Category: பாடசாலைகள்

யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகத்தினதும் ஏனைய நலன் விரும்பிகளதும் பெருந்திரளான கூட்டத்துடன் மிக்கோலாகலமாக நடைபெற்ற “சாதனையாளன்” யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர் திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் முருகோதயம் மலர் வெளியீடும்

யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகத்தினதும் ஏனைய நலன் விரும்பிகளதும் பெருந்திரளான கூட்டத்துடன் மிக்கோலாகலமாக நடைபெற்ற
“சாதனையாளன்” யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர் திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் முருகோதயம் மலர் வெளியீடும்

வரவேற்பு

யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர்திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் “முருகோதயம்” மலர் வெளியீடும் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.30 மணிக்கு மணற்காட்டு முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பூசை வழிபாடுகளுடன் மேற்படி விழா ஆரம்பமானது. கல்லூரி மாணவர்களின் பான்ட் இசைக்குழு மற்றும் தமிழ்ப் பாரம்பரிய இசைக்குழுவினரின் வரவேற்புடன் விழா நாயகர் தம்பதிகள் அவரது குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் கல்லூரி வளாகத்திற்கு ஊர்வலமாக அழைத்துச்செல்லப் பட்டனர்.

விழாவின் ஆரம்ப நிகழ்வுகள்

கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இதற்கென அமைக்கப்பட்ட விசேடமான பந்தல் மற்றும் சிறப்பு மிக்க மேடை அலங்காரங்கள் ஆகியவற்றுடன் விழா நடைபெற்றது. விருந்தினர்கள் மற்றும் விழா நாயகத் தம்பதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமானது.

விழா நிகழ்வுகள்

கடவுள் வணக்கத்துடன் விழா ஆரம்பமாகி விருந்தினர்களின் ஆசியுரைகள், வாழ்த்துரைகள் சாதனையாளன் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர்திரு வே.முருகமூர்த்தி அவர்களுக்கு தொடர்ந்து நடைபெற்ற வண்ணமிருந்தன.

“முருகோதயம்” மலர் வெளியீடு

அதிபரினது சேவைகளையும் கற்பித்தல் பணிகளையும் பாராட்டி உள்ளடக்கியதும் மற்றும் கல்லூரியில் இவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பௌதீக வள வளர்ச்சிகள் மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வுகள் கல்லூரியின் கற்றல் அலகுகள் ஆகியவற்றின் படங்களை உள்ளடக்கியதாக இம்மலர் உள்ளது.
இம்மலருக்கான கௌரவப் பிரதி விழாவின் அனுசரணையாளரான காரைநகர் கோவளத்தைச் சேர்ந்த மதிப்புமிக்க திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு (சுவிஸ்நாதன்) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழா நாயகரின் (அதிபர்) ஏற்புரை

அதிபர் தனது ஏற்புரையில் தனது காலத்தில் கல்லூரியில் ஏற்பட்ட வளர்ச்சி,மாணவர்களின் கல்வி சார் சாதனைகள் என்பவற்றை துல்லியமாக எடுத்துக்காட்டினார்.தனது காலத்தில் பௌதீக வள வளர்ச்சியில் ஈடுபாடுகளைக் காட்டிய அனைத்துப் பழைய மாணவர்களுக்கும் விசேடமாக கல்லூரிக்கு காணிகளை வாங்கி நன்கொடையாகக் கொடுத்துதவிய திரு.சு.கதிர்காமநாதன்( பிரபல வர்த்தகர் சுவிஸ்) திரு.சு.கணநாதன் (உரிமையாளர் Quency distributers Colombo) திருமதி தேவீஸ்வரி கமலச்சந்திரன் (கனடா) திரு.க விமலச்சந்திரன் (கனடா)ஆகியோருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

விழா நாயகர் இறுதியாக தனக்கு வாழ்த்துரைகள்,ஆசியுரைகள் வழங்கியவர்களுக்கும் இவ்விழாவினைத் திறம்பட நடாத்துவதற்கு முழுமையான நிதி அனுசரணையை வழங்கிய திரு.சு.கதிர்காமநாதன் (சுவிஸ்நாதன்) அவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் விழாக்குழு உறுப்பினர்களுக்கும் அதன் தலைவர் திரு.வே.சிற்சபேசன், செயலாளர் திரு.வே.சிவனேசன் ஆகியோருக்கும் தனது நன்றிப் பெருக்கினைத் தெரிவித்தார்.மற்றும் விழாவினைத் திறம்பட நடாத்துவதற்கு உதவிய அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

யா/யாழ்ற்ரன் கல்லூரி அதிபரின் சேவை நயப்பும் “முருகோதயம்” மலர் வெளியீடும் அழைப்பிதழ்

கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் கௌரவிப்பு விழாவைபவம்

கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் கௌரவிப்பு விழாவைபவம்

யாழ்ற்ரன் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கட்கான கௌரவிப்புவைபவம் 17-11-2017 வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதமவிருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சு.விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்புவிருந்தினராக காரைநகர் பிரதேசசெயலாளர் திரு.நு.தயாரூபன் அவர்களும், கௌரவவிருந்தினர்களாக காரைநகர் இலங்கைவங்கி முகாமையாளர் திரு.P.புவனேந்திரராஜா அவர்களும்,தீவகக் கல்விவலய விசேடகல்விக்கான சேவைக்கால ஆலோசகர் திரு.S.மணிவண்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரி அதிபர்,விருந்தினர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் ஆகியோர் கல்லூரி மாணவத் தலைவர்கள் அணி, பாண்ட் இசைகுழுவினர்,தமிழ் பாரம்பரிய இசைநடன குழுவினரால் அழைத்துவரப்பட்டமை மிகவும் தனித்துவம் மிக்கதாகக் காணப்பட்டது.

பிரதமவிருந்தினரால் தேசியக்கொடியும் கல்லூரி அதிபரால் கல்லூரிக் கொடியும், பாண்ட் வாத்தியம் முழங்க,சங்குநாதம் ஒலிக்க,மாணவர்களின் பலத்த கரகோசங்களின் மத்தியில் மரியாதை பூர்வமாக ஏற்றிவைக்கப்பட்டு விழாகோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மங்களவிளக்கேற்றல், கடவுள் வணக்கம், வரவேற்புநடனம்,வரவேற்புரை என்பனநிகழ்வில் ஆரம்ப நிகழ்வுகளாக இருந்தன.

அதிபரின் தலைமையுரை

அதிபர் தனது தலைமை உரையில் தான் 08-12-2017 உடன் ஓய்வுபெறுவதால் தனது 40 வருடகால கல்விச் சேவையில் இறுதியாக நடைபெறும் மாணவர் கௌரவிப்புநிகழ்வு என்ற பிடீகையுடன் உரையை ஆரம்பித்தார்.

கல்லூரி மீதான சமூகத்தின் மதிப்பு ஏற்படுவது மாணவர்களின் தேசியப் பரீட்சை வெற்றிகளிலே ஆகும்;. எமதுகல்லூரி தேசியபரீட்சையில் தீவகவலயத்தில் முதன்மை பெறுபேறுகளைப் பெற்றிருப்பதை அதிபர் சுட்டிக் காட்டினார். 2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் யாழ்ற்ரன் கல்லூரியில் தீவகவலயத்தில் அதிகூடிய் எண்ணிக்கையான மாணவர்கள் சித்தி அடைந்தபாடசாலை என்ற பெருமையைதக்க வைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு 12 மாணவர் சித்தி அடைந்து கல்லூரி தீவகவலயத்தில் 1ஆம் இடத்தையும், யாழ்ப்பாணமாவட்டத்தில் 10 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டமையும் அதிபர் நினைவு கூர்ந்தார். இந்தளவு வெற்றிக்கும் காரணகர்த்தாவாக விளங்குபவர ;எனது அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஆசிரியப் பெருந்தகை திரு.மு.சுகந்தன் அவர்கள் என மிகவும் உணர்வுபூர்வமாக அதிபர் தனது நன்றி பாராட்டினை தெரிவித்தார். 2011-2017 காலப்பகுதியில் கல்லூரியில் 47 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்துள்ளனர். எனவே கல்விவளர்ச்சியில் தேசியபரீட்சைப் பெறுபேறுகள் முன்னிலையில் இருப்பதை அதிபர் குறிப்பிட்டார்.

மாணவர் ஆசிரியரின் விருந்தினர்களின் உரையைத் தொடர்ந்து சித்தியடைந்த மாணவர்கட்கு பெறுமதிமிக்க நினைவுப் பட்டயம் பிரதமவிருந்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சு.விக்னேஸ்வரன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து இம் மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர் திரு.மு.சுகந்தன் அவர்களுக்கு சித்தி அடைந்த மாணவர்களின் பெற்றோர்களால் மனமுவந்து அளிகக்கப்பட்ட தங்கப்பதக்கத்தினை துணைவேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களால் அணிவித்து கௌரவிக்கப்பட்டார். மேலும் ஆசிரியர் சுகந்தன் அவர்கட்கு கல்லூரிச் சமூகத்தினர் சார்பாக நினைவுப்பட்டயம், மற்றும் கடந்தகாலங்களில் கற்றமாணவர்களால் வழங்கப்பட்ட வாழ்த்துப்பாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியாக அதிபர் தனது உரையில் தான் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து இக்கௌரவிப்பு நிகழ்வினை காரைநகர் வாரிவளவு (தேர்க்கார) கந்தையாகணேசன் (கனடா) அவர்களின் அனுசரணையுடன் நடைபெற்றுவருகின்றது. அவர் சிவபதம் அடைந்தபின்னர் அவரது பிள்ளைகளினால் தொடர்ந்து அனுசரணை வழங்கிக் கொண்டு வரப்படுகின்றது. இதனால்”அமரர் கந்தையா கணேசன் ஞாபகார்த்தபாராட்டுவைபவம்”எனஆக்கப்பட்டது.எனவே இந்நிகழ்வுகளுக்கு அனுசரணையாளர்களாக இருக்கும் அமரர் கந்தையாகணேசன் அவர்களின் பின்ளைகளுக்கு அதிபர் தனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தார்.

ஆசிரியர் திருமு.சுகந்தன் அவர்களின் தனது ஏற்புரையில் அதிபர் எவ்விடயத்திலும் மிகுந்த அக்கறையாக இருப்பதை சுட்டிக் காட்டினார். மாணவர் கல்வி அடைவுமட்டத்தினை உயர்த்துவதில் தானும் பாடுபட்டு ஆசிரியர்களைஅதிபர் பாடுபடவைப்பார்.பலவிடயங்களில் தன்னை ஊக்கபடுத்தி இவ் வெற்றியின் பங்குதாரர்களில் அதிபரும் குறிப்பிடத்தக்கவர். மேலும் தனக்குதரப்பட்ட கௌரவிப்பிற்காக தனது இதயம் கனிந்தநன்றிகளை தெரிவித்தார்.அவரிடம் கல்வி கற்றுச்சித்தியடைந்த மாணவர் எல்லோரும் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பாராட்டுப்பத்திரம், பரிசுகள் வழங்கிதமது நன்றி உணர்வினை வெளிப்படுத்தினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிது நிறைவேறியது.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

 

 

 

கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் கௌரவிப்பு விழா வைபவம்

கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5

புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின்

கௌரவிப்பு விழா வைபவம்

யாழ்ற்ரன் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கட்கான கௌரவிப்பு வைபவம் 17-11-2017 வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் பிரதேச செயலாளர் திரு.E.தயாரூபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.P.புவனேந்திரராஜா அவர்களும், தீவகக்கல்வி வலய விசேட கல்விக்கான சேவைக்கால ஆலோசகர் திரு.S.மணிவண்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரி அதிபர், விருந்தினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் ஆகியோர் கல்லூரி மாணவத் தலைவர்கள் அணி, பாண்ட் இசை குழுவினர், தமிழ் பாரம்பரிய இசை நடன குழுவினரால் அழைத்து வரப்பட்டமை மிகவும் தனித்துவம் மிக்கதாகக் காணப்பட்டது.

பிரதம விருந்தினரால் தேசியக்கொடியும் கல்லூரி அதிபரால் கல்லூரிக் கொடியும், பாண்ட் வாத்தியம் முழங்க, சங்குநாதம் ஒலிக்க, மாணவர்களின் பலத்த கரகோசங்களின் மத்தியில் மரியாதை பூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டு விழா கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், கடவுள் வணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன நிகழ்வில் ஆரம்ப நிகழ்வுகளாக இருந்தன.

அதிபரின் தலைமையுரை

அதிபர் தனது தலைமை உரையில் தான் 08-12-2017 உடன் ஓய்வு பெறுவதால் தனது 40 வருட கால பாடசாலை கல்லூரியின் சேவையில் இறுதியாக நடைபெறும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு என்ற பிடிகையுடன் உரையை ஆரம்பித்தார்.

கல்லூரி மீதான சமூகத்தின் மதிப்பு ஏற்படுவது மாணவர்களின் பெற்றோர்களினால் ஆகும். எமது கல்லூரி தேசிய பரீட்சையில் தீவக வலயத்தில் முதன்மை பெறுபேறுகளாக இருப்பதை அதிபர் சுட்டிக் காட்டினார். 2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் யாழ்ற்ரன் கல்லூரியில் தீவக வலயத்தில் அதிகூடிய மாணவர் எண்ணிக்கை மாணவர்கள் சித்தி அடைந்த பாடசாலை என்ற பெருமையை தக்க வைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு 12 மாணவர் சித்தி அடைந்து கல்லூரி தீவகவலயத்தில் 1ஆம் இடத்தையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டமையும் அதிபர் நினைவு கூர்ந்தார். இந்தளவு வெற்றிக்கும் காரணகர்த்தாவாக விளங்குபவர் எனது அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஆசிரியப் பெருந்தகை திரு.மு.சுகந்தன் அவர்கள் என மிகவும் உணர்வு பூர்வமாக அதிபர் தனது நன்றி பாராட்டினை தெரிவித்தார். 2011-2017 காலப்பகுதியில் கல்லூரியில் 47 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்துள்ளனர். கல்வி வளர்ச்சியில் தேசிய பரீட்சைப் பெறுபேறுகள் முன்னிலையில் இருப்பதை அதிபர் குறிப்பிட்டார்.

மாணவர் ஆசிரியரின் விருந்தினர்களின் உரையைத் தொடர்ந்து சித்தியடைந்த மாணவர்கட்கு பெறுமதி மிக்க நினைவுப் பட்டயம் பிரதம விருந்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து இம் மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர் திரு.மு.சுகந்தன் அவர்களுக்கு சித்தி அடைந்த மாணவர்களின் பெற்றோர்களால் மனமுவந்து அளிகக்கப்பட்ட தங்கப்பதக்கத்தினை துணைவேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களால் அணிவித்து கௌரவிக்கப்பட்டார். மேலும் ஆசிரியர் சுகந்தன் அவர்கட்கு கல்லூரிச் சமூகத்தினர் சார்பாக நினைவுப்பட்டயம், மற்றும் கடந்த காலங்களில் கற்ற மாணவர்களால் வழங்கப்பட்ட வாழ்த்துப்பாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியாக அதிபர் தனது உரையில் தான் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து இக்கௌரவிப்பு நிகழ்வினை காரைநகர் வாரிவளவு (தேர்க்கார) கந்தையா கணேசன் (கனடா) அவர்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றது. அவர் சிவபதம் அடைந்த பின்னர் அவரது பிள்ளைகளினால் தொடர்ந்து அனுசரணை வழங்கிக் கொண்டு வருகிறார்கள். இதனால் ‘அமரர் கந்தையா கணேசன் ஞாபகார்த்த பாராட்டு வைபவம்’ என ஆக்கப்பட்டது. எனவே இந்நிகழ்வுகளுக்கு அனுசரணையாளர்களாக இருக்கும் அமரர் கந்தையா கணேசன் அவர்களின் பின்ளைக்கு அதிபர் தனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தார்.

ஆசிரியர் திரு மு.சுகந்தன் அவர்களின் தனது ஏற்புரையில் அதிபர் எவ்விடயத்திலும் மிகுந்த அக்கறையாக இருப்பதை சுட்டிக் காட்டினார். மாணவர் கல்வி அடைவு மட்டத்தினை உயர்த்துவதில் தானும் பாடுபட்டு ஆசிரியர்களை அதிபர் பாடுபட வைப்பார். பல விடயங்களில் தன்னை ஊக்கபடுத்தி இவ் வெற்றியின் பங்குதாரர்களில் அதிபரும் குறிப்பிடத்தக்கவர். மேலும் தனக்கு தரப்பட்ட கௌரவிப்பிற்காக தனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்தார். அவரிடம் கல்வி கற்று சித்தியடைந்த மாணவர் எல்லோரும் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பாராட்டுப்பத்திரம், பரிசுகள் வழங்கி தமது நன்றி உணர்வினை வெளிப்படுத்தினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிது நிறைவேறியது.

புலமைப் பரிசில் பரீட்சையில தீவக வலயத்தில் வலந்தலை தெற்கு அ.மி.த.க மாணவி பரமேஸ்வரன் துவாகரா 181 புள்ளிகளைப் பெற்று முதலிடம் மேலும் 18 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி கனடா கலாசார மன்ற நிரந்தர வைப்பு செயற்திட்டத்திற்கும் அதிபர்கள் பாராட்டு

புலமைப் பரிசில் பரீட்சையில தீவக வலயத்தில் வலந்தலை தெற்கு அ.மி.த.க மாணவி பரமேஸ்வரன் துவாகரா 181 புள்ளிகளைப் பெற்று முதலிடம்
மேலும் 18 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி
கனடா கலாசார மன்ற நிரந்தர வைப்பு செயற்திட்டத்திற்கும் அதிபர்கள் பாராட்டு

கடந்த வாரம் வெளியான புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் படி தீவக வலயத்தில் காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை மாணவி பரமேஸ்வரன் துவாகரா 181 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 30 வீத மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளைத் தாண்டி சித்திபெற்று தீவக வலயப் பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் வெட்டுப் புள்ளியைத் தாண்டி கூடிய வீதமான பிள்ளைகள் சித்தியடைந்த பாடசாலையாக பதிவாகியுள்ளது.

இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றி வெட்டுப் புள்ளிகளைத் தாண்டி சித்தியடைந்த ஆறு மாணவர்களின் விபரம் வருமாறு

பரமேஸ்வரன் துவாரகா (181 புள்ளிகள்)
கம்சன் அபிசாலி (172 புள்ளிகள்)
சரவணபவன் அபிசாயினி (170 புள்ளிகள்)
சிவராசா ரஜீபன் (170 புள்ளிகள்)
திருநீலகண்டசிவம் றஜீவன் (169 புள்ளிகள்)
பூபாலசிங்கம் கபிலன் (157 புள்ளிகள்)

இருபது வருடங்களுக்குப் பின்னர் கடந்த ஜந்தாண்டுகளுக்கு முன்னர் பெற்றோர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களினால் மீள ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தரம் ஒன்றுடன் மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக ஏனைய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு முதற் தடவையாக கடந்த ஆண்டு இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் சித்தியடைந்ததுடன் இவ்வாண்டு ஆறு மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர்.
அத்துடன் இப்பாடசாலை மாணவர்கள் தமிழ்த்தின மற்றும் ஆங்கிலப் போட்டிகளில் தீவக வலயத்தில் அதி கூடிய இடங்களைப் பெறுவதுடன் மாகாண மற்றும் தேசிய ரீதியிலும் பரிசில்களைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப் பாடசாலை மீள ஆரம்பிப்பதற்கு ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கே.சதாசிவம்,அன்று வடமாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ப.விக்னேஸ்வரன்,அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் உறுதுணையாக இருந்தமை குறிப்பிடத்தக்கதுடன் பாடசாலை சமூகம் இவர்களுக்கான நன்றியினை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

 

தெடர்ந்து மேலும் காரைநகர் கோட்டத்தில் சித்தியடைந்த 12 மாணவர்களின் விபரம் வருமாறு.

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லுரி கனிஸ்ட பிரிவில் சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு-

அருமைநாயகம் நேத்ரா (169 புள்ளிகள்)
யோகேஸ்வரன் கலையரசன் (167 புள்ளிகள்)
ராதாகிருஸ்ணன் கீர்த்திகன் (164 புள்ளிகள்)
கிருபானந்தன் டனுசா (162 புள்ளிகள்)
சிவபாலன் கிருத்திகா (160 புள்ளிகள்)
அருள்ராஐh கிறிஸ்ணவி (160 புள்ளிகள்)
பிரபாகரன் தனுசினி (159 புள்ளிகள்)
சிதம்பரநாதன் லக்சனா (157 புள்ளிகள்)

 

 

காரைநகர் ஊரி அ.மி.த.க பாடசாலையில் சித்தியடைந்த மாணவர்களின் விபரம்
மணியழகன் சஜீவன் (167 புள்ளிகள்)
நிசாந்தன் கோபிஷன் (164 புள்ளிகள்)

 

 

சுப்பிரமணிய வித்தியாலயம் மாணவன் எஸ்.பிரசன்னா 169 புள்ளிகள்

 

 

காரைநகர் மெய்கண்டான் வித்தியாலய மாணவன் சண்முகராசா பவித்திரன் 172 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

 

 

மேற்படி புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும் என்ற நோக்குடனும் ஆரம்பப் பாடசாலைகளின் கற்பித்தல் தரத்தினை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கனடா காரை கலாசார மன்றத்தினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் வைப்பிடப்பட்ட நிரந்தர வைப்பு நிதியின் வட்டிப்பணத்தில் குறிப்பிட்ட ஒரு தொகைப் பணம் புலமைப் பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்களை நடாத்துவதற்கும் பயிற்சி வினாத்தாள்களைப் பெற்று மாணவர்கள் பயிற்சியினை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தியதாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து வருடா வருடம் இந்தச் செயற்றிட்டத்தினை முன்னெடுத்து மாணவர்களின் கல்வித்தரத்தினை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிபர்கள் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை, ஊரி அ.மி.த.க பாடசாலை, யாழ்ற்ரன் கல்லுரி மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்கள் கனடா காரை கலாசார மன்றத்தின் போற்றுதற்குரிய நிரந்தர வைப்புத் திட்டத்திற்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தீவகக் கல்வி வலயம்,வேலணை. காரைநகர் கோட்ட தரம் 5 புள்ளிப் பகுப்பாய்வு – 2010,2011,2012,2013,2014,2015,2016

 

GR 5

 

 

காரைநகர் பாடசாலைகளின் மாணவர்கள் விபரம் 2016

 

D.s education

 

வெகு விமரிசையாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா

வெகு விமரிசையாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா

2017 ஆம் ஆண்டிற்கான யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா 2017.10.15 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.பிரதம விருந்தினராக இலங்கை மத்திய கல்வி அமைச்சின் செயற்றிட்டப் பணிப்பாளர் YARLTONIAN க.பத்மநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கொழும்பு Quency Distributers உரிமையாளர் YARLTONIAN சு.கணநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக காரைநகர் செல்லப்பா ஸ்ரோஸ் நிறுவன உரிமையாளர் YARLTONIAN வே. சிற்சபேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக காரைநகர் இ.போ.ச வின் ஓய்வு நிலை முகாரி YARLTONIAN தி.ஏகாம்பரநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

முதலில் விருந்தினர் கல்லூரியின் மாணவத்தலைவரகள்; அணி ,பான்ட் இசைக்குழு, தமிழ்ப்பாரம்பரிய இசை,நடன குழு ஆகியவற்றுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட காட்சி பார்வையாளர்களை பரவசமூட்டியது.

தேசியக்கொடி, கல்லூரிக்கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. அதிபர் தனது பரிசுத்தின அறிக்கையில்

1. கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த உ.த வர்த்தகப் பிரிவில் 3 பாடங்களில் A சித்திகளைப் மாணவி சுப்பிரமணியம் மனோகரி பெற்றமை

2. மாணவி.அ.சசிகலா க.பொ.த உ.த பிரிவில் கைத்தொழில் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்திற்கு (IIT) ஊவாவெலச பல்கலைக்கழக அனுமதி பெற்றமை

3. 2017 ஆம் ஆண்டு தீவகக் கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்களாக 8 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமை அவர்களைக் கற்பித்த ஆசிரியர் திரு.மு.சுகந்தன் அவர்களின் சாதனைகள் ஆகியவை மகுடம் வைத்தமை போன்று காணப்படுகின்றது எனக்குறிப்பிட்டார்.

மேலும் அதிபர் தான் 08.12.2017 அன்று ஓய்வு பெற இருப்பதைத் தெரிவித்து தனது சேவைக்காலத்தில் மாணவர்களின் வெற்றிகள்,பௌதீகவள முன்னேற்றங்கள் என்பவற்றை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டினார்.

அதிபர் மேலும் அறிக்கையில் பிரதம விருந்தினர் க.பத்மநாதன் (YARLTONIAN) அவர்களின் வருகை கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்பதாகவும் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர் சு.கணநாதன் (YARLTONIAN) அவர்கள் கல்லூரியின் பௌதீக வள வளர்ச்சிக்கு தனக்கு பெரிதும் பங்காற்றி செயற்பட்டமையையும் தெளிவு படுத்தினார்.

கௌரவ விருந்தினர் வே.சிற்சபேசன் (YARLTONIAN) தனது சேவைக்காலத்தில் கல்லூரி முன்னேற்றம் அபிவிருத்தி என்பவற்றில் காட்டிய அக்கறையினை கோடிட்டுக் காட்டினார்.கௌரவ விருந்தினர் தி.ஏகாம்பரநாதன் (YARLTONIAN) அவர்களின் உறவினர்கள் பரிசுத்தினத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பினையும் பாராட்டிப்பேசினார்.

மேற்படி விருந்தினர்கள் கல்லூரிக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்து நினைவுப் பட்டயம் வழங்கி கௌரவப் படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து அதிபர் தனது உரையில் கல்லூரியின் பரிசுத்தின அனுசரணையாளர் (திருமதி) வைத்தியகலாநிதி ஸ்ரீதாரணி விமலன் குடுபம்பத்தினர் (கனடா) 13 ஆண்டு காலமாக பரிசுத்தினத்திற்கு அனுசரணையாளராக இருந்து அவரது பேரனார் திரு.வை காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக செய்து வரும் இப்பரிசளிப்பு விழாக் கைங்கரியத்திற்கு அதிபர் தனது பாராட்டுக்களையும் மனம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்தார்.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் பரிசளிப்பு விழா இனிதே நிறைவேறியது.

இத்துடன் கல்லூரி அதிபரின் 2016ஆம் ஆண்டிற்கான பரிசுத்தின அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

 

 

கல்லூரி அதிபரின் 2016ஆம் ஆண்டிற்கான பரிசுத்தின அறிக்கை

யாழ்ற்ரன் கல்லூரி பரிசளிப்பு விழா 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது!

புலமைப்பரீட்சை பெறுபேறுகளில் தீவக வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்

புலமைப்பரீட்சை பெறுபேறுகளில்
தீவக வலயத்தில்
யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியில் 8 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். தீவகக் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகூடிய எண்ணிக்கை மாணவர் சித்தி அடைந்த பாடசாலையாக யாழ்ற்ரன் கல்லூரி திகழ்கின்றது. இம் மாணவர்களையும், இம் மாணவருக்கு கற்பித்த ஆசிரியர் திரு. முருகையா சுகந்தன், மற்றும் ஆரம்பப்பிரிவுத் தலைவர் திருமதி கலைவாணி அருள்மாறன் ஆகியோரையும் கல்லூரி அதிபர் திரு வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகின்றார்.

சித்தியடைந்த மாணவர் பெயர்                                            புள்ளிகள்

1. அருமைநாயகம் நேத்ரா                                                                                        169

2. யோகேஸ்வரன் கலையரசன்                                                                               167

3. ராதாகிருஸ்ணன் கீர்த்திகன்                                                                                164

4. கிருபானந்தன் டனுஷா                                                                                          162

5. சிவபாலன் கிருத்திகா                                                                                            160

6. அருள்ராஜா கிறிஸ்ணவி                                                                                        160

7. பிரபாகரன் தனுசினி                                                                                               159

8 .சிதம்பரநாதன் லக்ஷனா                                                                                         157

 

ஜக்கிய அரபு இராச்சிய இலங்கைக்கான தூதரகத்தின் அனுசரனையுடன் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 1,613 மாணவர்களுக்கு இன்று சனிக்கிழமை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.


ஜக்கிய அரபு இராச்சிய இலங்கைக்கான தூதரகத்தின் அனுசரனையுடன் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 1,613 மாணவர்களுக்கு இன்று சனிக்கிழமை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் கமீத் ஏ.கே. அல்முலா  கலந்துகொண்டு மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களை வழங்கினார்.

தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுந்தரசிவம்,காரைநகர் பிரதேச செயலர் இ.தயாரூபன் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி மற்றும் பாடசாலை அதிபர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தரம் 1 தொடக்கம் தரம் 10 வரை கல்வி பயிலும் 1613 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர்.

2

1 3 4 5

 

ஐக்கிய அரபு இராச்சிய தூதுவராலயத்தினால் காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெறுகின்றது

ஐக்கிய அரபு இராச்சிய தூதுவராலயத்தினால் காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெறுகின்றது

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் பணிமனையினால் காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபாகார்த் மண்டபத்தில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று சனிக்கிழமை பி.ப 1:00 மணிக்கு நடைபெற உள்ளது. 

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் அப்துல்ஹமீட் A.K. அல்முலா அவர்கள் கலந்து சிறப்பிக்க இருக்கின்றார். 

காரைநகர் பிரதேச செயலக அலுவலர்கள், தீவக வலயக் கல்விப்பணிமனை அலுவலர்கள், காரைநகர் கோட்டக்கல்விப் பணிமனை அலுவலர்கள், ஒய்வுநிலை அதிபர், பாடசாலை அதிபர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

முழுமையான நிகழ்ச்சி நிரலைக் கீழே காணலாம்.

UAE event Agenda

மாகாண மட்ட ஆங்கில தினப்போட்டிகளில் யாழ்ற்ரன் கல்லூரி மூன்றாமிடம்

மாகாண மட்ட ஆங்கில தினப்போட்டிகளில் யாழ்ற்ரன் கல்லூரி மூன்றாமிடம்

கல்வி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற ஆங்கில தினப்போட்டிகளில் தரம் 03 இல் கல்வி கற்கும் மாணவி தேவராசா தர்மினி ஆங்கில மொழியிலான உறுப்பெழுத்துப் போட்டியில் மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவியையும் இவரை நெறிப்படுத்திய ஆரம்பப்பிரிவு முதல்வர் திருமதி கலைவாணி அருள்மாறன் அவர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகின்றார்.

english day provincial level 3rd tharmini0001

கல்லூரி அதிபர், ஆரம்பப்பிரிவுத் தலைவருடன் மாணவி தர்மினி

2016 ஆம் ஆண்டு க.பொ.தஉயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா

2016 ஆம் ஆண்டு க.பொ.தஉயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா

அமரர்கள் திரு.திருமதி.கனகலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ்ற்ரன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த (உ/த) 3 பாடங்களிலும் A சித்திபெற்ற மாணவிக்கும், மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா 2017-07-07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு ஆரம்பமாகி கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

பிரதம விருந்தினராக திரு.S.செல்வராசா (உதவிக் கல்விப்பணிப்பாளர் (தமிழ்), தீவகக் கல்விவலயம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.N.விஜயகுமார் (விரிவுரையாளர், தேசியகல்வியியல் கல்லூரி. யாழ்ப்பாணம்) அவர்களும், திரு.S.சதாசிவம் (ஓய்வுநிலை கடதாசிக் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு.E.ஞானேஸ்வரன்; (ஆசிரியர்,அருணோதயகல்லூரி,அளவெட்டி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விருந்தினர்கள் கல்லூரியின் "பான்ட்"குழுவினரால் அழைத்துவரப்பட்டு விழா ஆரம்பமாகியது. விழாவில் 3A சித்திகள் பெற்ற மாணவி செல்வி. மனோகரி சுப்பிரமணியம் அவர்களுக்குத் தங்கப்பதக்கம் அணிவித்து, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்றமாணவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு குறித்தமாணவர்கள் பெற்றோர்களுடன் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இம்மாணவர்கட்கு கற்பித்த சகல ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதிபர் தனது உரையில் மாணவர் கௌரவிப்பு அனுசரணையாளராக இருந்த அமரர்கள் (பாணந்துறை) முருகேசு கனகலிங்கம் மற்றும் திருமதி பத்மாவதி கனகலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது பிள்ளைகளுக்கு தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

கல்லூரி மாணவி செல்வி மனோகரி சுப்பிரமணியம் கல்லூரி அதிபருக்கும் கற்பித்த ஆசிரியர்கட்கும் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார். மற்றும் கைத்தொழில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்துறைக்கு அனுமதி பெற்ற செல்வி சசிகலா அம்பலவாணர் அவர்களும் அதிபருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார்.

DSC_9121 DSC_9122 DSC_9126 DSC_9128 DSC_9131 DSC_9132 DSC_9133 DSC_9137 DSC_9140 DSC_9141 DSC_9143 DSC_9144 DSC_9145 DSC_9146 DSC_9147 DSC_9148 DSC_9149 DSC_9150 DSC_9153 DSC_9155 DSC_9158 DSC_9160 DSC_9162 DSC_9166 DSC_9168 DSC_9169 DSC_9170 DSC_9173 DSC_9174 DSC_9176 DSC_9177 DSC_9178 DSC_9181 DSC_9182 DSC_9183 DSC_9184 DSC_9185 DSC_9186 DSC_9187 DSC_9188 DSC_9191 DSC_9193 DSC_9197 DSC_9199 DSC_9200 DSC_9202 DSC_9205 DSC_9208 DSC_9210 DSC_9213 DSC_9215 DSC_9218 DSC_9222 DSC_9225 DSC_9227 DSC_9229 DSC_9231 DSC_9234 DSC_9235 DSC_9237 DSC_9238 DSC_9240 DSC_9241 DSC_9242 DSC_9245

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா

 

யா/யாழ்ற்ரன் கல்லூரி –காரைநகர்

2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3

பாடங்களில் Aதரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான

கௌரவிப்பு விழா

 

காலம் :- 07.07.2017  வெள்ளிக்கிழமை

இடம் :-கல்லூரி பிரார்த்தனைமண்டபம்

நேரம் :-மு.ப 8.00 மணி

 

தலைவர்

திரு.வே.முருகமூர்த்திஅவர்கள்

(கல்லூரி முதல்வர்)

 

பிரதமவிருந்தினர்

திரு.S.செல்வராசாஅவர்கள் 

(உதவிக்கல்விப்பணிப்பாளர்(தமிழ்),தீவகக்கல்விவலயம்

 

சிறப்புவிருந்தினர்

திரு.N.விஜயகுமார் அவர்கள்

(விரிவுரையாளர்,தேசியகல்வியியல் கல்லாரி. யாழ்ப்பாணம்)

திரு.S.சதாசிவம் அவர்கள்

(ஓய்வுநிலைகடதாசிக் கூட்டுத்தாபனஉத்தியோகத்தர்)

 

கௌரவவிருந்தினர்

திரு.E.ஞானேஸ்வரன்; அவர்கள்

(ஆசிரியர்,அருணோதயகல்லூரி,அளவெட்டி)

 

அனுசரணை

அமரர்கள் (பாணந்துறை) முருகேசுகனகலிங்கம் மற்றும்

திருமதிபத்மாவதிகனகலிங்கம் ஞாபகார்த்தமாகஅவரதுபிள்ளைகள்

 

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

அதிபர்,ஆசிரியர்கள்;,மாணவர்கள்,கல்விசாராஊழியர்கள்

யாழ்ற்ரன் கல்லூரி

காரைநகர்

 

 

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2017

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2017

 

எமது கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 04.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

 

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் பழைய மாணவனும், வாழ்நாள் பேராசிரியருமான திரு வே. தர்மரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுநிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு ப. விக்கினேஸ்வரன் அவர்களும், நிறுவுனர் தின உரையை நிகழ்த்துவதற்காக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும், ஓய்வு நிலை வேலணைக் கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். 

மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.

கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி. விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட "மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்" இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அனுசரணை வழங்கப்பட்டதுடன் மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்பு விருதுகளாக 

1. தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான பொதுத் தகைமைத் தேர்ச்சிக்கான விருதுகள் 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

2. ஆங்கிலத்துறை சார் தேர்ச்சி விருது

3. மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான விருதுகள்

4. 2016ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்

5. 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்

6. 2016ம் ஆண்டில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள் 

7. 2015ம் ஆண்டின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள் என்பன வழங்கப்பட்டது.

 

ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 4 உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு : 

1. அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.

திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய கணவர் அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு பெற்ற 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

2. அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு

திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களால் அவரின் அன்புக்குரிய தாயார் அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் திறமைத் தேர்ச்சி பெற்ற செல்வன் ப. மகீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

3. அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபகார்த்தப் பரிசுகள் 

திரு மாணிக்கம் கனகசபாபதி அவர்களால் தமது அன்புக்குரிய பெரிய தந்தை அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டின் 

• சிறந்த மெய்வல்லுன வீரனுக்கான விருது செல்வன் ப. பிரசாந் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

• சிறந்த மெய்வல்லுன வீராங்கனைக்கான விருது பின்வரும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

 செல்வி கே.  லாவண்யா

 செல்வி ந. ஜஸ்மினா

 செல்வி கி. சுதர்சனா 

• 2016ம் ஆண்டு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி 3ம், 4ம் இடங்களைப் பெற்ற மாணவன் செல்வன் சி. கோகுலனுக்கு வழங்கப்பட்டது. 

 

4. அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு

திரு கனக சிவகுமாரன் அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் இ. பவானந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் சிறப்பு விருதாக அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் அவர்களது ஞாபகார்த்தமாக அவர்களது புதல்வர்களால் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் "A"  தரப் பெறுபேறு பெற்று தொடர்ந்தும் இக் கல்லூரியில் கல்வி பயிலும் 3 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பு விருதாக எமது பாடசாலையில் 40 ஆண்டுகள் பணியாற்றிய அமரர் R. கந்தையா மாஸ்ரர் அவர்களது ஞாபகார்த்தமாக திரு கந்தையா சிவகுமாரன் அவர்களால் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது திரு தெட்சணாமூர்த்தி  லிங்கேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளான ஆங்கிலப்பாடல், குழு இசை, தனி நடனம், நாட்டிய நாடகம் – தசாவதாரம் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வானது பரிசளிப்பு விழாக் குழுவின் செயலாளர் திரு தெ.லிங்கேஸ்வரன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.

 

                            விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.  

1 6 copy 7 copy 9 copy 10 copy 11 copy 13 copy 15 copy 18 copy DSC_8700 DSC_8715 DSC_8719 DSC_8720 DSC_8723 DSC_8724 DSC_8728 DSC_8730 DSC_8735 DSC_8736 DSC_8737 DSC_8738 DSC_8739 DSC_8740 DSC_8741 DSC_8742 DSC_8743 DSC_8744 DSC_8745 DSC_8746 DSC_8747 DSC_8748 DSC_8752 DSC_8755 DSC_8756 DSC_8757 DSC_8758 DSC_8760 DSC_8761 DSC_8762 DSC_8764 DSC_8765 DSC_8768 DSC_8769 DSC_8770 DSC_8772 DSC_8773 DSC_8775 DSC_8778 DSC_8780 DSC_8782 DSC_8784 DSC_8785 DSC_8786 DSC_8787 DSC_8788 DSC_8789 DSC_8790 DSC_8791 DSC_8792 DSC_8793 DSC_8794 DSC_8796 DSC_8797 DSC_8798 DSC_8799 DSC_8800 DSC_8801 DSC_8802 DSC_8803 DSC_8804 DSC_8805 DSC_8807 DSC_8808 DSC_8809 DSC_8810 DSC_8811 DSC_8812 DSC_8813 DSC_8814 DSC_8815 DSC_8816 DSC_8817 DSC_8818 DSC_8819 DSC_8820 DSC_8821 DSC_8822 DSC_8823 DSC_8824 DSC_8825 DSC_8826 DSC_8827 DSC_8829 DSC_8830 DSC_8831 DSC_8832 DSC_8833 DSC_8834 DSC_8835 DSC_8836 DSC_8837 DSC_8838 DSC_8839 DSC_8840 DSC_8841 DSC_8842 DSC_8843 DSC_8844 DSC_8845 DSC_8846 DSC_8847 DSC_8848 DSC_8849 DSC_8850 DSC_8851 DSC_8852 DSC_8853 DSC_8854 DSC_8855 DSC_8856 DSC_8857 DSC_8858 DSC_8859 DSC_8860 DSC_8861 DSC_8862 DSC_8863 DSC_8864 DSC_8865 DSC_8866 DSC_8867 DSC_8868 DSC_8869 DSC_8870 DSC_8871 DSC_8872 DSC_8873 DSC_8874 DSC_8875 DSC_8876 DSC_8877 DSC_8878 DSC_8879 DSC_8880 DSC_8881 DSC_8882 DSC_8883 DSC_8884 DSC_8885 DSC_8886 DSC_8887 DSC_8888 DSC_8890 DSC_8891 DSC_8910 DSC_8911 DSC_8912 DSC_8913 DSC_8914 DSC_8915 DSC_8916 DSC_8917 DSC_8918 DSC_8919 DSC_8920 DSC_8921 DSC_8922 DSC_8923 DSC_8924 DSC_8925 DSC_8926 DSC_8927 DSC_8928 DSC_8929 DSC_8930 DSC_8931 DSC_8932 DSC_8933 DSC_8934 DSC_8935 DSC_8936 DSC_8937 DSC_8938 DSC_8939 DSC_8940 DSC_8941 DSC_8942 DSC_8943 DSC_8944 DSC_8945 DSC_8946 DSC_8947 DSC_8948 DSC_8949 DSC_8950 DSC_8951 DSC_8952 DSC_8953 DSC_8954 DSC_8955 DSC_8956 DSC_8958 DSC_8959 DSC_8960 DSC_8966 DSC_8967 DSC_8969 DSC_8970 DSC_8972 DSC_8974 DSC_8975 DSC_8979 DSC_8980 DSC_8981 DSC_8982 DSC_8983 DSC_8984 DSC_8985 DSC_8986 DSC_8987 DSC_8988 DSC_8990 DSC_8991 DSC_8992 DSC_8993 DSC_8994 DSC_8996 DSC_8997 DSC_8998 DSC_8999 DSC_9001 DSC_9002 DSC_9003 DSC_9004 DSC_9005 DSC_9006 DSC_9007 DSC_9008 DSC_9009 DSC_9010 DSC_9011 DSC_9012 DSC_9013 DSC_9016

 

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை கட்டட திறப்புவிழா காணொளி!

காரைநகர் யாழ்ற்ரன் கனிஷ்ட வித்தியாலயம் புதிய கட்டட திறப்புவிழா காணொளி!

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை புதிய கட்டட திறப்புவிழா காணொளி!

காரைநகரில் 03 ஆரம்பப் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் திறப்புவிழா நேற்று கோலாகலமாக இடம்பெற்றது.

காரைநகரில் 03 ஆரம்பப் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் திறப்புவிழா நேற்று கோலாகலமாக இடம்பெற்றது.

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

காரைநகரில் ஆரம்பப் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் திறப்புவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் காலை 8.00 மணியளவில் அதிபர் திருமதி அ.கௌரியாம்பாள் தலைமையிலும் காரைநகர் யாழ்ற்ரன் கனிஷ்ட வித்தியாலயத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் காலை 9.00 மணியளவிலும் இரு மாடிக் கட்டடங்களின் திறப்பு விழா இடம்பெற்றது.

 திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் புதிய கட்டடங்களைத்  நாடா வெட்டித் திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தியும் கௌரவ விருந்தினராக தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ம.நீரஜாவும் கலந்துகொண்டனர்.

அத்துடன் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலையில் கடந்த வருடம் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடமும் நேற்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில்  அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய அரசின் நிதி உதவியுடன் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால்சுப்பிரமணியவித்தியாசாலையிலும்,யாழ்ற்ரன் கனிஷ்ட வித்தியாலயத்திலும் தலா 8..5 மில்லியன் ரூபா செலவில் இரு மாடிக்கட்டடங்கள் அமைக்கப்பட்டதுடன்  வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலையில் கடந்த வருடம் 6 மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை

DSC_8106 DSC_8111 DSC_8112 DSC_8113 DSC_8114 DSC_8115 DSC_8116 DSC_8118 DSC_8122 DSC_8123 DSC_8130 DSC_8131 DSC_8136 DSC_8145 DSC_8159 DSC_8163 DSC_8170 DSC_8171 DSC_8172 DSC_8173 DSC_8178 DSC_8195 DSC_8198 DSC_8200

 

 

 

காரைநகர் யாழ்ற்ரன் கனிஷ்ட வித்தியாலயம்

DSC_8205 DSC_8208 DSC_8209 DSC_8210 DSC_8226 DSC_8228 DSC_8229 DSC_8230 DSC_8235 DSC_8237 DSC_8240 DSC_8241 DSC_8242 DSC_8244 DSC_8259 DSC_8261 DSC_8262 DSC_8263 DSC_8270 DSC_8272 DSC_8273 DSC_8276 DSC_8303 DSC_8304 DSC_8305 DSC_8306 DSC_8307 DSC_8308 DSC_8309 DSC_8310 DSC_8311 DSC_8312 DSC_8313 DSC_8314

 

 

 

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை

DSC_8323 DSC_8324 DSC_8325 DSC_8327 DSC_8328 DSC_8337 DSC_8347 DSC_8348 DSC_8351 DSC_8354 DSC_8395 DSC_8401 DSC_8402 DSC_8416

யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்பப்பிரிவு புதிய கட்டடத்திறப்பு விழா 27.06.2017 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது

IMG

யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சா.தர பரீட்சையின் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கான அமரர் (தலைப்பா) கணபதிப்பிள்ளை ஞாபகார்த்த கௌரவிப்பு விழா

யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சா.தர பரீட்சையின் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கான அமரர் (தலைப்பா) கணபதிப்பிள்ளை ஞாபகார்த்த கௌரவிப்பு விழா

யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சா.தர பரீட்சையில் 5A யும் அதிலும் கூடிய A சித்தியைப் பெற்ற மாணவர்களுக்கு (8 மாணவர்கள்) நினைவுச் சின்னம் வழங்கி (Memento) கௌரவிக்கப்பட்டன.  மேலும் க.பொ.த உயர்தர வகுப்புக்கு தகமை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவின் பிரதம விருந்தினராக  Colombo Quency Distributors உரிமையாளர் திரு.S. கணநாதன் (Yarltonion) அவர்களும் சிறப்பு விருந்தினராக சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய ஆசிரியர் திருமதி க. லிங்கேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக வியாவில் ஐயனார் தேவஸ்தான ஆதீன கர்த்தா திரு.க.சோமசேகரம் (Yarltonion) அவர்களும்  கலந்து சிறப்பித்தனர்.

     இந்நிகழ்ச்சிக்கான அனுசரணையை Colombo Quency Distributors உரிமையாளர் திரு.எஸ். கணநாதன் (Yarltonion) அவர்கள் வழங்கியிருந்தார்

    அதிபர் தனது உரையில் இந்நிகழ்ச்சிகளுக்கு அனுசரணையை வழங்கியிருந்த அமரர் தலைப்பா கணபதிப்பிள்ளை அவர்களின் பேரனும் Colombo Quency Distributors உரிமையாளருமான திரு.எஸ். கணநாதன் (Yarltonion) அவர்களுக்கு தனது இதயங் கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும் திரு கணநாதன் அவர்கள் யாழ்ற்ழன் கல்லூரிக்கு செய்த அளப்பரிய சேவைகளை கோடிட்டுக் காட்டி நன்றியுடன் நினைவு கூர்ந்தார். 

20170621_081025 20170621_081105 20170621_081215 20170621_081232 20170621_081249 20170621_081300 20170621_081417 20170621_081434 20170621_081455 20170621_081725 20170621_081937 20170621_082618 20170621_084318 20170621_085601 20170621_090608 20170621_092220 20170621_092225 20170621_092241 20170621_092317 20170621_092403 20170621_092413 20170621_092425 20170621_092513 20170621_092525 20170621_092542 20170621_092613 20170621_092627 20170621_092641 20170621_092743 20170621_092754 20170621_092810 20170621_092842 20170621_092851 20170621_092908 20170621_093002 20170621_093012 20170621_093036 20170621_093146 20170621_093154 20170621_093211 20170621_093627 20170621_093644 - Copy 20170621_093644 20170621_093828 - Copy 20170621_093839 - Copy 20170621_094041 - Copy 20170621_094109 20170621_094222 20170621_094235 20170621_094322 - Copy 20170621_094328 20170621_094435 - Copy 20170621_094442 - Copy 20170621_094622 20170621_094639 - Copy 20170621_094729 - Copy 20170621_094759 20170621_094941 20170621_095029 20170621_095046 20170621_095306 20170621_095408 20170621_095417 20170621_095550 20170621_095612 20170621_095623 20170621_095638 20170621_095655 20170621_095720 20170621_095735 20170621_095746 20170621_095757 20170621_095817 - Copy 20170621_095817 20170621_095838 - Copy 20170621_095838 20170621_095904 20170621_095928 20170621_095940 20170621_100004 20170621_100021 20170621_100036 20170621_100053 20170621_100117 20170621_100137 20170621_101142 20170621_101339

 

 

 

யாழ்ற்ரன் கல்லூரியின் பல்கலைக்கழக மாணவர் அனுமதி

யாழ்ற்ரன் கல்லூரியின் பல்கலைக்கழக மாணவர் அனுமதி

web news university0001

web news university0002

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

செல்வி. மனோகரி சுப்பிரமணியம்                     செல்வி.கருணிதா யோகராசா

 

சென்ற ஒகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உ.த பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியில் வரலாற்றில் முதல் தடவையாக வர்த்தகப் பிரிவில் மூன்று பாடங்களிலும் A சித்தியைப் பெற்றுக்கொண்ட மாணவி செல்வி.மனோகரி சுப்பிரமணியம் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வணிக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 2A 1B சித்திகளைப் பெற்றுக்கொண்ட மாணவி செல்வி.கருணிதா யோகராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மேலும் பௌதீக விஞ்ஞானப் பிரிவிற்கு ஒரு மாணவர் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது .(Waiting list)

இளைப்பாறிய யாழ்ற்ரன் கல்லூரி முதல்வர் அமரர் திரு.நா.வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகம் கண்ணீர் அஞ்சலி

Mr.N.Veluppilai 15.05.2017

கனடா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள ஆரம்பப் பாடசாலைகளுக்கான ஒரு மில்லியன் திட்டத்தினை ஆரம்பித்து இரு ஆண்டுகள் இன்று பூர்த்தியாவதனை முன்னிட்டு பாடசாலை அதிபர்கள் வழங்கிய பாராட்டுச் செய்திகள்.

கனடா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள ஆரம்பப் பாடசாலைகளுக்கான ஒரு மில்லியன் திட்டத்தினை ஆரம்பித்து இரு ஆண்டுகள் இன்று பூர்த்தியாவதனை முன்னிட்டு பாடசாலை அதிபர்கள் வழங்கிய பாராட்டுச் செய்திகள்.

கனடா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள ஆரம்பப் பாடசாலைகளுக்கான ஒரு மில்லியன் திட்டத்தினை ஆரம்பித்து இரு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பாடசாலை அதிபர்கள் கனடா காரை கலாசார மன்றத்திற்கும் கனடா வாழ் காரை உறவுகளுக்கும் தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

கனடா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள 12 ஆரம்பப் பாடசாலைகளுக்கும் 2015ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக காரைநகர் தேசிய சேமிப்பு வங்கியில் தலா பத்து இலட்சம்  ரூபாய்களை நிரந்தர வைப்பிலிட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டிப்பணத்தினை அந்தந்தப் பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்திச் சங்க நடைமுறைக் கணக்கில் வைப்பிலிடுவதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டிருந்தது.

அந்த வகையில் இன்று 5ம் திகதி இந்த செயற்திட்டத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியும் நான்காவது வட்டிப் பணமாக ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா 53,750 ரூபாவில்  அரச வரி தவிர்த்து  அந்தந்தப் பாடசாலைகளின் நடைமுறைக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு பாடசாலை அதிபர்களால் வாழ்த்துச் செய்திகள் மன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மன்றத்தின் சேவைக்கும் வலுச்சேர்த்துள்ளனர்.

கடந்த ஒரு சதாப்த காலத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 2016இல் அதி கூடிய மாணவர்கள் சித்திவீதத்தினை அடைவதற்கான குறிகாட்டியாக கனடா காரை கலாசார மன்றத்தின் ஒரு மில்லியன் ரூபா செயற்திட்டத்தினை கூறமுடியும் என யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்றைய சந்தர்ப்பத்தில் இத்திட்டத்திற்கு முன்னின்று உழைத்த மன்ற உறுப்பினர்களையும் கனடா வாழ் காரை மக்களையும் வாழ்த்துவதில் பேருவகை அடைகின்றேன். இந்த திட்டத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி மேலும் வலுவடையும் என்பதில் ஜயமில்லை எனவும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கு  தாங்கள் செயற்படுத்திய திட்டம் மிகவும் பயன் உள்ளதும் செயற்திறன் மிக்கதும் ஆகும். இத்திட்டமானது நீடித்து நிலைத்து மன்றத்தின் பெயரினால் பாடசாலைகளினை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் ஜயமில்லை.

மேலும் பாடசாலை அதிபர்களினால் கனடா காரை கலாசார மன்றத்திற்கு அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்திகளைப் பார்வையிட

Doc1 v v2

தீவகக் கல்வி வலயம்,வேலணை. காரைநகர் கோட்ட தரம் 5 புள்ளிப் பகுப்பாய்வு – 2010,2011,2012,2013,2014,2015,2016

GR 5

காரைநகர் பாடசாலைகளின் மாணவர்கள் விபரம் 2016

D.s education

அமரர் நல்லதம்பி ஆறுமுகம் அவர்களின் மறைவு குறித்து யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

Aarumugam Aiya

யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா

யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா 

 

யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிக்கும் நிகழ்வு 29-03-2017 புதன்கிழமை முற்பகல் 8 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் Yarltonian திரு.க.அம்பலவாணர் அவர்களும், சிறப்பு விருந்தினராக கொழும்பு QUENCY  DISTRIBUTERS உரிமையாளர் Yarltonian திரு.S.கணநாதன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் முன்னை நாள் ஆரம்பப்பிரிவு ஆசிரியர் திருமதி. த. அகிலன் அவர்களும், மற்றும் Yarltonian திரு. க. யோகேந்திரன்(கனடா) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும், புத்தகப்பரிசில்களும்  சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டப்பெற்றனர். மேலும் இந்நிகழ்வில் கல்லூரிக்காக 2 பரப்புக் காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன் அவர்கள் காணி உறுதியை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

 

அதிபர் தமது உரையில் கல்லூரிக்காக காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன்(கனடா) அவர்களுக்கு தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் இக்கௌரவிப்பு விழாவிற்கு நிதி அனுசரணையாளர்களாக வருடா வருடம் தங்கள் தந்தையார் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர், வாரிவளவு) ஞாபகார்த்தமாக செய்துவரும் அவரது பிள்ளைகளுக்கு (கனடா) அதிபர் தனது இதயபூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

 

இம்மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களை வழங்கிய கல்லூரியின் ஸ்தாபகர்களின் வழித்தோன்றலும் கொழும்பு QUENCY DISTRIBUTERS உரிமையாளருமான Yarltonian திரு.S. கணநாதன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினைத் தெரிவித்தார்.

20170329_080500 20170329_080600 20170329_081054 20170329_081150 20170329_081153 20170329_081157 20170329_081201 20170329_081204 20170329_081207 20170329_081237 20170329_081246 20170329_081304 20170329_081319 20170329_081330 20170329_081342 20170329_081357 20170329_081410 20170329_081425 20170329_081438 20170329_081458 20170329_081543 20170329_081607 20170329_081641 20170329_081846 20170329_081943 20170329_082207 20170329_084253 20170329_084750 20170329_085616 20170329_090342 20170329_090938 20170329_091055 20170329_091624 20170329_091701 20170329_091720 20170329_091828 20170329_091848 20170329_092003 20170329_092015 20170329_092214 20170329_092217 20170329_092324 20170329_092418 20170329_092440 20170329_092503 20170329_092619 20170329_092700 20170329_092711 20170329_092759 20170329_092807 20170329_092817 20170329_093104 20170329_093200 20170329_093230 20170329_093604 20170329_094257 20170329_094501 20170329_094513

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு க.பொ.த சா-த 2016 பரீட்சையில் கோட்ட மட்டத்தில் முதன்மைப் பெறுபேறு 8 A B !

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு க.பொ.த சா-த 2016 பரீட்சையில் கோட்ட மட்டத்தில் முதன்மைப் பெறுபேறு 8 A B !

கடந்த டிசம்பர் மாதம் 2016 இல் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன.

மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் மிகச் சிறந்த  8 A, 1 B  என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவி செல்வி கம்சிகா தேவராசா காரைநகர் கோட்டத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை கொண்டு விளங்குகிறார்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியெய்திய முதல் ஆறு மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள் பெற்றுக்கொண்ட தர விபரமும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

                                  மாணவர் பெயர்                                                            பெறுபேறு

1.    செல்வி கம்சிகா தேவராசா                                                                          8A B
2.    செல்வன் சரவணபவானந்தசர்மா பிரசன்னசர்மா                               8A
3.    செல்வன் சோமசுந்தரம் யசிந்தன்                                                              6A 2B S
4.    செல்வன் கோடீஸ்வரன் மிறோஜன்                                                           6A B C
5.    செல்வன் கனகலிங்கம் கமலரூபன்                                                           6A 2B
6.    செல்வி கிருத்திகா இராசலிங்கம்                                                               5A 2B C S

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

க.பொ.த. சா/த தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக யாழ்ற்ரன்கல்லூரி அதிபரின் கருத்து

YARLTON COLLEGE

க.பொ.த. சா/த தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக 
யாழ்ற்ரன்கல்லூரி அதிபரின் கருத்து:-

க.பொ.த சா/த 2016 ம் ஆண்டுக்கான பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளை யாழ்ற்ரன் கல்லூரி பெற்றது மட்டுமன்றி அயல் பாடசாலைகளும் சிறந்த பெறுபேறுகளை பெற்றமை காரைநகரில் கல்வி மட்டம் சிறந்த நிலையில் இருப்பதனை எடுத்துக் காட்டுகின்றது. க.பொ.த உ.த 2016 பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவி 3A சித்தியை பெற்றமை காரைநகர் கல்வி வளர்ச்சியில் அதுவும் ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

    1990 ற்கு முன்னர் காரைநகர்ப் பாடசாலைகளில் க.பொ.த. (சா.த) பரீட்சையில் 8 பாடங்களிலும் 7D,6D பெற்ற மாணவர் எண்ணிக்கை மிக சொற்பளவில் காணப்பட்டமை காரைநகரில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் அறிவர். ஆனால் இன்று தீவக கல்வி வலயத்தில் காரைநகர் கல்விக்கோட்டமே முதன்மையாக இருப்பது பற்றி தீவக வலய கல்வித்திணைக்களத்தினர் அடிக்கடி அதிபர் கூட்டங்களில் கூறிவருகின்றார்கள்.  இதற்கு காரணம் அதிபர் ஆசிரியர்களின் அர்ப்பணமான சேவை மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள காரை அபிவிருத்திச் சபையினர் பாடசாலைகளில் காட்டி வரும் அதீதமான அக்கறையுமென்பதும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. காரைநகர் பாடசாலைகளில் கற்றல் அடைவு மட்டம், பௌதீக வள மட்டம் என்பவற்றினை ஒன்றுக்கொன்று சமாந்தரமாக வளர்ப்பதற்கு வெளிநாடுகளிலுள்ள காரைநகர் அபிவிருத்திச் சபைகள் செய்து வரும் உதவிகள் காரைநகர்ப் பாடசாலைகள் தீவக வலயத்தில் முன்னிற்பதற்கு ஒர் உந்து சக்தி எனக் கருதுகின்றேன்.

    உதாரணமாக கனடா காரை கலாச்சார மன்றத்தினர் யாழ்ற்ரன் கல்லூரிக்கு கணனிகளை வழங்கி, கணனி ஆய்வு கூடத்தினை வளம் படுத்தியமையினால் (Computer Lap) எமது கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக   ICT(தகவல் தொடர்பாடல்தொழினுட்பம்) பாடத்திற்கு 100% சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கனடா காரை கலாச்சார மன்றத்தினர் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு நிதி உதவிகள் அளிக்கின்றமை, லண்டன் காரை அபிவிருத்திச் சங்கம் எமது கல்லூரி நூலகத்திற்கு புத்தக இறாக்கைகள் வழங்கி நூலகத்தை வளம்படுத்தியமை  சுவிஸ் காரை அபிவருத்திச்சங்கம் கல்லூரிக்கு போட்டோ கொப்பி மெசின் வழங்கியமை, அவுஸ்த்திரேலியா காரை அபிவிருத்திச்சங்கம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கியமை என்பவை வெளிநாடுகளிலுள்ள காரை அபிவிருத்திச்; சங்கங்கள் எமது கல்லூரரிக்கு செய்தமை குறிப்பிடத்தக்கனவாகும். இதைவிட ஒவ்வோர் வெளிநாட்டு காரை அபிவிருத்திச் சபையினர் இன்னும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்கள்.

எனவே தீவக வலயத்தில் காரைநகர் கல்விப் புலத்தின் முன்னேற்றத்திற்கு  காரை அபிவிருத்தியின் அமைப்புக்கள் ஆற்றி வருகின்ற இச் சேவைகள் தேசிய பரீட்சைகளில் எமது மாணவர்களின் அடைவு மட்ட வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிக் கொண்டிருக்கின்றன என்பதை மிகுந்த நன்றியுணர்வுடன் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். தங்கள் சேவைகள் மேலும் தொடர எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

       அதிபர்
வே.முருகமூர்த்தி

 

க.பொ.த (சா/த) – 2016 பெறுபேறுகளில் தீவக கல்வி வலய முதன்மைப் பெறுபேற்று பாடசாலைகளில் யாழ்ற்ரன் கல்லூரி

க.பொ.த (சா/த) – 2016 பெறுபேறுகளில் தீவக கல்வி வலய முதன்மைப் பெறுபேற்று பாடசாலைகளில் யாழ்ற்ரன் கல்லூரி

    2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரி  அதிகூடிய பெறுபேறான 8A  சித்தியை மாணவன் ஒருவன் பெற்றதன் மூலம் தீவக வலயத்தில் முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகவும் 5A சித்திகளையும் அதிலும் கூடுதலான சித்திகளையும் (வட மாகாண கல்வித்திணைக்களத்திற்கான சிறந்த பெறுபேற்று எதிர்பார்க்கை ) கூடுதலாக 8 மாணவர்கள் பெற்றமையும் 70 சதவீதமான மாணவர்கள் (48 பேர் தோற்றி 34 பேர் தகமை பெற்றனர்) கணிதம், தமிழ் பாடம் உட்பட எல்லாப் பாடங்களிலும் சித்தி பெற்று க.பொ.த உ/த படிப்பதற்கான பூரணமான தகமைகளைப் பெற்று காரைநகர்க் கல்விக் கோட்டத்தில் க.பொ.த (சா/த) சிறப்பு மிக்க பெறுபேற்றினைப் பெற்ற பாடசாலையாக யாழ்ற்றன் கல்லூரி திகழ்கின்றது. இப் பெறுபேறுகள் சென்ற ஆண்டை விட 12 சதவீதத்தினால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

5A சித்திகளையும் அதனிலும் கூடிய பெறுபேறுகளையும் பெற்ற மாணவர் விபரம்

YARLTON COLLEGE
                                      அதிபருடன் குறித்த மாணவர்கள்

1. லோகேஸ்வரன் குருபரன்        –     8A 1W
2. கோபிகா யோகேஸ்வரன்        –    7A, 1B, 1C
3. வேணுப்பிரியா தேவதாஸ்        –    7A,1B,1S
4. சிவப்பிரியா சிறிமகேஸ்வரலிங்கம்    –     6A,2B,1W
5. கீர்த்தனா செல்வரட்ணம்        –    6A,1B,1C,1W
6.செந்தில்நாதன் பிரசாந்தன்        –    6A,1C,2S
7. சற்குணராசா ஐவதாஸ்        –     6A,2C,1W
8.யாழினி பரமேஸ்வரன்        –    5A,1B,2C,1W

இம் மாணவர்களையும் ஏனைய தகமை பெற்ற மாணவர்களையும் இவர்களை கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகின்றார்.