மிகவும் கோலாகலமாக நடைபெற்ற
யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016
விழா ஆரம்பம்
யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 2016.10.23 ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாணக்கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி.பிரேமாவதி செல்வின் இரேனியஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.ச.பாஸ்கரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக சுவிஸ் பிரபல வர்த்தகர் (Yarltonian) திரு.சு.கதிர்காமநாதன் அவர்களும், காரைநகர் இ.போ.ச சாலை பொறியியல் பகுதி முகாரி; திரு.தி.ஏகாம்பரநாதன் (Yarltonian) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விழா ஆரம்பமாவதற்கு முன்னர் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இன்னிய பழம்பெரும் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் என்ற கல்லூரி மாணவர்களின் வரவேற்புடனும் மற்றும் மாணவத் தலைவர் அணி, பான்ட் இசைக்குழு சகிதம் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்ட காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது.
கல்லூரி அதிபர் ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்இ பெற்றோர்கள் ஆகியோர் வரவேற்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
தேசியக்கொடி ,கல்லூரிக்கொடி ஏற்றலுடன் விழா இனிதே ஆரம்பமானது.
கௌரவ விருந்தினர் திரு.சு.கதிர்காமநாதன் அவர்கட்கான கௌரவிப்பு
இம்முறை இவ்விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தவரும் கல்லூரிக்கு அளப்பெரிய சேவைகளைச் செய்தவருமான காரைமக்களால் சுவிஸ்நாதன் என அழைக்கப்படும் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்து மாலை அணிவித்து வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கல்லூரியின் சங்கீதத் துறை ஆசிரியை செல்வி லீலாவதி.இராஜரட்ணம் அவர்களின் தனித்துவம் மிக்க குரலினால் வாழ்த்துப்பா பாடப்பட்டு விழாவின் பிரதம விருந்தினரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது
அதிபர் தனது பரிசுத்தின அறிக்கையில் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் கல்லூரிக்கு செய்த சேவைகளைப்பாராட்டி தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
பரிசளிப்பு விழாவின் நிதி அனுசரணையாளர்
வைத்தியகலாநிதி (திருமதி) ஸ்ரீதாரணி விமலன் (கனடா) குடும்பத்தினர் அமரர் வை. காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக பரிசுத்தினத்திற்கான நிதி அனுசரணையாளராக 12 ஆண்டுகாலம் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் நடைபெறும் பரிசளிப்பு விழாவினால் மாணவர்கள் கல்வியில் ஊக்குவிக்கப்படுகின்றமை மட்டுமன்றி பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கட்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர் அதிபர் தனது அறிக்கையில் திருமதி ஸ்ரீதாரணி விமலன் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
ஞாபகார்த்தப் பரிசில்கள்
1.இப்பரிசுத்தின அறிக்கையில் ஞாபகார்த்தப்பரிசில்களை வழங்கிவரும் கனடாவில் வசிக்கும் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர்) அவர்களின் பிள்ளைகள் தமது தந்தையார் அமரர் கணேசன் ஞாபகார்தமாக தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடையும் மாணவர்கட்கான பரிசில்களையும்
2. Colombo Quiency Distibuters உரிமையாளர் திரு.S.கணநாதன் அவர்கள் தனது பேரனார் அமரர் கணபதிப்பிள்ளை (தலைப்பா) அவர்கள் ஞாபகார்த்தமாக க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.வெ.ஏகாம்பரநாதன் அவர்கள் கல்லூரியின் முகாமையாளர் A.T.ஆறுமுகம் ஞாபகார்த்தமாக அதிகூடிய புள்ளிகளைப்பெற்று பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கட்கும் ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி வருகின்றனர். இந் ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி வருபவர்கட்கு அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
நிறைவுரை
அதிபர் தனது நிறைவுரையில் கல்லூரியின் அரசு சார்பான செயற்றிட்டங்களுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கி வரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினை தெரிவித்தார்.
ஆறுமாதத்திற்கு ஒரு தடவை ரூ30000 பணத்தினை ஆரம்பக்கல்வியின் கற்றல் செயற்பாட்டிற்காக வழங்கி வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தினருக்கும் அதிபர் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.
பிரதம விருந்தினர் சிறப்பு விருந்தினர் கௌரவ விருந்தினர்களின் உரைகளைத்தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில் வழங்கப்பட்டன. மேலும் தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் ,க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறப்புத் தேர்சிகளைப் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கியும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் நிலை பெறும் மாணவருக்கு பதக்கங்கள் அணிவித்தும் கௌவிக்கப்பட்டனர்
பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்;கட்கு பணம் வைப்புச்செய்யப்பட்டு சேமிப்பு புத்தகம் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.175 மாணவர்கள் பரிசில்கள் பெற்றுக்கொண்டனர் 90% க்கு மேற்பட்ட பெற்றோர் விழாவில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இப் பரிசுத்தின அறிக்கையினை இணையத்தளங்களில் முழுமையாக பார்வையிடலாம்.
http://www.karainagar.com/pages/wpcontent/uploads/2016/10/prizedaybooks.pdf
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9355.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9366.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9371.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9375.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9381.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9385.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9391.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9399.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9412.jpg?resize=645%2C967)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9420.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9430.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9434.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9438.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9442.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9446.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9457.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9485.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9497.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9501.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9507.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9512.jpg?resize=645%2C967)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9540.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9559.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9575.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9603.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9624.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9654.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9682.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9690.jpg?resize=645%2C430)
????????????????????????????????????
![????????????????????????????????????](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2016/10/DSC_9710.jpg?resize=645%2C430)
????????????????????????????????????