யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா
யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிக்கும் நிகழ்வு 29-03-2017 புதன்கிழமை முற்பகல் 8 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் Yarltonian திரு.க.அம்பலவாணர் அவர்களும், சிறப்பு விருந்தினராக கொழும்பு QUENCY DISTRIBUTERS உரிமையாளர் Yarltonian திரு.S.கணநாதன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் முன்னை நாள் ஆரம்பப்பிரிவு ஆசிரியர் திருமதி. த. அகிலன் அவர்களும், மற்றும் Yarltonian திரு. க. யோகேந்திரன்(கனடா) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும், புத்தகப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டப்பெற்றனர். மேலும் இந்நிகழ்வில் கல்லூரிக்காக 2 பரப்புக் காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன் அவர்கள் காணி உறுதியை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
அதிபர் தமது உரையில் கல்லூரிக்காக காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன்(கனடா) அவர்களுக்கு தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் இக்கௌரவிப்பு விழாவிற்கு நிதி அனுசரணையாளர்களாக வருடா வருடம் தங்கள் தந்தையார் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர், வாரிவளவு) ஞாபகார்த்தமாக செய்துவரும் அவரது பிள்ளைகளுக்கு (கனடா) அதிபர் தனது இதயபூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இம்மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களை வழங்கிய கல்லூரியின் ஸ்தாபகர்களின் வழித்தோன்றலும் கொழும்பு QUENCY DISTRIBUTERS உரிமையாளருமான Yarltonian திரு.S. கணநாதன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினைத் தெரிவித்தார்.