ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2023” இன் பிரதம விருந்தினர் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் மன்றத்தின் முன்னைநாள் பொருளாளர் ஆகியோர் வரவேற்றனர்.

ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2023” இன் பிரதம விருந்தினர் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் மன்றத்தின் முன்னைநாள் பொருளாளர் ஆகியோர் வரவேற்றனர்.

காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக காரைநகர் மக்கள் ஒன்றிணைந்து எடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக 21 வது காரை வசந்தம் எதிர்வரும் சனிக்கிழமை (DEC 02, 2023) மாலை 5.00 மணிக்கு 1120,Tapscott Road, Unit 3 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தின் தமிழ்க் கலை அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இளையவர் முதல் பெரியோர் வரை கலந்து ஊர் நினைவுகளை மீட்டு, உறவு கொண்டாடி மகிழும் இனிமையானதொரு வசந்தமாக அன்றைய தினம் அமையவுள்ளது.

இந்நாளில் எம் காரை மண்ணின் நினைவாக கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து கனடா காரை நல்லுள்ளங்களையும் கேட்டுக் கொள்கின்றேம்.