காரைநகர் பாடசாலை மாணவர்களின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளும் காரைநகர் கல்வி நிலைமையும்

 

காரைநகர் கல்வி நிலைமை

அண்மையில் வெளிவந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பாடசாலை பெறுபேறுகளின் படி தீவக வலயத்தில் 53.17% மாணவர்களே பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள். மன்னார் மாவட்டத்தில்74.17% மாணவர்கள்  சித்தியடைந்துள்ளார்கள்.

காரைநகரில் உள்ள 4 பாடசாலைகளிலும் மொத்தம் 128 பேர் பரீட்சைக்குத் தோற்றி 64 மாணவர்கள் 50% மட்டுமே சித்தியடைந்துள்ளனர் அதிலும் 59 பேர் மட்டுமே உயர் கல்வியைத் தொடரமுடியும். இது கல்வியில் காரைநகர் எவ்வளவு தூரம் பின்னடைவாக உள்ளதென்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

நாம் ஒருசில மாணவர் பெற்ற அதிகூடிய பெறுபேறுகளை பார்த்து மட்டும் கல்வியின் தரத்தை நிச்சயிக்கமுடியாது. பாடசாலைகளில் கல்வியைத் தவிர்ந்து மற்றைய விடயங்களுக்காக  நேரத்தையும் பணத்தையும்  வீணடிக்காது கல்லூரி அதிபர்கள்,ஆசிரியர்கள் முழு அக்கறை எடுப்பார்களாயின் இந்த நிலைமையை மாற்றமுடியும். பாடசாலைகளில் உள்ள பணத்தை கொண்டு ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புச் சலுகைகள் அல்லது மேலதிக வகுப்புக்கள் என்பவற்றை நடத்துவதால் இந்த நிலைமையை மாற்றமுடியும் என நம்புகிறோம். எதிர்வரும் காலங்களில் விசேட வகுப்புக்களை நடத்த கனடா காரை கலாச்சார மன்றம் முன்வரும்.

 

 

 

[su_document url=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2020/05/KDS-OL-Results-9.pdf”]