காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் மணிவாசகர் சபையின் 77வது ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் கடந்த 12ம் திகதி திங்கட்கிழமை ஈழத்துச் சிதம்பரத்தில் அமைந்துள்ள மணிவாசகர் சபை மணிமண்டபத்தில் சபைத் தலைவர் பண்டிதர்; மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்றபோதே புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டார்.

சபையின் உப தலைவர்களாக ஓய்வு பெற்ற அதிபர் க.தில்லையம்பலம் மற்றும் ந.பாரதி ஆகியோரும் இணைச் செயலாளர்களாக ஆசிரியர்கள் ப.இராமகிருஸ்ணன்,ச.சுகந்தன் ஆகியோரும் பொருளாளராக க.சிவஸ்ரீசாந்திநாயகமும் சபையின் பரீட்சைச் செயலாளராக ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.அம்பலவாணரும்
நிர்வாக சபை உறுப்பினர்களாக கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம், ஓய்வு பெற்ற அதிபர்கா.குமாரவேல்,க.வினோதன்,ந.பரஞ்சோதி,தே.சத்தியானந்தன்,எஸ்.கந்தசாமி,நா.ஜங்கரநேசன்,ஆ.யோகலிங்கம்,வே.சபாலிங்கம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீசுவரக் குருக்களினால் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் கடந்த 78 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மணிவாசகர் சபையானது தொடர்ச்சியாக வருடாந்தம் காரைநகர் பாடசாலை மாணவரகளுக்கிடையே சைவ சமய பாடப் பரீட்சையினை நடாத்தல்,திருவெம்பாவைக் காலத்தில் ஈழத்துச் சிதம்பரத்தில் திருவாசகப் பெருவிழாவினை நடாத்தி ஈழத்து,இந்திய அறிஞர்களை அழைத்து உரையாற்ற வைத்தல்,வாராந்தம் ஆலயங்களில் திருவாசக முற்றோதல் நடாத்துதல்,பாடசாலைமாணவர்களிடையே பேச்சு,பண்ணிசை,கட்டுரைப் போட்டிகள்,மனனப் போட்டிகள்,போன்றவற்றை நடாத்தி மாணவர்களுக்குப் பரிசில்கள் மற்றும் தங்கப்பதக்கங்களை வழங்குதல்,நாயன்மார்களது குருபூசைகளை நடாத்துதல் போன்ற பல்வேறு சமயப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

img_9703-copy img_9704-copy img_9705-copy img_9706-copy img_9707-copy img_9708-copy img_9709-copy img_9710-copy img_9711-copy img_9712-copy img_9713-copy img_9714-copy img_9715-copy img_9716-copy img_9717-copy img_9718-copy img_9719-copy img_9720-copy img_9721-copy img_9722-copy