காரை அபிவிருத்தி சபையால் காரைநகர் சாலை பொறியியல் பகுதிக்கு புதிய மின்னிணைப்பு!

காரை அபிவிருத்தி சபையால் காரைநகர் சாலை பொறியியல் பகுதிக்கு புதிய மின்னிணைப்பு!

காரைநகர் சாலையின் பொறியியல் பகுதிக்கான புதிய மின்னிணைப்பு செய்யப்பட்டு  04.11.2016 காரை அபிவிருத்தி சபையின் பொருளாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனால் மின்னிணைப்பு ஒளிரச்செய்யப்பட்டது.இதன் போது பொறியியல் பகுதி முகாமையாளரும் உடனிருந்தார்.
காரைநகர் சாலையின் அபிவிருத்தியில் ஒரு பகுதியான இவ்வேலைத்திட்டம் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் ரூபா 205000/-நிதிப்பங்களிப்பில் காரை அபிவிருத்தி சபையின் ஊடாக செய்து முடிக்கப்பட்டது. தொடர்ந்து காரைநகர் சாலையின் வேலைத்தளப்பகுதியின் முக்கிய திருத்த வேலைகளையும் உடன் ஆரம்பிக்குமாறு காரை அபிவிருத்தி சபையினரால் தெரிவிக்கப்பட்டது
இதற்கான நிதியாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் நிதிப்பங்களிப்பில் சுமார் மூன்று இலட்ச ரூபாவை வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டது. இதற்காக காரைநகர்,சிவன்கோவிலடி அமரர் கந்தையா தியாகராசர (CTB) புதல்வர்களும் ஒரு இலட்ச ரூபாவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அழிவடைந்த செல்லும் காரைநகர் சாலையை புனரமைக்க மேலும் பல லட்ச ரூபாய்கள் தேவைப்படுவதாக பொறியியல் பகுதி முகாமையாளர் தெரிவிக்கின்றார் சாலையின் ஐம்பது வருட பூர்த்தி எதிர்வரும் மார்கழி மாதம் வர இருப்பதனால் அதற்கு முன்பதாக காரைநகர் சாலையை புனரமைக்க புலம்பெயர் அமைப்புக்களையும் உறவுகளையும் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர் காரை அபிவிருத்தி சபையினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12