கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும்.
கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும். கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராக நஸ்டஈடு கோரி திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் ஒன்ராறியயோ உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு மன்றத்தினதும் காரைநகர் மக்களினதும் நலன்களை நிலைநாட்டும் வகையில் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்குத் …
கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்.
கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும். கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் 2024/2025 ஆண்டிற்குரிய புதிய நிர்வாக சபை தெரிவு ஆகியன இடம்பெறவுள்ளது. நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் 2023ம், 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள். …
மரண அறிவித்தல், திரு பாலசுந்தரம் சீவரத்தினம் (காரைநகர்) (உருத்திரபுரம்,கிளிநொச்சி) (Markham,Canada)
மரண அறிவித்தல் திரு பாலசுந்தரம் சீவரத்தினம் பிறப்பு : 04 MAR 1938 …
வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/karainagar.com/pages/wp-content/uploads/2024/02/1-e1708496760340.jpg?fit=488%2C299&ssl=1)
வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. வியாவில் சைவ வித்தியாலயத்தில் அமைந்துள்ள சமையலறை மிகுந்த சேதமடைந்திருந்ததனால் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பல்வேறு அசளகரியங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். சமையலறையின் குசினிப்பகுதியில் சமைக்கமுடியாத நிலை இருந்ததனால் பாடசாலைக்கு வெளியிலிருந்தே உணவு சமைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டிருந்தது. மழைகாலங்களில் கூரையூடாக ஒழுக்கிருந்ததனால் மாணவர்கள் அங்கிருந்து உணவருந்துவதில் அசளகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். சமையலறையினை திருத்தம் செய்யப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறித்தி முன்னாள் அதிபரான திருமதி கௌ.அருள்மொழி …
வவுனியா ஸ்ரீ சைவபிரகாச மகளிர் பாடசரலையில் பதினொராம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியும், காரைநகர் மணற்பிட்டியைச் சேர்ந்து திரு, திருமதி கிருஷ்ணமூர்த்தி, தனலட்சுமி தம்பதிகளின் புதல்வி செல்வி அபிராமி அவர்கள் இலங்கை லயன்ஸ் கழகத்தினால் நடாத்தப்பட்ட முப்பதாவது வருடாந்த கட்டுரைப் போட்டியில் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தினால் ஒருவருக்கு அவர் குடும்பத்திற்கு நாட்டிற்கு ஏற்படும் பாரிய பாதிப்புக்கள். என்ற தலைபில் கட்டுரை எழுதி போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றமைக்கான பரிசளிப்பு நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு.
போதைப்பொருள் துஷ்பிரயோகத்தினால் ஒருவருக்கு அவர் குடும்பத்திற்கு நாட்டிற்கு ஏற்படும் பாரிய பாதிப்புக்கள். போதைப்பொருள் பாவனை என்பது அவற்றை தினமும் பயன்படுத்தும் போது அவற்றிற்கு அடிமையாகும் நிலையினை குறிப்பதாகும். நாளடைவில் இப் பழக்கத்திற்கு அடிமையாகும் போது அவை இன்றி வாழமுடியாத நிலையை உருவாக்கும். இன்று வளர்ந்து வரும் உலகில் பல்வேறுபட்ட பிரச்சினைகளில் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம் பெறுகின்றது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இதனால் ஒரு …
மரண அறிவித்தல், திரு.திருவாதர் கந்தசாமி (முன்னாள் உரிமையாளர், சிவகாந்தா ஸ்ரோஸ், நவீனசந்தை, யாழ்ப்பாணம்) (கருங்காலி,காரைநகர்)
மரண அறிவித்தல் திரு.திருவாதர் கந்தசாமி அன்னை மடியில்: 01-04-1935 ஆண்டவன் அடியில்: 02-02-2024 (முன்னாள் உரிமையாளர், சிவகாந்தா ஸ்ரோஸ், நவீனசந்தை, யாழ்ப்பாணம்) கருங்காலி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.திருவாதர் கந்தசாமி(முன்னாள் உரிமையாளர், சிவகாந்தா ஸ்ரோஸ், நவீனசந்தை, யாழ்ப்பாணம்) அவர்கள் வெள்ளிக்கிழமை (02-02-2024)அன்று யாழ் மருத்துவமனையில் சிவபதம் அடைந்தார். அன்னார் காரைநகர், கருங்காலியைச் சேர்ந்த காலஞ்சென்ற திருவாதர் …
மரண அறிவித்தல், திரு அனோஜன் ஞானேஸ்வரன் (லண்டன்,பிரித்தானியா)
மரண அறிவித்தல் திரு அனோஜன் ஞானேஸ்வரன் தோற்றம் : 27 NOV 2002 மறைவு : 09 JAN 2024 பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் …
மரண அறிவித்தல், திரு.விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்) (நாகம்மா கோவிலடி,தங்கோடை,காரைநகர்) (பிரான்ஸ்) (லண்டன்)
மரண அறிவித்தல் திரு.விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்) காரைநகர் தங்கோடை நாகம்மா கோவிலடியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்- லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட திரு.விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்) அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று லன்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் விசுவலிங்கம் பாக்கியம் அவர்களின் அன்பு மகனும், நவரத்தினம் (தபால் உத்தியோகத்தர் ) நேசம்மா அவர்களின் அன்பு மருமகனும், உதயமாலா அவர்களின் பாசமிகு கணவரும், பிரமிலா,சபேசன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், தேவநாயகி (கெங்கா) (இலங்கை ), புஸ்பராணி …
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) 27.12.2023 புதன்கிழமை அதிகாலை 4.:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
![](https://i0.wp.com/karainagar.com/pages/wp-content/uploads/2023/12/DSCN0375.jpg?fit=645%2C484&ssl=1)
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) 27.12.2023 புதன்கிழமை அதிகாலை 4.:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற ஆதிரை அபிசேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி மற்றும் புல்லாங்குழல் இசைக் கச்சேரி இடம்பெற்றது. தொடர்ந்து மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம …
கலை உணர்வோடு காரை.மண்ணின் உணர்வும் பெருக்கெடுத்தோடி வரலாற்றுப் பெருவிழாவாக அமைந்துவிட்ட காரைவசந்தம் – 2023.
கலை உணர்வோடு காரை.மண்ணின் உணர்வும் பெருக்கெடுத்தோடி வரலாற்றுப் பெருவிழாவாக அமைந்துவிட்ட காரைவசந்தம் – 2023. கனடா-காரை கலாசார மன்றத்தினால் ஆண்டுதோறும் பெருமையோடு வழங்கப்பட்டு வருகின்ற காரை வசந்தம் கலை விழா இம்முறை 21வது ஆண்டாக சென்ற டிசம்பர் 02 ஆம் திகதி சனிக்கிழமை மாலை தமிழிசைக் கலா மன்ற அரங்கில் நடைபெற்று பலவகையிலும் வரலாறு படைத்து பெருவிழாக அமைந்துவிட்டது. காரைதீவு காரைநகராக பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டுச் சிறப்பு விழா – காரைச் சிறார்களும் இளையோரும் தமது …
50 வருடங்களுக்கு முன்னர் (1970க்கு முன்) காரைநகர் மக்களின் வாழ்வும் வளமும் மருத்துவம் பகுதி 02 – ஆயுள்வேத வைத்தியம்.
50 வருடங்களுக்கு முன்னர் (1970க்கு முன்) காரைநகர் மக்களின் வாழ்வும் வளமும் மருத்துவம் பகுதி 02 – ஆயுள்வேத வைத்தியம். பகுதி 01ல் ஆங்கில மருத்துவம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இக் கட்டுரையில் ஆயள்வேத மருத்துவம் பற்றியும், ஆயுள்வேத மருத்துவர்கள் பற்றியும் கூறலாமென நினைக்கின்றேன். 1970க்கு முன்னர் காரைநகரில் ஆயுள்வேத மருத்துவமே முன்னிலை பெற்றிருந்தது எனக் கூறினால் மிகையாகாது. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் பரம்பரை வைத்தியர்களும் அவர்களிடம் இம் மருத்துவத்தைப் பற்றி நன்கு கற்று சேவை செய்தவர்களும், …
மரண அறிவித்தல், திரு.சங்கரப்பிள்ளை தர்மலிங்கம் (கரப்பிட்டியந்தனை, களபூமி, காரைநகர்) (மருதநகர் பரந்தன்)
மரண அறிவித்தல் திரு.சங்கரப்பிள்ளை தர்மலிங்கம் கரப்பிட்டியந்தனை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் மருதநகர் பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 10.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அன்னமுத்து (பூமணி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும், நல்லம்மாவின் அன்புக் கணவரும், சிந்தியா,விஜயகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரத்தனதீபக் அவர்களின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்,அமிர்தலிங்கம் மற்றும் சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சுந்தரி,ரஞ்சினிதேவி,காலஞ்சென்ற நடராசா, காலஞ்சென்ற …
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா! (27.12.2023 – புதன்கிழமை)
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா! (27.12.2023 – புதன்கிழமை) கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple)எதிர்வரும் 27ஆம் திகதி(27.12.2023) புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் …
ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2023” இன் பிரதம விருந்தினர் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் மன்றத்தின் முன்னைநாள் பொருளாளர் ஆகியோர் வரவேற்றனர்.
ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2023” இன் பிரதம விருந்தினர் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் மன்றத்தின் முன்னைநாள் பொருளாளர் ஆகியோர் வரவேற்றனர். காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக காரைநகர் மக்கள் ஒன்றிணைந்து எடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக 21 வது காரை வசந்தம் எதிர்வரும் சனிக்கிழமை (DEC 02, 2023) மாலை 5.00 மணிக்கு 1120,Tapscott Road, Unit …
மரண அறிவித்தல், திருமதி நற்குணம் கனகமலர் (நீலிப்பந்தனை,காரைநகர்) ( Scarborough,கனடா) (நல்லூர்)
மரண அறிவித்தல் திருமதி நற்குணம் கனகமலர் பிறப்பு : 22 APR 1942 இறப்பு : 28 NOV 2023 யாழ். …
மரண அறிவித்தல், செல்வி செல்லத்துரை விக்கினேஸ்வரி (விக்கி) (தங்கோடை, காரைநகர்) (நீர்கொழும்பு)
மரண அறிவித்தல் செல்வி செல்லத்துரை விக்கினேஸ்வரி (விக்கி) தோற்றம் : 15/10/1956 மறைவு : 30/11/2023 தங்கோடை காரைநகரை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை …
காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின் “காரை வசந்தம் 2023”
காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின் “காரை வசந்தம் 2023” கனடா காரை கலாச்சார மன்றத்தின் “காரை வசந்தம்” எதிர்வரும் சனிக்கிழமை (DEC 02, 2023) மாலை 5.00 மணிக்கு 1120,Tapscott Road, Unit 3 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தின் தமிழ்க் கலை அரங்கத்தில் நடைபெறவுள்ளது. காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக “காரை வசந்தம் 2023” கலை விழா …