எஸ் கே நாதன் நற்பணி மன்றத்தினால் வறிய குடும்பங்களுக்கு காணிகள்.

எஸ் கே நாதன் நற்பணி மன்றத்தினால் வறிய குடும்பங்களுக்கு காணிகள்.   
                                           

  காரைநகர் பிட்டியெல்லை கிராமத்தில் கடந்த பல வருடங்களாக வெள்ளத்தினால் பாதிப்படைந்த 09 குடும்பங்களின் அவலநிலையை கடந்தவருட வெள்ள அனர்த்தத்தின் போது நேரடியாக பார்வையிட்ட எஸ் கே நாதன் நற்பணி மன்றத்தின் பணிப்பாளர் பரோபகாரி திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் பிறிதொரு இடத்தில் அவர்கள் வீடமைப்பதற்கான காணிகளை வாங்கி அன்பளிப்பு செய்தார். பயனாளிகளுக்கான காணி உறுதிகள் இன்று 17.08.2016  பிட்டியெல்லை கிராமத்தில் நடைபெற்ற வைபவத்தில் வழங்கப்பட்டது.

கடந்த பல மாதங்களாக எஸ் கே நாதன் நற்பணி மன்றத்தினரால் 150க்கு மேற்பட்ட வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றமையும் பல வறியமாணவர்களுக்கு கல்விக்காக மாதாந்தம் உதவிப்பணம் வழங்குகின்றமையும் பலரது பாராட்டையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FullSizeRender FullSizeRender_1 FullSizeRender_2 image1 IMG_0468 IMG_0471 IMG_0472 IMG_0473 IMG_0474 IMG_0475 IMG_0477 IMG_0480 IMG_0481 IMG_0482 IMG_0484 IMG_0485 IMG_0486 IMG_0487 IMG_0488 IMG_0489 IMG_0490