காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்தும் பரிசளிப்பும் கலைவிழாவும் 30.10.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் ந.சோதிநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி தி.வேல்நம்பி தம்பதியினரும் இலங்கை மத்திய வங்கி பிராந்திய முகாமையாளர் பா.சிவதீபன் தம்பதியினரும்
கௌரவ விருந்தினராக நாதஸ்வரச் சக்கரவர்த்தி எஸ்.பாலமுருகன் தம்பதியினர்,கலைமாடக்கோண் ச.சிவஞானம் தம்பதியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் காரைநகர் கிழவன்காடு கலா மன்ற மாணவர்களினதும் கலா மன்றத்தின் யாழ் கிளை மாணவர்களினதும் கலை நிகழ்வுகளும்,சிறப்புப் பட்டி மன்டபமும் இடம்பெற்றது.நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.