காரைநகர் அபிவிருத்தி சபையின் மாதாந்த கூட்டம் இன்று 2.10.2016 காலை 10 மணிக்கு வழமை போல நடைபெற்றது இக்கூட்டத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவுஸ்திரேலியா காரை அபிவிருத்தி சபையின் உபதலைவர் திரு.அமிர்தசிங்கம் ரவிதாசும் கலந்து கொண்டார்.
அவரிடம் காரை அபிவிருத்தி சபையினர் மாதாந்த நூலக செலவினங்களை ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கையினை முன்வைத்தனர். அதனை தமது சபையில் சாதகமாக பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் தற்போதைய நிலவரம் தொடர்பாக காரை அபிவிருத்தி சபையினர் அவருக்கு விரிவாக எடுத்துக்கூறினர். சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது.