காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அனுசரணையில் காரைநகர் சாலையின் புனரமைப்புப்பணிகளுக்கு நிதி கையளிப்பு.
காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் காரைநகர் சாலையின் புனரமைப்புப்பணிகளுக்கு ரூபா ஐந்து இலட்சம் வழங்குவதாக உறுதியளித்தமைக்கேற்ப இன்று முதற்கட்டமாக ரூபா இரண்டு இலட்சத்தி ஐயாயிரம் ரூபாவிற்கான காசோலை அபிவிருத்தி சபையின் பொருளாளர் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரனால் காரைநகர் சாலை நிர்வாக உத்தியோகத்தரிடம் வழங்கப்பட்டது. இதன்போது காரை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் திரு. சிவா.தி. மகேசன் அவர்களும் உடனிருந்தார்.