பாராட்டி வாழ்த்துகின்றோம்
காரைநகர் மணிவாசகர் சபையில் நீண்ட காலம் தலைவராக பணியாற்றி தற்போது சபையின் காப்பாளராக இருந்து சிறந்த சைவப்பணியாற்றிவரும் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் இந்து கலாசாரத் திணைக்களத்தின் "கலாபூசணம்" பட்டத்தினையும் யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையின் "திருவாசகமணி" பட்டத்தினையும் பெற்றுள்ளமையைப் பாராட்டி வாழ்த்துவதுடன் அவர் மேன்மேலும் பல பட்டங்கள் பெற்று சிறந்த சமயப்பணியாற்றவும் நீண்ட ஆயுளுடன் நோய்நொடியின்றி சிறப்புடன் வாழவும் எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானைப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்.
மணிவாசகர் சபையினர்,
காரைநகர்.
பாராட்டி வாழ்த்துகின்றோம்
காரைநகர் மணிவாசகர் சபையின் உறுப்பினராக இருந்து சிறந்த சைவப்பணியாற்றிவரும் சித்தாந்த வித்தகர் வே.நடராசா அவர்கள் இந்து கலாசாரத் திணைக்களத்தின் "கலாபூசணம்" பட்டத்தினைப் பெற்றுள்ளமையைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
மணிவாசகர் சபையினர்,
காரைநகர்.