கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இறுதிக் கல்விக் கருத்தரங்கு.
கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளராக கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் த.தயானந்தன் கலந்துகொணடார்;.