Tag: காரைச் செய்திகள்
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழா நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற உள்ளது
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழா நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற உள்ளது
உற்சவ காலங்களில் தினமும் காலை 7.00 மணி முதல் ஜயனார்,சிவன் ஆகிய மூலமூர்த்திகளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகளும் முற்பகல் 10.00 மணிக்கு மணிவாசகப் பெருமான் எழுந்தருளி நடேசர் சன்னிதானத்தில் திருவெம்பாவை ஓதலும் தொடர்ந்து மாணிக்கவாசகர் உள்வீதி உலா வருதல் இடம்பெற்று பகல் 11.35 மணிக்கு இடம்பெறும் வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து சுவாமி திருவீதி உலா வரும் காட்சி இடம்பெறும்
இந்த உற்சவத்தில் எதிர்வரும் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும் பஞ்சரத பவனியில் காலை 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் தொடர்ந்து திருவெம்பாவை ஓதலும் இடம்பெற்று காலை 9.00 மணிக்கு நடேசப் பெருமான் தனது பரிவாரமூர்திகளுடன் பஞ்சரதங்களில் எழுந்தருளி தொடர்ந்து பஞ்சரத பவனி இடம்பெறும்.
மறுநாள் புதன் கிழமை அதிகாலை 2.00 மணி முதல் நடேசப் பெருமானுக்கு ஆருத்திரா அபிஷேகமும் அதிகாலை 5.30 மணிக்கு ஆருத்திரா தரிசனமும் இடம்பெற்று மாலை 3.30 மணிக்கு திருவூடல் உற்சவமும் தொடர்ந்து தீர்த்த உற்சவமும் இடம்பெற உள்ளது.
இந்த உற்சவங்களில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான பத்தர்களின் வசதி கருதி ஆலய சூழலில் சுகாதாரம்,குடிநீர்,பாதுகாப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் உற்சவ காலங்களில் யாழ் நகரிலிருந்து ஆலயம் வரையிலான பஸ் சேவைகள் நேரடியாக இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஆலய சூழலில் உள்ள மாணிக்கவாசகர் மடாலய அன்னதான சபை,ஈழத்துச் சிதம்பர சைவ அறப்பணி நிலையம் என்பவற்றில் அடியார்களுக்கு அன்னதானம் வழமைபோன்று வழங்கப்பட உள்ளது.
உற்சவத்தின் இறுதி ஜந்து நாட்களும் மணிவாசகர் சபையினரால் திருவாசகப் பெருவிழா ஆலய வசந்த மண்டபத்தில் நடாத்தப்பட உள்ளது.இதில் ஈழத்து,தமிழக அறிஞர்களின் பேருரைகளும் சபையினால் நடாத்தப்பட்ட சமய பாடப் பரீட்சையில் அதியுயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குத் தங்கப்பதக்கங்களும் பரிசில்களும் வழங்கப்பட உள்ளன.
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் திங்கட்கிழமை தொடக்கம் பத்துத் தினங்களுக்குத் திருவாதவூரடிகள் புராணபடனம் இடம்பெற உள்ளது.என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் மணிவாசகர் சபையின் ஏற்பாட்டில் திருவெம்பாவை உற்சவ காலமான திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் 11 ம் திகதி புதன்கிழமை வரை தினமும் பிற்பகல் 1.00 மணி முதல் 4.00 மணிவரை திருவாதவூரடிகள் புராணபடனம் இடம்பெற உள்ளதாக மணிவாசகர் சபையின் தலைவரும் யாழ்ற்ரன் கல்லூரி அதிபருமான வே.முருகமூர்த்தி தெரிவித்தார்.
காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா எதிர்வரும் 12ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாபூஷணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் இடம்பெற உள்ளது.
இவ் விழாவில் முதன்மை விருந்தினராக சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொள்ள உள்ளதுடன் ஆசியுரையினை யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரட்ணமும் வாழ்த்துரைகளை வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வு நிலை பிரதிச் செயலரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரன்,காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன்,பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம்,காரைநகர் மணிவாசகர் சபையின் முன்னாள் செயலர் கவிஞர் வே.குமாரசுவாமி ஆகியோரும்.நூலின் அறிமுகவுரையினை சிவத்தமிழ் காவலர் ஆ.செந்தில்நாதனும் வெளியீட்டுரையினை யாழ் பல்கலைக்கழக முன்னாள் தழிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசாவும் நிகழ்த்த யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் நூலினை வெளியிட்டு வைக்க கௌரவப் பிரதியை செல்வி இராணி வைத்தீசுவரக்குருக்கள் பெற்றுக்கொள்வார்.ஆய்வுரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசனும் நன்றியுரையினை நூலின் தொகுப்பாளரும் வெளியீட்டாளருமான கனக சிவகுமாரனும் வழங்குவர்.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்தும் முப்பெரும் விழா
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன்
இணைந்து நடாத்தும்
முப்பெரும் விழா
தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு நூல் அறிமுகம்,
"தியாகத்திறன் வேள்வி" மாணவர் போட்டிகளுக்கான பரிசளிப்பு,
சான்றோர் மதிப்பளிப்பு,
இடம்: காரைநகர் யாழ்நகர் கல்லூரி பிரதான மண்டபம்
காலம்: 09.01.2017 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி
தலைவர்: திரு. வே . முருகமூர்த்தி
(அதிபர், காரைநகர் யாழ்நகர் கல்லூரி)
பிரதம விருந்தினர்கள்
திரு. டத்தோ சண்முகம் சிவானந்தனும் பாரியாரும்
(தலைவர், காரை ஒன்றியம், மலாயா)
கௌரவ விருந்தினர்கள்
தெய்வீகத்திருப்பணி அரசு¸ அறக்கொடை அரசு
திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனும் பாரியாரும்
திருமதி. வீரமங்கை யோகரட்ணம்
(சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ். பல்கலைக்கழகம்)
செல்வி. பரமேஸ்வரி கணேசன்
(சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ். பல்கலைக்கழகம்)
திரு. நடராசா சோதிநாதன்
(தலைவர், கிழவன்காடு கலாமன்றம்)
சிறப்பு விருந்தினர்கள்
திருமதி.வாசுகி தவபாலன்
(அதிபர், காரைநகர் இந்துக்கல்லூரி)
பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா
காரையூர்ச்சங்க உறுப்பினர்கள்
நிகழ்ச்சி தொகுப்பு
திருமதி. தர்ஷினி சண்முகநாதன் (சுவிஸ்)
மாண்பு பெறுவோர்
கலாபூசணம் தமிழ்மணி
நா.தர்மராஜா (அகளங்கன்) அவர்கள்,
(தமிழ்அதர், 90 திருநாவற்குளம், வவுனியா)
பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை
"பிருந்தாவனம்" நடுத்தெரு காரைநகர்
(ஓய்வுநிலை அதிபர், மணிவாசகர் சபைக் காப்பாளர்,
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி, கல்வி
மற்றும் கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர்)
திரு கதிரவேலு தில்லையம்பலம்
விளாணை களபூமி காரைநகர்
(ஓய்வு நிலை அதிபர், சமூக சேவையாளர்)
பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன்
(King’s College, London)
நிகழ்ச்சி நிரல்
மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், நீத்தார் வணக்கம்,
மன்றக் கீதம் இசைத்தல், வரவேற்பு நடனம்
வரவேற்புரை: ப. விக்கினேஸ்வரன்,
(தலைவர்,காரை அபிவிருத்திச் சபை )
தலைமையுரை: திரு. வே.முருகமூர்த்தி
(அதிபர், காரைநகர் யாழ்நகர் கல்லூரி)
தியாகத்திறன் வேள்வி-2016 போட்டியில் தேர்ந்தெடுக்கபட்ட மாணவர்களின் பேச்சு
"தியாகச் சுடர்"நினைவுத் தொகுப்பு நூல் அறிமுகம்
அறிமுகவுரை: பண்டிதர். மு. சு. வேலாயுதபிள்ளை
சிறப்புப் பிரதிகள் வழங்கல்: பிரதம விருந்தினர் டத்தோ சண்முகம் சிவானந்தன் அவர்களும் பாரியாரும்
சான்றோர் மதிப்பளிப்பு
பிரதம விருந்தினர் உரை
கலாநிதி. ஆ.தியாகராசா நினைவுப் பேருரை: செல்வி. யோகலட்சுமி சோமசுந்தரம்
சிறப்புரைகள்:
கலாநிதி. வீரமங்கை யோகரத்தினம்
செல்வி. பரமேஸ்வரி கணேசன்
திரு. நடராசா சோதிநாதன்
தியாகத்திறன் வேள்வி-2016 இசைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாணவர்களின் இசைநிகழ்ச்சி
நன்றியுரைகள்:
திரு. அருணாசலம் வரதராஜன்
(பிரதி அதிபர், வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலயம்)
மாணவர் சார்பாக
செல்வன். கனகலிங்கம் விநோதன்
(காரைநகர் இந்துக்கல்லூரி)
பின்வரும் அடிப்படையில் பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும்
தியாகத்திறன் வேள்வி-2016இல் அ,ஆ,இ ஆகிய மூன்று பிரிவுகளில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, இசைப்போட்டி, பொது அறிவு – வினாடி வினாப் போட்டி அகியவற்றில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுத்தொகை விபரம்
முதலாமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 5000.00 ரூபாய்கள்
இரண்டமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 3500.00 ரூபாய்கள்
மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 1500.00 ரூபாய்கள்
நான்காமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 1000.00 ரூபாய்கள்
ஐந்தாமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 1000.00 ரூபாய்கள்
திருக்குறள் மனனப் போட்டி அ,ஆ,இ ஆகிய பிரிவுகளில் நடாத்தப்பட்டது. அயினும் மூன்றுபிரிவுகளிலும் போட்டியாளர்கள் இன்றி ஒவ்வொருவர் மட்டுமே பங்குபற்றியமையினால் பரிவுத்தொகைகள் தலா 1000.00 ரூபாய்கள்.
அனைத்துப் போட்டிகளிலும் பெற்ற முதல் ஐந்து மாணவர்களுக்கும் பரிசுத்தொகைகளுடன் சான்றிதழ்களும், நினைவுப்பரிசில்களும். வழங்கப்படும்.
வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களது கவனத்திற்கு:
பரிவுத்தொகைகள் மாணவர்களது வங்கிகணக்கில் வைப்பில் இடப்படும் என்பதால் இதற்கான ஒழுங்குகளுக்கு காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர்
திரு.ப. விக்கினேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு இலக்கம்:
மூதறிஞர்களையும் கலைஞர்களையும் மதிப்பளித்து வருங்காலத்தவர்க்கு உதாரணம் காட்டவும் இளையோரின் அறிவுத் தேடலைப் பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தவும் எம் சபையினரால் நடாத்தப்படும் இவ்விழாவிற்கு ஊரின் உயர்வான உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"
"ஆளுயர்வே ஊருயர்வு"
நன்றி
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
27.12.2016
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றபோது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றபோது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.
தலைவராக அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களும் உப தலைவராக கல்லூரியின் முன்னாள்அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை,செயலாளராக ந.பாரதி,பொருளாளராக க.நிமலதாசன்,உபசெயலாளராக க.நாகராசா,உப பொருளாளராக வி.கம்சன் ஆகியோரும்
நிர்வாக சபை உறுப்பினர்களாக சு.அகிலன்,த.சற்குணராசா,ந.யோகநாதன், செ.அருட்செல்வம்,சி.கந்தசாமி,பொ.சிறிகரன்,க.தில்லையம்பலம்,திருமதி யோகலட்சுமி யோகநாதன், செல்வி சிவரூபி நமசிவாயம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களாக கதிரவேற்பிள்ளை கிருஸ்ணகுமார்,திருப்புகழூர்சிங்கம் சயந்தன் ஆகியோரும் தெரிவாகினர்.
காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா
காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா
நாகமுத்துப் புலவர் காரைநகரில் அவதரித்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கும் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் வாழ்ந்தவராவார். சுப்பிரமணிய வித்தியாசாலையில் 35 ஆண்டுகள் இயற்றமிழ்ப் போதகாசிரியராகப் பணியாற்றியதன் மூலம் காரை மக்களுக்கு கல்விச் செல்வத்தினை அள்ளி வழங்கியவர். இதன் காரணமாக காரைநகர் மக்களால் 'சட்டம்பி நாகமுத்தர்' எனவும் அழைக்கப்பட்டவர். அந்நியர் ஆட்சிக் காலத்தில் பணிபுரிந்து சைவத் தமிழ்ப் பண்பாடும் கலை கலாசாரங்களும் நல்லொழுக்க நெறிகளும் தமிழ் வாசனையும் காரை மண்ணில் செழிக்கும்படி பணியாற்றியிருந்தவர் நாகமுத்துப் புலவர் அவர்கள்.
இவர் இயற்றிய இனிய ஏராளமான கவிதைகளில் பல காலவோட்டத்தினால் அழிந்து போயினவாயினும் ஏனையவற்றை தொகுத்து காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் என்ற பெயரிலான நூல் புலவரின் பேரனான கனடாவில் வதியும் திரு.கனக சிவகுமாரன் அவர்களால் பதிப்பிக்கப்பெற்று ரொறன்ரோ நகரில் சிறப்பாக வெளியீடுசெய்யப்பட்டிருந்தது. புலவர் அவர்கள் பிறந்து வாழ்ந்து பணியாற்றிய காரை மண்ணில் இந்நூலினை அறிமுகம் செய்து வைக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருதி அறிமுக விழா ஒன்றினை எதிர்வரும் 2017ஆம் ஆண்டு; ஜனவரி மாதம் 12ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை திரு.கனக சிவகுமாரன் அவர்களும் 'கலாபூசணம்' பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் இணைந்து ஏற்பாடு செய்து வருகின்றனர். சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ள இவ் அறிமுக விழாவில் பல சைவத் தமிழ் அறிஞர்களும் பெரியார்களும் கலந்துகொண்டு உரையாற்றும் வகையிலும் புலவரின் கவித்துவம் காரை மண்ணின் மகத்துவம் ஆகியனவற்றை வெளிப்படுத்தும் வகையிலும் இவ்விழா அழகுற ஒழுங்கமைக்கப்பட்டு வருவதாக திரு.கனக சிவகுமாரன் தெரிவித்துள்ளார்.
கலாபூசணம் விருது பெற்ரார் பண்டிதர் மு. சு வேலாயுதபிள்ளை.
கலாபூசணம் விருது பெற்ரார் பண்டிதர் மு. சு வேலாயுதபிள்ளை.
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான கலாபூசணம் விருது சமய இலக்கிய பணிகளுக்காக பண்டிதர் மு. சு வேலாயுதபிள்ளை அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் இன்று கொழும்பில் இடம் பெற்ற அரச விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்டது.
காரைநகரை பிறப்பிடமாக கொண்ட பண்டிதர் அவர்கள் காரைநகரில் இரண்டு பரம்பரயினர்க்கு நல்லாசானாக திகழ்ந்தவர். முதலில் யாழ்ரன் கல்லூரியில் ஆசிரியராகவும், பின்னர் விட்டு இந்து கல்லூரியில் ஆசிரியராகவும் தொடர்ந்து அதிபராகவும் நற்பணி ஆற்றியவர்.
HNCE வகுப்புகள் அறிமுகப்படுத்திய காலத்தில் வர்த்தக பாடத்தினை போதித்து பலரை பல்கலைக்கழகம் அனுப்புவதில் முன்னின்று உழைத்தவர்.
தமிழ் இலக்கண இலக்கியங்களை தெளிவுற கற்று பண்டிதராக பட்டம் பெற்ற இவர் தமிழ் பாடத்தினை போதிப்பதிலும் ஒரு முன்னணி ஆசிரியராவர்.
தமிழையும், சைவத்தையும் வளர்ப்பதில் இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன . காரைநகர் மணிவாசகர் சபையில் இவர் ஆற்றும் பணிகள் இதற்கு சான்றாகும்
இவர் ஆற்றிய பணிகளுக்காக காரைநகர் மக்கள் என்றும் நன்றியுடையவர்களாவர்.
இவரது இளமை தோற்றம், புன்முறுவலுடன் வரவேட்கும் பண்பு, அருட்பணிப்புடன் ஆற்றிய கல்வி பணிகள், சமய பணிகள், இலக்கிய பணிகள், சீரிய அதிபர் சேவை மெச்சத்தக்கவை..
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாளை மறுதினம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது.
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாளை மறுதினம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது.
இக் கூட்டத்திற்கு கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பத்தினை செயலாளரிடம் பெற்று சங்கத்தில் இணைந்து கொள்ளுமாறும் சங்கச் செயலாளர் க.நிமலதாசன் கேட்டுள்ளார்.
பாராட்டி வாழ்த்துகின்றோம்
பாராட்டி வாழ்த்துகின்றோம்
காரைநகர் மணிவாசகர் சபையில் நீண்ட காலம் தலைவராக பணியாற்றி தற்போது சபையின் காப்பாளராக இருந்து சிறந்த சைவப்பணியாற்றிவரும் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் இந்து கலாசாரத் திணைக்களத்தின் "கலாபூசணம்" பட்டத்தினையும் யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையின் "திருவாசகமணி" பட்டத்தினையும் பெற்றுள்ளமையைப் பாராட்டி வாழ்த்துவதுடன் அவர் மேன்மேலும் பல பட்டங்கள் பெற்று சிறந்த சமயப்பணியாற்றவும் நீண்ட ஆயுளுடன் நோய்நொடியின்றி சிறப்புடன் வாழவும் எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானைப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்.
மணிவாசகர் சபையினர்,
காரைநகர்.
பாராட்டி வாழ்த்துகின்றோம்
காரைநகர் மணிவாசகர் சபையின் உறுப்பினராக இருந்து சிறந்த சைவப்பணியாற்றிவரும் சித்தாந்த வித்தகர் வே.நடராசா அவர்கள் இந்து கலாசாரத் திணைக்களத்தின் "கலாபூசணம்" பட்டத்தினைப் பெற்றுள்ளமையைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
மணிவாசகர் சபையினர்,
காரைநகர்.
காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காரைநகர் மணிவாசகர் சபையின் 77வது ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் கடந்த 12ம் திகதி திங்கட்கிழமை ஈழத்துச் சிதம்பரத்தில் அமைந்துள்ள மணிவாசகர் சபை மணிமண்டபத்தில் சபைத் தலைவர் பண்டிதர்; மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்றபோதே புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டார்.
சபையின் உப தலைவர்களாக ஓய்வு பெற்ற அதிபர் க.தில்லையம்பலம் மற்றும் ந.பாரதி ஆகியோரும் இணைச் செயலாளர்களாக ஆசிரியர்கள் ப.இராமகிருஸ்ணன்,ச.சுகந்தன் ஆகியோரும் பொருளாளராக க.சிவஸ்ரீசாந்திநாயகமும் சபையின் பரீட்சைச் செயலாளராக ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.அம்பலவாணரும்
நிர்வாக சபை உறுப்பினர்களாக கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம், ஓய்வு பெற்ற அதிபர்கா.குமாரவேல்,க.வினோதன்,ந.பரஞ்சோதி,தே.சத்தியானந்தன்,எஸ்.கந்தசாமி,நா.ஜங்கரநேசன்,ஆ.யோகலிங்கம்,வே.சபாலிங்கம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீசுவரக் குருக்களினால் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் கடந்த 78 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மணிவாசகர் சபையானது தொடர்ச்சியாக வருடாந்தம் காரைநகர் பாடசாலை மாணவரகளுக்கிடையே சைவ சமய பாடப் பரீட்சையினை நடாத்தல்,திருவெம்பாவைக் காலத்தில் ஈழத்துச் சிதம்பரத்தில் திருவாசகப் பெருவிழாவினை நடாத்தி ஈழத்து,இந்திய அறிஞர்களை அழைத்து உரையாற்ற வைத்தல்,வாராந்தம் ஆலயங்களில் திருவாசக முற்றோதல் நடாத்துதல்,பாடசாலைமாணவர்களிடையே பேச்சு,பண்ணிசை,கட்டுரைப் போட்டிகள்,மனனப் போட்டிகள்,போன்றவற்றை நடாத்தி மாணவர்களுக்குப் பரிசில்கள் மற்றும் தங்கப்பதக்கங்களை வழங்குதல்,நாயன்மார்களது குருபூசைகளை நடாத்துதல் போன்ற பல்வேறு சமயப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சைவமகாசபையின் நூற்றாண்டுமலருக்குஆக்கங்கள் கோரல்
அன்புடையீர்,
சைவமகாசபையின் நூற்றாண்டுமலருக்குஆக்கங்கள் கோரல்
பழமையும், பெருமையும் மிக்கநூற்றாண்டை எமது சைவமகாசபையின் ஆவணப்பதிவாக சைவத்தமிழ் ஆன்மீக அறநெறி மனிதநேயச் சிந்தனைகளைத் தாங்கி மலர் ஒன்றை வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.
சைவத்திற்கும், தமிழிற்கும் அருந்தொண்டாற்றிய சுவாமி விபுலானந்தர் போன்ற பல ஆன்மீகப் பெரியவர்களும், மகாத்மாகாந்தி போன்ற உன்னத ஜீவகாருண்யசீலர்களும் காலடிபதித்த எமது சபையின் வரலாறு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டியது அத்தியாவசியமானது எனும் நோக்கில் ஆடம்பரங்களை விடுத்து சமூகத்திற்கு பயன்தரும் வகையிலான செயற்திட்டங்களோடு முன்னெடுக்கப்படவுள்ள நூற்றாண்டு நினைவுகளில் ஒன்றாக வெளிவரும் இந்நூல் சுருக்கமாகவும், தெளிவாகவும் ஆன்மீக அறநெறிவரலாற்றுச் செயற்திட்டங்களையும், செய்திகளையும் சமூகத்தின் சகலமட்டங்களிலும் எடுத்துச் செல்லவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆக்கங்கள் யாவும் சைவசமூகத்தின் மேன்மைக்கும், இக்கால நடைமுறை விடயங்களை எமது நாயன்மார்கள்,அருளாளர்களின் கருத்துக்களோடு தொடர்புபடுத்தி சமூகத்தை நல்வழிப்படுத்தத்தக்க வகையில் சுருக்கமாக அமைதல் விரும்பத்தக்கது. சொற்களின் அளவு 400 சொற்களுக்கு மேற்படாமல் இருத்தல் நன்று. கட்டுரையின் பிரசுரிப்பு தொடர்பாக இறுதி முடிவை செயற்குழுவே மேற்கொள்ளும்.
ஆக்கங்களை 30.12.2016 ற்கு முன்னதாக நூற்றாண்டு நூலாக்க குழுவினரிடம் சமர்ப்பித்து சைவசமய சமூக மறுமலர்ச்சியில் பங்கெடுக்குமாறு அன்புடன் வேண்டிநிற்கின்றோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்,மின்னஞ்சல் முகவரி:-
திரு.கா.குமாரவேலு (ஓய்வுநிலைஅதிபர்) – 0212211716
பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை (ஓய்வுநிலைஅதிபர்)- 0777242988
கலாநிதி வீரமங்கை யோகரத்தினம் – 0779469547
Email: yoharatnam7@gmail.com
ஐயா / அம்மணி
பேரன்புடையீர் வணக்கம்.
…………………………………………….
…………………………………………….
…………………………………………….
காரைநகர் சைவமகாசபையின் நூற்றாண்டுவிழாவை இவ்வருடம் கொண்டாடுவதற்கும், சைவமகாசபையின் ஆவணப்பதிவாக சைவத்தமிழ், ஆன்மீக, அறநெறி, மனிதநேயச் சிந்தனைகளைத் தாங்கி மலர் ஒன்றை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்மலருக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. ஆக்கங்கள் யாவும் சைவசமூகத்தின் மேன்மைக்கும், இக்கால நடைமுறை விடயங்களை எமது நாயன்மார்கள், அருளாளர்களின் கருத்துக்களோடு தொடர்புபடுத்தி சமூகத்தை நல்வழிப்படுத்தத்தக்க வகையில் சுருக்கமாக அமைதல் விரும்பத்தக்கது. சொற்களின் அளவு 400 சொற்களுக்கு மேற்படாமல் இருத்தல் நன்று. கட்டுரையின் பிரசுரிப்பு தொடர்பாக இறுதி முடிவை செயற்குழுவே மேற்கொள்ளும்.
ஆக்கங்களை 30.12.2016ற்கு முன்னதாக நூற்றாண்டு நூலாக்க குழுவினரிடம் சமர்ப்பித்து சைவசமய சமூக மறுமலர்ச்சியில் பங்கெடுக்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்,மின்னஞ்சல் முகவரி:-
திரு.கா.குமாரவேலு (ஓய்வுநிலைஅதிபர்) – 0212211716
பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை (ஓய்வுநிலைஅதிபர்)- 0777242988
கலாநிதி வீரமங்கை யோகரத்தினம் – 0779469547
Email: yoharatnam7@gmail.com
விழாக்குழுவினர்
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கார்த்திகை படிப்பின் 3 ம் நாள் மற்றும் குமாராலயதீபம் நிகழ்வு!
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கார்த்திகை படிப்பின் 3 ம் நாள் மற்றும் குமாராலயதீபம் நிகழ்வு காலை 8 :30 மணியளவில் அபிஷேகத்துடன் ஆரம்பமாகி திருக்கார்த்திகை படிப்பினை தொடர்ந்து பகல் அன்னதானநிகழ்வும் இடம்பெற்றன. மாலை வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுக சாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வரும் காட்ச்சியும் இடம்பெற்றன. சொக்கப்பானை எரித்தல் நிகழ்வினை தொடர்ந்து மாவிளக்கு போடும் நிகழ்வுடன் நிறைவேறியது.
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் வழங்கப்பட்டுள்ளன!
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் வழங்கப்பட்டுள்ளன!
28.11.2016 கடந்த திங்கட்கிழமை இரண்டு மடிக்கணணிகளும் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கையளிக்கப்பட்டுள்ளன. காரைநகர் அபிவிருத்திச் சபையின் உப தலைவர் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை, சபையின் கௌரவ உறுப்பினர்கள் பரம்தில்லைராசா, இரத்தினம் ஜெயராமன் ஆகியோர் சகிதம் சென்று மடிக் கணனிகளைப் பாடசாலை பொறுப்பாசிரியரிடம் வழங்கப்பட்டுள்ளன.
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு கணணிகளும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் வழங்கப்பட்ட 43 கணணிகளில் இருந்து கடந்த நிர்வாக சபையினரால் தற்போதைய நிர்வாக சபையினரிடம் யூன் 11, 2016 அன்று மீள கையளிக்கப்பட்ட 13 கணணிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் 5 கணணிகள் பாவனைக்கு உட்படுத்த தக்க வகையில் தயார் நிலையில் உள்ளன. அவற்றினை அவற்றினை வழங்கிய திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களின் விருப்பத்திற்கு இணங்க காரை மண்ணிற்கு அனுப்பி வைக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் காரை சிறார்களின் பாவனைக்கு என 2013ம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய நிர்வாக சபையினரிடம் வழங்கப்பட்ட 43 மடிக்கணணிகளில் இதுவரை 13 கணணிகள் மட்டுமே தற்போதைய நிர்வாக சபை எடுத்துக் கொண்ட முயற்சியினால் கடந்த நிர்வாக சபை உறுப்பினர்களிடம் இருந்து மீள பெறப்பட்டுள்ளன. மேலும் 30 மடிக்கணணிகள் தொடர்பாக விபரங்கள் கடந்த நிர்வாக சபை உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
“ஊரில் இருந்து”
காரை அபிவிருத்தி சபைத் தலைவர், காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோரின் செய்திகள் "ஊரில் இருந்து" என்னும் பகுதியில் காரைவசந்தம் – 2016 விழா மண்டபத் திரையில் ஒளிபரப்பப்பட்டமை இன்றைய காரைநகரின் கல்வித்துறையினரிடமிருந்து கனடா-காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாடுகள் குறித்த நேரடியான தகவல்களைத் தந்தது.
காரைநகர் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு 16.11.2016 அன்று 100 கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன!
காரைநகர் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு 16.11.2016 அன்று 100 கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. அன்பளிப்பினை காரைநகர் களபூமி பாலாவோடையை சேர்ந்த கந்தையா அன்னலிங்கம் (ஜெர்மனி) அவர்களினால் இன்று கையளிக்கப்பட்டன. அத்துடன் பாடசாலையின் பிரதான நுழைவாசல் பெயர் பலகையினையும் அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
ஊர் முற்றம்- காரைநகர்
ஊர் முற்றம்- காரைநகர்
நன்றி IBC Tamil TV
கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கனடா காரை கலாசார மன்றம் தொடக்கிவைத்த ஆரம்பப் பாடசாலைகளுக்கான ஒரு மில்லியன் திட்டமானது நிறைவு பெற்றமை மகிழ்ச்சியளிப்பதாக வடமாகாண ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான உயர்திரு ப.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காரைநகரில் உள்ள 12 ஆரம்பப் பாடசாலைகளில் 11 பாடசாலைகளுக்கு கடந்த வருடம் ஒவ்வொரு மில்லியன் ரூபா காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதன் வட்டித்தொகை அந்தந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திச் சபைக் கணக்குகளில் வருடத்தில் இரு தடவைகள் வைப்பிலிடப்படுகின்றன.
அந்த வகையில் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா நவம்பர் 05ம் திகதி வைப்பிலிடப்பட்டது. அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது 12 பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்ட நிதி மூலம் பாடசாலை நாட்களில் தினசரி 500 ரூபாவினை ஒவ்வொரு பாடசாலைகளும் பெற்றுக்கொள்ள முடியும் இந்த நிதி ஊடாக பாடசாலையின் மேலதிக கற்றல் செயற்பாடுகளை ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய செலவு செய்ய முடியும் இதன் ஊடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே கனடா காரை கலாசார மன்றத்தின் எதிர்பார்ப்பாகும் அந்த நோக்கத்தை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.
அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. தற்போதைய வட்டி வீதத்தின் படி 12 பாடசாலைகளுக்கும் தலா 52,500.00 ரூபா எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி தேசிய சேமிப்பு வங்கியினால் அவர்களின் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கணக்கில் வைப்பிலிடப்படும் தொடர்ந்து தொடர்ச்சியாக நவம்பர்,மே மாதங்களில் நாள் தவறாது வங்கியினால் வட்டிப்பணம் வைப்பிலிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
காரை அபிவிருத்தி சபையால் காரைநகர் சாலை பொறியியல் பகுதிக்கு புதிய மின்னிணைப்பு!
காரை அபிவிருத்தி சபையால் காரைநகர் சாலை பொறியியல் பகுதிக்கு புதிய மின்னிணைப்பு!
காரைநகர் சாலையின் பொறியியல் பகுதிக்கான புதிய மின்னிணைப்பு செய்யப்பட்டு 04.11.2016 காரை அபிவிருத்தி சபையின் பொருளாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனால் மின்னிணைப்பு ஒளிரச்செய்யப்பட்டது.இதன் போது பொறியியல் பகுதி முகாமையாளரும் உடனிருந்தார்.
காரைநகர் சாலையின் அபிவிருத்தியில் ஒரு பகுதியான இவ்வேலைத்திட்டம் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் ரூபா 205000/-நிதிப்பங்களிப்பில் காரை அபிவிருத்தி சபையின் ஊடாக செய்து முடிக்கப்பட்டது. தொடர்ந்து காரைநகர் சாலையின் வேலைத்தளப்பகுதியின் முக்கிய திருத்த வேலைகளையும் உடன் ஆரம்பிக்குமாறு காரை அபிவிருத்தி சபையினரால் தெரிவிக்கப்பட்டது
இதற்கான நிதியாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் நிதிப்பங்களிப்பில் சுமார் மூன்று இலட்ச ரூபாவை வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டது. இதற்காக காரைநகர்,சிவன்கோவிலடி அமரர் கந்தையா தியாகராசர (CTB) புதல்வர்களும் ஒரு இலட்ச ரூபாவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அழிவடைந்த செல்லும் காரைநகர் சாலையை புனரமைக்க மேலும் பல லட்ச ரூபாய்கள் தேவைப்படுவதாக பொறியியல் பகுதி முகாமையாளர் தெரிவிக்கின்றார் சாலையின் ஐம்பது வருட பூர்த்தி எதிர்வரும் மார்கழி மாதம் வர இருப்பதனால் அதற்கு முன்பதாக காரைநகர் சாலையை புனரமைக்க புலம்பெயர் அமைப்புக்களையும் உறவுகளையும் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர் காரை அபிவிருத்தி சபையினர்.
காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்தும் பரிசளிப்பும் கலைவிழாவும் 30.10.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் ந.சோதிநாதன் தலைமையில் இடம்பெற்றது.
காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்தும் பரிசளிப்பும் கலைவிழாவும் 30.10.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் ந.சோதிநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி தி.வேல்நம்பி தம்பதியினரும் இலங்கை மத்திய வங்கி பிராந்திய முகாமையாளர் பா.சிவதீபன் தம்பதியினரும்
கௌரவ விருந்தினராக நாதஸ்வரச் சக்கரவர்த்தி எஸ்.பாலமுருகன் தம்பதியினர்,கலைமாடக்கோண் ச.சிவஞானம் தம்பதியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் காரைநகர் கிழவன்காடு கலா மன்ற மாணவர்களினதும் கலா மன்றத்தின் யாழ் கிளை மாணவர்களினதும் கலை நிகழ்வுகளும்,சிறப்புப் பட்டி மன்டபமும் இடம்பெற்றது.நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலய வருடாந்த ஸ்கந்த சஷ்டி உற்சவம் -2016
காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலய வருடாந்த ஸ்கந்த சஷ்டி உற்சவம் -2016
முருகப் பெருமான் அடியார்களே!
நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் ஐப்பசி 15 ம் நாள் (31-10-2016)திங்கடகிழமை ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகி 5 ம் நாள் வேல் வாங்கும் உற்சவம்,6 ம் நாள் சூரன்போர் உற்சவம்,7 ம் நாள் திருக்கல்யாண உற்சவம் என்பன நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.
அத்தருணம் அடியார்கள் ஆசாரசீடர்களாக உற்சவ தினங்களில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.
மிகவும் கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016
மிகவும் கோலாகலமாக நடைபெற்ற
யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016
விழா ஆரம்பம்
யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 2016.10.23 ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாணக்கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி.பிரேமாவதி செல்வின் இரேனியஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.ச.பாஸ்கரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக சுவிஸ் பிரபல வர்த்தகர் (Yarltonian) திரு.சு.கதிர்காமநாதன் அவர்களும், காரைநகர் இ.போ.ச சாலை பொறியியல் பகுதி முகாரி; திரு.தி.ஏகாம்பரநாதன் (Yarltonian) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விழா ஆரம்பமாவதற்கு முன்னர் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இன்னிய பழம்பெரும் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் என்ற கல்லூரி மாணவர்களின் வரவேற்புடனும் மற்றும் மாணவத் தலைவர் அணி, பான்ட் இசைக்குழு சகிதம் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்ட காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது.
கல்லூரி அதிபர் ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்இ பெற்றோர்கள் ஆகியோர் வரவேற்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
தேசியக்கொடி ,கல்லூரிக்கொடி ஏற்றலுடன் விழா இனிதே ஆரம்பமானது.
கௌரவ விருந்தினர் திரு.சு.கதிர்காமநாதன் அவர்கட்கான கௌரவிப்பு
இம்முறை இவ்விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தவரும் கல்லூரிக்கு அளப்பெரிய சேவைகளைச் செய்தவருமான காரைமக்களால் சுவிஸ்நாதன் என அழைக்கப்படும் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்து மாலை அணிவித்து வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கல்லூரியின் சங்கீதத் துறை ஆசிரியை செல்வி லீலாவதி.இராஜரட்ணம் அவர்களின் தனித்துவம் மிக்க குரலினால் வாழ்த்துப்பா பாடப்பட்டு விழாவின் பிரதம விருந்தினரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது
அதிபர் தனது பரிசுத்தின அறிக்கையில் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் கல்லூரிக்கு செய்த சேவைகளைப்பாராட்டி தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
பரிசளிப்பு விழாவின் நிதி அனுசரணையாளர்
வைத்தியகலாநிதி (திருமதி) ஸ்ரீதாரணி விமலன் (கனடா) குடும்பத்தினர் அமரர் வை. காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக பரிசுத்தினத்திற்கான நிதி அனுசரணையாளராக 12 ஆண்டுகாலம் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் நடைபெறும் பரிசளிப்பு விழாவினால் மாணவர்கள் கல்வியில் ஊக்குவிக்கப்படுகின்றமை மட்டுமன்றி பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கட்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர் அதிபர் தனது அறிக்கையில் திருமதி ஸ்ரீதாரணி விமலன் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
ஞாபகார்த்தப் பரிசில்கள்
1.இப்பரிசுத்தின அறிக்கையில் ஞாபகார்த்தப்பரிசில்களை வழங்கிவரும் கனடாவில் வசிக்கும் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர்) அவர்களின் பிள்ளைகள் தமது தந்தையார் அமரர் கணேசன் ஞாபகார்தமாக தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடையும் மாணவர்கட்கான பரிசில்களையும்
2. Colombo Quiency Distibuters உரிமையாளர் திரு.S.கணநாதன் அவர்கள் தனது பேரனார் அமரர் கணபதிப்பிள்ளை (தலைப்பா) அவர்கள் ஞாபகார்த்தமாக க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.வெ.ஏகாம்பரநாதன் அவர்கள் கல்லூரியின் முகாமையாளர் A.T.ஆறுமுகம் ஞாபகார்த்தமாக அதிகூடிய புள்ளிகளைப்பெற்று பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கட்கும் ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி வருகின்றனர். இந் ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி வருபவர்கட்கு அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
நிறைவுரை
அதிபர் தனது நிறைவுரையில் கல்லூரியின் அரசு சார்பான செயற்றிட்டங்களுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கி வரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினை தெரிவித்தார்.
ஆறுமாதத்திற்கு ஒரு தடவை ரூ30000 பணத்தினை ஆரம்பக்கல்வியின் கற்றல் செயற்பாட்டிற்காக வழங்கி வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தினருக்கும் அதிபர் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.
பிரதம விருந்தினர் சிறப்பு விருந்தினர் கௌரவ விருந்தினர்களின் உரைகளைத்தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில் வழங்கப்பட்டன. மேலும் தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் ,க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறப்புத் தேர்சிகளைப் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கியும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் நிலை பெறும் மாணவருக்கு பதக்கங்கள் அணிவித்தும் கௌவிக்கப்பட்டனர்
பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்;கட்கு பணம் வைப்புச்செய்யப்பட்டு சேமிப்பு புத்தகம் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.175 மாணவர்கள் பரிசில்கள் பெற்றுக்கொண்டனர் 90% க்கு மேற்பட்ட பெற்றோர் விழாவில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இப் பரிசுத்தின அறிக்கையினை இணையத்தளங்களில் முழுமையாக பார்வையிடலாம்.
http://www.karainagar.com/pages/wpcontent/uploads/2016/10/prizedaybooks.pdf
காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அனுசரணையில் காரைநகர் சாலையின் புனரமைப்புப்பணிகளுக்கு நிதி கையளிப்பு.
காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அனுசரணையில் காரைநகர் சாலையின் புனரமைப்புப்பணிகளுக்கு நிதி கையளிப்பு.
காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் காரைநகர் சாலையின் புனரமைப்புப்பணிகளுக்கு ரூபா ஐந்து இலட்சம் வழங்குவதாக உறுதியளித்தமைக்கேற்ப இன்று முதற்கட்டமாக ரூபா இரண்டு இலட்சத்தி ஐயாயிரம் ரூபாவிற்கான காசோலை அபிவிருத்தி சபையின் பொருளாளர் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரனால் காரைநகர் சாலை நிர்வாக உத்தியோகத்தரிடம் வழங்கப்பட்டது. இதன்போது காரை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் திரு. சிவா.தி. மகேசன் அவர்களும் உடனிருந்தார்.
காரைநகர் களபூமி பாலாவோடை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் 11.10.2016 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மானம்பூத் திருவிழா காட்சிகள்.
11-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று காரைநகர் பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் காலை 10.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி பகல் 2.30 மணியளவில் அம்பாள் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பாலாவோடை பிரதான வீதி ஊடாக புறப்பட்டு பொன்னாவளை வீதி வழியாக திக்கரை முருகன் ஆலயத்துக்கு சென்று மாலை 6.00 மணிக்கு மானம்பூ (வாழைவெட்டு) உற்சவம் நிறைவேறியதும் அம்பாள் வழுப்போடை வீதி வழியாக தனது இருப்பிடத்தை வந்தடைந்தாள். அம்பிகை அடியவர்கள் வீதிகளில் நிறைகுடம் வைத்து அம்பாளை வரவேற்றனர். அன்றய தினம் மாலை 7.30 மணிக்கு கௌரிகாப்பு பூஜை நிகழ்வும் இடம்பெற்றன.