Tag: காரைச் செய்திகள்
எஸ் கே நாதன் நற்பணி மன்றத்தினால் வறிய குடும்பங்களுக்கு காணிகள்.
எஸ் கே நாதன் நற்பணி மன்றத்தினால் வறிய குடும்பங்களுக்கு காணிகள்.
காரைநகர் பிட்டியெல்லை கிராமத்தில் கடந்த பல வருடங்களாக வெள்ளத்தினால் பாதிப்படைந்த 09 குடும்பங்களின் அவலநிலையை கடந்தவருட வெள்ள அனர்த்தத்தின் போது நேரடியாக பார்வையிட்ட எஸ் கே நாதன் நற்பணி மன்றத்தின் பணிப்பாளர் பரோபகாரி திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் பிறிதொரு இடத்தில் அவர்கள் வீடமைப்பதற்கான காணிகளை வாங்கி அன்பளிப்பு செய்தார். பயனாளிகளுக்கான காணி உறுதிகள் இன்று 17.08.2016 பிட்டியெல்லை கிராமத்தில் நடைபெற்ற வைபவத்தில் வழங்கப்பட்டது.
கடந்த பல மாதங்களாக எஸ் கே நாதன் நற்பணி மன்றத்தினரால் 150க்கு மேற்பட்ட வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றமையும் பல வறியமாணவர்களுக்கு கல்விக்காக மாதாந்தம் உதவிப்பணம் வழங்குகின்றமையும் பலரது பாராட்டையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடம்
தேசிய சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடம்
தேசிய சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு புற்றுநோய் தடுப்புத் தொடர்பான சுவரொட்டி வடிவமைப்புப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் புலேந்திரன் கஜீபன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் தேசிய புற்று நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சுடன் இணைந்து சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி நாடாளவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்டது. "புற்றுநோய் தடுப்பு" எனும் கருப்பொருளில் முதுநிலைப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட மேற்படி போட்டி 11.07.2016 அன்று நடைபெற்றது.
இப் போட்டியில் காரை இந்து மாணவன் செல்வன் புலேந்திரன் கஜீபன் பங்குபற்றி யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்றுக்கொண்டார்.
மேற்படி மாணவனுக்குரிய பரிசில் தின நிகழ்வு 06.08.2016 அன்று கொழும்பு பொது நூல்நிலையத்தில் காலை 9.00 மணிக்கு கௌரவ சுகாதாரஇ போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்தின தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் செல்வன் புலேந்திரன் கஜீபனையும், மாணவனை சகல வழிகளிலும் ஊக்குவித்த கல்லூரியின் ஓவிப்பாடத்துறை ஆசிரியரான திரு இராசரத்தினம் ஜீவராஜ் அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.
செல்வன் புலேந்திரன் கஜீபன் பெற்றுக்கொண்ட வெற்றிக்கேடயம், சான்றிதழ் ஆகியவற்றின் பிரதியை கீழே காணலாம்.
யாழ் நல்லூர் கந்தசாமி ஆலய நாவலர் மணி மண்டபத்தில் 09-08-2016 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காரைநகர் பிரதேச அறநெறி மாணவர்களின் நிகழ்வுகள்!
யாழ் நல்லூர் கந்தசாமி ஆலய நாவலர் மணி மண்டபத்தில் 09-08-2016 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காரைநகர் பிரதேச அறநெறி மாணவர்களின் நிகழ்வில் திக்கரை முருகன் அறநெறி,பாலாவோடை அம்மன் அறநெறி,தோப்புக்காடு அறநெறி, கிழவன்காடு கலாமன்ற அறநெறி, சிவகாமி அம்மன் அறநெறி. மாணவர்கள் பங்குபற்றினார்கள்.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.பாபு தேவநந்தினி ( பிரதேச செயலர் காரைநகர்)மற்றும் திருமதி.ஞானேஸ்வரி(இந்து கலாசார உத்தியோகத்தர் காரைநகர்)மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் வருகை தந்திருந்தனர்.
காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலய ஆடிப்பூர திருவிழா வெள்ளிக்கிழமை 05-08-2016 அன்று நடைபெற்றது!
காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலய ஆடிப்பூர திருவிழா பால்குடபவனி வெள்ளிக்கிழமை 05-08-2016 காலை 8.00 மணிக்கு தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடபவனி ஆரம்பமாகி ஊரி பாலாவோடை பிரதான வீதி ஊடாக பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர்.எடுத்து வரப்பட்ட பாலினால் அம்மனுக்கு அபிஷேகமும் பூஜையும் இடம்பெற்று தெடர்ந்து திருக்கல்யாண நிகழ்வும் இடம்பெற்றன அத்துடன் அம்மன் உள் வீதி உலா காட்சியும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றன.
கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இறுதிக் கல்விக் கருத்தரங்கு!
கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இறுதிக் கல்விக் கருத்தரங்கு.
கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளராக கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் த.தயானந்தன் கலந்துகொணடார்;.
யாழ்ப்பாணத்தில் இரு நூல்களின் அறிமுக விழா!
யாழ்ப்பாணத்தில் இரு நூல்களின் அறிமுக விழா
ஐ.தி.சம்பந்தன்னின்
'தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்படட அநீதிகள் ஒரு வரலாற்றுப் பதிவு'
நூல் அறிமுக விழா யாழ் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில்31-07-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி மங்கள விளக்கினை நல்லை ஆதின முதல்வர்,கலாநிதி ஆறு .திருமுருகன்(துணைத் தலைவர் அகில இலங்கை இந்து மாமன்றம்)பண்டிதர் சு.வேலாயுதம்பிள்ளை(ஓய்வுநிலை அதிபர் காரைநகர் இந்தக் கல்லூரி),திருமதி.வீரமங்கை யோகரத்தினம் (விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்),ஐ.தி.சம்பந்தன் (நூலாசிரியர்). ஏற்றி வைத்தனர். இவ்விழாவின் பிரதம விருந்தினராக கௌரவ மாவை சேனாதிராசா பா.உ (தலைவர் தமிழரசுக் கட்சி)
சிறப்பு விருந்தினராக கௌரவ த.சித்தார்த்தன் பா.உ,கௌரவ சி.ஸ்ரீதரன் பா.உ மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.நூலின் முதல் பிரதியை ESP நாகரத்தினம் தொழில் அதிபர் பெற்றுக்கொண்டார்.சிறப்பு பிரதியை கௌரவ மாவை சேனாதிராசா பா.உ பெற்றுக்கொண்டார்.அத்துடன் பிரதமர் உரையும் நிகழ்த்தினார்.மற்றும் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி வழங்கும்"பண்டரா வன்னியன் "வரலாற்று நாடகமும் இடம் பெற்றது. திரு. ஐ.தி.சம்பந்தன் (நூலாசிரியர்) ஏற்புரை வழங்கி விழாவினை நிறைவுசெய்தார்.
அறநெறி மாணவர்களுக்கான பரிசில்கள் திக்கரை இந்து இளைஞர்கள் மன்றத்தினால் வழங்கப்படடன!
அறநெறி மாணவர்களுக்கான பரிசில்கள் திக்கரை இந்து இளைஞர்கள் மன்றத்தினால் வழங்கப்படடன.
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் கடந்த பூங்காவன திருவிழாவில் வழங்கப்பட இருந்த அறநெறி மாணவர்களுக்கான பரிசில்கள் வெள்ளிக்கிழமை 29-07-2016 திக்கரை இந்து இளைஞர்கள் மன்றத்தினால் ஆலய மணி மண்டபத்தில் ஆலயத்தின் குரு ஸ்ரீ சரவணபவானந்தசர்மா அவர்களினால் மாணவர்களுக்கு வழங்கப்படடன.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம்
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் அகில இலங்கை ரீதியாக உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கவனமாகப் பயன்படுத்துவோம்" எனும் கருப்பொருளில் சுவரொட்டி தயாரித்தல் போட்டி 01.10.2015 அன்று 14–18 வயதுப் பிரிவு மாணவர்களுக்கிடையே நடைபெற்றது.
இப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் புஸ்பராசா சபிதன் மேற்பிரிவில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டார்.
தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் செல்வன் புஸ்பராசா சபிதன் அவர்களையும் செல்வன் சபிதனை சகல வழிகளிலும் ஊக்குவித்த கல்லூரியின் ஓவியப் பாடத்துறை ஆசிரியரான திரு இராசரத்தினம் ஜீவராஜ் அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.
காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு
காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில்
பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு
கனடா, ஐக்கிய அமெரிக்க இராச்சியம் ஆகிய நாடுகளில் வதியும்
அன்பார்ந்த காரை இந்துவின் பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே!
காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு
"அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை" என்கின்ற 250 மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான எதிர்காலச் சிறார்களுக்கு பெரும் பயனை வழங்கக்கூடிய அரசின் பாரிய உதவித் திட்டம் எமது கல்லூரிக்கும் கிடைத்துள்ளது என்கின்;ற உவப்பான செய்தியை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறைந்தது 48 பரப்புக் காணி உடனடியாகத் தேவைப்படும் நிலையில் கல்லூரியை அண்மித்த பகுதியில் உள்ள பொருத்தமான காணிகளை இனம்கண்டு அவற்றினை கொள்முதல் செய்வதற்கான முயற்சியில் கல்லூரிச் சமூகம் ஈடுபட்டிருக்கின்றது. இக்காணிகளை கொள்முதல் செய்வதற்கு உதவுமாறு விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு நிலத்திலும் புலத்திலும் உள்ள அமைப்புக்களும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் நன்கொடைகளை தாராள சிந்தையுடனும் கல்லூரி மீதான விசுவாச உணர்வுடனும் வழங்கி வருவதானது, குறித்த திட்டம் நிறைவுசெய்யப்பட்டு அதன் பயனை எமது சிறார்கள் அனுபவிக்கின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகவுள்ளது.
புழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைஇ பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை ஆகியவற்றின் உதவியுடன்; கல்லூரிக்கு அணித்தாகவுள்ள 5 1/2 பரப்புக் காணி ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை காணிக் கொள்வனவுக்கு மேலும் உதவும் பொருட்டான நிதி சேகரிப்புத் திட்டத்தினை கனடாவிலும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திலும் வதியும் பழைய மாணவர்கள்இ நலன் விரும்பிகள் மத்தியில் சென்ற மே மாதம் முதல் ஆரம்பித்து செயற்படுத்திவருகின்றது. இத்திட்டம் குறித்த விபரங்களை மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் தெரியப்படுத்தி அவர்களது ஆதரவினைப் பெற்று வருகின்றோம். பின்வரும் நான்கு வழிகளில் அவர்கள் தமது ஆதரவினை வழங்கிவருவது எமக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிப்பதாகவுள்ளது.
1. இயன்றளவு நன்கொடையினை வழங்குதல்
2. நிதியுதவி நிகழ்ச்சியாக செப்ரெம்பர் 17ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள விஜே ரிவி சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் இசைக் கச்சேரிக்கான நுழைவுச் சீட்டொன்றினைப் பெற்றுக்கொள்ளல்
3. நன்கொடையினை வழங்குவதுடன் நுழைவுச் சீட்டொன்றினையும் பெற்றுக்கொள்ளுதல்
4. இசைக் கச்சேரிக்கான அனுசரணையினை வழங்குவதுடன் நன்கொடையினையும் வழங்குதல்;
நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் 250.00 டொலர்களுக்கு மேலான நன்கொடையினை வழங்குபவர்களுக்கு இசைக் கச்சேரிக்கான இலவச நுழைவுச் சீட்டினை வழங்கி வருகின்றோம்.
நன்கொடைகளைப் பெற்றுக்கொள்வதுஇ நிதியுதவி நிகழ்ச்சி ஆகிய இரண்டு முயற்சிகள் ஊடாகவும் முப்பதினாயிரம் (30,000.00) டொலர்களைத் திரட்டி தேவைப்படும் காணியின்; ஒரு பகுதிக் கொள்வனவுக்கு உதவுவது என்ற இலக்குடன் எமது சங்கம் செயலாற்றி வருகின்றது.
எமக்கு அறிவையும்; ஒழுக்கத்தையும் ஒருங்கே ஊட்டி வளர்த்த காரை இந்து அன்னையின் அரவணைப்பில் இருந்த காலமே எமது வளமான வாழ்வினை நிர்ணயம் செய்வதற்கு வழிகோலியது என்பதை நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்து வரலாற்று முக்கியத்துவம் மிக்க கல்லூரிக்கான உதவிப் பணியில் பங்கேற்று வருகின்ற பழைய மாணவர்களஇ; நலன் விரும்பிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதுடன் தொடர்புத் தகவல்கள் கிடைக்காத நிலையில் இதுவரை எம்மால் தொடர்பு கொள்ளப்படாதவர்கள் இவ்வறிவித்தலைப் பார்வையிட்டதும் தமது உதவிகளை விரைந்து வழங்கி உதவுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கின்றோம். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதியுடன் இந்நிதி சேகரிப்புச் செயற்பாடு நிறுத்தப்படவிருப்பதால் அதற்கு முன்னதாக தங்களது நன்கொடைகளை வழங்கி உதவுவீ;ரகள் என எதிர்பார்க்கின்றோம்.
திட்டம் குறித்த விபரங்களை அறியவும் தமது உதவிகளை வழங்கவும் விரும்புவோர்களுக்கான தொடர்புத் தகவல்கள்:
தொலைபேசி இலக்கங்கள்: (647)532-6217 (416)804-0587 (647)639-2930
மின்னஞ்சல் முகவரி: karaihinducanad@gmail.com
தாங்கள் வழங்கத் தீர்மானிக்கும் நன்கொடையினை மேற்குறித்த தொலைபேசி இலக்கங்களுள் ஒன்றுடன் அல்லது; மேற்குறித்த மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்புகொண்டு அறியத்தந்தால் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள்;; தங்களுடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும்.
கடன் அட்டையை (Credit Card)) பயன்படுத்தி PayPal வழியாக நன்கொடையினை வழங்க விரும்புவோர் www.Karaihinducanada.com இணையத்தளத்திற்கு சென்று PayPal இணைப்பினை அழுத்தி வழங்கலாம்.
நன்றி.
பழைய மாணவர் சங்கம் – கனடா
காரை இந்து மாணவன் செல்வன் சி.கோகுலன் மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் மூன்றில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு
காரை இந்து மாணவன் செல்வன் சி.கோகுலன் மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் மூன்றில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் நீளம் பாய்தல், முப்பாய்தல் 400M ஒட்டம் ஆகிய மூன்று போட்டிகளிலும் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் வெற்றி பெற்று தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிக்குத் தெரிவாகி கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையேயான மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு 14.07.2016 15..07.2016, 16.07.2016 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் துரையப்பா ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
14.07.2016 அன்று இடம்பெற்ற 21 வயதின் கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் 6.48M நீளம் பாய்ந்து 3ம் இடத்தையும், 15.07.2016 அன்று இடம்பெற்ற 21 வயதின் கீழ் ஆண்களுக்கான முப்பாய்தல் போட்டியில் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் 13.59M நீளம் பாய்ந்து 3ம் இடத்தையும், 16.07.2016 அன்று இடம்பெற்ற 21 வயதின் கீழ் ஆண்களுக்கான 400அ போட்டியில் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் 4ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருந்தார்.
செல்வன் கோகுலன் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் நீளம் பாய்தல், முப்பாய்தல், 400M ஆகிய மூன்று நிகழ்வுகளிலும வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் நடைபெறும் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளார்.
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையே கடந்த ஆண்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் செல்வன். சி.கோகுலன் 19 வயதிற்குக் கீழ்ப்பட்ட முப்பாய்ச்சல் போட்டியில் 2ஆவது இடம் பெற்று தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தகக்கது.
இம்மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று கல்லூரி அன்னைக்குப் பெருமை சேர்த்த செல்வன் சிவசக்திவேல் கோகுலனுக்கும் சகல வழிகளிலும் ஊக்குவித்த விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியரான திரு இன்னாசிமுத்து அன்ரன்விமலதாஸ் அவர்களுக்கும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் தமது பாராட்;டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.
சாதனை மாணவன் செல்வன் சி.கோகுலன்; வெற்றிப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வடமாகாண மெய்வல்லுநர் நிகழ்வில் பெற்றுக் கொள்வதைப் படத்தில் காணலாம்.
செல்வன் சிவசக்திவேல் கோகுலன் பெற்ற மாகாண மட்டச் சான்றிதழ்களின் பிரதிகளைக் கீழே காணலாம்.
கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு.
கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு.
கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளர்களாக பிரபல தேசியப் பாடசாலை ஆசிரியர்களான வே.அன்பழகன்,எஸ்.நிமலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காரைநகரில் உள்ள 11 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 160 மாணவர்கள் இக் கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.இறுதிக் கருத்தரங்கு எதிர்வரும் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.
காரைநகர் பாடசாலைகளில் கல்விபயிலும் தரம்-5 மாணவர்களுக்கான புலமைப்பரிட்சை வழிகாட்டல் கருத்தரங்கு 3 வது கட்டமாக 19.07.2016 செவ்வாய்க்கிழமை மு.ப 8.30 தொடக்கம் 2.30 மணி வரை காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
கருத்தரங்கு-3
காரைநகர் பாடசாலைகளில் கல்விபயிலும் தரம்-5 மாணவர்களுக்கான புலமைப்பரிட்சை வழிகாட்டல் கருத்தரங்கு 3 வது கட்டமாக 19.07.2016 செவ்வாய்க்கிழமை மு.ப 8.30 தொடக்கம் 2.30 மணி வரை காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இக் கருத்தரங்கிற்கு பிரதான வளவளராக ஆசிரியர் திரு.வே.அன்பழகன் அவர்கள் கலந்து கொள்வார். இக் கருத்தரங்கில் அனைத்து மாணவர்களையும் அழைத்து வந்து பயன் பெறுமாறும் தரம் 5ற்க்கு கல்வி கற்ப்பிக்கும் ஆசிரியர்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். இக் கருத்தரங்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்படுகிறது.
இங்ஙனம்
நிர்வாக சபையினர்
காரைநகர் அபிவிருத்திச் சபை
இலங்கைப் போக்குவரத்துச் சபை காரைநகர்சாலையின் புனரமைப்புப் பணிகளில் முதற்கட்டமாக பஸ்களை ஏற்றிப் பழுது பார்க்கும் இடமான றாம் புனரமைப்பதற்கான தொடக்க நிகழ்வு 06.07.2016 புதன்கிழமை காரைநகர் சாலையில் இடம்பெற்றது.
இலங்கைப் போக்குவரத்துச் சபை காரைநகர்சாலையின் புனரமைப்புப் பணிகளில் முதற்கட்டமாக பஸ்களை ஏற்றிப் பழுது பார்க்கும் இடமான றாம் புனரமைப்பதற்கான தொடக்க நிகழ்வு 06.07.2016 புதன்கிழமை காரைநகர் சாலையில் இடம்பெற்றது.
இதற்காக காரைநகர் சிவன்கோவில் வீதியைச் சேர்ந்த கந்தையா தியாகராசாவின் புதல்வர்களால் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக ஒருபகுதி நிதி வழங்கப்பட்டுள்ளது.
‘மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு
'மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு
கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளுள் பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்ற 'பரிசில் தினம்' நிகழ்வு கல்வியாளர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தினைப் பெற்று மாணவர்களின் முன்னேற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல முன்னணி நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
ஆற்றல் மிக்க மாணவர்கள் பாராட்டி ஊக்குவிக்கப்படுகின்றபோது சாதனையாளர்களாக மிளிரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டவரும் காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்று நிபுணத்துவம் மிக்க குழந்தைகள் மருத்துவராக கனடாவில் பிரபல்யம் பெற்று விளங்கி கல்லூரியின் புகழை நிலைநாட்டிவருகின்றவருமாகிய மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களால் ஒன்றரை மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு 2014ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டதே 'மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' ஆகும்.
காரைநகரில் சட்டரீதியாக அமைந்து விளங்கும் ஒரே நம்பிக்கை நிதியம் (Charitable Trust Fund) என்ற பெருமையைப்பெற்றுள்ள இந்நிதியத்திலிருந்து பெறப்படுகின்ற வருடாந்த வட்டிப் பணம் கல்லூரியின் வருடாந்த பரிசில் தினத்தினை தங்குதடையின்றி காலாகாலமாக தொடர்ந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இந்நிதியத்தின் ஊடாக செய்யப்பட்டுள்ளது. இந்நிதியத்தின் நிறுவுநரோ அன்றி கல்லூரியின் விசுவாசிகள் எவருமோ விரும்பும் சமயத்தில் இந்நிதியத்தில் மேலும் வைப்பீடு செய்யமுடியும் என சட்டஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாட்டுக்கு அமைய மேலதிகமாக அரை மில்லியன் ரூபாவினை நிதியத்தின் நிறுவுநர மருத்தவகலாநிதி; வி.விஜயரத்தினம் அவர்கள் வைப்பிலிட முன்வந்து அத்தொகையினை வங்கிக்கு அனுப்பிவைத்துள்ளார். இதன்மூலம் நிதியத்தின் வைப்புத்தொகை இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. இந்நிதியத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படும் வட்டித்தொகையிலிருந்து பரிசில் தினத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்தபின்னர் உள்ள மிகுதிப்பணத்தினை கல்லூரியின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தமுடியும் என்கின்ற ஏற்பாடும் நிதியத்தின் சட்ட ஆவணத்தில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு உதவிவருகின்ற மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களை கல்லூரிச் சமூகமும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பாராட்டி நன்றிகூறுகின்றது.
பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம் 07.08.2016 அன்று காரைநகரில் உள்ள விளையாட்டுக்கழகங்களுடன் சந்திப்பு!
பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம் 07.08.2016 அன்று காரைநகரில் உள்ள விளையாட்டுக்கழகங்களுடன் சந்திப்பு!
காரைநகர் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு கழகத்திற்கு ரூபாய் 50,000.00 வரையிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிதி காரைநகர் பிரதேச செயலர் ஊடாக அவர்களின் தேவைக்கு ஏற்ப பொருட்களை வழங்குவதற்கான ஏற்ப்பாட்டினை செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். அத்துடன் விளையாட்டுக் கழகங்களின் கோரிக்கைகளை எழுத்து மூலமாகவும் பெற்றுக்கொண்டனர்.