சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் பத்தாவது ஆண்டு சிறப்புமலராகிய காரைநிலா – 2014 அறிமுகவிழாவும், நூலகப் பணி புரிந்தோருக்கான கௌரவிப்பும், காரைநகர் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்குதலும் தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் திருவாளர் சிவா மகேசன் தலைமையில் நடைபெற்றது. ஆளுமை விருத்தியே அபிவிருத்தியின் அடிப்படை என்பதற்கிணங்க:
1. எமது கிராமத்தில் நூலக விருத்தி, நூல்பதிப்பு, மாணவர் அறிவு சார் விருத்தி.
2. இளையோரின் விளையாட்டுத் திறன் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்கப்படுத்தல்.
3. காரை நிலா –2014 சிறப்பு மலர் மற்றும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மன்றக் கீதம் இறுவெட்டு வடிவில் வெளிவர உழைத்தவர்களை கௌரவித்தல்.
ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஓர் விழாவை காரைநகரில் ஏற்பாடு செய்ய சுவிஸ்- காரை அபிவிருத்திச் சபை தீர்மானித்துள்ளது.
இதன் முதலாவது முன்னேற்பாட்டுக் கூட்டம் 10.08.2014 அன்று காரை அபிவருத்திச் சபை நூலகத்தில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் 14 பேர் அடங்கிய விழாக் குழு தெரிவு செய்யப்ட்டது:
1. திரு. சிவா மகேசன்
இளைப்பாறிய அரசாங்கப் பரீட்சாதிகாரி
2. பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம்,
இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர்
3. பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை,
முன்னாள் பாடசாலை அதிபர்
4. திரு.வேலுப்பிள்ளை முருகமூர்த்தி
யாழ்ற்றன் கல்லூரி அதிபர்
5. கலாநிதி. கென்னடி விஐயரத்தினம்,
இணைப் பேராசிரியர், எதியோப்பியா
6. திரு. இராஜசிங்கம் திருப்புகலூர்சிங்கம்
கிராம சேவையாளர், காரைநகர்
7. திரு.அருணாசலம் வரதராஐன்
பிரதி அதிபர், சித்தி விநாயகர் வித்தியாலயம், கூமாங்குளம், வவுனியா
8. திரு. நல்லதம்பி கிருஷ்ணபவான்
ஆசிரியர், யாழ்ற்றன் கல்லூரி
9. திரு. வேலுப்பிள்ளை சபாலிங்கம்
செயலாளர் கலாநிதி.ஆ.தியாகராஜா அறிவியல் அறக்கட்டளை
10. திரு. கைலாசபிள்ளை நாகராஜா
பதிவேட்டுக் காப்பாளர், சாவகச்சேரி
11. திரு. சபாநடேசன் சிவரூபன்
தபாலக ஊழியர், காரைநகர்
12. திரு. ப. ஐங்கரன்,
சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர், காரைநகர் பிரதேச செயலகம்
13. திரு. நடராசா பாரதி
சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர், காரைநகர் பிரதேச செயலகம்
14. திரு.நாகலிங்கம் பாலகிருஷ்ணன்
முன்னாள் பனை அபிவிருத்திச் சபை உத்தியோகத்தர்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இரண்டாவது கூட்டம் 26.08.2014 மாலை 4.30 மணிக்கு யா.காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் திருவாளர். சிவா மகேசன் தலைமையில் இடம் பெற்றது. மேற்படி விழாவை 07-09-2014 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு கலாநிதி ஆ. தி. ம. ம. வித்தியாலய நடராசா மண்டபத்தில் நடாத்துவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எமது கிராமத்து மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கவும், அவர்கள் எமது கிராமத்தின் அபிவிருத்தியை, வரலாற்றை, புலம்பெயர்ந்தோர் வாழ்வை, கருத்துக்களை தெரிந்து கொள்ளு முகமாக, ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம், காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி, சுந்தரமூர்த்தி வித்தியாலயம், வியாவில் சைவ வித்தியாலயம் அகிய பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்களால் தெரிவு செய்யப்பட்ட 10ஆம் ஆண்டு, 11ஆம் ஆண்டு, 12ஆம் ஆண்டு வகுப்புக்களைச் சேர்ந்த தலா 5 மாணவர்கள் விகிதம் 40 பாடசாலை மாணவர்களுக்கு காரைநிலா-2014 புத்தகங்கள் வழங்குவதும், தெரிவு செய்யப்பட்ட காரைநகர் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
எமது கிராமத்தில் பல நீண்ட காலமாக மாணவர்களுக்காக பணியாற்றிவருபவரும், பல நூல்களைப் பதிப்பித்ததன் மூலம் சைவத்திற்கும், தமிழிற்கும் உழைத்து வருபவருமாகிய மதிப்புக்குரிய கலாநிதி சிவஸ்ரீ க. வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களையும், மாணவர்களின் சொத்தாகக் கருதப்படும் இரண்டு நூலகங்களை உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும் பங்கேற்றுப் பெரும் தொண்டாற்றி வரும் ஓய்வு பெற்ற மருத்துவர் (RMP) சி. நடராசா அவர்களும், மகாராணி புடவையக உரிமையாளர் திரு. இ. சோமசேகரம் அவர்களும் இந் நிகழ்வில் கௌரவிக்கப்படவிருக்கின்றனர்.
காரைநகர் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை சார்பாக
29.08.2014 காரை நிலா நூலறிமுக விழாக் குழுவினர்.
காரை நிலா மலர் அறிமுகவிழா
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்
பத்தாவது ஆண்டுச் சிறப்பு மலர்
இடம்
நடராசா ஞாபகார்த்த மண்டபம்
கலாநிதி ஆ. தி. ம. ம. வித்தியாலயம்,
காரைநகர்
காலம்;
2014- 09- 07 (ஞாயிற்றுக் கிழமை)
காலை 8;.30 மணி
தலைமை
பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம்
(இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர்)
விருந்தினர்கள்
வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி
வே. தருமரத்தினம் மற்றும்
பேராசிரியர் கலாநிதி
வை. பரமேஸ்வரன் M.Sc, Ph. D
முன்னாள் மருத்துவ பீடாதிபதி,
யாழ்.பல்கலைக்கழகம்
தாங்களும் வருகை தந்து
தாய் மண்ணைக் கௌரவிக்க வேண்டுகிறோம்
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே
நூலறிமுக விழாக் குழுவினர்
நிகழ்ச்சி நிரல்
மங்கள விளக்கேற்றல்
இறை வணக்கம்: செல்வி. லீலாவதி
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபைக் கீதம் இசைத்தல்
தமிழ் மொழி வாழ்த்து: கலாநிதி. ஆ. தி. ம. ம. வித்தியாலய மாணவிகள்
வரவேற்புரை: திரு. வேலுப்பிள்ளை முருகமூர்த்தி, அதிபர்
தலைமையுரை: பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம்
சிறப்புப் பிரதி வழங்கல்
நூலறிமுக உரை: கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்
நூற் திறனாய்வு: பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை
பதிலுரை: திரு. அருணாசலம் வரதராஜன், ஆசிரியர்
காரை நிலா மற்றும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபைக் கீதம் இறுவெட்டு வடிவில் வெளிவர பணியாற்றியவர்களுக்கான கௌரவிப்பு
நூலகத்துறையில் பணியாற்றியவர்களுக்கான கௌரவிப்பு
ஏற்புரை: இளைப்பாறிய மருத்துவர் சுப்பிரமணியம் நடராசா
விருந்தினர் உரைகள்
விளையாட்டுப் பொருட்கள் வழங்கல்
பட்டிமன்றம்: காரைநகர் வளர்ச்சிக்குப் பெரிதும் தேவையானது பொருள் வளர்ச்சியா? ஆளுமை வளர்ச்சியா?
நன்றியுரை: திரு. இ. திருப்புகலூர்சிங்கம்
நூலகத்துறையில் பணியாற்றியாற்றியமைக்காக
மாண்புறுவோர்:
1
பல அரிய நூற்களைச்
எழுதி, சேகரித்து, பதிப்பித்தமைக்காக
பண்டிதமணி கலாநிதி சிவ ஸ்ரீ. க. வைத்தீஸ்வரக் குருக்கள்
2
காரை அபிவிருத்திச் சபை
மாணவர் நூலக வளர்ச்சிக்குத்
தொண்டாற்றியமைக்காக
இளைப்பாறிய மருத்துவர் திருவாளர்
சுப்பிரமணியம் நடராசா (RMP)
3
கணபதீஸ்வரக் குருக்கள் நூலக
தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும்
தொண்டாற்றியமைக்காக
திருவாளர் க. சோமசேகரம்
மகாராணி புடவையக உரிமையாளர்
காரைநகர் இளையோரின்
நூல் வாசிப்புப் பழக்கத்தையும்
ஆளுமை வளர்ச்சியையும்
மேம்படுத்த மனங்கொண்டு
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின்
ஏற்பாட்டில் இடம்பெறும்
இவ் விழாவிற் கலந்து சிறப்பிக்குமாறு
உளமார்ந்த அன்புடன்
அழைக்கின்றோம்.
காரைநகர் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மற்றும்
29-08-2014 காரைநிலா நூலறிமுக விழாக் குழுவினர்.