யாழ்ப்பாணத்தில் இரு நூல்களின் அறிமுக விழா
ஐ.தி.சம்பந்தன்னின்
'தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்படட அநீதிகள் ஒரு வரலாற்றுப் பதிவு'
நூல் அறிமுக விழா யாழ் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில்31-07-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி மங்கள விளக்கினை நல்லை ஆதின முதல்வர்,கலாநிதி ஆறு .திருமுருகன்(துணைத் தலைவர் அகில இலங்கை இந்து மாமன்றம்)பண்டிதர் சு.வேலாயுதம்பிள்ளை(ஓய்வுநிலை அதிபர் காரைநகர் இந்தக் கல்லூரி),திருமதி.வீரமங்கை யோகரத்தினம் (விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்),ஐ.தி.சம்பந்தன் (நூலாசிரியர்). ஏற்றி வைத்தனர். இவ்விழாவின் பிரதம விருந்தினராக கௌரவ மாவை சேனாதிராசா பா.உ (தலைவர் தமிழரசுக் கட்சி)
சிறப்பு விருந்தினராக கௌரவ த.சித்தார்த்தன் பா.உ,கௌரவ சி.ஸ்ரீதரன் பா.உ மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.நூலின் முதல் பிரதியை ESP நாகரத்தினம் தொழில் அதிபர் பெற்றுக்கொண்டார்.சிறப்பு பிரதியை கௌரவ மாவை சேனாதிராசா பா.உ பெற்றுக்கொண்டார்.அத்துடன் பிரதமர் உரையும் நிகழ்த்தினார்.மற்றும் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி வழங்கும்"பண்டரா வன்னியன் "வரலாற்று நாடகமும் இடம் பெற்றது. திரு. ஐ.தி.சம்பந்தன் (நூலாசிரியர்) ஏற்புரை வழங்கி விழாவினை நிறைவுசெய்தார்.