Category: பாடசாலைகள்

காரைநகர் பாடசாலைகளில் கல்விபயிலும் தரம்-5 மாணவர்களுக்கான புலமைப்பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு 4 வது கட்டமாக 31.07.2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.30 மணிக்கு காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெறவுள்ளது!

Doc1-1-1

காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு

School Front

காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில் 
பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு

கனடா, ஐக்கிய அமெரிக்க இராச்சியம் ஆகிய நாடுகளில் வதியும்
அன்பார்ந்த காரை இந்துவின் பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே!
காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு


"அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை" என்கின்ற 250 மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான எதிர்காலச் சிறார்களுக்கு பெரும் பயனை வழங்கக்கூடிய அரசின் பாரிய உதவித் திட்டம் எமது கல்லூரிக்கும் கிடைத்துள்ளது என்கின்;ற உவப்பான செய்தியை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறைந்தது 48 பரப்புக் காணி உடனடியாகத் தேவைப்படும் நிலையில் கல்லூரியை அண்மித்த பகுதியில் உள்ள பொருத்தமான காணிகளை இனம்கண்டு அவற்றினை கொள்முதல் செய்வதற்கான முயற்சியில் கல்லூரிச் சமூகம் ஈடுபட்டிருக்கின்றது.  இக்காணிகளை கொள்முதல் செய்வதற்கு உதவுமாறு விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு நிலத்திலும் புலத்திலும் உள்ள அமைப்புக்களும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் நன்கொடைகளை தாராள சிந்தையுடனும் கல்லூரி மீதான விசுவாச உணர்வுடனும் வழங்கி வருவதானது, குறித்த திட்டம் நிறைவுசெய்யப்பட்டு அதன் பயனை எமது சிறார்கள் அனுபவிக்கின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகவுள்ளது. 


புழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைஇ பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை ஆகியவற்றின் உதவியுடன்; கல்லூரிக்கு அணித்தாகவுள்ள 5 1/2 பரப்புக் காணி ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை காணிக் கொள்வனவுக்கு மேலும் உதவும் பொருட்டான நிதி சேகரிப்புத் திட்டத்தினை கனடாவிலும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திலும் வதியும் பழைய மாணவர்கள்இ நலன் விரும்பிகள் மத்தியில் சென்ற மே மாதம் முதல் ஆரம்பித்து செயற்படுத்திவருகின்றது. இத்திட்டம் குறித்த விபரங்களை மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் தெரியப்படுத்தி அவர்களது ஆதரவினைப் பெற்று வருகின்றோம். பின்வரும் நான்கு வழிகளில் அவர்கள் தமது ஆதரவினை வழங்கிவருவது எமக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிப்பதாகவுள்ளது.


1. இயன்றளவு நன்கொடையினை வழங்குதல்


2. நிதியுதவி நிகழ்ச்சியாக செப்ரெம்பர் 17ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள விஜே ரிவி சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் இசைக் கச்சேரிக்கான நுழைவுச் சீட்டொன்றினைப் பெற்றுக்கொள்ளல்


3. நன்கொடையினை வழங்குவதுடன் நுழைவுச் சீட்டொன்றினையும் பெற்றுக்கொள்ளுதல்


4. இசைக் கச்சேரிக்கான அனுசரணையினை வழங்குவதுடன் நன்கொடையினையும் வழங்குதல்;


நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் 250.00 டொலர்களுக்கு மேலான நன்கொடையினை வழங்குபவர்களுக்கு இசைக் கச்சேரிக்கான இலவச நுழைவுச் சீட்டினை வழங்கி வருகின்றோம்.


நன்கொடைகளைப் பெற்றுக்கொள்வதுஇ நிதியுதவி நிகழ்ச்சி ஆகிய இரண்டு முயற்சிகள் ஊடாகவும் முப்பதினாயிரம் (30,000.00) டொலர்களைத் திரட்டி தேவைப்படும் காணியின்; ஒரு பகுதிக் கொள்வனவுக்கு உதவுவது என்ற இலக்குடன் எமது சங்கம் செயலாற்றி வருகின்றது. 


எமக்கு அறிவையும்; ஒழுக்கத்தையும் ஒருங்கே ஊட்டி வளர்த்த  காரை இந்து அன்னையின் அரவணைப்பில் இருந்த காலமே எமது வளமான வாழ்வினை நிர்ணயம் செய்வதற்கு வழிகோலியது என்பதை நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்து வரலாற்று முக்கியத்துவம் மிக்க கல்லூரிக்கான உதவிப் பணியில் பங்கேற்று வருகின்ற பழைய மாணவர்களஇ; நலன் விரும்பிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதுடன் தொடர்புத் தகவல்கள் கிடைக்காத நிலையில் இதுவரை எம்மால் தொடர்பு கொள்ளப்படாதவர்கள் இவ்வறிவித்தலைப் பார்வையிட்டதும் தமது உதவிகளை விரைந்து வழங்கி உதவுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கின்றோம். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதியுடன் இந்நிதி சேகரிப்புச் செயற்பாடு நிறுத்தப்படவிருப்பதால் அதற்கு முன்னதாக தங்களது நன்கொடைகளை வழங்கி உதவுவீ;ரகள் என எதிர்பார்க்கின்றோம்.


திட்டம் குறித்த விபரங்களை அறியவும் தமது உதவிகளை வழங்கவும் விரும்புவோர்களுக்கான தொடர்புத் தகவல்கள்:


தொலைபேசி இலக்கங்கள்: (647)532-6217  (416)804-0587  (647)639-2930


மின்னஞ்சல் முகவரி: karaihinducanad@gmail.com


தாங்கள் வழங்கத் தீர்மானிக்கும் நன்கொடையினை மேற்குறித்த தொலைபேசி இலக்கங்களுள் ஒன்றுடன் அல்லது; மேற்குறித்த மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்புகொண்டு அறியத்தந்தால் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள்;; தங்களுடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும்.


கடன் அட்டையை (Credit Card)) பயன்படுத்தி PayPal வழியாக நன்கொடையினை வழங்க விரும்புவோர் www.Karaihinducanada.com இணையத்தளத்திற்கு சென்று PayPal இணைப்பினை அழுத்தி வழங்கலாம். 


நன்றி.
பழைய மாணவர் சங்கம் – கனடா

காரை இந்து மாணவன் செல்வன் சி.கோகுலன் மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் மூன்றில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு

காரை இந்து மாணவன் செல்வன் சி.கோகுலன் மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் மூன்றில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் நீளம் பாய்தல், முப்பாய்தல் 400M ஒட்டம் ஆகிய மூன்று போட்டிகளிலும் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் வெற்றி பெற்று தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிக்குத் தெரிவாகி கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.  

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையேயான மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு 14.07.2016  15..07.2016, 16.07.2016 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் துரையப்பா ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

14.07.2016 அன்று இடம்பெற்ற 21 வயதின் கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் 6.48M நீளம் பாய்ந்து 3ம் இடத்தையும், 15.07.2016 அன்று இடம்பெற்ற 21 வயதின் கீழ் ஆண்களுக்கான முப்பாய்தல் போட்டியில் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் 13.59M நீளம் பாய்ந்து 3ம் இடத்தையும், 16.07.2016 அன்று இடம்பெற்ற 21 வயதின் கீழ் ஆண்களுக்கான 400அ போட்டியில் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் 4ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருந்தார்.

செல்வன் கோகுலன் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் நீளம் பாய்தல், முப்பாய்தல், 400M ஆகிய மூன்று நிகழ்வுகளிலும வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் நடைபெறும் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளார். 

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையே கடந்த ஆண்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் செல்வன். சி.கோகுலன் 19 வயதிற்குக் கீழ்ப்பட்ட முப்பாய்ச்சல் போட்டியில் 2ஆவது இடம் பெற்று தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தகக்கது. 

இம்மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று கல்லூரி அன்னைக்குப் பெருமை சேர்த்த செல்வன் சிவசக்திவேல் கோகுலனுக்கும் சகல வழிகளிலும் ஊக்குவித்த விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியரான திரு இன்னாசிமுத்து அன்ரன்விமலதாஸ் அவர்களுக்கும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் தமது பாராட்;டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

சாதனை மாணவன் செல்வன் சி.கோகுலன்; வெற்றிப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வடமாகாண மெய்வல்லுநர் நிகழ்வில் பெற்றுக் கொள்வதைப் படத்தில் காணலாம். 

செல்வன் சிவசக்திவேல் கோகுலன் பெற்ற மாகாண மட்டச் சான்றிதழ்களின் பிரதிகளைக் கீழே காணலாம்.

certificate 1 certificate

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

Photo 1 Photo

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு.

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு.

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளர்களாக பிரபல தேசியப் பாடசாலை ஆசிரியர்களான வே.அன்பழகன்,எஸ்.நிமலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காரைநகரில் உள்ள 11 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 160 மாணவர்கள் இக் கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.இறுதிக் கருத்தரங்கு எதிர்வரும் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.

DSC00160 (Copy) DSC00161 (Copy) DSC00162 (Copy) DSC00163 (Copy) DSC00164 (Copy) DSC00165 (Copy) DSC00166 (Copy) DSC00167 (Copy) DSC00168 (Copy) DSC00169 (Copy) DSC00170 (Copy) DSC00171 (Copy) DSC00172 (Copy) DSC00173 (Copy) DSC00174 (Copy) DSC00175 (Copy) DSC00176 (Copy) DSC00177 (Copy) DSC00178 (Copy) DSC00179 (Copy) DSC00180 (Copy) DSC00181 (Copy) DSC00182 (Copy) DSC00183 (Copy) DSC00184 (Copy) DSC00185 (Copy) DSC00186 (Copy) DSC00187 (Copy) DSC00188 (Copy) DSC00189 (Copy) DSC00190 (Copy) DSC00191 (Copy) DSC00192 (Copy)

காரைநகர் இந்துக் கல்லூரி காணிக் கொள்வனவிற்கான நிதி திரட்டல்

காரைநகர் இந்துக் கல்லூரி காணிக் கொள்வனவிற்கான நிதி திரட்டல்

 
பூமிப்பந்தில் பரந்து வாழும் பெருந்தன்மையுள்ள காரை மக்களே வணக்கம் …
 
 
உலகெங்கும் பரந்து வாழுகின்ற இவ்வேளையிலும்  காரை மாதாவின் கல்விப்பணியில் கருணை உள்ளம் கொண்டவர்களே, காரை இந்து மாதாவின் மடியில் கற்று, தவழ்ந்து, நடந்து, ஓடி, பாய்ந்து, துள்ளி விளையாடி, பல துறைகளிலும் சாதனைகள் படைத்து புலம் பெயர் நாடுகளில் காரை புகழ் பரப்பும் கருணை உள்ளம் கொண்டவர்களே.!!
 
எமது எதிர்கால சிறார்கள் சமகால கல்வி மாற்றங்களிக்கேற்ப கல்வியினை பெற்றுக் கொள்வதிற்கு தங்களின் மேலான நிதியுதவியினை  நாடி  நிற்கின்றோம்.
அரசினால் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அண்மித்த பாடசாலை பௌதீகவள அபிவிருத்தி திட்டத்திற்கு 230மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தை இக் கல்லூரியில் அமுல் படுத்துவதற்கு கல்லூரியை அண்டியுள்ள 48 பரப்பளவுள்ள காணி கல்லூரிக்கு உடனடியாக தேவைப்படுகின்றது.

      இதில் :- 
                  1)  6 பரப்பளவு காணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது 
                  2)  5 1/2 (ஐந்தரை பரப்பு ) காணி கொள்வனவை கொழும்பு மற்றும் கனடா பழைய 
                      மாணவர் சங்கம் பெற்று வழங்கியுள்ளது.

மிகுதி 36 பரப்பளவு காணி கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி தேவைப்படுகின்றது.  மிகுதியாக கொள்வனவு செய்யப்படவேண்டிய காணிகள்  முறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, எனவே தங்களிடம் இக் காணிக்  கொள்வனவிற்கான தங்களின் நிதிப்பங்களிப்பினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
      எங்கள் எதிர்கால சிறார்கள் சிறப்பான கல்வியைப் பெற்று நல்லதோர் சமூகம் நம் கிராமத்தில் உருவாக எமது மக்களாகிய உங்கள்  அனைவரினதும்  நிதிப்பங்களிப்பினை  பெருமனதுடன் செய்வீர்கள் என்று எதிர்பார்த்து நிற்கின்றோம்.
 
தங்கள் தாராள மனத்தை தயவுடன் வழங்க கீழ்வரும்  இணைப்பை அழுத்தவும் 

https://mydonate.bt.com/events/karaihinduland2016
   
                             ”சிறுதுளி பெருவெள்ளம்”
    தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு 
    காம்உறுவார் கற்றுஅறிந் தார்.
                                       குறள்-399
 
 
நன்றி
நிர்வாகம்
பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கம்.

 

காரைநகர் பாடசாலைகளில் கல்விபயிலும் தரம்-5 மாணவர்களுக்கான புலமைப்பரிட்சை வழிகாட்டல் கருத்தரங்கு 3 வது கட்டமாக 19.07.2016 செவ்வாய்க்கிழமை மு.ப 8.30 தொடக்கம் 2.30 மணி வரை காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

                                                    கருத்தரங்கு-3

  காரைநகர் பாடசாலைகளில் கல்விபயிலும் தரம்-5 மாணவர்களுக்கான புலமைப்பரிட்சை வழிகாட்டல் கருத்தரங்கு 3 வது கட்டமாக 19.07.2016 செவ்வாய்க்கிழமை மு.ப 8.30 தொடக்கம் 2.30 மணி வரை காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
   
 இக் கருத்தரங்கிற்கு பிரதான வளவளராக ஆசிரியர் திரு.வே.அன்பழகன் அவர்கள் கலந்து கொள்வார். இக் கருத்தரங்கில் அனைத்து மாணவர்களையும் அழைத்து வந்து பயன் பெறுமாறும் தரம் 5ற்க்கு கல்வி கற்ப்பிக்கும் ஆசிரியர்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். இக் கருத்தரங்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்படுகிறது.

இங்ஙனம்
நிர்வாக சபையினர்
காரைநகர் அபிவிருத்திச் சபை

அமரர் தியாகராசா அவர்களின் நூறாவது பிறந்ததின விழா சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் கொண்டாடுவதையிட்டு யாழ்ற்ரன் கல்லூரியின் வாழ்த்துச்செய்தி!

letter-head1

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/07/letter-head1.pdf

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு!

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன்  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு இன்று புதன்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளர்களாக பிரபல தேசியப் பாடசாலை ஆசிரியர்களான என்.சுந்தா,எஸ்.திலீபன்ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதன்,காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி மற்றும் ஆரம்பப் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உள்ள 11 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 160 மாணவர்கள் இக் கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

முதலாவது கருத்தரங்கு கடந்த மாதம் இடம்பெற்ற போது வட மாகாண கல்வித் திணைக்கள ஆரம்பக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்தரங்கினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 7 வருடங்களுக்கு மேலாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குக் கல்விக் கருத்தரங்குகள் மற்றும் ஊக்குவிப்புப் பரிசில்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இவ்வாண்டு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் கல்விக் கருத்தரங்குகளை நடாத்தி அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

1DSC00001 (Copy) DSC00002 (Copy) DSC00003 (Copy) DSC00004 (Copy) DSC00005 (Copy) DSC00006 (Copy) DSC00007 (Copy) DSC00008 (Copy) DSC00009 (Copy) DSC00010 (Copy) DSC00011 (Copy) DSC00012 (Copy) DSC00013 (Copy) DSC00014 (Copy) DSC00015 (Copy) DSC00016 (Copy) DSC00017 (Copy) DSC00018 (Copy) DSC00019 (Copy) DSC00020 (Copy) DSC00022 (Copy) DSC00023 (Copy) DSC00024 (Copy)

தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கருத்தரங்கு-2

 தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கருத்தரங்கு-2

                     மேற்படி கருத்தரங்கு-2  06.07.2016 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு யா/யாழ்ற்றன் கல்லூரியில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அணுசரணையுடன் நடைபெற இருப்பதனால் தரம் 5 மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கோட்டுக் கொள்கின்றோம்.

இங்ஙனம்
ப.விக்கினேஸ்வரன்
தலைவர்
காரைநகர் அபிவிருத்திச் சபை

 

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் – அநுசரணை மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் – அநுசரணை மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்


பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அநுசரணையில் சிறப்புப் பரிசில்களும் ஞாபகார்த்த விருதுகளும்

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் திங்கட்கிழமை (04.07.2016) அன்று காலை 9:00 மணிக்கு நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்குப் பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திரு.திருச்சிற்றம்பலம் விஸ்வரூபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி திரு.ஆறுமுகம் குமரேசமூர்த்தி அவர்களும் கௌரவ விருந்தினராக கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிறுவுநர் சயம்பு நினைவுப் பேருரையை கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் நிகழ்த்தினார்.

கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட “மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்” இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அநுசரணை வழங்கப்பட்டதுடன் “மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் சிறப்பு விருதுகளாக” தரம் 6 முதல் 13 வரையான வகுப்பு ரீதியான பொது தகமைத் தேர்ச்சிக்கான விருதுகள் 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அநுசரணையில் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த (சா-த) பரீட்சையில் அதிசிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவி செல்வி.பா.குலமதி அவர்களுக்கும், க.பொ.த (உ-த) பரீட்சைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 8 மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5 உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு:

திரு சுப்பிரமணியம் அரிகரன் அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய தந்தை S.P.S என அழைக்கப்படும் அமரர் சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசு க.பொ.த (உயர்தர)ப் பரீட்சையில் தோற்றி பௌதீக விஞ்ஞான பீடத்திற்கு பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொண்ட கணிதத்துறை மாணவி செல்வி ஹேதினி செல்வராசா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

க.பொ.த (சா-த) பரீட்சையில் கணித பாடத்தில் A தர சித்தி பெற்ற 6 மாணவர்களுக்கான பரிசாக கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் ‘அமரர். சின்னத்தம்பி தம்பிராசா நினைவுப் பரிசிலை’ அவரது துணைவியார் திருமதி.மனோன்மணி தம்பிராசா அவர்களும்,

க.பொ.த (சா-த) பரீட்சையில் வாய்ப்பாட்டு இசைப் பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவி செல்வி தர்ஜிகா மூர்த்திக்கு ‘அமரர். சரஸ்வதி சுப்பிரமணியம் நினைவுப் பரிசிலை’ அவரது புதல்வன் குடும்பத்தினரான திரு. திருமதி.சச்சிதானந்தன் குடும்பத்தினரும்

பாடசாலையில் அதிசிறந்த மாணவன் அல்லது மாணவிக்கான சிறப்பு விருதாக 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் க. வினோதன் அவர்களுக்கு பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் ‘அமரர்.நாகமுத்து கனகசுந்தரம் ஞாபாகார்த்த விருதாக” அவரது புதல்வன் திரு.கனக.சிவகுமாரன் அவர்களும் வழங்கியிருந்தனர். 

பாடசாலையில் அதிசிறந்த விளையாட்டு வீரன் மற்றும் அதிசிறந்த விளையாட்டு வீராங்கனை ஆகியோருக்கான விருதுகளின் வரிசையில் சிறந்த மெய்வல்லுன வீரனுக்கான விருதினை செல்வன் சி. கோகுலன் அவர்களும், சிறந்த மெய்வல்லுன வீராங்கனைக்கான விருதினை செல்வி தே. றோமிலா அவர்களும் பெற்றுக் கொண்டனர். இவ்விருதினை பாடசாலையின் முன்னாள் அதிசிறந்த விளையாட்டு வீரரும், காரைநகரில் விளையாட்டுத்துறையின் முன்னோடியுமான ‘அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபாகார்த்த விருதாக’ அவரது பெறாமகன் திரு.மா.கனகசபாபதி அவர்களும் நிதி அநுசரணை செய்து வழங்கியிருந்தார்.

சிறப்புப் பரிசில்களுக்கும் ஞாபகார்த்த விருதுகளுக்குமாக அறுத்திநான்காயிரம் ரூபா (64,000 ரூபா) நிதி அநுசரணையாக இவ்வாண்டு பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்பு விருதாக பாடசாலையில் நாற்பது ஆண்டுகள் நற்பணியாற்றிய நல்லாசான் ‘அமரர். R.கந்தையா ஞாபகார்த்த விருதினை’ அவரது புதல்வியும் ஒய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிதி அநுசரணை செய்து வழங்கியிருந்தார். கல்லூரியில் அதிசிறந்த ஆசிரியருக்கான கௌரவ விருதாக கல்லூரியின் 2015 ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர்களாக திரு ச. அரவிந்தன் அவர்களும் திருமதி ப. முகுந்தன் அவர்களும் இவ்விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளையில் இவ்வாண்டு கல்லூரி ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “கல்லூரி ஆசிரியர் நலன்புரிச் சங்கப் பரிசினை” 2015 ஆம் ஆண்டுக்கான சிறப்பு அறிவிப்பாளர் செல்வன் க. வினோதன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

பரிசளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

DSC_3660 DSC_3661 DSC_3663 DSC_3664 DSC_3674 DSC_3675 DSC_3677 DSC_3679 DSC_3679W DSC_3681 DSC_3694 DSC_3697 DSC_3698 DSC_3749 DSC_3777 DSC_3789 DSC_3819 DSC_3820 DSC_3821 DSC_3822 DSC_3823 DSC_3824 DSC_3825 DSC_3826 DSC_3827 DSC_3828 DSC_3829 DSC_3858 DSC_3859 IMG_7025 IMG_7027 IMG_7029 IMG_7030 IMG_7032 IMG_7033 IMG_7034 IMG_7035 IMG_7038 IMG_7040 IMG_7051 IMG_7059 IMG_7061 IMG_7065 IMG_7067 IMG_7068 IMG_7073 IMG_7075 IMG_7081 IMG_7086 IMG_7087 IMG_7091 IMG_7094 IMG_7095 IMG_7096 IMG_7097 IMG_7101 IMG_7102 IMG_7104 IMG_7105 IMG_7106 IMG_7108 IMG_7109 IMG_7111 IMG_7113 IMG_7114

காரைநகர் இந்துக் கல்லூரியின் பரிசில் தின விழா அழைப்பிதழ்

காரைநகர் இந்துக் கல்லூரியின் பரிசில் தின விழா அழைப்பிதழ்

பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா வரும் திங்கட்கிழமை, ஜூலை, 4, 2016 அன்று காலை 9:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் தலைமையில் நடைபெற உள்ளது.

பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திரு.தி.விஸ்வரூபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி திரு.அ.குமரேசமூர்த்தி அவர்களும் கௌரவ விருந்தினராக முன்னாள் அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

முழமையான அழைப்பிதழைக் கீழே காணலாம். 

Prize Day Invitation 1Prize Day Invitation 2

 

காரைநகர் மெய்கண்டான் பாடசாலை நுழைவாயில் திறப்புவிழா 24.06.2016 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது!

காரைநகர் மெய்கண்டான்  பாடசாலை நுழைவாயில் திறப்புவிழா 24.06.2016 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது!

காரை இந்து அணி வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயம் பெற்று சாதனை!

காரை இந்து அணி வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயம் பெற்று சாதனை 

YG24W

Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான (Best Hardware Application Team) வெற்றிக் கேடயத்தை காரைநகர் இந்துக் கல்லூரியின் அணி இவ்வாண்டும் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளது.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து Yarl IT Hub பெருமையுடன் நடத்திய Yarl Geek Challenge 5 Juniorsபோட்டிக்கான மாகாண மட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் 2016.06.26அன்று கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றன. வடமாகாணத்தைச் சேர்ந்த 12கல்வி வலயங்களை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ் முன்னணிப் பாடசாலைகளின் அணிகள் உட்பட 31 மாணவ அணிகள் மேற்படி போட்டியில் பங்குபற்றியிருந்தன.

வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு யாஃகாரைநகர் இந்துக் கல்லூரி வன்பொருள் அணியினர் வடமாகாணத்தின் “சிறந்த வன்பொருள் அணி” (Best Hardware Application Team) எனும் சாதனையை நிலைநாட்டி தமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளதாக காரை இந்துவின் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்கள் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளைக்கு அறியத்தந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற Yarl Geek Challenge 5 Juniors – 3 மற்றும் Yarl Geek Challenge 5 Juniors – 4 போட்டிகளிலும் வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு யாஃகாரைநகர் இந்துக்கல்லூரி வன்பொருள் அணியினர் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணி (Best Hardware Application Team) எனும் சாதனையை நிலைநாட்டி வெற்றிக் கேடயத்தைத் தட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி அணியில் பங்குபற்றிய மாணவர் விபரம் வருமாறு :

SelectedTeam

இவ்வணியினருக்கான வெற்றிக் கேடயத்தையும் சான்றிதழையும் Yarl IT Hubநிறுவனத்தினர் வழங்குவதனையும் சாதனை மாணவர்கள் செல்வன் க. கஜந்தன், செல்வன் சி. தூயவன், செல்வன் க. சிவதர்சன் ஆகியோர் பெற்றுக் கொள்வதனையும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் திருமதி.சிவாஜினி லக்ஸ்மன், திரு.முத்துத்தம்பி ஜெயானந்தன் ஆகியோர் அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம்.

YG24YG22YG23

இச்சாதனையை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நிலைநாட்டி கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களுக்கும் பயிற்சி அளித்த ஆசிரிய மணிகளுக்கும் பாடசாலையை வழிநடத்திவரும் அதிபர், பதில் அதிபர், பகுதித் தலைவர் ஆகியோருக்கும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

காரைநகர் பாடசாலைகளின் அடிப்படை தேவைகள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதியுதவியினால் சீர் பெறுகின்றன!

CKCA logo

காரைநகர் பாடசாலைகளின் அடிப்படை தேவைகள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதியுதவியினால் சீர் பெறுகின்றன!


கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற முதற்கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.


கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக இதுவரை 11 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் கடந்த வருடம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.


மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.


மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம் செலுத்தவும், மிகுதி 10 விகிதமான நிதி மலசலகூட சுத்திகரிப்பு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.


அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் முதற்தடவையாக 05.11.2015 அன்று முதல் கட்ட வட்டிப்பணமாக 10 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 29,250 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன. 


நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற முதற்கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாசார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp content/uploads/2016/06/School_submission_for_interest_PMTS-2.pdf

 

 

யா/யாழ்ற்ரன் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் சிறப்புப் பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா

யா/யாழ்ற்ரன் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் சிறப்புப் பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா

மேற்படி விழா கல்லூரியின் அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் 24.06.2016 அன்று நடைபெற்றது. இவ் விழாவில்,

பிரதம விருந்தினராக திரு.S.செல்வராசா (உதவிக் கல்விப் பணிப்பாளர்(தமிழ்) தீவக கல்வி வலயம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.T.மயுரன் (முகாமையாளர் தேசிய சேமிப்பு வங்கி, காரைநகர்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு.S.கணநாதன் (உரிமையாளர் Quency Distributors Colombo)  அவர்களும் அவர் வராமையால் அவர் சார்பில் திரு.வி.நாகேந்திரம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அதிபர் தனது உரையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அத்துடன் இவ் விழாவிற்கு அனுசரணையாளராக இருக்கும் Colombo Quency Distributors உரிமையாளர் திரு.S.கணநாதன் அவர்களுக்குத் தனது உளம் கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இவ் விழாவில் 

க.பொ.த (சா.த) பரீட்சை 2015 5A யும் அதற்குக் கூடிய பேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும்(Memento) பரிசுகளுக்கான voucher களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஏனைய க.பொ.த (உ.த) தகைமை பெற்ற சகல மாணவர்களுக்கும் பரிசுகளுக்கான voucher களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விழா ஆரம்பமாக முன்னர் கல்லூரியின் ஸ்தாபக உறுப்பினர்களின் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

DSC02387 DSC02389 DSC02390 DSC02391 DSC02392 DSC02393 DSC02394 DSC02395 DSC02397 DSC02398 DSC02400 DSC02401 DSC02402 DSC02404 DSC02406 DSC02407 DSC02410 DSC02413 DSC02414 DSC02417 DSC02421 DSC02422 DSC02423 DSC02424 DSC02426 DSC02427 DSC02429 DSC02431 DSC02432 DSC02433 DSC02434 DSC02436 DSC02438 DSC02442 DSC02443 DSC02444 DSC02445 DSC02446 DSC02447 DSC02448 DSC02449 DSC02450 DSC02451 DSC02452 DSC02453 DSC02454 DSC02456 DSC02457 DSC02458 DSC02459 DSC02460 DSC02461 DSC02466

காரை இந்துவின் மூன்று அணிகள் Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு

காரை இந்துவின் மூன்று அணிகள்  Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு
    

Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் தீவக வலயத்தில் எமது பாடசாலையின் 3 அணிகள் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளன.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உலகில் வடபுலத்தை ஓர் அடையாளமாக மாற்றும் பாதையில் Yarl IT Hub  இனால் நடத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge 5 Juniors போட்டிக்கான வலயமட்டப் போட்டிகள் 2016.06.11 அன்று வேலணையில் அமைந்துள்ள கணணி வள நிலையத்தில் இடம்பெற்றது.
    
அப் போட்டியில் தீவக வலயத்தில் எமது பாடசாலையின் 3 அணிகள் தீவக வலய மட்டத்தில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளன.
    
போட்டியில் வெற்றி பெற்றுள்ள மாணவர் விபரம் வருமாறு:

இப்போட்டியில் பங்கு பற்றுவதற்கான வழிகாட்யாக இருந்து ஊக்குவித்த தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்துறை ஆசிரியை திருமதி சிவாஜினி லக்ஸ்மன் அவர்களுக்கும், பௌதீக விஞ்ஞானத் துறை ஆசிரியர்  திரு முத்துத்தம்பி ஜெயானந்தன் அவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை எமது பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன் மாகாண மட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துகின்றது. 

Yarl Geek

காரைநகர் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றுகூடலும்,மதிய போசன விருந்துபசார நிகழ்வும் நதி சஞ்சிகை வெளியீடும் 12.06.2016 அன்று நடைபெற்றது.

IMG_1308 IMG_1310 IMG_1313 IMG_1314 IMG_1315 IMG_1316 IMG_1318 IMG_1319 IMG_1320 IMG_1321 IMG_1322 IMG_1323 IMG_1324 IMG_1327 IMG_1328 IMG_1330 IMG_1332 IMG_1334 IMG_1335 IMG_1337 IMG_1338 IMG_1343 IMG_1344 IMG_1346 IMG_1347 IMG_1348 IMG_1350 IMG_1351 IMG_1352 IMG_1353 IMG_1355 IMG_1356

காலத்தால் அழியாத(து)தியாகம்

               காலத்தால் அழியாத(து)தியாகம்

Mrs.Vasuhi.06.2016DR.A.THIYAGARAJAH

காரை இந்துவின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் வாழ்த்துகின்றார்

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிட இருக்கும் நூற்றாண்டு விழா மலரிற்கு வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
    
1916 ஏப்பிரல் 17ஆம் திகதி பிறந்த ஆ.தியாகராசா அவர்கள் 1981ஆம் ஆண்டு தனது 65ஆவது அகவையில் இறைபதம் அடைந்தார். அமரர் தியாகராசா அவர்கள் இப்பூவுலகைவிட்டு மறைந்து 35 வருடங்கள் கடந்த பின்னரும் அவரது 100ஆவது அகவையை நினைவுபடுத்தி வெகுசிறப்பாக நூற்றாண்டு விழாவை நன்றிப ;பெருக்கோடு மூன்றாவது அரங்கிலே கொண்டாடப்படுவது கண்டு மகிழ்வடைகின்றேன். 
ஒருவர் மறைந்த பின்னரும் அவரது நினைவாக விழா எடுப்பதாக இருந்தால்,அவர் வள்ளுவரின்,

                    "வையத்துள் வாழ்வாங்குவாழ்பவர் வானுறையும் 
                                 தெய்வத்துள் வைக்கப்படுவர்"

எனும் குறளுக்கமைய வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியாராகப் பார்க்கின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்கள் 29 வருடகாலம் தொடர்ச்சியாகக் கல்விப் பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியின் சமூகம் அவரது 100ஆவது அகவை தினத்திலே (17.4.2016) நுற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது. அடுத்து காரைநகர் வெற்றிநாதன் அரங்கிலே அமரர் தியாகராசா அவர்களின் அன்பர்கள்,ஆதரவாளர்கள் விழா எடுத்திருந்தார்கள். தொடர்ச்சியாக கனடா வாழ் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும் அமரர் தியாகராசாஅவர்களின் சீடர்களும் இணைந்து இப் பெருவிழர எடுப்பது கண்டு மகிழ்வடைகின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்களிற்கு ஏன் இவ்வளவு பெரியஅளவில் விழா எடுக்கின்றார்கள் என்று சிந்தித்தால்,அவர் தான் வாழ்ந்த காலத்தில் இப்பூவுலகிற்கு விட்டுச் சென்ற சேவைகள் பற்பல. ஒருதுறை சார்ந்து அவருடைய பணிகள் நின்றுவிடவில்லை. ஆன்மீகப்பணி,கல்விப்பணி,பொருளாதாரப்பணி,சமூகப்பணி,அரசியற்பணி என்ற வகையில் அவருடைய செயற்பாடுகள் ஆழ்ந்து அகன்று இருந்ததைக் காணலாம்.

    அமரர் தியாகராசாஅவர்கள் மலேசியா,சிங்கப்பூர், இந்தியா எனபல நாடுகளிலும் தனது கல்வியைப் பூர்த்திசெய்து B.A., M.A, M.Lit பட்டதாரியாகத் தாயகம் திரும்பி 1941இல் காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து தனது கல்விப் பணியை ஆரம்பித்தார். தொடர்ந்து நான்கு வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில் அப்போதிருந்த அதிபர் திரு ஆ.கனகசபை அவர்கள் ஓய்வுபெற 1946ஆம் ஆண்டு கல்லூரியைத் தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்காலத்தில் யோகர் சுவாமிகளிடம் ஆசிபெற்ற பேப்பர் சுவாமிகள் கோவளத்தில் ஆச்சிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்ட தியாகராசா அவர்கள் பேப்பர் சுவாமிகளிடம் ஆசிபெற்று கல்லூரியைப் பொறுப்பெடுத்தார் எனவும்,பேப்பர் சுவாமிகள் 'காரைநகர் இந்துக் கல்லூரியை விருட்சம் போல் வளர்த்தெடு'எனஆசி வழங்கியதாகவும் நூல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல் கல்லூரி வளர்ச்சிக்கு அல்லும் பகலும் சுமார் 25வருடங்கள் பாடுபட்டு பௌதிக வள விருத்தி,கல்வி அபிவிருத்தி, இணைப்பாடவிதான அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டார். இவருடைய காலத்திலேயே கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம்,மனையியல் கூடம்,நடராசா ஞாபகார்த்த மண்டபம்,சயம்பு மண்டபம்,விளையாட்டு மைதானம் போன்ற வளங்கள் பாடசாலைக்குக் கிடைக்கப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் 25வருட கால சிறப்பான அதிபர் சேவை காரணமாக வெள்ளிவிழாஅதிபர் எனபோற்றும் அளவிற்கு கல்லூரியில் கல்விக்காக ஆற்றிய அளப்பரிய பணிகள் காரணமாக வரலாற்றில் நீங்கா இடம பிடித்தக் கொண்டார்.

    தனது 57ஆவது வயதில் கல்லூரியின் அதிபர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்று அரசியல் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு காரைநகரின் பொருளாதார,சமூக அபிவிருத்திக்காக அரும்பாடுபட்டார். காரைநகர் மக்களிற்கு போக்குவரத்துசேவை,மின்சாரவசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமன்றி பலரிற்கு வாழ்வாதாரத்திற்கான அரசதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்து மக்களை மகிழ்வித்தார்.

    காரைநகரின் புவியியல் அமைப்பை  தூர நோக்குடன் சிந்தித்த அவர் எதிர்காலத்தில் நிலத்தடிநீர் உவர்நீராக மாறாதிருக்க மழைநீரைத் தேக்கும் திட்டத்திற்காக வேணண் அணையைக் கட்டுவித்தார். இத்தகைய பல சமூக சேவைகளைச் செய்த பெரியார் தியாகராசாஅவர்களின் தனித்துவம் என்னவென்றால்,பொதுவாக சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர் தமது குடும்பநலனில் அதிக அக்கறை கொள்ளமாட்டார்கள். ஆனால் தியாகராசாஅவர்கள் அவ்வாறன்றி தனது குடும்பத்தையும் நல்நிலை அடையச் செய்துள்ளார் என்பது அவரின் பிள்ளைகள் மூலம் அறியக்கிடக்கின்றது.

                                    "தக்கார் தகவிலார் என்பதுஅவரவர்
                                             ஏச்சத்தால் சுட்டப்படும் "

எனும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க தனது பிள்ளைகளையும் கற்பித்து நன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளார். அவர் பிள்ளைகளுடன் எவ்வாறு அன்பாகப் பண்பாக வாழ்ந்தார் என்பதை அவரது பிள்ளைகள் தொடர்ந்தும் அவரது பணியைத் தொடர்வதனூடாகக் காணக்கூடியதாக உள்ளது. அவரது புதல்வி திருமதி மங்கயர்க்கரசி சபாரத்தினம் அவர்கள் அமரர் தியாகராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அமரர் ஆ. தியாகராசா ஞாபகார்த்த புலமைப ;பரிசில் நிதியத்தை ஆரம்பித்து காரைநகர் வாழ் ஏழைச் சிறார்களின் கல்விக்கு ஆதரவு அளித்து வருகின்றார்கள். 

திருமதி புனிதம் செல்வராஜா  அவர்களும் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அடிக்கடி தாயகம் வந்து சமூகசேவைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதைக் காண்கின்றோம்.

    அந்தவகையில் அமரர் தியாகராசா அவர்களை எம்மக்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள். ஏம்மத்தியில் இருந்து மறைந்தாலும் அவரது அளப்பரிய தியாகப் பணிகள் காலத்தால் அழியாத தியாகமாக எனறும் எம்மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அத்தகைய தியாகச் செம்மலிற்கு அவரது நூறாவது அகவையில் நன்றி கூருமுகமாக அவரது காலத்தால் அழியாத அளப்பரிய சேவைகளைத் தாங்கிய நூற்றாண்டு விழா மலரை வெளியிடுவது கண்டு மகிழ்வடைகின்றேன். இம்மலர் சிறப்பாக மலர வாழ்த்துவதுடன்,விழா சிறப்புற அமையவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


திருமதி வாசுகி தவபாலன்

அதிபர்

காரைநகர் இந்துக் கல்லூரி

Greeting Dr.A.T 100th Vasuhi Book-page-001

 

 

யாழ்ற்ரன் கல்லூரியின் உயர்தர மாணவர்மன்றத்தின் ஒன்றுகூடலும் மதிய போசன விருந்தும்

யாழ்ற்ரன் கல்லூரியின் உயர்தர மாணவர்மன்றத்தின் ஒன்றுகூடலும் மதிய போசன விருந்தும்

யாழ்ற்ரன் கல்லூரியின் மேற்படி நிகழ்வுகள் 05.06.2016 பி.ப 12.30 மணிக்கு மன்றத்தின் தலைவர் செல்வன் யோ.தினேஸ் தலைமையில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்விற்கு  பிரதம விருந்தினராக Dr.ப.நந்தகுமார் (YARLTONIAN) (சுகாதார வைத்திய அதிகாரி தெல்லிப்பழை) அவர்களும்,

சிறப்பு விருந்தினராக திரு.G.V.இராதாகிருஸ்ணன் (ஓய்வு நிலை வலயக்கல்விப்பணிப்பாளர் தீவக்க்கல்வி வலயம்) அவர்களும்,

கௌரவ விருந்தினர்களாக திரு.ஆ.குமரேசமூர்த்தி (YARLTONIAN) (கோட்டக்கல்விப்பணிப்பாளர் காரைநகர்), திரு.க.பாலச்சந்திரன் (YARLTONIAN) (பொருளாளர் ,காரை அபிவிருத்திச்சபை),திரு.பா.பாலமுரளி (ஆசிரியர் நடேஸ்வராக்கல்லூரி காங்கேசன்துறை) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

DSC_1379 copy DSC_1382 copy DSC_1383 copy DSC_1384 copy DSC_1385 copy DSC_1386 copy DSC_1387 copy DSC_1388 copy DSC_1389 DSC_1390 DSC_1393 DSC_1394 DSC_1395 DSC_1406 DSC_1410 DSC_1411 DSC_1414 DSC_1415 DSC_1417 DSC_1419 DSC_1420 DSC_1421 DSC_1422 DSC_1423 DSC_1424 DSC_1425 DSC_1427

யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 2014/2015 இல் O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவித்தல் விழா 20.05.2016 இடம் பெற்றது.

யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 2014/2015 இல் O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவித்தல் விழா  20.05.2016  இடம் பெற்றது. அத்துடன் நினைவு பரிசில்களும்  மற்றும் அவர்களை பாராட்டி பண பரிசில்களும் வழங்கப்படன.

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையால் காரைநகர் கல்விக்கோட்ட தரம் 5 மாணவர்கட்கான மாணவர் பயிற்சிப்பாசறை

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையால் காரைநகர் கல்விக்கோட்ட தரம் 5 மாணவர்கட்கான மாணவர் பயிற்சிப்பாசறை

காரைநகர்ப் பாடசாலைகளில் இருந்து இவ்வாண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்கட்கான மாணவர் பயிற்சிப்பாசறை 22.05.2016 ஞாயிற்றுக்கிழமை யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்றது.
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணை மூலம் நடைபெற்ற இப்பாசறையின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய காரை அபிவிருத்திச்சபையின் தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையின் தாற்பரியங்கள் பற்றி மிகச்சிறந்த முறையில் எடுத்துக்கூறினார்.மேலும் அவர் கனடா காரை கலாச்சார மன்றம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கட்கு பயிற்சிப்பரீட்சைகள் வைப்பது வழக்கம் ஆனால் இம்முறை மாகாணக்கல்வித்திணைக்களம் மற்றும் வலயக்கல்வித்திணைக்களம் என்பவற்றின் பரீட்சைகள் கூடுதலாக இருப்பதனால் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் வேண்டுகோளுக்கமைவாக இம்மாணவர் முகாம் நடாத்தப்பட்டது.
      யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தனது உரையில் இம்முகாமை சிறந்த முறையில் நடாத்துவதற்கு அனுசரணையாக இருக்கும் கனடா காரை கலாச்சார மன்றத்தினருக்கு காரைநகர் கோட்ட அதிபர் ஆசிரியர்கள் சார்பாக நன்றிகளைத்தெரிவித்தார். மேலும் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேச மூர்த்தி மாகாண கல்வித்திணைக்களத்தின் கல்விப்பணிப்பாளர் திரு க.மணிமார்பன் ஆகியோரும் கருத்துக்களை வழங்கினர்.
 இம்முகாம் வடமாகாண கல்வித்திணைக்கள ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு..A.S .சற்குணராசா அவர்களின் நெறிப்படுத்தலில் 10 வளவாளர்களினால் இம்மாணவர் முகாம் நல்ல முறையில் நடைபெற்றது.இம்முகாம் மாணவர்கட்கு பெரிதும் பயனுடையதாக இருந்தமை பற்றி பாடசாலை ஆசிரியர்களும் அதிபர்களும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

 

DSC01822 DSC01823 DSC01824 DSC01825 DSC01828 DSC01831 DSC01834 DSC01836 DSC01841 DSC01843 DSC01845 DSC01849 DSC01853 DSC01855 DSC01857 DSC01859 DSC01863 DSC01865

இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியின் இயல் இசை நாடக விழாவில் காரை இந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள்

இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியின் இயல் இசை நாடக விழாவில் காரை இந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள்


நாடக விழாவில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்களும் பங்கு பற்றி கலை நிகழ்ச்சிகளை வழங்கிச் சிறப்பித்திருந்தனர். 

இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் கடந்த 04.05.2016 அன்று நடைபெற்ற மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவிலேயே காரை இந்து மாணவர்களின் நடன நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. 

பாடசாலையின் ஆசிரியைகளான திருமதி பே. சந்திரதாஸன், திருமதி அ. ராஜ்குமார் ஆகியோர் முறையே புஸ்பாஞ்சலி, கிராமிய நடனம் ஆகியனவற்றிற்கு நட்டுவாங்கம் வழங்கியிருந்தனர்.  இவ்விரு நடனங்களுக்கான இசையை பாடசாலையின் இசை ஆசிரியர்கள் திருமதி ப. முகுந்தன், திருமதி க. றொபேஷன் ஆகியோர்  வழங்கியிருந்தனர். 

நிகழ்வில் பங்கு பற்றிய ஆசிரியர்கள்இ மாணவர்ளின் விபரங்கள் வருமாறு: 

புஸ்பாஞ்சலி நடனம்

நட்டுவாங்கம்    :    திருமதி பே. சந்திரதாஸன்
இசை        :    திருமதி ப. முகுந்தன்
            திருமதி க. றொபேஷன்

பங்குபற்றிய மாணவர்கள்

1.    செல்வி ம. துஸ்யந்தி
2.    செல்வி பா. குலமதி
3.    செல்வி சு. சிந்துஜா
4.    செல்வி க. சரண்யா
5.    செல்வி மு. கிறேசியா
6.    செல்வி இ. லக்சிகா


கிராமிய நடனம்

நட்டுவாங்கம்    :    திருமதி அ. ராஜ்குமார்
இசை        :    திருமதி ப. முகுந்தன்
            திருமதி க. றொபேஷன்
பங்குபற்றிய மாணவர்கள்

1.    செல்வன் அ. பிரணவரூபன்
2.    செல்வன் ஏ. கோபிநாத்
3.    செல்வன் சு. ஜீவிதன்
4.    செல்வன் இ. ஜீவரங்கன்
5.    செல்வி வ. நிலா
6.    செல்வி சி. ஜிவிசா
7.    செல்வி வி. கஜந்தினி
8.    செல்வி உ. பிருந்தா
9.    செல்வி க. டிலோசினி
10.    செல்வி சு. லக்சிகா
11.    செல்வி ஆ. அபிராமி
12.    செல்வி கா. கோகுலதர்சா
13.    செல்வி க. பூர்விகா


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

20160504_190148 20160504_190148W 20160504_195356 20160504_195427 20160504_195439 20160504_195902 20160504_200026 20160504_200444 20160504_200512 20160504_200733

யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 2014/2015 இல் O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவித்தல்.20.05.2016 1:30Pm

IMG_6837 (Copy)

யா/சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் கிடைத்துள்ளது

Message to Intenet re Photocopier0001

அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா நூற்றாண்டு விழா அழைப்பிதழ்

20160414_08431920160414_084340

யா/பாலாவோடை இந்து தமிழ்க்கலவன் பாடசாலை விளையாட்டுப்போட்டி இன்று 07.04.2016 பாடசாலை அதிபர் திருமதி.ச.உலககுருநாதன் தலைமையில் நடைபெற்றது.

IMG_3576 (Copy)

இன்று 07.04.2016 பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டி பாடசாலை அதிபர் திருமதி.ச.உலககுருநாதன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

பிரதம விருந்தினர் திரு.ஆ. குமரேசமூர்த்தி (கோட்டக்கல்விப்பணிப்பாளர்,காரைநகர்) அவர்களும், சிறப்பு விருந்தினர் திரு.அ.சாந்தகுமார்(அதிபர்,யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்,காரைநகர்)  அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு.இ.திருப்புகலூர்சிங்கம்(கிராம சேவையாளர்,J/44) அவர்களும், திருமதி.ந.இராசமலர் (தலைவர்,முத்தமிழ் பேரவை மன்றம்) அவர்களும், திரு.ப.செல்வகுமார் (முகாமையாளர் இலங்கை வங்கி காரைநகர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

IMG_3686 (Copy) IMG_3687 (Copy)

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற வெற்றியாளர்கள் தின விழா(Winners Day)

DSC_6517 (Copy) (Copy)

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற வெற்றியாளர்கள் தின விழா(Winners Day) 

காரைநகர் இந்துக் கல்லூரியில் தேசிய மட்டத்தில் சாதனைப் பதிவுகளை ஏற்படுத்திய வெற்றியாளர்களைப்; பாராட்டி மதிப்பளிக்கும் வகையில் நடைபெற்ற வெற்றியாளர் தினம் நேற்று புதன்கிழமை (23.04.2016) அன்று யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாரும் பழைய மாணவியுமாகிய கலாநிதி.திருமதி.வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் அவர்களின் தலைமையில் கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

பிரதம விருந்தினராக வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் த.குருகுலராசாவும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார்,தேசிய கல்வி நிறுவகப் பிரதிப் பணிப்பாளர் நாயகம் றஞ்சித் சந்திரசேகர,தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் சு.சுந்தரசிவம் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் தேசிய,மாகாண மட்டங்களில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களும் அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களும் விருந்தினர்களால் பதக்கம் அணிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

பழைய மாணவர்களான கலாநிதி திருமதி.வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் அவர்களும், தொழிலதிபர் திரு.பரமநாதர் தவராசா (லண்டன்) அவர்களும் விழாவிற்கு நிதி அநுசரணை வழங்கி உதவியிருந்தனர்.


விழாவில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பினைக் கீழே காணலாம்.

தேசிய மட்டப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி வெற்றி பெற்று சாதனை

தேசிய மட்டப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி வெற்றி பெற்று சாதனை

காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய மட்டப்போட்டிகளில் அண்மையில் பங்கு பற்றி சாதனையாளர்களாகத் தடம்பதித்துள்ளனர். 

தனிஇசை, கிராமிய நடனம், இளம்பாடகர், அறிவிப்பாளர், தடகளப்போட்டியில் முப்பாய்ச்சல் ஆகிய போட்டிகளிலேயே மேற்படி பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தல் பங்குபற்றியிருந்தனர். 

செல்வன். S.கோகுலன் 19 வயதிற்குக் கீழ்ப்பட்ட முப்பாய்ச்சல் போட்டியிலும், செல்வன் K.விநோதன் அறிவிப்பாளர்களுக்கான போட்டியிலும்,  செல்வி. A.அமிர்தா தனிப்பாட்டு போட்டியிலும் தேசிய மட்டத்திலான போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.


இப்போட்டிகளில், கிராமிய நடனத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 

மேற்படி தேசிய மட்டப்போட்டிகளில் மாணவர்கள் பங்குபற்றுவதற்கான நிதி அநுசரணையை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டிகளில் பங்குகொண்ட, வெற்றி பெற்ற சாதனை மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரிய மணிகளையும் மற்றும் அதிபர், பதில்-அதிபர், பகுதித் தலைவர் ஆகியோரையும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது. 

காரை இந்துக் கல்லூரி க.பொ.த (சா-த) பரீட்சையில் முதன்மைப் பெறுபேறு 7 A 1 B 1C !

காரை இந்துக் கல்லூரி க.பொ.த (சா-த) பரீட்சையில் முதன்மைப் பெறுபேறு 7 A 1 B 1C !


கடந்த டிசம்பர் மாதம் 2015 இல் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன.


மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றி மிகச் சிறந்த  7 A, 1 B, 1C என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவி செல்வி குலமதி பாலேந்திரா காரைநகர் கோட்டத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை கொண்டு விளங்குகிறார்.

இந்துக் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியெய்திய முதல் ஆறு மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள் பெற்றுக்கொண்ட தர விபரமும் கீழே தரப்பட்டுள்ளன.

மாணவர் பெயர்                   பெறுபேறு

1.    குலமதி பாலேந்திரா      7 A, 1 B, 1C

2.    எஸ்.கிருஷ்ணா                3 A 4B  1 S

3.    எஸ்.கஜந்தன்                    3A, 3B 2 C 1 S

4.    கே.பிரியா                         3A 3B 2C 1 S

5.    கே.சிவதர்சன்                  3 A 2B 3 C 1S

6.    கே.சுகந்தினி                    3 A 3 C 2S


பரீட்சைக்குத் தோற்றிய 65 மாணவர்களில் 41 மாணவர்கள் சித்தியெய்தி (63.1%) க.பொ.த உயர்தர வகுப்பில் கற்பதற்கு தகமை அடைந்துள்ளனர்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரியமணிகளையும் ஆதாராமாக இருந்து வழிநடத்திவரும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், பதில்-அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் ஆகியோரையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.

தீவகக் கல்வி வலயத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது

தீவகக் கல்வி வலயத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது

 

    5A உம், அதற்குக் கூடிய A சித்திகளைப் பெற்ற மாணவர்கள்


1.    சுரேஸ்குமார் கஜந்தன்               7A   2C

2.    ரொபின்சியா தேவலிங்கம்       6A   2B   1C

3.    இரட்ணராசா பத்மலோஜன்      5A   3B   1C

4.    பிரதீபா சத்தியமூர்த்தி                5A   2B   2C

YARLTON

 

 

 

 

 

 

 

 

 

 

ஏனைய சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்


1.    ரோகினி சண்முகரட்ணம்            4A   4B   1S

2.    கிர்சிகா மோகநாதன்                     3A   3B   1C   1S   1W

3.    சிவகுமார் செந்தூரன்                     3A   2B   3C   1W

4.    சிற்சபேசன் சுகந்தன்                      3A   1B   4C   1W

5.    கேதீஸ்வரன் டிசாந்தன்                   3A   1B   2C   2S   1W

6.    சிவகுமார் நவநீதன்                          2A   3B   3C   1S

7.    ஸ்ரீஸ்குமார் சிவரஞ்சன்                    2A   2B   1C   3S   1W

8.    நிரோஜினி சோதிலிங்கம்               2A   2B   1C   3S   1W

9.    துவாரகா பரமேஸ்வரன்                  2A   1B   3C   2S   1W

YARLTON