒலித்தது.
                                         தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடு
ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்த அவர்களின் தமையில் தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடு இடம்பெற்றது. சீவஸ்ரீ இராம சசிதரக்குருக்கள் நூலை வெளியிட்டு வைத்தார். முதல் பிரதிகளை திருவாளர்களான சுப்பிரமணியம் கதிர்காமநாதன்,  இரத்தினம் கண்ணதாசன், தர்மலிங்கம் லோகேஸ்வரன், பூபாலபிள்ளை விவேகானந்தா, அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேருமாஸ்டர் பிரான்ஸ்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் பற்றிய நினைவுக் கருத்தரங்கம்
அதனைத் தொடர்ந்து அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் பற்றிய நினைவுக் கருத்தரங்கம் இடம்பெற்றது. நிகழ்வில் உலக சைவப் பேரவைத் தலைவர் திருவாளர்கள். சதாசிவம். பற்குணராஜா, (பிரான்ஸ்) பூபாலபிள்ளை விவேகானந்தா, அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேருமாஸ்டர்- பிரான்ஸ்), கணபதிப்பிள்ளை கணா மாஸ்டர், த. மாணிக்கவாசகர்; (பிரான்ஸ்) ஆகியோர்கள் நினைவுரைகள் ஆற்றியிருந்தார்கள். ஓவ்வொருவருடைய உரையில் இருந்தும் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் கல்விப்பணி, அரசியல்பணி, சமூகப்பணி ஆகியனவும் அன்னாரின் பன்முக ஆளுமையும் வெளிப்பட்டிருந்தன.

              அமரருக்கான நாட்டியாஞ்சலியும் கலைஞர்கள் கௌரவிப்பும்
அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்கள் ஒர் இசைப்பிரியர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சூரிக் திருக்கோணேஸ்வர நடனாலய மாணவிகள் முப்பது மணித்துளிகள் நாட்டியாஞ்சலி மிக அற்பதமாக நிகழ்த்தியிருந்தார்கள். இன் நிகழ்வு எல்லோரையும் கவர்ந்திருந்தது. இவர்களை கௌரவிக்கும் முகமாக நடனாலய அதிபர் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களை திருமதி தனலட்சுமி கதிர்காமநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தார்கள். சிறந்த முறையில் நடனம் ஆடிய மாணவிகளை திருமதி சியாமளா செல்வச்சந்திரன் (பிரான்ஸ்) அவர்கள் நினைவு மாலை அணிவித்து கௌரவித்திருந்தார்கள்.
அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும், தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டின் இறுதி நிகழ்வாக  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பொருளாளர் திரு முருகேசு பாலசுந்தரம் நிகழ்த்தியிருந்தார்கள். நிகழ்வுகள் அனைத்தும் இரவு 9.30 மணிக்கு இராப் போசனத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
  
              காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
                                                   ஞாலத்தின் மாணப் பெரிது
                                                                                             -குறள்

                             அனைத்து அன்புடை நெஞ்சங்களுக்கும் நன்றிகள்

ஒரு தசாப்த்தத்திற்கும் முன்னராக 04.12.2004 அன்று காரைநகருக்கும் சுவிற்சர்லாந்தில் வாழும் காரைநகர் மக்களுக்கும் ஒர் உறவுப்பாலத்தை உருவாக்கிய சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் வரலாற்றிலே இன்றைய நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். 

காரைநகரின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு விழாவையும் நூற் தொகுப்பு வெளியீட்டையும் உரிய காலத்தில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை பொறுப் பேற்று நிறைவேற்ற எடுத்த முடிவு காலத்தின் கட்டாயம்.

 காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரான அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா செய்யும் கருமத்தில் எப்போதும் செம்மை கண்டவர். கடமையே பெரிதென்று காலம் பார்க்காது உழைத்த மகான். அவரது தன்னலமற்ற ஆசிரிய சமூக சேவையை பாராட்டி எடுக்கப்பட்ட நூற்றாண்டு நிறைவு விழா சிறப்புற நடைபெற உழைத்த, பல வழிகளிலும் உதவி புரிந்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.

 எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு மிக மிகக்குறுகிய காலத்தில் அமரர். கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு விழாவின் நிறைவையொட்டிய  'தியாகச்சுடர்|| நினைவுத் தொகுப்பினை வெளியிட முடிவு செய்த போது அதற்குப் பூரண அதரவு தந்து அணுசரனை வழங்கிய ளு.மு.வு நாதன் கடை உரிமையாளர் 'அறக்கொடை அரசு|| திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு முதற்கண் நன்றி கூறவேண்டியவர்களாக காரைநகர் மக்களாகிய நாம் உள்ளோம்.

 அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா நூற்றாண்டில் அவருடைய தனிப்பட்ட மற்றும் சமூக சேவைகளின் பதிவுகளை இன்றைய இளம் சமூதாயத்தினர்க்கு எடுத்துரைக்கும் சாதனமாக 'தியாகச் சுடர்|| நினைவுத் தொகுப்பு நூல் உங்கள் கைகளில் மலர அதரவுக் கரம் நீட்டிய திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களை காரைநகர் மக்கள் மறக்க மாட்டார்கள். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் அடுத்த தலைமுறையினர் எமது கிராமத்தை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கு இந் நூல் உதவி புரியும் என்பதில் ஐயமில்லை. 
 நாதன் அவர்களுடைய தாய்மண் அபிவிருத்திப் பணிகள் 'மக்கள் சேவையே மகேசன் சேவை|| என்ற தமிழரின் தொன்மையான தத்துவத்திற்கேற்ப ஆலய பரிபாலனங்களுக்கு அப்பாலும் பரந்து விரிந்து மனிதநேயம் சார்ந்த தளங்களில் கிளைபரப்பி நிற்கிறது. பெற்றோரை இழந்த சிறார்கள், ஆதரவற்ற முதியோர்கள், கல்வி, விளையாட்டுத்துறை, கலை, பொருளாதார விருத்தித் திட்டங்கள் என கதிர்காமநாதன் அவர்களின் ஆதரவுத் திட்டங்கள் காரைநகரிலும் தமிழ்மண் எங்கும் பரந்துபட்டது. தற்போது ஒரு வரலாற்று ஆவணப்படுத்தல் முயற்சிக்கும் அவரது ஆதரவு நீட்சியுற்றிருக்கிறது. கோடி நன்றிகள்.  

 'தியாகச் சுடர்|| நினைவுத் தொகுப்பு திறம்பட வெளிவர ஏதியோப்பியாவில் இருக்கும் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு இணைப்பாளர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள்; நூலின் ஆக்கங்களை சரிவரத் தேர்ந்து, தொகுத்து, அச்சிடும் வரையிலான திருத்தங்களைச் செய்து உதவியமைக்கு நன்றிகள். எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழவைச் சேர்ந்தவர்களும் இம் மலருக்கான ஆக்கங்களை ஒழுங்கமைத்தவர்களுமான ஓய்வு நிலை ஆசிரியர் பண்டிதை யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கட்கும், ஓய்வு நிலை அதிபர் திரு.மு.சு. வேலாயுதபிள்ளை அவர்கட்கும் இந் நூலிற்கான தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொடுத்த வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபர் திரு. அருணாசலம் வரதராஜன் அவர்கட்கும் எமது நன்றிகள்.

இத்தனைக்கும் மேலாக எமது தாய்ச் சங்கத்தின் தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன், மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களின் கடுமையான உழைப்பிற்கும், கொழும்பிலிருந்து கொண்டு உதவிய திருமதி. பாலசிங்கம் தவநாயகி அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.  

 மாணவர்களின் கட்டுரைகளை கணனியில் பதிவேற்றிய காரைநகர் அபிவிருத்திச் சபை உத்தியோகத்தர் செல்வி ஆனந்தகுமார் பிரசாந்தினி  அவர்கட்கும், 'தியாகச் சுடர்|| நூலின் முகப்பிற்கான நிழற்படங்களைத் தந்துதவிய சிவத்தமிழ் காவலர் திரு.ஆறுமுகம் செந்தில் அவர்கட்கும். கேட்டவுடன் நூலினை அச்சிட்டுத் தருவதற்று ஒத்துழைத்த அந்ரா அச்சக  நிறுவனத்தினருக்கும், நிகழ்வின் அழைப்பிதழை வடிவமைத்த கனடாவைச் சேர்ந்த திருமதி மலர் குழந்தைவேலு அவர்கட்கும், விழாவுக்கான விளம்பரங்களை தமது இணையத்தளங்களில் விளம்பரப்படுத்திய காரைநகர்.கோ, காரைநகர்.கொம் மற்றும் லங்காஸ்ரீ, தினக்கதிர்.கொம் ஆகிய இணையதள நிர்வாகிகளுக்கும்; மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டதல்களும், நன்றிகளும் உரித்தாகுக.

 இந் நிகழ்விற்கு வருகை தந்து நிகழ்ச்சிகள் வழங்கிய தவில் நாதஸ்வரக் கலைஞர்கள், திருக்கோணேஸ்வர நடனலாய  அதிபர் மாணவிகள், இன் நிகழ்விற்கு பிரதம  அதிதியாக கலந்துகொண்ட ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்தா, கௌரவ விருந்தினராக வருகைதந்து சொற்பொழிவுகள் ஆற்றிய உலகசைவப் பேரவைத் தலைவர் திரு.சதாசிவம். பற்குணராஜா, (பிரான்ஸ்) திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன் திரு.தம்பிப்பிள்ளை மாணிக்கவாசகர் (பிரான்ஸ்) திரு. கணபதிப்பிள்ளை கணாமாஸ்டர் ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக. இன் நிகழ்வு திறம்பட நிகழ்வதற்கு ஒலி அமைப்புச் செய்த திரு. திருநாவுக்கரசு கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் நூற்றாண்டு விழா அறிவிப்புக்கு அமைவாக வருகை தந்த ஊரின் உறவுகள் அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும்  விழா சிறப்பாக நடாத்துவதற்கு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் சுவிஸ் காரை அபிருத்திச் சபை சார்பாக நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

 இன் நிகழ்வுகள் அனைத்திற்கும் நிதி ஆதரவு வழங்கியவர் ளு.மு.வு நாதன் கடை உரிமையாளர் திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள். இப்படியான ஓர் வராலாற்று நாயகனுக்கான விழாவை தானே பிரேரித்து, விழா மற்றும் நூல் வெளியீடு இரண்டுக்குமான முழமையான நிதிப் பங்களிப்பைச் செய்தவர். எமது சபை அளித்த அறக்கொடை அரசு என்ற சிறப்புப் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர். அவரது அறப் பணிகள் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறோம். அவருக்கும் எமது நன்றிகள்.
                            
நன்றி

நிகழ்வுகளின் நிழற்படங்களைக் கீழேகாணலாம்.                            

                                   

                                                                                             இங்ஙனம்.
                                                                          சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                       மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
                                                                               செயற்குழு உறுப்பினர்கள்
                                                                               சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                 22.07.2016

 

 

2016-07-17 17.53.532016-07-17 17.57.17 2016-07-17 19.32.17 2016-07-17 19.32.58 2016-07-17 19.33.33 2016-07-17 20.57.42 2016-07-17 20.57.46 2016-07-17 20.57.50 2016-07-17 20.57.54 2016-07-17 20.58.00 2016-07-17 20.58.13 2016-07-17 20.58.17 2016-07-17 20.58.22 2016-07-17 21.00.11 2016-07-17 21.01.47 2016-07-17 21.01.54 2016-07-17 21.03.37 2016-07-17 21.05.01 2016-07-17 21.05.16 2016-07-17 21.05.32 2016-07-17 21.06.16 2016-07-17 21.06.33 2016-07-21 08.43.46-4 2016-07-21 08.43.47-1 2016-07-21 08.43.47-2 2016-07-21 08.43.47-3 2016-07-21 08.43.47-4 2016-07-21 08.43.48-1 2016-07-21 08.43.48-2 2016-07-21 08.43.48-3 2016-07-21 08.43.48-6 2016-07-21 08.43.48-7 2016-07-21 08.43.49-1 2016-07-21 08.43.49-2 2016-07-21 08.43.49-3 2016-07-21 08.43.50-2 2016-07-21 08.43.50-4 2016-07-21 08.43.50-5 2016-07-21 08.43.51-1 2016-07-21 08.43.51-2 2016-07-21 08.43.53-2 13669531_854626241348770_6519749310507526138_o 13701043_1590746177889166_5684796832034114482_o[1] 13701266_1590746117889172_1596226944715225277_o[1] 13710627_854625688015492_8482611108677507564_o 13717481_1590746477889136_7634193931603184375_o[1] 13719596_1590746307889153_2650624187001917033_o[1] 13719694_854627031348691_8301151393100105582_o 13724829_854626354682092_3584515267238762653_o 13730928_854625744682153_3692976825619748787_o 13735041_854626331348761_7675730041154629432_o 13735126_1590746264555824_4470485323093705414_o[1] banner 8x4 cover-01 (1) Flyer 2016-1 (1)

thiyagaraja2017 274 thiyagaraja2017 285 thiyagaraja2017 289 thiyagaraja2017 290 thiyagaraja2017 297 thiyagaraja2017 301 thiyagaraja2017 306 thiyagaraja2017 313 thiyagaraja2017 321 thiyagaraja2017 324 thiyagaraja2017 328 thiyagaraja2017 329 thiyagaraja2017 339 thiyagaraja2017 349 thiyagaraja2017 350 thiyagaraja2017 351 thiyagaraja2017 357 thiyagaraja2017 359 thiyagaraja2017 399