Category: CKCA REPORT

கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாட்டு அறிக்கை. (Sept 24, 2022 –  April 27, 2024)

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

செயற்பாட்டு அறிக்கை

Sept 24, 2022 –  April 27, 2024

  • கனடா காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் 24.09.2022 அன்று முற்பகல் 10.00 மணிக்கு ஸ்காபுரோ Civic Centreஇல் மன்றத்தின் உப- தலைவரான திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
  • கனடா காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகசபை சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் அமையப் பெற்றது.
  • கனடா காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள் 2022ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதியும் 2023ம் ஆண்டு செப்டெம்பர்  17ம் திகதியும் நடாத்தப்பட்டன.
  • கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டு தோறும் பெருமையோடு வழங்கப்பட்டு வருகின்ற காரை வசந்தம் கலை விழா 2022ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதியும் 2023ம் ஆண்டு டிசம்பர் 02ம் திகதியும் இரு கலை விழாக்களும் தமிழிசைக் கலா மன்ற அரங்கில் நடைபெற்றது. 2022ம் ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற கலை விழாவில் தமிழ்மொழித் திறன் போட்டியின் ஓர் அங்கமாக நடாத்தப்பட்டிருந்த பேச்சுப்போட்டியில் பங்குபற்றி முதலாவது இடத்தினைப் பெற்ற சிறியோர் மற்றும் இளையோரின் பேச்சுக்கள் நிகழ்ச்சிகளின் இடையே இடம்பெற்றிருந்தன, அதேவேளையில் தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில் ஆறுபிரிவுகளிலும் முதலாம் இடத்தினைப்பெற்ற வெற்றியாளர்களிற்கு தங்கப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் இரண்டாம் மூன்றாம் இடத்தினைப் பெற்ற வெற்றியாளர்களிற்கும் பங்குபற்றிய போட்டியாளர்களிற்கும் அரங்கில் பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.காரை மண்ணின் சிறார்களும் இளையோரும் மூத்த கலைஞர்களும் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.

2023ம் ஆண்டு நடைபெற்ற கலை விழா காரைதீவு காரைநகராக பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டுச் சிறப்பு விழாவாக  நடைபெற்றதோடு காரைச் சிறார்களும் இளையோரும் தமது கலைப் படைப்புக்களினால் சபையோரை கட்டிப்போட்டிருந்த விழா அமையப்பெற்றதும். அத்தோடு காரை.மண்ணின் பெருமையினையும் மகிமையினையும் பிரபலிக்கின்ற இருபத்தைந்துக்கு மேற்பட்ட ஆக்கங்கள், வரலாற்றுத் தகவல்கள், மண்ணின் நினைவுகளை சுமந்து வருகின்ற புகைப்படங்கள் உள்ளிட்ட மண் சார்ந்த பல்வேறு விடயங்களைத் தாங்கிய கனதியான சிறப்பு மலராக காரைவசந்தம் மலர் வெளியிடப்பெற்றிருந்தது. தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின் வெற்றியாளர்களிற்கும் பங்குபற்றிய போட்டியாளர்களிற்கும் அரங்கில் பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.

  • கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) 2023ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதியும் அதே ஆண்டு டிசம்பர் 27ம் திகதியும் நடைபெற்றன. இரு திருவிழாக்களின் போது காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.
  • கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் பெருந்திரளான காரை உறவுகளின் பங்குபற்றுதலுடன் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 05ம் திகதி Morningside பூங்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகமான இளையோரின் ஈடுபாடு இருந்ததை அவதானிக்கமுடிந்தது. இது பாராட்டக்கூடிய மகிழச்சியான மாற்றமாகும். சுவிற்சலாந்து, லண்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் தாயகத்திலிருந்தும் வருகை தந்தவர்கள் இந்நிகழ்வில் காரை. மண்ணின் உணர்வோடும் ஆர்வத்தோடும் கலந்துகொண்டு ஊரின் நினைவுகளை மீட்டி மகிழ்ந்தனர். சிறுவர்களிற்கான விளையாட்டுக்களும் முதியோருக்கான மெதுநடைப் போட்டியும் இடம்பெற்றிருந்ததுடன் குழுநிலைப் போட்டிகளாக ஆண் பெண் அணிகளுக்கிடையேயான தாய்ச்சிப் போட்டியும் தாம்பிழுவைப் போரும் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்திருந்தன. 18 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணிக்கு எதிராக பெண்கள் அணிகள் தாம்பிழுவைப் போரில் பங்குகொண்டிருந்தன. இரு பிரிவுகளிலும் பெண்கள் அணி ஆண்கள் அணியை வெற்றி கொண்டு சாதனை படைத்திருந்தன. இவ்வணிகளுக்கு முறையே வாரிவளவு நல்லியக்கச் சபையின் முன்னாள் செயலாளர் அமரர் பத்மநாதன் (பட்டு மாமா) ஞாபகார்த்த வெற்றிக் கேடயமும் காரை விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் வீரர் அமரர் குலேந்திரன் ஞாபகார்த்த வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டன. வெற்றிபெற்றவர்களிற்கான பரிசில்கள் வழங்கப்பட்டது. போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துச் சிறார்களிற்கும் Tim Hortons Gift Card வழங்கப்பட்டு ஊக்குவிக்கிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • கனடா காரை கலாச்சார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி நடைபெற்றது. ஈராண்டுப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவினை தயார் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • இங்கு அமரத்துவமடைந்த காரைநகரைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகளில் மன்றம் கண்ணீர் அஞ்சலி படம்  வைத்து அஞ்சலி செலுத்துவது வழமைபோல் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றது.

 

கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட

திட்டங்களும் வழங்கப்பட்ட உதவிகளும்.  

(24.09.2022 தொடக்கம் 27.04.2024 வரை)

  1. யுத்தத்தின் போது தாய் தந்தையை இழந்த சிறுவன் நக்கீரனுக்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் உதவியுடன் மே/2010 தொடக்கம் கனடா காரை கலாச்சார மன்றத்தால் உதவிப் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. மாதாந்த உதவிப்பணம் ரூபா 5,000 இருந்து ஜுலை மாதம் /2023 தொடக்கம்  ரூபா 7,000 அதிகரிக்கப்பட்டு கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றன.
  2. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து அறிக்கைகள் மன்றத்திற்கு கிடைக்கப்பெற்று வருகின்றது.
  3. சிவன்கோயில் நித்திய பூசைக்காக கனடா காரை கலாச்சார மன்றத்தின் பெயரில் ஹட்டன் நஷனல் வங்கியில் வைப்பில் இடப்பட்டுள்ள 5 இலட்சம் ரூபாய்களில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி காரைநகர் அபிவிருத்தி சபையின் நடைமுறைக் கணக்கிற்கு வருடந்தோறும் நவம்பர் 28ம் திகதி வைப்பில் இடப்படுகின்றது. இத்தொகை கனடா காரை கலாச்சார மன்றத்தினரின் அறிவித்தலின் பிரகாரம நித்திய பூசைச் செலவிற்காக ஆலய நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  4. காரைநகர் அபிவிருத்திச் சபை நூலக உதவியாளர்களிற்கான மாதாந்த ஒருபகுதி கொடுப்பனவாக ரூபா 10,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  5. காரைநகர் மாணவர்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்திச் சபை நூலகத்திலுள்ள இரண்டு போட்டோப் பிரதி இயந்திரத்திற்கு தேவைப்பட்ட ரோனர் அக்டோபர் (2022) நவம்பர் (2022), ஜனவரி (2024) மாதங்களில் வாங்கி உதவப்பட்டது. ஆகஸ்ட் (2023) மாதம் சிறிய மற்றும் பெரிய போட்டோப் பிரதி இயந்திரங்கள் திருத்தம் செய்ய மன்றத்தால் நிதி வழங்கப்பட்டது. அத்துடன் ஆகஸ்ட்,செப்டெம்பர், அக்டோபர்,நவம்பர், டிசம்பர் (2023), பெப்ரவரி (2024), மார்ச் (2024), ஏப்ரல் (2024) மாதங்கள் மாணவர்கள் போட்டோப் பிரதிகள் எடுப்பதற்கான பேப்பர் வாங்கி கொடுக்கப்பட்டது.
  6. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்றும் 2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமையும் இடம்பெற்றது.
  7. ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலைக்கு அத்தியாவசிய நீர் பாவனைக்காக மோட்டார் இயந்திரம் வாங்கிக் கொடுக்கப்பட்டதுடன் மோட்டார் அறையும் (மார்ச் /2023) கனடா காரை கலாச்சார மன்றத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டது.
  8. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் கணித,விஞ்ஞான பாடத்திலான முன்னோடிப் பரீட்சை 2024ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடாத்தப்பட்டுள்ளது.
  9. க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
  10. ஒருத்தி 2 படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாச்சார மன்றம் 13.06.2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரதேச வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.செந்தூரன் அவர்களிடம் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட் டன. 2வது தொகுதி மருந்துப் பொருட்கள் ஆகஸ்ட் மாதம் பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1ம், 2ம் கட்டமாக ரூபா 415,600 பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
  11. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகரைச் சேர்ந்த பத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. ஐந்து மாணவர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் ரூபா 10,000 வீதமும் ஐந்து மாணவர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் ரூபா 7,500 வீதமும் மாதாந்த வழங்கப்பட்டு வருகின்றது. இதில் பத்து மாணவர்களில் மூன்று மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் படிப்பு நிறைவுபெற்றுள்ளபடியால் நிதி தேவையில்லை என மன்றத்திற்கு அறியத்தந்துள்ளனர். ஆகவே தற்போது ஏழு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் இரண்டு மாணவர்களிற்கு மன்ற உறுப்பினரின்  நிதி உதவியுடன் வழங்கப்பட்டு வருகின்றது.
  12. வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் கல்விக்கான உதவியாக க.பொ.த உயர்தர பரீட்சை முடியும் வரை ரூபா 5000, 2023ம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  13. காரைநகர் அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட “காரைநகர் “ நூற்றாண்டு விழாவிற்கு அனுசரணையாக கனடா காரை கலாச்சார மன்றம் ரூபா 200,000 வழங்கியது.
  14. வறிய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை முடியும் வரை தனியார் வகுப்புகளுக்கான நிதியுதவியாக ரூபா 5000 நவம்பர் (2023) மாதம் தொடக்கம் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஒருவர் க.பொ.த உயர்தர பரீட்சை எடுத்துள்ளபடியால் மற்றவருக்கு தற்போது ரூபா 2500 படி மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது.
  15. வறிய குடும்பங்களைச் சேர்ந்த மூன்று க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் பரீட்சை முடியும் வரை தனியார் வகுப்புகளுக்கான நிதியுதவியாக ரூபா 3100, ரூபா 2500, ரூபா 2500 வீதப்படி மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது.
  16. வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் தனியார் வகுப்புகளுக்கான நிதியுதவியாக ரூபா 3000 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  17. வறிய குடும்பங்களைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களுக்கு தனியார் வகுப்புகளுக்கான நிதியுதவியாக 2024ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தொடக்கம் மாதாந்தம் ஒவ்வொரு மாணவருக்கு ரூபா 2000 வழங்கப்பட்டு வருகின்றது. (2024/மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ் உதவி ஒரு வருடத்திற்கு மட்டும் மன்றத்தால் வழங்கப்படும்)
  18. 2024/பெப்பவரி மாதம் வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் யாவும் ஐந்து இலட்சத்து ஐம்பத்தொராயிரம் ரூபா (551000.00 ரூபா) செலவில் பூர்த்தி செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது.
  19. 2024/மார்ச் மாதம் சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் நான்கு இலட்சத்து இருபத்தேழாயிரத்து தொழாயிரத்து ஐம்பது ரூபா (427950.00 ரூபா) செலவில் பூர்த்தி செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது.
  • கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2022 / 2023 ஆண்டு காலப்பகுதி நிர்வாகத்தினால் நக்கீரன், பல்கலைக் கழக மாணவர்கள், க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கல்விக் கருத்தரங்கு, முன்னோடிப் பரீட்சை மற்றும் காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சில முக்கியமான மருந்துகள் ஆகியனவற்றுக்கு நேரடியாக அவர்களிடம் மன்றம் தொடர்புகொண்டு ஏப்ரல்,மே,ஜூன் (2023) மாதங்களில் ரூபா 979,600 (ஒன்பது லட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து அறுநூறு) வழங்கப்பட்டன. அத்துடன்  ஆகஸ்ட்/2023, ரூபா 500,000 (ஐந்து லட்சம்), நவம்பர்/2023 ரூபா ஒரு மில்லியன்  (பத்து லட்சம்), மார்ச்/2024 ரூபா ஒரு மில்லியன்   (பத்து லட்சம்) என  மூன்று  தடவைகள் காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு காரைநகரில் மேற்கொள்ளப்படவேண்டிய உதவிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
  • நக்கீரன் (மாணவன்), காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் மாணவர்கள் போட்டோப் பிரதிகள் எடுப்பதற்கான பேப்பர் வாங்குவதற்கு, காரைநகர் அபிவிருத்திச் சபை நூலக உதவியாளர்களிற்கான மாதாந்த ஒருபகுதி சம்பளம், பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கொடுப்பனவுகளுக்காக ரூபா 400,000 (நான்கு  லட்சம்),  நீலங்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மீன்பிடி கட்டுமரம் வாங்க நிதியுதவியாக ரூபா 500,000 (ஐந்து லட்சம்),  கலாநிதி விளையாட்டுக் கழகத்திற்கு நிதியுதவியாக ரூபா 100,000  (ஒரு லட்சம்) ஆகிய உதவித் திட்டங்களுக்கு  ரூபா ஒரு மில்லியன் (பத்து லட்சம்) காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு (26.04.2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய உதவிகளுக்கு 24.09.2022 தொடக்கம் 27.04.2024 வரை 4.4796 மில்லியன் (4,479,600) ரூபா அனுப்பி வைக்கப்பட்டன.
  • எமது நிர்வாகத்தின் பதவிக்காலமான இரண்டு ஆண்டுகளிலும் காரைநகரின் பல்வேறு வேலைத் திட்டங்களுக்கும் உதவப்பட்டிருந்த 4.4796 மில்லியன் ரூபாவும் காரை வசந்தம் இரு கலை விழாக்களினூடாகப் பெற்ற நிகர இலாபம், உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள் ஆகியோரின் நன்கொடைகள், ஒருத்தி திரையிட்டதன் ஊடாகப் பெற்ற வருமானம் என்பவற்றிலிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒன்றுகூடல்,தமிழ் திறன் பண்ணிசைப் போட்டிகள்,காரை வசந்தம், ஆருத்திரா தரிசனம் ஆகிய நிகழ்வுகளுக்கு நிதியுதவி மற்றும் பொருள் உதவி செய்தவர்களுக்கும், பல வழிகளிலும் உதவி செய்த அனுசரணையாளர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், வர்த்தகபெருமக்களுக்கும், மன்றத்தால் காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகளை செய்து உதவிய காரைநகர் அபிவிருத்திச் சபையினருக்கும்,தொண்டர்கள், ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து நிர்வாகசபை உறுப்பினர்கள், இளையோர் ஒருங்கிணைப்பாளருக்கும்,போசகர் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் மற்றும் பழைய நிர்வாக சபையினர்களுக்கும், அனைத்துக் கனடா வாழ் காரை மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

“Working together is success”

                         நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்
27.04.2024

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற  வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே /நவம்பர் ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

குறிப்பு :  பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு 20.07.2015 அன்று நிரந்தர வைப்பில் இடப்பட்டது. பின்னர் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி மற்றைய  பாடசாலைகள் போன்று மே /நவம்பர்   கிடைக்கப்பெற 07.11.2016 அன்று நிரந்தர வைப்பில் இட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மூன்று  தடவைகள் வங்கி மற்றும் மன்றத்தால் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக வட்டிக்குரிய நிதி வழங்கப்பட்டது.  பாலாவோடை இ.த.க.பாடசாலையில் மாணவர்கள் தொகை மிகக் குறைவடைந்ததன் காரணமாக  வங்கிக் கணக்கிலிருந்து வட்டிப்பணத்தினை மீளப்பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களினால் குறித்த வட்டிப்பணம் 05.05.2021 தொடக்கம் காரை அபிவிருத்திச் சங்கக் கணக்கிற்கு வைப்பிலிடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பாடசாலைக்கு தேவையேற்படும்போது இப்பணம் காரை அபிவிருத்திச் சபையால் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இப்பணம் காரைநகர் மாணவர்களுக்கு கல்வித் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பு : வியாவில் சைவ வித்தியாலயத்திற்கு மூன்று  தடவைகள் மன்றத்தால் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக வட்டிக்குரிய நிதி வழங்கப்பட்டது. 07.11.2016 அன்று கனடா காரை கலாச்சார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ஒவ்வொரு வருடமும் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

                         நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்.

 

மேலும் விபரங்களைகாரை வசந்தம் – 2023″ மலரில் பார்வையிடலாம்.

 

வங்கியிடமிருந்து பெறப்பட்ட வட்டிக்குரிய முழு விபரம்

கீழே எடுத்து வரப்பட்டுள்ளது.

                                                                                    (NOV 2015 – NOV 2023)

A–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023 B–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023

CKCA-Karainagar Scools Bank Intrest Report – final

கனடா காரை கலாச்சார மன்றம் 24.09.2022 தொடக்கம் 04.08.2023 வரை காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்!

கனடா காரை கலாச்சார மன்றம்

24.09.2022 தொடக்கம் 04.08.2023 வரை

காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்!

  1. யுத்தத்தின் போது தாய் தந்தையை இழந்த சிறுவன் நக்கீரனுக்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் உதவியுடன் மே/2010 தொடக்கம் கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. மாதாந்த உதவிப்பணம் ரூபா 5,000 இருந்து ஜுலை மாதம் /2023 தொடக்கம் ரூபா 7,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  2. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து அறிக்கைகள் மன்றத்திற்கு கிடைக்கப்பெற்று வருகின்றது.
  3. காரைநகர் அபிவிருத்திச் சபை நூலக உதவியாளர்களிற்கான மாதாந்த ஒருபகுதி கொடுப்பனவாக ரூபா 10,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  4. காரைநகர் மாணவர்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்திச் சபை நூலகத்திலுள்ள இரண்டு போட்டோப் பிரதி இயந்திரத்திற்கு தேவைப்பட்ட ரோனர் அக்டோபர், நவம்பர் (2022) மாதங்களில் வாங்கி உதவப்பட்டது.
  5. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
  6. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.
  7. ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலைக்கு அத்தியாவசிய நீர் பாவனைக்காக மோட்டார் மற்றும் மோட்டர் அறை என்பன (மார்ச் /2023) கனடா காரை கலாச்சார மன்றத்தால் கட்டிக்கொடுக்கப்பட்டது.
  8. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 16.04.2023 அன்று இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடாத்தப்பட்டுள்ளது.
  9. க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
  10. ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாச்சார மன்றம் 13.06.2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரதேச வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.செந்தூரன் அவர்களிடம் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட் டன.
  11. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகரைச் சேர்ந்த எட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. 5 மாணவர்களுக்கான மாதாந்தம் ரூபா 10,000 வீதமும் மூன்று மாணவர்களுக்கான மாதாந்தம் ரூபா 7,500 வீதமும் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஒரு மாணவர் பல்கலைக்கழகத்தில் படிப்பு முடியும் வரை வேலை கிடைத்தபடியால் நிதி தேவையில்லை என மன்றத்திற்கு அறியத்தந்துள்ளார். இரண்டு மாணவர்களிற்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் நிதி உதவியுடன் வழங்கப்பட்டு வருகின்றது.
  12. வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் கல்விக்கான உதவியாக ரூபா 5,000 ஜுலை மாதம் /2023 தொடக்கம் காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றம்

                    05.08.2023

 

05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலில் விநியோகிக்கப்பட்ட அறிக்கை.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

அதன் அடிப்படையில் 8வது தடவையாக 05.05.2019 அன்று 8ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 48,687.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

9வது தடவையாக 05.11.2019 அன்று 9ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 48,687.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

10வது தடவையாக 05.05.2020 அன்று 10ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 44,150.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

11வது தடவையாக 05.11.2020 அன்று 11ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 37,500.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

12வது தடவையாக 05.05.2021 அன்று 12ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 26,250.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

Karaingar School Interest Report

 

 

https://karainagar.com/pages/wp-content/uploads/2021/08/Karaingar-School-Interest-Report.pdf

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 09.07.2017 – 31.03.2018 வரைக்குமான செயற்பாட்டு அறிக்கை மற்றும் 09.07.2017 – 31.12.2017 வரைக்குமான கணக்கு அறிக்கை மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த நிகழ்வுகள்

                                      

         கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாட்டு அறிக்கை

ஆடி 9, 2017 – பங்குனி  31, 2018

கனடா  காரை கலாச்சார  மன்றத்தின் பொதுக்கூட்டம் ஆடி  9, 2017 பெரிய சிவன் ஆலயத்தில்  திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.  பொதுக்கூட்டத்தில் ஐந்து திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்களும் , உள்ளக கணக்காய்வாளர் மற்றும் பதினொரு  உறுப்பினர்களை கொண்ட  முழுமையான நிர்வாகசபை  2017-2018 காலப் பகுதிக்கு தெரிவாகியது .

  1. மன்றத்தை பொறுப்பேற்ற பொழுது, TD வங்கி கணக்கு முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால்  மன்ற கணக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில்,  RBC  வங்கியில் புதிதாக  கணக்கு ஆடி 25, 2017 திறக்கப்பட்டது.
  2. ஆடி 30, 2017 காரை ஒன்றுகூடல் Morningside Park , Area 1 and 5 இல் சிறப்பாக நடைபெற்றது. ஒன்றுகூட லில் நானுற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட காரை உறவுகளும்,  சிறுவர்களும் கலந்து கொண்டனர்  .  வழமைபோன்று போட்டிகளில் பங்குபற்றி முதல் மூன்று இட ங்களைப்  பெற்ற சிறார்களுக்கு கேடயங்க ள் வழங்கப்பட்டது. பத்தொன்பது வயதிற்கு  மேற்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்ற ஆண், பெண் அணியினருக்கு வெற்றிக்கேடயம்களும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. வயது முதிர்ந்த பெரியவர்களுக்கான மென்நடைப் போட்டியும் நடாத்தப்பட்டது.
  3. காரை அபிவிருத்திச் சபை தலைவர் திரு.சிவா மகேசன் அவர்கள் தனிப்பட்டவிடயமாக புரட்டாதி மாதம்  கனடா வருகை தந்தபொழுது, மன்ற நிர்வாக உறுப்பினர்களைச் சந்தித்து சமகால விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடினர். அத்துடன் மன்றத்தின்  பொருளாளரும், தலைவரும் காரைநகருக்குச் சென்று நடப்பு நிலைமைகளைத் தெரிந்து கொண்டனர்.
  4. தமிழ்த்திறன் போட்டிகள், ஐப்பசி  08, 2017 காலை 8.30 மணி முதல் மதியம்  வரை  Scarborough Civic Center  மண்டபத்தில் சிறப்பாக  இடம்பெற்றது . சிறுவர்களுக்கான தகுதிகாண் போட்டிகள் பண்ணிசை ,  எழுத்து, வாசிப்பு மற்றும் பேச்சு போன்ற பிரிவுகளில் நடாத்தப்பட்டது. சுமார் நாற்பத்தியேழு சிறுவர்கள் பங்குபற்றி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
  5. காரை வசந்தம் கலைவிழா கார்த்திகை 4, 2017 அன்று Woburn Collegiate மண்டபத்தில், நானூறுக்கும் அதிகமான காரை மக்கள் கலந்து சிறப்பித்த மகத்தான முத்தமிழ் விழாவாக அமைந்தது.  இவ்விழாவில் முதன்முறையாக கனடிய அரச பிரமுகர்களான    திருவாளர்கள்  நீதன்  ஷான் மற்றும் பார்த்தி கந்தவேல் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர் . விழாவில்  கலந்து கொண்ட  அனைவரையும் ஊருக்கே  அழைத்துச் சென்ற   “ஊரிலிருந்து” என்கின்ற ஆவணப் படத்தொகுப்பும்,  காரை  சிறுவர்கள் பங்குபற்றிய ஊர்ச்சங்கங்கள்  பற்றிய தெருக்கூத்தும், முதன்முதலாக  மேடையேற்றப்பட்டது . அத்துடன் தமிழ்த்திறன்  பேச்சுப் போட்டிகளில் முதல் இடம் பெற்ற சகல பிரிவு மாணவர்களுக்கும்,  முத்தமிழ் கலை விழாவில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.  போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும்  பங்குபற்றிய அனைத்து மாணவ செல்வங்களுக்கும்  பரிசில்களும்,  சான்றிதழ்களும்   வழங்கி    கௌரவிக்கப்பட்டனர்.
  6. முடங்கிய நிலையில் இருந்த TD Canada  Trust கணக்கு மீண்டும் செயல் நிலைக்கு கார்த்திகை  7, 2017   கொண்டுவரப்பட்டது. இதனால் மன்றத்தின் கணக்கில் இருந்த 25,535.49 டொலர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலைமைக்கு வந்தது .
  7. ஈழத்துச் சிதம்பரத்தின் நித்திய பூசைக்காக வைப்பில் இடப்பட்ட ஐந்து இலட்சம் தொகைக்கான வட்டிப்பணம் கார்த்திகை  28, 2017 காரை அபிவிருத்திச் சபை கணக்கில் இடப்பட்டது. தற்போதைக்கு நித்திய  பூசைக்கு தேவையான பணம் உள்ளதால், அந்த தொகை  ஆடி மாத அம்மன் உற்சவத்தின் திருவிழாவொன்றுக்கு மன்றத்தின் பெயரால் உபயமாக  பயன்படுத்தப்படவு ள்ளது.
  8. காரைநகரில் நடைபெறுகின்ற கோயில் திருவிழாக்கள் , கலை மற்றும் இலக்கிய நிகழ்வுகளை வீடியோ , படப்பிடிப்பு வாயிலாக இணையத்தளத்தில் காண்பிப்பதற்காக சிந்துஜா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட்து .
  9. ஈழத்துச் சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவ காட்சிகள் அனைத்தையும் பார்த்து பக்தி பரவசம் அடையும் வகையில், முதன்முதலாக வீடியோ வடிவில் உடனுக்குடன் இணையத்தளத்தில் எடுத்து வரப்பட்ட து. அதனைத்   தொடர்ந்து  ஏனைய கோயில் திருவிழாக்களும் வீடியோ வாயிலாக எடுத்து வரப்படுகின்றது.
  10. திருவெம்பாவை காலத்தில் காரைநகர் மணிவாசகர் சபையினர் நடாத்திய மாணவர்களுக்கான சமய பாட பரீட்சை மற்றும் கல்விச்  செயற்பாடுகளுக்கான உ தவித் தொகையாக ரூபா 25,000 வழங்கப்பட்டது.
  11. பன்னிரெண்டு ஆரம்பப் பாடசாலைகளுக்குப் பெற்றுக் கொள்ளப்பட்ட நாலாம் கட்ட வட்டிப் பணத்திற்குரிய ( ரூபா 52, 406.25) செலவு விபரங்கள் மற்றும் மீதமுள்ள தொகை தொடர்பான  அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்விபரங்களை மார்கழி 31, 2017 மன்ற  இணையத்தளத்தில் பார்வையிடலாம். கார்த்திகை மாத ஐந்தாம் கட்ட வட்டிப் பணத்திற்குரிய செலவு விபரங்கள் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் விரைவில்  பிரசுரிக்கப்படும் .
  12. தை 1,  2018 கனடா வாழ் காரை உறவுகளின் உபயத்தில்,  ஆருத்திராஅபிஷேக  வழிபாடுகள்   மிகவும் சிறப்பாக  றிச்மன்ட் பிள்ளையார்  ஆலயத்தில் நடைபெற்றது. புனிதமும், புதுமையும்  நிறைந்த  நன்னாளில் அதிகளவான காரை மற்றும் கனடா வாழ் அடியவர்கள் ஆடவல்லானை தரிசித்து இன்புற்றனர்.  அன்றைய தினம் இன்னிசை கச்சேரியும் , ஆடவல்லானின் தாண்டவ நடன வீதியுலாவும் இடம்பெற்றது .முதன் முறையாக காசினால்  அர்ச்சனை அபிஷேக நிகழ்வும் அத்துடன் அதிகாலை  வருகை தர முடியாத உறவுகளுக்காக நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது.
  13. மன்றத்தின் Hatton National வங்கி நிரந்தர வைப்புக் கணக்கில் ரூபா மூன்று மில்லியன் இடப்பட்டுள்ளது.
  14. காரை வசந்தம் சஞ்சிகைக்கு ஆக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கியவரும்,  சிறந்த சமூக  சேவையாளரும்,  கல்விமானாக  திகழ்ந்தவருமான கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்களின் இறுதி நிகழ்வுகள் முதன்முதலாக  வீடியோ வாயிலாக இணையத்தளத்தில் எடுத்து வரப்பட்டது. அத்துடன் கனடாவில் வாழ்ந்து  எம்மை விட்டுப்பிரிந்த உறவுகளுக்கு   அவர்களின் படத்துடன் கண்ணீர் அஞ்சலி  செலுத்தப்பட்டு வருகின்றது.
  15. உலகெங்கும் வாழும் ஊரவர்களின் மரண அறிவித்தல்கள், காரைநகர்ச்  செய்திகள்,  ஊர்க் கோயில்  திருவிழாக்கள், விசேட நிகழ்வுகள், காரை மன்றங்களின் செய்திகள், கலை இலக்கிய நிகழ்வுகள், நூல் வெளியீடுகள் என்பன இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படுகின்றன .
  16. பெற்றோரை இழந்த மண்ணின் மைந்தன் செல்வன் நக்கீரனுக்கான உதவித்தொகை மாதாந்தம் ரூபா 3,000 காரை அபிவிருத்தி சபையினூடாக வழங்கப்பட்டு வருகின்றது. January 2018 ஆம் ஆண்டுக்கான  மாதாந்த கொடுப்பனவு ரூபா 4,000ஆக வழங்கப்பட்டு வருகின்றது .இதற்குரிய  அனுசரணையாளர்  திரு.லக்கிராஜா என்பது குறிப்பிடத்தக்கது .
  17. ஈழத்துச் சிதம்பரப் பங்குனி இரதோற்சவத்தின் போது அடியவர்களுக்கு தாகசாந்தி அளிப்பதற்காக  அன்பளிப்புச் செய்யப்பட்டது.

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 09.07.2017 – 31.12.2017 வரைக்குமான கணக்கு அறிக்கை

 

CKCA ACCOUNTS SUMMARY 2017

 

 

CKCA  நிகழ்வுகள்

 

 1.  காரை ஒன்றுகூடல் July 29, 2018 ஞாயிற்றுக்கிழமை

       Morningside Park Area 1, 2 & 5 காலை 8.30 மணி முதல்

 

 2.  காரை சிறார்களின் மொழித்திறன் போட்டிகள்  Sept 2,  2018  ஞாயிற்றுக்கிழமை                            Scarborough Civic Center  காலை 8.00 மணிமுதல்   – 12.30 மணி வரை

 

 3.   காரை வசந்தம் முத்தமிழ் விழா Sept 22, 2018

       தமிழிசை கலாமன்றம்  சனிக்கிழமை  மாலை 5 மணி முதல் – 11 மணி வரை

 

  4.  ஆருத்திரா அபிஷேகம் December 23, 2018

        Richmond பிள்ளையார் கோவில்  ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை 5 மணி முதல்

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் 28.05.2016 – 31.03.2017 வரைக்குமான செயற்பாட்டு அறிக்கை மற்றும் 28.05.2016 – 31.12.2016 வரைக்குமான கணக்கு அறிக்கை!

                           CKCA logo

 கனடா காரை கலாச்சார  மன்றம்
    பொதுக்கூட்டமும்   புதிய நிர்வாக சபை தெரிவும் 

கனடா காரை கலாச்சார  மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 23.04.2017  ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் 2016ம், 2017ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2017ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

இடம்:  கனடா ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய மண்டபம்
             01, Golden Gate, Unit # 01 Scarborough  (Brimley & Ellesmere)

காலம்: 23.04.2017  ஞாயிற்றுக்கிழமை  

நேரம்: பிற்பகல் 2.00 மணி

 பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபை தெரிவிற்கான தேர்தல் அறிவித்தலும் விண்ணப்ப படிவமும் கூடிய விரைவில் அறியத்தரப்படும்.

 
                  இங்ஙனம்
                 நிர்வாகம்
  கனடா காரை கலாச்சார  மன்றம்

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் 28.05.2016 – 31.03.2017 வரைக்குமான செயற்பாட்டு அறிக்கை  மற்றும்   28.05.2016 – 31.12.2016 வரைக்குமான  கணக்கு அறிக்கை

 

அறிக்கைகளை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/04/CKCA-FROM-MAY-282016-TO-APRIL-232017-REPORT.pdf

 

 

கனடா-காரை கலாச்சார மன்றம் இடைக்கால செயற்பாட்டு அறிக்கை – மே 28,2016 இருந்து டிசம்பர் 12,2016வரை

        CKCA logo  

                                                      கனடா-காரை கலாச்சார மன்றம்

                               இடைக்கால செயற்பாட்டு அறிக்கை

                            மே 28,2016 இருந்து  டிசம்பர் 12,2016வரை

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டம் கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில்  28-05-2016 அன்று சனிக்கிழமை பிற்பகல் 6:00 மணிக்கு நடைபெற்றது.பொதுக் கூட்டடத்தில்  தற்காலிக புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டது.
தற்காலிக நிர்வாக சபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் விபரம் வருமாறு:தலைவர்: திரு. பரமானந்தராஜா தம்பிஐயா,செயலாளர்: திரு. ஜெயச்சந்திரன் தம்பிராசா,பொருளாளர்: திரு. பேரின்பராசா  திருநாவுக்கரசு,நிர்வாகசபை உறுப்பினர்கள்:திரு. குமரேசன் கனகசபை​,திரு. அரி மனோகரன்,திரு. உருத்திரலிங்கம் தம்பையா,திரு. சோதிலிங்கம் கணேசபிள்ளை ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

 திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையில் 7 பேர்கள் கொண்ட நிர்வாக சபை அமையப்பெற்றதுடன் 30.05.2016 அன்று இரண்டாவது தடவையாக பதிவு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னர் இரண்டொரு தினங்களில் முறையே நிர்வாகத்தினை பதிவு செய்து கொண்டதுடன் மன்றத்தின் செயற்பாடுகளை முறையே 7 பேர்கள் கொண்ட தற்காலிக நிர்வாக சபையினரின் உதவியுடன் நடாத்தி வருவதுடன். "காரை ஒன்றுகூடல் 2016" சிறப்புற 31.07.2016 அன்று  Morningside Park,Area 3 and 4 இல் நடாத்தப்பட்டது.
கூடுதலான சிறுவர்களும் மற்றும் கனடா வாழ் காரை மக்களும் பங்குபற்றியிருந்தனர்.கலந்து கொண்ட அனைத்து சிறார்களிற்கும் சிறப்பு பரிசில்களும், வெற்றி பெற்ற சிறார்களிற்கு கேடயங்களும் வழங்கப்பட்டன.

ஒன்றுகூடலில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.தம்பையா தயாபரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

வெற்றி பெற்ற அணிக்காக(ஆண்,பெண்)  இரண்டு வெற்றிக்கேடயங்கள்  வழங்கப்பட்டன.
1.அமரர் சரவணமுத்து பத்மநாதன் "பட்டு மாமா" அவர்களின் ஞாபகர்தமாக  வெற்றிக்கேடயம் அனுசரணை தீசன் திரவியநாதன். 
2.முன்னாள் காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர் அமரர் நடராசா குலேந்திரன் ஞாபகர்த்தமாக வெற்றிக்கேடயம் அனுசரணை அன்பர்கள்.

காரை ஒன்றுகூடல் 2016 நிகழ்வுகளிற்கு அனுசரணை வழங்கியவர்கள், பங்கு பற்றியவர்கள், இந்நிகழ்வினை நடாத்துவதற்கு பல வழிகளிலும் உதவி வழங்கியவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால்  "தமிழ்த்திறன் போட்டிகள்" ஒக்டோபர் 08, 2016  சனிக்கிழமை காலை 9.30  மணியளவில் Scarborough Civic Centre மண்டபத்தில் நடைபெற்றது. 
தமிழ் மொழித்திறன் பண்ணிசை போட்டிகளில்  ஆர்வத்துடன் காரை சிறார்கள் பங்குபற்றியிருந்தனர்.
தமிழ்த்திறன் போட்டிகளுக்கு உதவி செய்தவர்களான  திரு.திருமதி .கனக.சிவகுமாரன்,திரு.தி.விசுவலிங்கம், திரு. த.அம்பிகைபாகன் ஆகியோருக்கு கனடா காரை கலாச்சார மன்றம் நன்றியை தெரிவிக்கின்றது. அத்துடன் 
பங்கு பற்றிய சிறுவர்களுக்கும், ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும், நடுவர்களுக்கும், உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றியை தெரிவிக்கின்றது. 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கலைவிழாவான "காரை வசந்தம்-2016" 29.10.2016 சனிக்கிழமை மாலை 5:30 இற்கு ரொரன்ரோ தமிழ் இசைக் கலா மன்ற மண்டபத்தில் காரை மண்ணின் மணம் வீசி கனடா வாழ் காரை மக்களின் மனங்களை நிறைத்த வசந்தமாக வீசிச் சென்றுள்ளது. 
காரை மண்ணின் பெருமைகளை விளங்க வைக்கும் வகையில் செயற்பட்ட கல்விசார் அறிஞர்கள் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா, மூதறிஞர் சிவத்திரு க.வைத்தீஸ்வரகுருக்கள் அவர்களுடன் காரை மண்ணின் அடையாள சின்னங்களாக விளங்கும் கோவளம் வெளிச்சவீடு, சைவமகா சபை ஆகியனவற்றின் நூற்றாண்டுகளை சிறப்பிக்கும் வகையில் காரை வசந்தம் – 2016 நடைபெற்றது.


இவ்வாண்டு நூறு ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் காரை மண்ணுக்குப் பெருமை சேர்த்த கல்வியாளர்களையும், காரைநகரின் அடையாளச் சின்னங்களையும் போற்றி எடுக்கப்பட்ட காரை வசந்த விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக பிருத்தானியாவிலிருந்து வருகை தந்திருந்த லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.ஆறுமுகம் நல்லநாதன் அவர்களும், சுவிற்சலாந்திலிருந்து வருகைதந்திருந்த காரைநகர் மணிவாசகர் சபை முன்னாள் செயலாளர் சிவத்தமிழ்காவலர் திரு.ஆறுமுகம் செந்தில்நாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக மன்றத்திற்கு தொடர்ச்சியாக தமது நிதி அநுசரணையை வழங்கி வருபவர்களான குழந்தைகள் மருத்துவ நிபுணர் வி.விஜயரத்தினம், பல்மருத்துவ நிபுணர் ஆதிகணபதி சோமசுந்தரம், Double Seal Insulation Inc.அதிபர் பாலசுப்பிரமணியம் மகாதேவன், வீடுவிற்பனை முகவர் திரு.ராஜ் நடராஜா, Olympic Development அதிபர் திரு.கரன் பஞ்சலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். கௌரவ விருந்தினர்களாக கனடாவிலிருந்து சென்று காரைநகரில் தொண்டர் சேவையாற்றியவரும், அமரர் வித்துவான் மு.சபாரத்தினம் அவர்களின் பேத்தியும், குற்றவியல் வழக்கறிஞருமான செல்வி.தீபா பாலச்சந்திரன் அவர்களும், வெஸ்ரன் பல்கலைக்கழக விஞ்ஞானமானி பட்டதாரியும் comdu.it அமைப்பினூடாக இலங்கை உட்பட உலகில் வாய்ப்பு கிடைக்காத சமூகத்தினருக்கு தொண்டுப்பணி செய்பவருமாகிய செல்வி.அச்சனா நடராசா, மன்றத்திற்கு தொடர் ஆதரவளித்துவரும் குடும்ப உறுப்பினர் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அடுத்து கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பேச்சுக்கள் இடம்பெற்றதுடன் பண்ணிசை, தமிழத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற, பங்கு பற்றிய மாணவர்களுக்கான பாராட்டுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிகளுக்கு இடையே காரைநகர் பாடசாலை அதிபர்கள், காரை அபிவிருத்தி சபைத் தலைவர், காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோரின் செய்திகள் 'ஊரில் இருந்து' என்னும் பகுதியில் விழா மண்டபத் திரையில் ஒளிபரப்பப்பட்டமை இன்றைய காரைநகரின் கல்வித்துறையினரிடமிருந்து கனடா-காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாடுகள் குறித்த நேரடியான தகவல்களைத் தந்தது.

மண்டபத்தில்  அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் வெற்றிகரமாக நடந்து அனைவரதும் பாராட்டினைப் பெற்ற கலைகளின் சங்கமமாக "காரை வசந்தம்-2016"அமைந்து விளங்கியது.

 "காரை வசந்தம்-2016" விழாவிற்கு  அனுசரணை வழங்கியவர்கள், பங்கு பற்றியவர்கள், இந்நிகழ்வினை நடாத்துவதற்கு பல வழிகளிலும் உதவி வழங்கியவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் மனமார்ந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
காரை வசந்தம் சிறப்பு மலருக்கு விளம்பரங்களைத் தந்து உதவிய விளம்பரதாரர்களுக்கும், வாழ்த்துச் செய்திகளை வழங்கி உதவிய அறிஞர்களுக்கும் கட்டுரைகளை வழங்கி உதவிய அறிஞர்களுக்கும் காரைநகர் தொடர்பாளர் திரு.நடராஜா பாரதி அவர்களுக்கும்,விழா மலரின் அட்டை படத்தினை வடிவமைத்து வழங்கிய திரு.ஞானபண்டிதன் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும்,காரைநகரில் இருந்து ஆக்கங்களையும் அறிக்கைகளையும் சேகரித்து அனுப்பி உதவி புரிந்த காரைநகர் அபிவிருத்தி சபையினருக்கும், தட்டச்சு செய்து வழங்கிய திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதன் அவர்களிற்கும்,விளம்பர வடிவமைப்புக்கள் செய்து வழங்கிய திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்களிற்கும், இந்த விழாவைச் சிறப்பாக உங்கள் முன்கொண்டு வருவதற்கு உறுதுணையாக காணொளிகாட்சிகள் மற்றும் தொழில் நுட்ப உதவிகள் பல புரிந்த திரு.செந்தூரன் கந்தையா அவர்களிற்கும்,  சிற்றுண்டி, குளிர்பானம், குடிநீர்  ஆகியவற்றை வழங்கிய திரு.செந்தூரன் கந்தையா,  திரு.அரி மனோகரன், திரு.தீசன் திரவியநாதன் ஆகியோர்களிற்கும் தோழோடு தோழ் நின்று உழைத்த எமது மன்ற உறுப்பினர்கள்,  நண்பர்களுக்கும்,
 விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய   தொகுப்பாளர்களான திரு. பா.ஞானபண்டிதன், திரு. கோகுலன், செல்வி பைரவி சிவராமலிங்கம் ஆகியோருக்கும் மற்றும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அன்றேல் எமக்கு ஆலோசனை கூறுவதன் மூலமோ எமக்கு உதவி புரிந்த அனைத்து நல்இதயங்களுக்கும் கனடா-காரை கலாச்சாரமன்றம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றது.உதவிபுரிந்த அனைத்துத் தொண்டர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 
ஒலிபரப்புக்குதவிய (சமூக அறிவித்தல்) CTBC இளையபாரதி ,வண்ணத் தமிழ் வானொலி,CMR FM ,CTR 24,வணக்கம் FM வானொலிகளுக்கும்,புகைப்படம்,ஒளிப்பதிவு  செய்தவர்களிற்கும், எமது  நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
காரை வசந்த நிகழ்வுகள் மூலம் பெறப்பட்ட நிதி காரைநகர் பாடசாலைகளின் கல்வியினை மேம்படுத்த மட்டும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

எத்தனை தடைகள் இருந்தும் தற்போது நிர்வாகத்தில் இருக்கும் ஒவ்வொருவரினதும் முழுமுயற்சியும் தன்னம்பிக்கையும் வீண் போகவில்லை. அதன் விளைவாகத்தான் தற்போதய நிர்வாகம் இக்காலப்பகுதியில் பயனுள்ள பல முக்கியமான வேலைத் திட்டங்களைக் கவனமெடுத்து நிறைவேற்றக் கூடியதாக இருந்தது.

இத்தனை இன்னல்கள் மத்தியிலும் மே 28,2016 இருந்து டிசம்பர் 12,2016வரை எம்மன்றத்தினால் காரைநகருக்கு செய்யப்பட்ட உதவிகள் அனைத்தும் காரை அபிவிருத்தி சபையினூடாகச் செய்யப்பட்டவையே.
 அவையாவன:

1.காரைநகரில் தாய் தந்தையை இழந்த பெரிய மணலைச் சேர்ந்த சிறுவன் நக்கீரனுக்கான உதவிப்பணம் மாதாந்தம் ரூபா 3,000 வீதம்  காரை அபிவிருத்தி சபையினூடாக வழங்கப்பட்டு வருகின்றது. அனுசரணை திரு.ப.லக்கிராஜா

2.கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற முதற்கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது. கனடா காரை கலாசார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் karainagar.com (June 24,2016 திகதியில்)   இணையத்தளத்தில் சென்று பார்வையிடலாம். 2ம்  கட்ட செயற்பாட்டுயறிக்கை பாடசாலைகளிடமிருந்து பெற்று காரை வசந்தம்-2016 மலரில் வெளியிடப்பட்டுள்ளது.

3.கனடா காரை  கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான நான்கு கல்விக் கருத்தரங்கு இவ்வாண்டு யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில்காரைநகரில் உள்ள 11 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 160 மாணவர்கள் இக் கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குக் கல்விக் கருத்தரங்குகள் மற்றும் ஊக்குவிப்புப் பரிசில்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் வட மாகாணக் கல்வியமைச்சின் ஓய்வு நிலைப் பிரதிச் செயலரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான உயர்திரு ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி பரிசில் வழங்கினர்.

4.கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் சர்வதேச விதவைகள் தின நிகழ்வு 03.07.2016  ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் நடாத்தப்பட்டது.காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மாவட்டச் சிக்கனக் கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் சமாசச் செயலாளர் திருமதி ச.பரமானந்தம்,காரைநகர் பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வ.நிதர்சன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியதுடன் காரைநகர் பிரதேசத்தில் உள்ள விதவைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
யாழ் மாவட்ட சிக்கனக் கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட சுமார் நூறு பயனாளிகளுக்குத் தென்னம் பிள்ளைகளும் இன்றைய நிகழ்வில் வழங்கப்பட்டது.

5.வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நிரந்தர வைப்பு 10 இலட்சம் ரூபா  05-நவம்பர்-2016 வைப்பில் இட்டு வழங்கியது.வியாவில் சைவ வித்தியாலய பாடசாலைக்கு  2,3 (மே05 /2016,நவம்பர் 05/2016)  வது தடவைக்குரிய  வட்டி பணம் வழங்கியது அத்துடன் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி மற்றைய  பாடசாலைகள் போன்று மே05 /நவம்பர் 05  கிடைக்கப்பெற நடைமுறைப்படுத்தியது.

6.கனடா காரை கலாச்சார  மன்றத்தினால் 28.11.2016  திங்கட்கிழமை  வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் அபிவிருத்தி சபையின் ஊடாக  வழங்கப்பட்டுள்ளன.

 

கனடாகாரை கலாச்சார மன்றத்தின் சிவன் கோவில் நித்திய பூசை நிலையான நிதி வைப்பு 

சிவன் கோவில் நித்திய பூசைக்கு ஹட்டன் நஷனல் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து 5 இலட்சம் ரூபா நிரந்தர வைப்பில் இடப்பட்டுள்ளது.
அதற்குரிய ஆண்டு வட்டிப் பணத்தை காரை அபிவிருத்திச் சபை ஊடாக சிவன் கோவில் நித்திய பூசைக்கு  கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்ட அறிவித்தல் ஹட்டன் நஷனல் வங்கிக்கு கொடுக்கப்பட்டது. 

 குறிப்பு:
சிவன் கோவில் நித்திய பூசைக்கு ஹட்டன் நஷனல் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து 5 இலட்சம் ரூபா நிரந்தர வைப்பில் இட்டபடியால்   சிவன் கோவில் நித்திய பூசைக்கு கடந்த கால நிர்வாகங்களால் போடப்பட்ட  1 இலட்சம் ரூபா நிரந்தர வைப்பு மற்றும்  ரூபா 1,50,000.00 நிரந்தர வைப்பு  மன்றத்தின் நிரந்தர வைப்பாகா வருகின்றது. 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் யாப்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்ய மொழிபெயர்ப்பாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.                                                                          

கனடாவில் வதியும் எம்மை விட்டுப் பிரிந்த உறவுகளுக்கு அவர்களின் படத்துடன்  மன்றத்தினால்  கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மன்றத்திற்கு தட்டச்சு உதவி செய்தவர்களுக்கும் மற்றும் பலவிதமான ஆலோசனைகள் தந்தவர்களுக்கும் இத் தருணத்தில்  மன்றம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.

மன்றம் தொடர்பான செய்திகள், மற்றும் வெளிநாட்டு மன்றங்களின் செய்திகள், உலகின் எப்பகுதியிலும் எம்மவரது மரண அறிவித்தல்கள் கலை நிகழ்வுகள் என்பன இலவசமாக எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படுகின்றன.
எமது மன்ற இணையத்தளத்தை வடிவமைத்து தொழில்நுட்ப உதவி வழங்கி வரும் திரு.விமலராஜா குலசேகரம் அவர்களுக்கு மன்றம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.

காரைநகரில் இருந்து செய்திகள் தந்த  திரு.நடராஜா பாரதிற்கு மன்றம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.

இந்தக் குறுகிய காலப்பகுதியில் நாம் பல வேலைத் திட்டங்களை நிறைவேற்ற உதவிய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கனடா வாழ் காரை மக்கள், வர்த்தகப் பெருமக்கள் அனைவருக்கும் இந்த மன்றம் முதலில் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றது. அத்துடன் இம்மன்றத்தின் செயற்பாட்டுக் கூட்டங்களை நடத்துவதற்கான இடத்தைத் தந்து உதவிய அரி மனோகரன் அவர்களுக்கும் மன்றம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.

அனுசரணை வழங்கியவர்கள், மன்றத்தினை நடாத்துவதற்கு பல வழிகளிலும் உதவி வழங்கியவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
 

                                                               நன்றி

ஜெயச்சந்திரன் தம்பிராசா
             செயலாளர்
கனடா காரை கலாச்சார மன்றம்
          டிசம்பர் 12,2016

 

                                            “ WORKING TOGETHER  IS SUCCESS”

 

 

கனடா-காரை கலாச்சார மன்றம் இடைக்கால கணக்கறிக்கை (மே 28,2016 இருந்து டிசம்பர் 06,2016வரை)

         CKCA logo        

                   கனடா-காரை கலாச்சார மன்றம்

 

                      இடைக்கால கணக்கறிக்கை 

 

           (மே 28,2016 இருந்து  டிசம்பர் 06,2016வரை)

 

கணக்கறிக்கையை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/12/Dec-6-2016-FS-1-1.pdf

 

கனடா காரை கலாசார மன்றம் அங்கீகரிக்கப்பட்ட கணக்கறிக்கைகள்! (2013.02.28 – 2015.05.10), (2015.10.11 – 2016.05.28)

       CKCA logo  

   கனடா காரை கலாசார மன்றம் அங்கீகரிக்கப்பட்ட                         கணக்கறிக்கைகள்!

  (2013.02.28 – 2015.05.10), (2015.10.11 – 2016.05.28)

கனடா காரை கலாசார மன்றத்தின் 28.05.2016 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது கடந்த கால நிர்வாகங்களின் கணக்காய்வாளரினால் அங்கீகரிக்கப்பட்ட கணக்கு அறிக்கைகள் வெளியிடப்பட்டதுடன் அவை கலந்து கொண்ட அங்கத்தவர்களினாலும் அங்கீகரிக்கப்பட்டன.

அந்த வகையில் 2013.02.28 – 2015.05.10 வரையான திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான கணக்கறிக்கை கணக்காய்வாளர் திரு.கந்தையா கனகராசா அவர்களின் மீள்பரிசீலனையின் பின்னர் 17.12.2015 அன்று அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில் 07.05.2016 அன்று கனடா காரை கலாசார மன்றத்தின் உத்தியோக பூர்வமான இணையத்தளமான http://www.karainagar.com/ ஊடாக அங்கத்தவர்களிற்கு அறியத்தரப்பட்டது. அத்துடன் 28.05.2016 அன்று முழுமையான அங்கீகரிக்கப்பட்ட செயலாளர் செயற்பாட்டு அறிக்கையுடன் கூடிய பொருளாளர் அறிக்கை என்பனவும் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டது.

காரைநகர் 11 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நிரந்தர வைப்பில் இட்டு வழங்கியது மற்றும் காரைநகர் பாடசாலைகள் பலவற்றிற்கும் பல இலட்சம் ரூபாய்கள் கற்றல் தேவைகளிற்காக 2014 மற்றும் 2015 மே வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்டிருந்த நிலையில் இக்காலத்திற்குரிய கணக்கறிக்கை தகுதியும் திறமையும் வாய்ந்த கணக்காய்வாளரின் மீள்பரிசீலனைக்காக பொதுச்சபையினரால் பரிந்துரைக்கப்பட்டது.

அதனையடுத்து கனடாவில் கணக்கியல் துறையில் போதிய அனுபவமும் திறமையும் கொண்டு அங்கீகாரம் பெற்ற கணக்காய்வாளராக தொழில் புரியும் திரு.கந்தையா கனகராசா அவர்களிடம் இக்காலத்திற்குரிய கணக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பாடசாலைகளிற்கு வழங்கப்பட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட நிதியுதவிகள் மற்றும் காரைமண் அபிவிருத்திக்காக இக்காலப்பகுதியில் கனடா காரை கலாசார மன்றத்தினால் வழங்கப்பட்ட அனைத்து நிதியுதவிகள் மற்றும் மன்றத்தின் முழுமையான கணக்குகளை அக்காலத்தில் நிர்வாக பதவியேற்றிருந்த தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராசா, செயலாளர் (பதில்) திரு.தீசன் திரவியநாதன் மற்றும் பொருளாளர் திரு.திருநாவுக்கரசு பேரின்பராசா ஆகியோரது முழுமையான ஒத்துழைப்புடன் மீள்பரிசீலனை செய்து அங்கத்தவர்களிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

28.05.2016 அன்று நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தின் போது இவ்வறிக்கையானது கலந்து கொண்ட அங்கத்தவர்களினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. 
அதனை தொடர்ந்து கணக்காய்வாளர் திரு.கந்தையா கனகராசா அவர்களிடம் அங்கத்தவர்கள் வினவிய கேள்விகளிற்கு விடையளித்த்து பேசியபோது கணக்காய்வாளர் திரு.கந்தையா கனகராசா அவர்கள் கூறியதாவது ‘ 10.05.2016 அன்று முதல் தடவையாக வெளியிடப்பட்ட கணக்கறிக்கைக்கும் தற்போது என்னால் மீள்பரிசீலனை செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் கணக்கறிக்கைக்கும் கணக்கியல் சம்பந்தமாக வித்தியாசங்கள் இல்லையெனவும் கணக்குகளை சமர்ப்பிக்கும் முறைகள் மட்டுமே மாற்றம் பெற்றுள்ளன என்றும் ஆனாலும் அங்கத்தவர்களது வேண்டுகோளிற்கு இணங்க மீள்பரிசீலனை செய்து உறுதி செய்யப்பட்டுள்ளதானது மன்றத்தின் நல்லெண்ணத்திற்கும் இக்காலத்தில் பணியாற்றிய நிர்வாக சபை உறுப்பினர்களின் நன்மதிப்பும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேற்கொண்டு 11.10.2015 முதல் 28.05.2016 வரையான திரு.ரவி ரவீந்திரன் தலைமையிலான கணக்கு அறிக்கையும் வெளியிடப்பட்டு கலந்து கொண்ட அங்கத்தவர்களினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்ட்டது.

இத்துடன் பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட மேற்படி இரண்டு கணக்கறிக்கைகளும் எடுத்து வரப்பட்டுள்ளன.

திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபையின் கணக்கறிக்கை (2013.02.28 – 2015.05.10) மற்றும் திரு.ரவி ரவீந்திரன் தலைமையிலான நிர்வாக சபையின் கணக்கறிக்கை (2015.10.11 – 2016.05.28) கீழே எடுத்து வரப்பட்டுள்ளன.

 

திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபையின் கணக்கறிக்கை (2013.02.28 – 2015.05.10)

கணக்கறிக்கையை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/2013-2015-FROM-28-FEB-2013-TO-10-MAY-2015.pdf

 

 

திரு.ரவி ரவீந்திரன் தலைமையிலான நிர்வாக சபையின் கணக்கறிக்கை (2015.10.11 – 2016.05.28)

கணக்கறிக்கையை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/2015-2016FROM-11-OCT-2015-TO-28-MAY-2016.pdf

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்ட அறிவித்தல். மே 28, 2016

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்ட அறிவித்தல்.  மே 28, 2016

 

அன்புடையீர்!

இடம்:    கனடா ஸ்ரீ செல்வச் சந்நதி முருகன் ஆலய திருமண மண்டபம்

                     01, Golden Gate, Unit # 01 Scarborough  (Brimley & Ellesmere)

காலமும் நேரமும்: 2016 மே 28ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5.30 மணி

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் (28-05-2016) சனிக்கிழமை அன்று கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். இதுவரை இவ்வருடத்திற்கான அங்கத்துவ பணத்தினை செலுத்தி இணைந்து கொள்ளாதவர்கள் 25.05.2016 ( புதன்கிழமை) க்கு முன்னர் அங்கத்தவர்களாக இணைந்து இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

                  

                                                             நன்றி

கனடா  காரை கலாச்சார மன்றம்

 

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் கணக்கறிக்கை  2015/2016

            (FROM OCTOBER 11, 2015 TO MAY 28, 2016)

 

 கணக்கறிக்கையை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/05/கனடா-காரை-கலாச்சார-மன்றத்தின்-கணக்கறிக்கை-2015-2016-FROM-OCTOBER-11-2015-TO-MAY-28-2016.pdf

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2011-2012 நிதி அறிக்கை(Updated)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2011-2012 நிதி அறிக்கை(Updated)

கனடா காரை கலாச்சார மன்றத்தில் கடந்த 4ஆண்டுகளாக கடமையாற்றிய நிர்வாகத்தினருக்கு பல வழிகளிலும் உதவிகள் வழங்கிய அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இங்கே 2011-2012இற்கான நிதியறிக்கையை மக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளோம். இந்நிதியறிக்கையினை இணையத்தளத்திற்கு எடுத்து வருவதற்கு தாமதமானதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிர்வாகசபை.
2009-2012
கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2011 – 2012இற்கான நிதி அறிக்கையினைப் பார்வையிட இங்கே அழுத்துக.

ஆருத்திரா தரிசனம் 01.08.2012 இல் நிதி அன்பளிப்புச் செய்தோர் விபரம்
இங்கே அழுத்துக.

ஆருத்திரா தரிசனம் 28.12.2012 இல் நிதி அன்பளிப்புச் செய்தோர் விபரம்
இங்கே அழுத்துக.

காரை ஒன்றுகூடல் 2012இல் நிதி அன்பளிப்புச் செயதோர் விபரம்
இங்கே அழுத்துக.

காரை ஒன்றுகூடல் 2011இல் நிதி அன்பளிப்புச் செயதோர் விபரம்
இங்கே அழுத்துக.

காரைவசந்தம் 2012 விளம்பரதாரர் விபரம்
இங்கே அழுத்துக.

காரைவசந்தம் 2011 விளம்பரதாரர் விபரம்
இங்கே அழுத்துக

புதிய நிர்வாக சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்(திருத்தத்துடன்)

புதிய நிர்வாக சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்(திருத்தத்துடன்)

 

புதிய நிர்வாக சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கடந்தகால நிர்வாக சபையினரால் சமர்பிக்கப்பட்ட வரவு செலவு அறிக்கை பெப்ரவரி 24ல் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவ் அறிக்கை சில தினங்களின் முன் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதன் இணைப்புக்கள்(நன்கொடையாளர்களின் பெயர்ப்பட்டியல்  முதலியன.) மிக விரைவில் பிரசுரிக்கப்படும். இவ் வரவு செலவு அறிக்கை தற்போது போசகர் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போசகர் சபை அது தொடர்பாக எடுக்கும் முடிவுகளை விரைவில் வெளியிடுவார்கள். இவ்வரவு செலவு அறிக்கை பற்றி கனடா காரை கலாச்சார மன்றத்தின் அங்கத்தவர்களுக்கு ஏதாவது கருத்துக்கள் இருப்பின் போசகர் சபைக்கு ckcapatron@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கனடா காரை கலாச்சார மன்றம் P O BOX 32057 MILLIKEN CROSSIND PO MARKHAM, ON, M1V 0E1 என்ற முகவரிக்கு  ஏப்ரல் மாதம் 10ம்திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதற்குப்பின்னர் அனுப்பப்படுவன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

புதிய நிர்வாக சபையின் அறிக்கைகள் காலாண்டுக்கு ஒரு முறை காலாண்டு முடிவடைந்து  30 தினங்களுக்குள் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும். இவ் வருடம்  கனடாவாழ் காரை மக்களாகிய நீங்கள் அனைவரும் எமது மன்றத்தில் அங்கத்தவராக இணைந்து எமக்கு ஆதரவு வழங்குங்கள். எமது நிர்வாக சபை உறுப்பினர்கள் உங்களை அணுகுவார்கள். அங்கத்தவராக இணைந்துகொள்பவர்களுக்கான பற்றுச்சீட்டுக்கள் பொருளாளரினால் வழங்கப்படுவதுடன் பெயர்ப் பட்டியலும் உடனுக்குடன் இணையக்தளத்தில் பிரசுரிக்கப்படும். அத்துடன் நீங்கள் அங்கத்தவர் பணத்தை வங்கியில் அல்லது PAY PAL மூலமாகவும் செலுத்தி மன்றத்தில் அங்கத்தவராகிக்கொள்ளலாம்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

நிர்வாக சபை, கனடா காரை கலாச்சார மன்றம். தொலைபேசி: 416 642 4912

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011 – பெப்ரவரி 2013 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கை

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011 – பெப்ரவரி 2013 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கை

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011–பெப்ரவரி 2012 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கையினையும் வரவு செலவு அறிக்கையினையும் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
நிர்வாகசபையில் அங்கம்வகித்த இளம் உறுப்பினர்களின் ஊர்ப்பற்று, அர்ப்பணிப்பு, செயற்திறன் ஆகியனவும், கடந்த கால நிர்வாகசபை உறுப்பினர்களின் வழிகாட்டுதலும், அனுபவமும், ஆதரவும் இணைந்து செயலாற்றியதன் காரணமாக இக்காலப்பகுதியில் பயனுள்ள பல முக்கியமான வேலைத்திட்டங்களை நிறைவேற்றக்கூடியதாக இருந்ததையிட்டு மனநிறைவடைகின்றோம். மன்றத்தின் நிதிநிலையை உயர்த்தி இவ்வேலைத்திட்டங்களை நிறைவேற்ற உதவிய கனடா வாழ் காரைநகர் மக்கள், நலன் விரும்பிகள், வர்த்தகப்பெருமக்கள், அனைவருக்கும் மன்றம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மன்றத்தின் செயற்குழு இக்காலப்பகுதியில் 15 தடவைகள் கூடி, மன்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானங்கள் எடுத்துச் செயலாற்றியுள்ளது. இக்கூட்டங்களை நடாத்துவதற்கு தமது காரியாலயத்தை தந்துதவிய தலைவர் திரு. ரவி ரவீந்திரன் அவர்களுக்கு எமது மன்றம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.

 karainagar.com இணையத்தளம் இக்கால கட்டப்பகுதியில் மேன்மேலும் விரிவுபடுத்தப்பட்டு மிகப்பெரிய அளவில் உலகம் வாழ் காரை மக்களை கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்விணையத்தளத்தின் தினசரி பார்வையாளர்கள் சராசரி 3000க்கு மேல் அதிகரித்துள்ளது. இவவிணையத்தளத்தின் பலபகுதிகள் முக்கியம் வாய்ந்தவையாக இருக்கின்றன. மரணஅறிவித்தல் பகுதியையும் அதிகமாக மக்கள் பாவித்துவருகின்றனர். அதிகரித்துவரும் நிதிஅன்பளிப்புக்கள் மக்கள் கருத்துக்கள் இதில் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியன. குறிப்பாக சுதர்சன் என்பவருடைய புற்றுநோய் சிகிச்சைக்கான அன்பளிப்பு நிதி  PayPal மூலம் உலகம் வாழ் காரை மக்களால் வழங்கப்பட்ட தொகையே மிகக்கூடுதலான தொகையாக இருந்தமை இதன் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. அத்துடன் தமது அங்கத்துவப்பணத்தையும் இதனூடாக செலுத்தும் வாடிக்கையாளர்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக காரை மன்றங்களின் வேண்டுகோளுக்கிணங்க எமது இணையத்தளத்திலே அவர்களுக்கெனத் தனித்தனியான பகுதிகள் அமைக்கப்பட்டு புதிய வடிவத்தில் 2013 தைப்பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் இவ்விணையத்தளத்தின் பலபகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுவருகின்றன.  இவ்விணையத்தளத்தில் தமது நேரங்களை செலவுசெய்துகொண்டிருக்கும் தொழில்நுட்ப உதவியாளர் திரு.விமலராசா குலசேகரம், கே.கே.எலெக்ரோனிக்ஸ் நிறுவனத்தினருக்கும் எமது மன்றம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த 2011 நொவெம்பர் மாதத்திலிருந்து ஆகஸ்ட் 2012 காலப்பகுதியில் காரைநகரிலுள்ள பாடசாலைகளுக்கு மன்றத்துடன் இணைந்த பழைய மாணவர் சங்கங்களை அமைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றபோது முதன் முதலாக கூட்டம் GTA Square Hall இல் நடைபெற்றது. காரைநகரின் பிரதான பாடசாலைகளுக்கான பழைய மாணவர் சங்கம் அமைப்பதற்கு 3 இணைப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். களபூமி சுந்தரமுர்த்திநாயனார் வித்தியாலயமும் அதன் சார்ந்த பாடசாலைகளுக்கும் திரு. குகனேசபவான் சிவசுப்பிரமணியம், இந்துக்கல்லூரிக்கு – திரு. சிவகுமார் கனகசுந்தரம், யாழ்ரன் கல்லூரிக்கு திரு. மார்க்கண்டு செந்தில் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் பின்னர் களபூமிப் பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கம் திரு.வேலுப்பிள்ளை ராஜேந்திரம் தலைமையில் அமைக்கப்பட்டது. யாழ்ரன் கல்லூரிக்கு எமது மன்றம் முனைந்த போது அக்கல்லூரி பழையமாணவாகள் முன்வராததால் அக்காரியம் தடைப்பட்டது.
காரைநகர் இந்துக்கல்லூரிக்கு மன்றத்துடன் இணைந்த பழைய மாணவர் சங்கம் ஒன்றை அமைப்பதில் எமது மன்றம் தீவிரமாக ஈடுபட்டு திரு.தர்மலிங்கம் திருச்செல்வம் அவர்களை தலைமையாகக் கொண்டு பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது. அதன் பிற்பாடும் காரை இந்துக்கல்லூரிக்கு பழையமாணவர் சங்த்தின் சார்பில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பணத்தில் ரூ65,000.00 இந்துக்கல்லூரியின் விளையாட்டுப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பிற்பாடு ஒருசிலரின் தலையீட்டால் இம்மன்றம் கலைந்துபோனது. அதனையடுத்து காரை இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் அமைப்பதில் இணைப்பாளர் திரு.சிவகுமாரனுடன் மன்றத்திற்கும் திருப்திகரமான உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இம்முயற்சி கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேறு சில பழையமாணவர்கள் சேர்ந்து தனியாக காரை இந்துக்கல்லூரிக்கு மன்றம் அமைத்தனர். கனடா காரை கலாச்சார மன்றத்துடன் இணைந்த காரை இந்துக்கல்லூரிக்கு பழைய மாணவர் சங்கம் அமைக்கும் முயற்சியில் மன்றத்துடன் இணைந்து செயலாற்றிய அனைத்துப் பழைய மாணவர்களுக்கும் அவர்கள் செலவிட்ட மதிப்பிடப்பிட முடியாத நேரங்களுக்கும் எமது வருத்தத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

காரை வசந்தம் 2011: 09-10-2011 இல் பதிரோவது ஆண்டாக ஸ்காபரோ நகரிலுள்ள சீனக் கலாச்சார கலை அரங்கத்தில் கலை மணமும், காரை மண்ணின் மணமும் பரப்பி கலை ரசிகர்களை வசீகரித்துச் சென்றது. பல தமிழ் விழாக்களுள் தமிழ் ஊடகங்களினாலும், கலை ஆர்வலர்களாலும் பாராட்டுக்களைப் பெற்ற தரமும், சுவையும் மிகுந்த முன்னணிக் கலை விழாக்களுள் ஒன்றாக கனடா-காரை கலாச்சார மன்றம் வழங்கி வரும் காரை வசந்தம் கலை விழா அமையப் பெற்று விளங்குவது காரைநகர் மக்களுக்கு பெருமை தருவதாகும். கணக்காய்வாளர் திரு.கந்தையா கனகராசா அவர்கள் பிரதம விருந்தினராக வருகை தந்து சிறப்பித்திருந்தார். இவ்விழாவில் வழமைபோல வாழ்த்துச் செய்திகள், விளம்பரங்கள் அடங்கிய விழாமலரும் வெளியிடப்பட்டது.

காரைவசந்தம் 2012: 07.10.2012 பன்னிரண்டாவது ஆண்டாக அதே சீனக் கலாச்சார கலைஅரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த டாக்டர் கனகமலர் சிறீகாந்தா அவர்கள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக இலண்டனிலிருந்து வருகை தந்து கலந்து கொண்டு சிறப்பித்திருந்த ஊடகவியலாளர் திரு.இளையதம்பி தயானந்தா மற்றும் காரை நலன்புரிச்சங்கத் தலைவர் திரு.பரமநாதர் தவராஜா அவர்களும் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத் தலைவர்  திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன் அவர்களும் சிறப்பித்திருந்தமை வரலாறு காணாத பெருமை என்றே சொல்லவேண்டும். அத்துடன் ஊடகவியலாளர் திரு.இளையதம்பி தயானந்தாவின் வருகையும் அவருடன் சார்ந்த இலங்கையின் புகழ்பூத்த வானொலிக்கலைஞர்கள், தொலைக்காட்சிக் கலைஞர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தமை காரைவசந்தம் என்னும் விழா பல்வேறு கனேடிய தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலம் அடைய வாய்ப்பாக இருந்தமை மேலும் சிறப்பு. அத்துடன் ஒவ்வொரு காரை வசந்தங்களிலும் நிகழ்ச்சிகளை வழங்கும் காரைநகர் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. வழமைபோல இவ்விழாவிலும் விழாமலர் வெளியிடப்பட்டது. இவ்விழாக்களுக்கு விளம்பர அனுசரணை வழங்கிய அனைத்து வர்த்தகப் பெருமக்களுக்கும் எமது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆருத்திரா தரிசனம் – கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் கனடா றிச்மண்ட் ஹில் இந்து ஆலயத்தில் வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற ஆருத்திரா அபிஷேகமும், ஆருத்திரா தரிசனமும் கடந்த 2012ம் ஆண்டிலேயே இரு விழாக்களும் மிகசிறப்பாக நடாத்தப்பட்டிருந்தது. அதிகாலை 5மணி முதலே நூற்றுக்கணக்கான காரைநகரைச் சேர்ந்த அடியார்கள் உள்ளிட்டோர் எம்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தையும், தரிசனத்தையும் கண்டு இன்புற்று அருள்பெற ஆலய மண்டபத்தில் கூடியிருந்தனர். அடியவர்களினால் கொண்டுவரப்பட்டிருந்த பெருமளவிலான அபிஷேகத் திரவியங்களினால் நடைபெற்ற சிறப்பான அபிஷேகத்தைத் தொடர்ந்து தரிசனக்காட்சி இடம்பெற்றது.

இவ்வாண்டுகளில் ஏற்கனவே எமது மன்றத்தால் மக்களின் அனுசரனையுடன் அமைத்துக்கொடுக்கப்பட்ட விசேட திருவாசியில் விசேட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடேசப் பெருமான் விசேட தவில் நாதஸ்வர இசை முழங்க ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் உள்வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தது கண்கொள்ளாக் காட்சியாகவிருந்தது. இவ்ஆருத்திரா தரிசனங்களுக்கு வருகைதந்த அடியார்கள் மற்றும் பல்வேறு உதவிகள் செய்த அனைத்து மன்ற தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 சென்ற ஜனவரி 8இல் நடைபெற்ற திருவாதிரை உற்சவத்தில் காரைநகரின் கலைஞன் நிஷாந் நந்தகுமார் குழுவினர் இசை நிகழ்ச்சி வழங்கினர். திரு.லக்கிராஜா அவர்கள் பிரதான அனுசரணையாளராக திருவிழாவிற்கான பூசைக்கும் மற்றும் அடியார்களுக்கு வழங்கிய பிரசாதத்திற்கும் நிதியுதவியாக $2000டொலர்களை வழங்கியிருந்தார். அவர்களுக்கு எமது மன்றம் சார்பில் இரண்டாவது தடவையாகவும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

டிசெம்பர் 28இல் நடைபெற்ற விழாவில் திரு.ரஞ்சன் கணபதிப்பிள்ளை அவர்களின் ஆன்மீக சொற்பொழிவும் இடம் பெற்றன. அத்துடன் மன்றத்தினால் வெளியிடப்பட்டிருந்த 2013ஆம் ஆண்டிற்கான நாட்காட்டிக் கலண்டரும் இவ்விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கு பிரதான அனுசரணையாக அர்ச்சனாஸ் ஸ்தாபன உரிமையாளர் திரு. P.S.சுதாகரன் அவர்கள் சுவாமி அலங்காரத்திற்குத் தேவையான பூக்களை இலவசமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைக் கொண்டாட்டம்(கோடை கால ஒன்றுகூடல்) – 2011, 2012: இவ்விரு ஆண்டுகளும் வழமைபோல சென்ற யூலை 17ம் திகதி Morningside பூங்காவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பலநூற்றுக்கணக்கான காரைநகர் மக்கள் கூடி மகிழ்ந்த சிறப்பு நிகழ்வாக இது அமைந்திருந்தது. வழமைபோல இவ்வாண்டும் வந்திருந்த மக்கள் அனைவரும் அவர்களின் நகர வதிவிடங்களின் அடிப்படையில் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய இல்லங்களாக பிரிக்கப்பட்டு இவ்வில்லங்களுக்கிடையேயான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றன. கிளித்தட்டு, உதைபந்தாட்டம், கயிறிழுத்தல், விநோதஉடை உள்ளிட்ட பல போட்டி நிகழ்ச்சிகளிலும் சிறுவர்கள், இளையோர், வளர்ந்தோர், முதியோர் என அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றியிருந்தனர். காலை முதல் மாலை வரை போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை மன்றத் தொண்டர்கள் பல்வேறுபட்ட உணவுவகைகளைத் தயாரித்து பரிமாறிக்கொண்டிருந்தனர். பலர் குழுக்களாக மரநிழல்களில் கூடி ஊரின் நினைவுகளையும், செய்திகளையும் பகிர்ந்து அளவளாவி மகிழ்ந்ததை காணக்கூடியதாகவிருந்தது. இறுதியில் அதிகபுள்ளிகளைப்பெற்ற இல்லங்களிற்கும், வெற்றி பெற்றவர்களிற்கும் கேடயங்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன. இவ்நிகழ்விற்கு அனுசரனை வழங்கிய அனைத்து வர்த்தகப் பெருமக்களுக்கும் உதவிகள் பல செய்த தொண்டர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

குளிர்கால ஒன்றுகூடல் 2011 – மக்களின் வேண்டகோளிற்கிணங்க குளிர்கால ஒன்றுகூடல் 2011 டிசெம்பர் 25ம்திகதி Baba Banquet Hall இல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது தனிப்பட்ட முறையில் பணம் சேகரிக்கப்பட்டு நடாத்தப்பட்டது. குறிப்பாக இவ்விழா மூலம் குழந்தைகள் மிகவும் சந்தோசமான அனுபவத்தைப் பெற்றிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

குளிர்கால ஒன்றுகூடல் 2012: இவ்வருடம் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை உற்சவம் காரணமாக விழா நடாத்த முடியவில்லை.

தன்னியக்கத் தொலைபேசி – மன்றத்தின் அறிவித்தல்கள் அனைத்தையும் மக்களுக்கு அறியத்தரும் வகையில் தன்னியக்க தொலைபேசி சேவை அறிமுகப்;படுத்தப்பட்டு மக்களிடம் மிகுந்த பாராட்டையும் பெற்றுள்ளது. இச்சேவையானது விரிவுபடுத்தப்பட்டு லண்டன், சுவிஸ் காரை மன்றங்களுக்கும் கட்டண அடிப்படையில் சேவை வழங்கி  வருகின்றோம்.

மன்றத்திற்கான நிரந்தர தொலைபேசி: 21.05.2011 மன்றத்திற்கான நிரந்தரமான தொலைபேசி இலக்கம் சேவையில் மிகக் குறைந்த கட்டணத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 416 642 4912 என்ற இலக்கத்தை அழுத்துவதன் மூலம் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் தனித்தனியாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் திறன் போட்டிகள்: சிறுவர்கள் மத்தியில் தமிழ்மொழித்திறனை வளர்க்கவும் சமய ஈடுபாட்டினை ஊக்குவிக்கவும் என மன்றம் நடாத்திவரும் தமிழ்மொழித்திறன், பண்ணிசைப் போட்டிகள் கடந்த இரண்டு ஆண்டுகளும் Scarborough Civic Centre இல் நடைபெற்றன. 2011ம் ஆண்டில் 5-17வயதுக்குட்பட்ட 51மாணவர்களும், 2012ம் ஆண்டில் 47மாணவர்களும்  பங்குபற்றியிருந்தனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான விருதுகளும், பங்குபற்றிய மாணவர்களுக்கான பாராட்டுவிருதுகளும் காரைவசந்தம் கலைவிழாவில் வழங்கப்பட்டிருந்தன. அத்தோடு முதலிடம் பெற்ற மாணவர்கள் கலைவிழாவில் தமது பேச்சுக்களை நிகழ்த்தியிருந்தனர். இப்போட்டிகளில் பங்குபற்றும் சிறுவர்கள் அனைவரும் தமது ஆர்வத்துடன் பண்பான ஒத்துழைப்பை போட்டி நடாத்துபவர்களுக்கு வழங்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற, மற்றும் பங்கு பற்றிய சிறுவர்களுக்கும், அவர்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.!

மன்றத்தினால் காரைநகருக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள்: காரைநகருக்கு தேவையான உதவிகளை இனம்கண்டு கனடா-காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளம் வாயிலாக தெரியப்படுத்தியிருந்தபோது ஊர்ப்பற்றும் நல்லிதயமும் படைத்த பல கனடா வாழ் காரை மாதாவின் பிள்ளைகள் தாமாகவே முன்வந்து உதவிகளை வழங்குவது அனைவரையும் உளம் பூரிக்கச் செய்துவிட்டது. கனடா-காரை கலாச்சார மன்றமானது எமது உறவுகளின் நலனில் அக்கறையோடு பணியாற்றி வருகின்ற எமக்கான மன்றம் என்ற உணர்வுடன் மன்றத்தின் செயற்பாட்டில் நம்பிக்கையும், நல்லெண்ணமும் வைத்து தமது உதவிகளை மன்றத்திற்கூடாக வழங்கி மன்ற வளர்ச்சிக்கு ஆதரவளித்த நல்லுள்ளங்களின் பணி பாராட்டிற்கும் நன்றிக்குமுரியதாகும். காரை வசந்தம் மற்றும் அன்பளிப்புக்கள் மூலம் ஈட்டப்பட்ட பணத்திலிருந்து காரைநகரில்  அரச உதவிகள் கிடைக்க முடியாத, அவசியம் தேவைப்பட்ட பணிகளிற்கும் மன்றத்தினால் உதவப்பட்டுள்ளது. மன்றத்தின் தீர்மானத்திற்கமைய இந்த உதவிகள் அனைத்தும் காரை அபிவிருத்திச் சபையூடாகவே வழங்கப்பட்டு பணிகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

• பெப்ரவரி 2011: திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டத்தின்கீழ் 2011ஆம் ஆண்டு உயர்தரப் பாடசாலைகள் நான்கில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட நாற்பது மாணவர்களிற்கு கற்கைச் செலவுக்காக மாதாந்தம் ஐநூறு ரூபா வீதம் ஒரு ஆண்டிற்கு காரை அபிவிருத்திச்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அப்பணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக போதிய ஆதாரம் இல்லாததால் 2012 ஆம் ஆண்டிற்கான திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப் பரிசில் பணம் அனுப்பி வைக்கப்படவில்லை. இவ்வுதவியை வழங்கிய குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர் வி.விஜயரத்தினம் அவர்கள் 2007ம் ஆண்டு தொடக்கம் இப்புலமைப் பரிசில் திட்டத்திற்கான உதவியை தமது தாயார் பெயரில் வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கனடா காரை கலாச்சார மன்றம் தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

 • வன்னி யுத்தத்தின்போது தனது பெற்றோர்களைப் பறிகொடுத்த அனாதரவான ஒன்றரை வயதுடைய நகுல்ராஜ் நக்கீரன் என்ற குழந்தையினைப் பராமரிக்கும் செலவாக மாதாந்தம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாயினை திரு.லக்கிராஜா அவர்கள் பெருமனதோடு வழங்கி வருகின்றார். அப்பணங்களும் தகுந்த முறையில் அந்தச் சிறுவனுக்கு 2012 டிசெம்பர் மாதம் வரை வழங்கப்பட்டுள்ளன.

 • பெப்ரவரி 2011: கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆதரவில் காரைநகரில் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக விசேட பயிற்சிப் பட்டறைகளை காரைநகர் கல்விக்கோட்டம் நடாத்தியது. இதற்கு எமது மன்றம் சுமார் 107,950.00 அனுப்பி வைத்தது.

 • 30.05.2011இல் காரைநகர் ஈழத்துச்சிதம்பர கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிதிசேகரிப்பில் பல காரை அன்பர்கள் தம்மாலான நிதியுதவிகளை வழங்கியிருந்தனர். சுமார் 5இலட்சம் ரூபாய்கள($4283.00) அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 • காரைஒளி சஞ்சிகை: 23.01.2011 இல் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சிப்பாதையில் மற்றுமோர் முக்கிய பதிவாக முதன் முதலாக காரைஒளி சஞ்சிகை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்சஞ்சிகையானது காரைநகர் செய்திகளையும் மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் செய்திகளையும் தாங்கியதாக முழுவர்ணப் பதிப்பாக வெளியிடப்பட்டது. இச்சஞ்சிகையை வெளியிட்டு வைப்பதற்காக வெளியீட்டு விழா கனடா செல்வச் சந்நிதி ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடாத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு மன்றத்தின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

 • அத்துடன் அதன் இரண்டாவது சஞ்சிகை 30.06.2011இலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

காரைநகர் மாணவர் நூலகத் திட்டம்- நாகரீகமும், நவீன தொழில்நுட்பங்களும் நாளுக்குநாள் வளர்ச்சி பெற்றுவரும் இன்றைய காலகட்டத்தில் காரைநகரில் ஓர் மாணவர் நூலகம் ஒன்றை அமைக்கும் திட்டம் ஒன்று கல்வி ஆர்வலர்களால் முன்மொழியப்பட்டது. சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை கல்வி சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்துறை சார்ந்த நூல்களும், நவீன கற்றல் உபகரணங்களும் உள்ளடக்கப்பட்டு காரை அபிவிருத்திச் சபையினரால் அமைக்கப்படவுள்ள இந்நூல் நிலையத் திட்டத்திற்கு கனடா-காரை கலாச்சார மன்றம் தனது முழு ஆதரவினையும், ஒத்துழைப்பையும் வழங்கி வருவதுடன் இத்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களையும் நடாத்தியிருந்தது. இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல சாத்தியமான வழிகளில் உதவிகள் புரிந்திடவும், நிதி சேகரிக்கவும் என உபகுழு ஒன்று திரு. அமிர்தலிங்கம் நடராஜா அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு இயங்கிவருவது நீங்கள் அறிந்ததே. இத்திட்டத்திற்கு கனடா வாழ் காரைநகர் மக்கள் பெருவரவேற்பை வழங்கி சுமார் $14,332.00 டொலர்கள் நிதியுதவியினை வழங்கி ஆதரவளித்தார்கள் என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயம். இத்திட்டத்திற்கு தமது முழுமையான ஈடுபாட்டினை வழங்கி கனடாவில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் உள்ள காரை மன்றங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி நிதியுதவிகளை பெற்றுக்கொள்ள வசதி செய்துகொடுத்த எமது இணைப்பாளர் திரு.நடராஜா அமிர்தலிங்கம் அவர்களுக்கு எமது மன்றம் தனது பிரத்தியேகமான மனப்பூர்வமான நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

 29.07.2011 இல் இத்திட்டத்தின் ஆரம்பகட்ட கட்டுமாணிப்பணியை ஆரம்பிக்கும் முகமாக
• முதற்கட்ட நிதியாக $1726.00 டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
• இரண்டாவது கட்டமாக $10,000.00 டொலர்களும் அனுப்பி வைக்கப்பட்டது.
• மூன்றாவது கட்டமாக 03.02.2013 இல் $2586.00 டொலர்களும் அனுப்பிவைக்கப்பட்டது.
இதுவரையில் மொத்தம் 54பேரிடமிருந்து $14,332.00டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

• 05.11.2011 இல் தோப்புக்காடு பாடசாலைக்கு அலுமாரி வாங்குவதற்காக 30,000.00ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

 • 05.11.2011 இல் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு காரை அபிவிருத்திச் சபையால் பாராட்டுவிழா நடாத்தப்பட்டது. இவ்விழாவிற்கு அனுசரணையாக 50,000.00ரூபா அனுப்பி வைக்கப்பட்டது.

 • 24.12.2011 கனடா காரை கலாச்சார மன்றத்தினால் களபூமி சுந்தரமூர்த்திநாயனார் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பணக் கூட்டம் GTA Square மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திரு. வேலுப்பிள்ளை ராஜேந்திரம் அவர்களை தலைவராக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலை மற்றும் களபூமியிலுள்ள சிறிய பாடசாலைகள் ஆகியனவற்றை விசேடமாக கவனிப்பதற்கு பழைய மாணவர் சங்கம் ஒன்று எமது மன்றத்துடன் இணைந்து செயலாற்றக்கூடியதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக பின்னர் அவை இயங்கமுடியாத நிலைமைகள் ஏற்பட்டது.

 • 07.01.2012காரைநகர் மணிவாசகர் சபைக்கு 25ஆயிரும் ரூபாய்களும் மாணிக்கவாசகர் மடாலயத்திற்கு 50ஆயிரம் ரூபாய்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

 • 21.01.2012இல் எமது மன்றத்தால் கடந்த இரண்டு வருடங்களாக காரைநகரில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடாத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்செய்யும் பொருட்டு விசேட பயிற்சிப் பட்டறைகளை காரைநகர் கல்விக் கோட்டத்தினர் நடாத்தி வருகின்றனர். இவ்விசேட பயிற்சிப் பட்டறைகளுக்கு ஆரம்ப ஆயத்தங்களை(வினாத்தாள்) வழங்குவதற்கு 50,000ரூபாய்கள் வழங்கப்பட்டது.

• 16.02.2012 இல் காரைநகர் வைத்தியசாலைக்கு கனடா வைத்தியசாலைகளில் பாவிக்கப்பட்ட கட்டில் ஒன்று அமரர் வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினர் காரைநகரிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு அணுகியிருந்தார்கள். எமது மன்றம் இதற்கான அனுப்பும் செலவை ஏற்று $425.00 டொலர்கள் செலவழித்து அனுப்பி வைத்தது.

 • 18.02.2012 எமது மன்றத்தால் $604.78டொலர்கள் பெறுமதியான Laptop Computer ஒன்று காரைநகர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 • 08.02.2012இல் காரைநகர் இந்துக்கல்லூரியின் நடைபெற்ற வருடாந்த விளையாட்டுப்போட்டிக்கு எமது மன்றத்தால் 65,000ரூபாய்கள் அப்போது தற்காலிகமாக மன்றத்துடன் இயங்கிய காரை இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கி அப்பணம் காரைநகர் இந்துக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

• ''முதுசங்களைத் தேடி' என்னும் தலைப்பில் கனடா காரை கலாச்சார மன்றமும் காரை நலன்புரிச் சங்கமும் இணைந்து நீண்ட கால செயற்திட்டம ஒன்றினை முதன்முறையாக முன்னெடுத்துள்ளனர். அதாவது எங்கள் முன்னோரின் அரிய ஆக்கங்களையும் அவர்கள் பற்றிய தகவல்களையும் மீள உலகெங்கும வாழும் எங்கள் ஊர் மக்கள் முன்கொண்டு வருதலேயாகும்.  இத்தேடல் பயணத்தில் அனைத்துக் காரை மன்றங்களும் இணைந்துள்ளன. இந்நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதி முதுசங்களைத் தேடி என்னும் திட்டத்தின் ஊடாக மீண்டும் இன்னும் ஒரு நல்ல படைப்பை வெளிக்கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்படும். இதில் முதலாவதாக 'காரைநகர் மான்மியம்' என்னும் நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீட்டுவிழா  7.02.2012இல் காரைநகரில் ஈழத்துச்சிதம்பர இரதோற்சவநாளில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காரை வசந்தம் 2012 விழாவிலும் இந்நூல் வெளியிடப்பட்டது. கனடாவில் வெளியிடப்பட்டது. இதில் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற பணம் முழுவதும் லண்டன் காரை நலன்புரிச்சங்கத்தினரால் முதுசங்களைத் தேடி நிதியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

 • மே. 2012: சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவுக்கு 50,000ரூபா அனுப்பி வைக்கப்பட்டது.

 • யாழ்ரன் கல்லூரியில் கணினி ஆசிரியர்களின் சம்பளம் வழங்கவென முதல் 6மாதத்திற்கான வேதனங்களை காரை நலன்புரிச்சங்கமும் அடுத்த 6மாதத்திற்கான வேதனங்களை கனடா காரை கலாச்சார மன்றமும் வழங்க இணங்கியதற்கிணங்க 80,000 ரூபாய்கள்(ஜுலை 2012 மாதம் தொடக்கம் டிசெம்பர் 2012 வரை) அனுப்பிவைக்கப்பட்டது.

 • அத்துடன் யாழ்ரன் கல்லூரிக்கு கொம்பியூட்டர் அறைக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்துவதற்காக மேலும் 1இலட்சத்து 50ஆயிரம் ரூபாய்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

 • 26.12.2012 கனடா காரை கலாச்சார மன்றம், லண்டன் காரை நலன்புரிச் சங்கங்கம் ஆகியனவற்றின் ஆதரவில் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் திறமையான சித்திகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு பாராட்டுவிழா ஒன்று நடாத்தப்பட்டது. இவ்விழாவிற்கு எமது மன்றம் சார்பில் 30ஆயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டது.

• திருமதி. இரத்தினபூபதி சோமசுந்தரம் அவர்கள் கடந்த வருடம் மறைந்த தமது கணவர் அமரர் சோமசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக நன்கொடையாக சுமார் $3000.00 டொலர்களை எமது மன்றத்திற்கு வழங்கியிருந்தார். இவ்வுதவிப்பணம் முழுவதும் கட்டாயமாக வறியோர்களையே சென்றடைய வேண்டுமென்ற அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கீழ்வரும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

* காரைநகர் மாணவர் நூலகத்திற்கு அன்பளிப்பாக $2000.00 டொலர்களும்

 * காரைநகர் அரசாங்க அதிபர் பணிமனையினால் சர்வதேச வறிய சிறுவர்கள், முதியோர் தினத்தையொட்டி சுமார் 1இலட்சம் ரூபா பெறுமதிக்கு வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் முதியோர்களுக்கு உடுபிடவைகளும் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை காரை அரசாங்க அதிபர் நேரடியாக வறியோர்களை இனம்கண்டு இவ்வுதவிகளை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

* களபூமி விளானையில் இயங்கிவரும் திருமதி. ராசமலர் நடராசா அவர்கள் நடாத்திவரும் விளானை முத்தமிழ் பேரவைக்கு ரூபா20,000.00 வழங்கப்பட்டது. இப்பேரவையில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இலவச சங்கீத, மிருதங்க. பரதநாட்டிய வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.

* மற்றும் வாழ்வாதார வசதி குறைந்த அருட்செல்வி என்கின்ற வறிய குடும்பத்தினரிற்கு ரூபா 10,000.00 வழங்கப்பட்டது.

• டிசெம்பர் திருவாதிரை உற்சவ காலத்தில் காரைநகரில் வழமைபோல் மன்றத்தால் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டுவரும் உதவியாக மாணிக்கவாசகர் அன்னதானசபைக்கு 50,000 ரூபாய்கள் வழங்கப்பட்டது.

 • அத்துடன் மணிவாசகர் சபைக்கு 25,000 ரூபாய்கள் வழங்கப்பட்டது.

 • சுப்பிரமணியம் வித்தியாசாலைக்கு பாடசாலையின் அபிவிருத்திக்கு 50,000 ரூபாய்கள் வழங்கப்பட்டது.

 • கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்படும் உறவுக்குக் கரம் கொடுப்போம்…. திட்டத்தின் கீழ் மீண்டும் மூவருக்கு உதவித்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

* காநைகரைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வதிவிடமாகவம் கொண்ட கனகலிங்கம் சுதர்சன்  எனபவரது இரத்தப்புற்றுநோய் சிகிச்சைக்கு மிகக்குறுகிய காலத்திற்குள் கனடா, மற்றும் உலகம் வாழ் காரை மக்களும் வழங்கிய அன்பளிப்புக்கள் மூலம் பெறபட்ட நிதியான $12,443 டொலர்கள் அவருக்கு உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.

* இத்திட்டத்தின் கீழ் காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்த திரு.கணேசன் காந்தரூபன் என்பவரது மகன் கலைப்பிரியன்(இவருக்கு இருதயத்தில் துவார சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது) என்பவருக்கு சுமார் 92,800 ரூபாய்கள் நேற்று எமது மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 *மற்றவர் செல்வி வளர்மதி கந்தசாமி வயது 29. இவருக்கான சிறுநீரகமாற்றுச் சத்திர சிகிச்சையின் பின்னரான வைத்தியச் செலவுகளுக்கு கனடா வாழ் அன்புள்ளங்கள் வழங்கிய $725.00 டொலர்கள்(92,800 ரூபாய்கள்) முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிதியுதவிகளை தாமாக முன்வந்து சேகரித்துத் தந்த அன்புள்ளங்களுக்கும் மற்றும் தனியாக வழங்கிய அன்புள்ளங்களுக்கும் எமது அன்புகனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

• அஞ்சலி – மன்ற கொள்கைக்கு அமைய இங்கு அமரத்துவமடைந்த காரைநகரைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகளில் மன்ற உறுப்பினர்கள் நேரில் சமூகமளித்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது வழமைபோல் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றது.

 • இதில் முக்கிய விடயமாக ஜனவரி 2011இல் எமது மன்றத்தின் ஆஸ்தான வித்துவானும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் கீதத்தைப் பாடியவருமான எமது காரை மண்ணைச் சேர்ந்த கலைஞன் சங்கீத பூஷணம் காரை ஆ.புண்ணியமூர்த்தி அவர்களின் திடீர் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

 • அத்துடன் ஜனவரி 2012இல் எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.கருணாகரன் அவர்களின் மறைவு செய்தியும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. எமது மன்றம் அன்னாரின் மறைவுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது நன்றிகள்: எமது நிர்வாகசபை கடந்த 4வருடங்களாக இம்மன்றத்தில் பல இன்னோரன்ன சேவைகளை வழங்கியிருந்ததை யாவரும் அறிவீர்கள். இக்கால கட்டப்பகுதியில் எமது மன்றத்தின் மாபெரும் வளர்ச்சியானது காரைநகர் மக்கள் அனைவரையும் சற்றே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது என்பதே நிஜமாகும். இக்கால கட்டப்பகுதியில் இணையத்தளம்  மூலம் எமது மன்றம் பாரிய வளர்ச்சியடைந்தமை பெரு வெற்றியாகும்.

 • தயவுசெய்து இனிவரும் காலங்களில் வரும் நிர்வாக சபைகளும் கடமை தவறாது இம்மன்றத்தின் செயற்பாட்டில் தன்னலம் கருதாது செயற்பட்டு வருங்காலத்தில் நாமும் எமது எதிர்கால சந்ததியினரும் ஓர் ஒற்றுமைபெற்ற சமுதாயமாக மாற்ற உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

• இக்கால கட்டத்தில் என்னுடன் சகல விதத்திலும் ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து சக நிர்வாகசபை உறுப்பினர்கள், போசகர் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

• மற்றும் பல வழிகளிலும் உதவி செய்த, விளம்பரதாரர்களுக்கும், வர்த்தகபெருமக்களுக்கும், தொண்டர்கள், பழைய நிர்வாக சபையினர்களுக்கும், அனைத்துக் கனடா வாழ் காரை மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

"Working together is success"

மலர். குழந்தைவேலு
செயலாளர்-கனடா காரை கலாச்சார மன்றம்
24.02.2013.

Oct 27 2010 Projects

Oct 24, 2010 – இல் கனடா காரை கலாசார மன்றம் காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் திரு. சிவானந்தராஜா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஒரு Multi Media Projector ரூபா 144,000.00விற்கு காரை அபிவிருத்திச்சபை மூலம் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாணவர்களுக்கு நவீன கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னேற்றகரமாக நடாத்தக்கூடிய வகையில் இந்த உபகரணம் உதவுகின்றது.

Sept 28, 2010 – காரைநகரில் தரம் 5இல் புலமைப்பரிசில் பெற்ற 5மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு உதவியாக தலா 5000ரூபாய்களும், அத்துடன் சமுர்த்தி சிறுவர் கழகங்களின் மாவட்ட கலாசார போட்டிகளின் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள ஆறு காரைநகர் மாணவிகளுக்கும் தலா 3000ரூபாய்களும் கனடா காரை கலாச்சார மன்றத்தினால் எதிர்வரும் வாரத்தில் காரை அபிவிருத்திசபையினூக வழங்கப்படவுள்ளது.

Aug 14, 2010 – காரைநகரில் கல்வியை ஊக்குவிக்குமுகமாகவும் பொதுமக்களின் பாவனைக்காகவும் ஒரு பொதநூலகம் அமைப்பது பற்றி பொதுக்கூட்டம் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி கனடா காரை கலாசார மன்றத்தினால் கூட்டப்பட்டது. இக் கூட்டத்தில் ஏற்கனவே பொதுநூலகத்துக்கென கொள்வனவு செய்யப்பட்ட காணியில் பொதுநூலகம் அமைப்பதற்கு கூட்டத்திற்கு வந்திருந்த அநேகரின் ஆதரவுடன் உதவிகளை மேற்கொள்ள, மற்றும் நிதிசேகரித்தல் சம்பந்தமாக இதற்கென மன்றத்தினால் 10 பேர் கொண்ட ஒரு உபகுழு அமைக்கப்பட்டது. இந்த உபகுழுவின் ஒருங்கிணைப்பாளராக திரு. ராஜேந்திரம் வேலுப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் மாதங்களில் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Aug 6, 2010 – யா/ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலத்தின் ஸ்தாபகர் தினமும் பரிசளிப்பு விழாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம்திகதி நடைபெற்றது. இந்தவிழாவிற்கான உதவித்தொகையான ரூ50,000ஐ கனடா காரை கலாச்சார மன்றம் வழங்கியிருந்தது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிறைவேற்றப்பட்ட பணிகள் – 2009 August 9 – June 26, 2010.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிறைவேற்றப்பட்ட பணிகள் –  2009 August 9 – June 26, 2010.

இந்தப் பணிகள் அனைத்தும் காரை அபிவிருத்திச்சபை மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
• 2009ம் ஆண்டுக்கான வைத்தியக்கலாநிதி டாக்டர். விஜயரட்ணம் விசுவலிங்கம் அவர்களின் தாயார் அமரர் திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்தமாக தரம் 6முதல் க.பொ.த வரை கல்வி பயிலும் வசதி குறைந்த திறமையான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் காரைநகரில் உள்ள 4பாடசாலைகளில் உள்ள  40 மாணவர்களுக்கு மாதா மாதம் ரூ.500.00 வீதம்; 12மாதங்களுக்கு வழங்கப்பட்டது.

• கடந்த வருட வன்செயல்களினால் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து காரைநகரிற்கு வந்திருந்த பாடசாலை சிறார்கள் சுமார் 500பேர் வரையில் காரைநகரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். இதில் 264 மாணவர்களும், 236 மாணவிகளும் அடங்குவர். காரைநகர் இந்துக் கல்லூரி 175, யாழ்ற்ரன் கல்லூரி 89, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை 51, பாலாவோடை அ.மி.த.க பாடசாலை 59, ஊரி 61, காரை மெய்கண்டான 13, வலந்தலை அ.மி.த.க பாடசாலை 40, வியாவில் அ.மி.த.க பாடசாலை 12. இந்த இடம்பெயர்ந்து காரைநகருக்கு வந்த பாடசாலை சிறார்களுக்கு 150,000.00ரூபாய்கள் பெறுமதியான சீருடைகள் 2009 October 30ம் திகதி காரை அபிவிருத்திசபையூடாக வழங்கப்பட்டது.
• காரைநகரில் வசிக்கும் வசதிகுறைந்த பல்கலைக்கழக மாணவர்கள், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யமுடியாமை காரணமாக காரை அபிவிருத்திசபையை நாடியுள்ளார்கள். இந்த மாணவர்களுக்கு உதவும் முகமாக எமது மன்ற இணையத்தளம்www. karainagar.com மூலமா கனடா வாழ் காரை அன்பர்களை கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களால் வழங்கப்பட்ட நிதிகள். அத்தோடு காரைநகரில் வசதிகுறைந்த சிறார்களும் இதில் அடங்குவர். இந்த உதவிப்பணம் வருடா வருடம், வருடத்தில் இருதடவைகள் மற்றும் மாதாந்தம் என்ற ரீதியில் உதவி வழங்குபவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும்.

• காரைநகரைச்சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரனின் மேற்படிப்பு உதவிக்காக மாதாந்தம் 5000.00ரூபாய்கள் 4வருடங்களுக்கு(240,000.00ரூபாய்கள்) 2010 January இல் திரு. சிவகுமார் கனகசுந்தரம் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

• குழந்தை நகுல்ராஜ் நக்கீரன், வயது 18மாதங்கள் இவர் கடந்த போரில் தனது பெற்றோரை இழந்துவிட்டார். தற்சமயம் இவர் தனது சித்தியின் பராமரிப்பில் உள்ளார். ஆனால் அந்த சித்தியின் கணவரும் கடந்த போரில் இறந்துவிட்டார். இப்படியான சூழ்நிலையில் சித்தியும் இந்த குழந்தையும் எந்தவித வருமானமும் இல்லாமல் உள்ளார்கள். எனவே இக்குழந்தையின் பராமரிப்புச் செலவிற்கு எமது கனடா-காரை கலாச்சார மன்றத்தை அணுகியுள்ளார்கள். கடந்த வன்செயலில்  தனது பெற்றோரை இழந்த 18மாதக் குழந்தை நக்கீரனுக்கு 18வயது வரைக்குமான  ஒர்  நீண்ட கால பராமரிப்பு  உதவியை கனடா வாழ் காரை அன்பர்  ஒருவர் மனமுவந்து வழங்க முன்வந்துள்ளார். இவருக்கு மாதம் ரூ.2000.00 வீதம் நீண்டகால உதவித்திட்டமாக அவருடைய 18வயது வரைக்கும் இந்தப்பணம் வழங்கப்படும். (18வயது வரைக்குமான மொத்த பராமரிப்புச் செலவு 4இலட்சத்து 32ஆயிரம் ரூபாய்கள்).
  அத்தோடு இதே குழந்தை நகுல்ராஜ் நக்கீரனுக்கு திரு. செல்வராஜா தம்பையா 10,000.00ரூபாய்களும், திரு. ஜெயச்சந்திரன் தம்பிராஜா 5,000.00ரூபாய்களும் வழங்கியுள்ளனர்.
• சிறுவன் நகுல்ராஜ் நக்கீரனுக்கு வழங்கிய அதே அன்பர்  அடுத்த வருடம் பல்கலைக்கழகம் செல்லவிருக்கும் மருத்துவ பீட மாணவன் பிறேம்குமார் பிரசாத்திற்காக மாதம் 5000.00ரூபா 4வருடங்களுக்கு(240,000.00ரூபாய்கள்) வழங்கும்  உதவித் திட்டத்திற்கும் தனது உதவியை வழங்க முன்வந்துள்ளார். இந்த மாபெரும் உதவியை அளித்த அந்த அன்பருக்கு கனடா-காரை கலாச்சார மன்றம் தனது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
• காரைநகரைச் சேர்ந்த கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலத்தில் சென்ற வருடம் 5ம்வகுப்பில் புலமைப்பரிசில் பெற்ற மாணவன் ஜனகாந்தன் ஏகாம்பரம். இவர் தனது மேற்படிப்பை யாழ் இந்துக்கல்லூரியில் கற்று வருகின்றார். இவரது மேற்படிப்பு(A/L) முடியும் வரைக்கான உதவியாக மாதாந்தம் 3000.00ரூபாய்கள்(6வருடங்கள் ரூ.216,000.00) கனடா காரை அன்பர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளது.

• காரைநகரைச் சேர்ந்த செல்வி சிவதர்சினி இரத்தினம் என்பவர் யாழ்ப்பாண பல்கலைக்ழகத்தின் துணைப்பிரிவான இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் இசைத்துறையில் கல்வி பயின்று வருகின்றார். இவரது குடும்பநிலைமை காரணமாக இவருக்கு மாதாந்தம் 5000.00ரூபாய்கள் 4வருடங்களுக்கு(240,000.00ரூபாய்கள்)  ஜெயந்தி துரைசாமி என்பவரால் ஜுன் மாதம் தொடக்கம் வழங்கிவருகின்றது.

• 19-2-2010இல் ஊரி பாடசாலைக்கு மின்இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒரு இலட்சம் ரூபாய்கள் காரை அபிவிருத்திச்சபை மூலமாக வழங்கப்பட்டது.

• இதே பாடசாலையில் கல்வி பயிலும் தாய், தந்தையரை இழந்த மற்றும் வசதி குறைந்த மாணவர்களுக்கான உதவித்தொகை பாடசாலை அதிபரின் பெயர்ப் பட்டியல் எமது மன்றத்திற்கு கிடைத்த பிற்பாடு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

• 2010ம் ஆண்டுக்கான வைத்தியக்கலாநிதி டாக்டர். விஜயரட்ணம் விசுவலிங்கம் அவர்களின் தாயார் அமரர் திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப்பரிசில் காரைநகரில் உள்ள 4பாடசாலைகளில் உள்ள  திறமையான வசதிகுறைந்த 40 மாணவர்களுக்கு மாதா மாதம் ரூ.500.00வீதம்; 12மாதங்களுக்கு வழங்கப்பட்டது.

 

நிறைவேற்றப்பட்ட 2007 – 2008 செயல் திட்டங்கள்

நிறைவேற்றப்பட்ட 2007 – 2008 செயல் திட்டங்கள்

1. கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ரொரன்ரோ வைத்தியசாலைகளுக்கு உதவும் நிதியுதவி நடை பவனியில் முதற்தடவையாக எமது மன்றம் பங்குபற்றியதுடன் மன்றத் தொண்டர்களால் ஏறத்தாழ ஐநூறு டொலர்கள் ($500) நிதிசேகரிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

2. கிழக்கு மாகாண அகதிகளுக்கு உதவும் நிதிசேகாப்பு நிகழ்வுகளில் (Car Wash) கனடா- தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு இரண்டாயிரத்து எண்ணூற்று முப்பது டொலர்கள் ($2830) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

3. கனடியத் தமிழர் விளையாட்டுத் துறையினரால் நடத்தப்பட்ட கிளித்தட்டுப் போட்டிகளிலும், கனடியத் தமிழ் வானொலியினால் (CTR) நடத்தப்பட்ட "நட்சத்திரவிழா" கிளித்தட்டு போட்டிகளிலும், எமது மன்றத்தின்; ஆண்கள் அணி; பங்குபற்றி வெற்றி பெற்றது.

4. ஒன்பதாவது ஆண்டாக கோடைகால ஒன்று கூடல் நிகழ்வு பூங்காவில் வழமைபோல நடத்தப்பட்டது.

5 மன்ற இணையத்தளம்; (www.karainagar.com) புதுப் பொலிவுடன் மறுசீரமைக்கப் பட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இத்தளம் அமைக்கப்பட்டது.

6. காரைநகருடன் தொடர்புடைய ஒருவர் உலகின் எப்பாகத்தில் மரணமடைந்திருந்தாலும் மன்ற அங்கத்தவர் ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட்டு மன்ற நிர்வாகத்திற்கு அறியத்தரப்பட்ட மரண அறிவித்தல்கள்; மன்ற இணையத் தளத்தில் பிரசுரிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது.

6. எட்டாவது ஆண்டாக "காரை வசந்தம்" கலைவிழா சிறப்பாக நடத்தப்பட்டதுடன்     "காரை வசந்தம்" சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

• தமிழ்ச்சிறார்களிடையே பேச்சுப்போட்டி, பண்ணிசைப் போட்டி என்பன நடத்தப்பட்டு  இவ்விழாவில் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

7.இடைநிறுத்தப்பட்டிருந்த,காரைநகரில். பாடசாலையைவிட்டு விலகிய மாணவர்களுக்கான கணனிக் கற்கைநெறி தொடர்ந்து நடைபெற மாதாந்தம் இலங்கை ரூபா ஏழாயிரம் (ரூபா 7 000) உதவுவதற்கு ஆவன செய்யப்பட்டது.

8. கலாநிதி ஆ. தியாகராஜா ம.ம.வி வருடாந்த பரிசளிப்பு விழா நடைபெற ஐம்பதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா50,000) உதவப்பட்டது.

9. காரைநகரில் கல்வி, வளர்ச்சிக்காக மூவாயிரம் கனடிய பொலர்கள் ($3000) மூன்று லட்சத்து இருபத்தோராயிரம் இலங்கை (ரூபா 3 21,000) காரை அபிவிருத்திச் சபையினூடாக அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிதி பின்வரும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

1.  எமது மன்ற அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபையினால் 'கல்வி அழகே அழகு' என்னும் தொனிப் பொருளில் நடத்தப்படும் 'கல்வி தினத்திற்கு' ஒரு லட்சம் இலங்கை ரூபா (ரூபா 1 00 000) ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தினத்தில் பின்வரும் பரிசுகள் வழங்கப்படும்.

• காரைநகரில் கல்வி பயிலும் தரம் ஐந்து முதல் க.பொ.த உ-த வரை அரச பொதுப்பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கும் பணப்பரிசு வழங்கி ஊக்குவித்தல்

• காரைநகரில் கல்வி பயின்று ஆங்கிலத்தில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாரட்டுப் பரிசு வழங்குதல்

• கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் கல்விபயின்று பொறியியல் பீடத்திற்குத்தெரிவுசெய்யப்பட்ட செல்வன் பேரம்பலம் புஸ்பராசாவின் கல்விச்செலவுக்கு  ஐம்பதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா 50, 000) ஊக்குவிப்புப் பணப்பரிசு வழங்குதல்.

காரைநகரைச் சேர்ந்த, யாழ் மாவட்டப் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு பரிசு வழங்குதல்.

• காரைநகரைச் சேர்ந்த மூத்த அதிபர்கள், கல்வியாளர்களைப் பாராட்டிக் கௌரவித்தல்

2. காரைநகரில் சிறப்பாக இயங்கிவரும் ஒரே ஒரு நுண்கலைக் கல்வி நிலையமான கிழவன்காடு கலா மன்ற ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்குவதற்கு ஐம்பதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா 50, 000) ஒதுக்கப்பட்டுள்ளது.

3. காரைநகரில் கல்வி பயிலும் க.பொ.த சா.த, மற்றும் க.பொ.த உ.த வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக ஆங்கிலக் வகுப்புகளை நடத்துவதற்கு ஒரு லட்சத்து இருபதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா 1 20, 000) ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : அரச பொதுப்பரீட்சைக்கான வினா விடை நூல்களைப் பாடசாலைகளுக்கு வழங்குதல், ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் ஆகிய கோரிக்கைகள் பின்வரும் காரணங்களுக்காக காரை அபிவிருத்தி சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அ) கல்வித் திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 'தர உள்ளீடு' (Quality Input) என்னும் நிதியிலுருந்து தேவையான நூல்கள் கொள்வனவு செய்யபடுவதாக காரை அபிவிருத்தி சபை நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டது.

ஆ) அண்மையில் கல்வித்திணைக்களத்தினால் புதிய ஆசிரிய நியமனங்கள் போதியளவு வழங்கப் பட்டுள்ளதாகவும், அத்துடன் தொண்டர் ஆசிரிய நியமனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காரை அபிவிருத்தி சபையினால் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக மேலதிக நிதி மேற்கூறப்பட்ட இறுதி இரு புதிய திட்டங்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது.

10. 18 வது ஆண்டாக றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் "திருவாதிரைத் திருவிழா"      சிறப்பாக நடத்தப்பட்டது.

2008
1. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான அமரர். தியாகராஜா மகேஸ்வரன் அவர்களுக்கான இரங்கற் கூட்டத்தினை எமது மன்றமும், ஆதி அருள் நெறி மன்றமும் இணைந்து நடத்தியிருந்தது.

2. காரைநகரில் கல்விசார் செயற்பாடுகளுக்கான தொடர்ச்சியான உதவிகளை வழங்குவதற்காக "காரை-கல்வி நம்பிக்கை நிதியம"; என்ற நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதற்பகுதியாக, காரைநகரில் தரம் 6 முதல் க.பொ.த சா-த வரை கல்வி பயிலும் வசதி குறைந்த, திறமையான  40 மாணவர்களுக்கு உதவுவதற்க குழந்தைகள் வைத்திய நிபுணர் டாக்டர்.வி.விஜயரத்தினம் அவர்களின் தாயார் நினைவாக "அமரர்.திருமதி.ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப்பரிசில்" என்ற புலமைப்பரிசில் வழங்குவதற்கு இரண்டு லட்சத்து நாற்பத்தையாயிரம் இலங்கை ரூபா (ரூபா 2 45 000) காரை அபிவிருத்தி சபையினூடாக அன்பளிப்புச் செய்யப்பட்டது.

3. அமரர்.தி.மகேஸ்வரனின் 45 ம் நாள் நினைவு தினத்தையொட்டி மாபெரும் நினைவு வணக்க நிகழ்வினை எமது மன்றமும் கனடியத்தமிழர் பேரவையும் இணைந்து நடத்தியிருந்தது.

4. காரைநகர் அபிவிருத்திச் சபை செயலாளர். சேவையின் சிகரம். அமரர் ஜெயசிங்கம் தில்லையம்பலவாணர் அவர்களுக்கான இரங்கற் கூட்டம் எமது மன்றத்தினால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது அன்னாரின் இறுதிக்கிரிகைகளுக்கான செலவுகளுக்காகச் ஆயிரம் டொலர்கள் ($1000)  இலங்கை ரூபா 1 09 500 சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

5. கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ரொரன்ரோ வைத்தியசாலைகளுக்கு உதவும் நிதியுதவி நடை பவனியில் வழமை போல எமது மன்றம் பங்குபற்றியதுடன் மன்றத் தொண்டர்களால் சேகரிக்கப்பட்ட ஐநூற்றி இருபத்திஐந்து டொலர்கள் ($525) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்