Tag: France karai
24.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகின்ற காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தின் 70வது நிறைவு விழாவிற்கு பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி
காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தின் 70வது நிறைவு விழாவிற்கு
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின்
வாழ்த்துச் செய்தி
களபூமியில் புதிய உத்வேகத்துடன் மீண்டும் சனசமூக நிலையம் தன் பணியை புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களையும் உள்வாங்கி சிறந்த முறையில் நடைபெறுகின்ற தங்களின் விழாவினை பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகின்றோம்.
தங்கள் பணியானது சிறப்புடன் மீண்டும் மீண்டும் நடைபெற எல்லாம் வல்ல ஈழத்து தில்லைக் கூத்தனை பிரார்த்திப்போம்.
நன்றி
வாழ்க வளமுடன் என வாழ்த்திடும்
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினர்
பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பன்னிரண்டாவது ஆண்டு விழாவான காரைஸ்வரங்கள் – 2018 எதிர்வரும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
காரை நலன்புரிச்சங்கம் – பிரான்ஸ்
எமது மன்றத்தின் பன்னிரண்டாவது நிறைவையொட்டி இடம்பெறும் பன்னிரண்டாவது ஆண்டுவிழாவான காரைஸ்வரங்கள் – 2018 எதிர்வரும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை
SALLE JEANNE D ‘ARC
50, place de trocy
75018 paris métro – marx dormay linge 12
என்னும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகசிறப்பான முறையில் திரு க.மயில்வாகனம் தலைமையில் காலை 10.00மணிமுதல் 11.00மணிவரை சகமன்ற உறுப்பினர்களிற்கிடையேயான (பிரான்ஸ், சுவீஸ், பிரித்தானியா, கனடா) கலந்துரையாடல் இடம்பெற்று தொடர்ந்து 11.30மணியிலிருந்து 12.30 மணிவரை மதியபோசனவிருந்துபசாரம் இடம் பெற்று சரியாக 12.30 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.30 மணியளவில் நிறைவு பெறும்.
இவ்விழாவிற்கு சிறப்பூட்டுவதற்கான பிரதமவிருந்தினராக கனடாவிலிருந்து கனடா காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு சபாரத்தினம் பாலச்சந்திரன்அவர்களும் லண்டனிலிருந்து கௌரவவிருந்தினராக திரு இளையதம்பி தயானந்தா அவர்களும் மற்றும் பிரித்தானியா மன்ற உறுப்பினர்களும் அவர்களின் இளையோர் நிகழ்வுகளும் இவர்களுடன் சுவீஸ் மன்ற உறுப்பினர்களும் அவர்களின் இளையோர் நிகழ்வுகளும் ஜேர்மனியிலிருந்து அமரர் விஐயரத்தினம் கென்னடி அவர்களின் நினைவலைகளை பகிர்வதற்காக அவரின் சகோதரரான திரு விஐயரத்தினம் சாயிபாபா அவர்களும், திரு சங்கரப்பிள்ளை ரவீந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவர்களுடன் பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்க இளையோர்கள்,சிறார்கள் ஆகியோரின் களிப்பூட்டும் பல்சுவை நிகழ்வுகளும் மற்றும் திரு இளையதம்பி தயானந்தா அவர்களுடனான சிறப்பு கருத்தாடு களமும் இனிதே நடைபெறவுள்ளன. மேலும் இந்நிகழ்விற்கு
அனுசரனையார்களும், முன்னாள் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
எனவே மலர்ந்த இத்தமிழ்புத்தாண்டில் பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாநகரில் இடம்பெறவிருக்கும் காரைஸ்வரங்கள் 2018 நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
பிரான்ஸ்
காரை நலன்புரிச்சங்க நிர்வாகம்
isvaram. 1pdf
பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பன்னிரண்டாவது ஆண்டு விழாவான காரைஸ்வரங்கள் – 2018 எதிர்வரும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
காரை நலன்புரிச்சங்கம் – பிரான்ஸ்
எமது மன்றத்தின் பன்னிரண்டாவது நிறைவையொட்டி இடம்பெறும் பன்னிரண்டாவது ஆண்டுவிழாவான காரைஸ்வரங்கள் – 2018 எதிர்வரும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை
SALLE JEANNE D ‘ARC
50, place de trocy
75018 paris métro – marx dormay linge 12
என்னும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகசிறப்பான முறையில் திரு க.மயில்வாகனம் தலைமையில் காலை 10.00மணிமுதல் 11.00மணிவரை சகமன்ற உறுப்பினர்களிற்கிடையேயான (பிரான்ஸ், சுவீஸ், பிரித்தானியா, கனடா) கலந்துரையாடல் இடம்பெற்று தொடர்ந்து 11.30மணியிலிருந்து 12.30 மணிவரை மதியபோசனவிருந்துபசாரம் இடம் பெற்று சரியாக 12.30 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.30 மணியளவில் நிறைவு பெறும்.
இவ்விழாவிற்கு சிறப்பூட்டுவதற்கான பிரதமவிருந்தினராக கனடாவிலிருந்து கனடா காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு சபாரத்தினம் பாலச்சந்திரன்அவர்களும் லண்டனிலிருந்து கௌரவவிருந்தினராக திரு இளையதம்பி தயானந்தா அவர்களும் மற்றும் பிரித்தானியா மன்ற உறுப்பினர்களும் அவர்களின் இளையோர் நிகழ்வுகளும் இவர்களுடன் சுவீஸ் மன்ற உறுப்பினர்களும் அவர்களின் இளையோர் நிகழ்வுகளும் ஜேர்மனியிலிருந்து அமரர் விஐயரத்தினம் கென்னடி அவர்களின் நினைவலைகளை பகிர்வதற்காக அவரின் சகோதரரான திரு விஐயரத்தினம் சாயிபாபா அவர்களும், திரு சங்கரப்பிள்ளை ரவீந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவர்களுடன் பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்க இளையோர்கள்,சிறார்கள் ஆகியோரின் களிப்பூட்டும் பல்சுவை நிகழ்வுகளும் மற்றும் திரு இளையதம்பி தயானந்தா அவர்களுடனான சிறப்பு கருத்தாடு களமும் இனிதே நடைபெறவுள்ளன. மேலும் இந்நிகழ்விற்கு
அனுசரனையார்களும், முன்னாள் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
எனவே மலர்ந்த இத்தமிழ்புத்தாண்டில் பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாநகரில் இடம்பெறவிருக்கும் காரைஸ்வரங்கள் 2018 நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
பிரான்ஸ்
காரை நலன்புரிச்சங்க நிர்வாகம்
isvaram. 1pdf
பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்
பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்
எதிர்வரும் 14.05.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் 183 rue des chateau de rentier 75013 paris என்னும் இடத்தில் பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு காரை அபிவிருத்திச்சபையின் தற்போதைய தலைவர் திரு T.சிவாமகேசன் அவர்கள் வருகைதந்து சிறப்பிக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் காரைநகரிற்கான தேவைகளும் மன்றங்களின் பணிகள் பற்றியும் கலந்துரையாடவுள்ளார்.
நன்றி
‘காரை ஸ்வரங்கள்-2016’ வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றம் வாழ்த்துகின்றது!
'காரை ஸ்வரங்கள்-2016' வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றம் வாழ்த்துகின்றது!
எமது சகோதர சங்கமான பிரான்ஸ் – காரை நலன்புரிச் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு சிறப்பு விழாவான 'காரை ஸ்வரங்கள்-2016' இற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.
புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் எமது காரை உறவுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய பிரான்ஸ் – காரை நலன் புரிச் சங்கம்; ஒரு தசாப்தத்தைக் கடந்து அதன் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல் கல்லை அடைந்திருப்பதை அறிந்து எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாம் பிறந்து வளர்ந்த ஊரின் நினைவுகளை மீட்டவும், எமது கலை பண்பாட்டு அடையாளங்களை எமது அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும், எமது ஊர் வாழ் உறவுகளின் நலன்களுக்கு உதவிடவும் பல திட்டங்களை நிறைவேற்றி பத்தாவது ஆண்டில் வெற்றி நடைபோடும பிரான்ஸ் – காரை நலன்புரிச் சங்கத்தின் பணிகளை கனடா வாழ் காரை உறவுகளின் சார்பில் கனடா – காரை கலாச்சார மன்றம் பாராட்டி வாழ்த்துகின்றது.
உலகெங்கும் பரந்து வாழும் எமது உறவுகள் ஒன்றுகூடி மகிழ்வதற்கும், எமது இளம் தலைமுறையினர் தமது மொழி, கலைத் திறன்களை வெளிப்படுத்தி அரங்கேற்றுவதற்கும் இவ்வாறான விழாக்கள் உதவுகின்றன.
அத்தகைய சிறப்புமிக்க விழாவான 'காரை ஸ்வரங்கள் – 2016' பொலிவு பெற்று வெற்றி விழாவாக விளங்க எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துகின்றோம்.
நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்
பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கம் நடாத்தும் பொதுக்கூட்டம் – 2015
பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கம் நடாத்தும் பொதுக்கூட்டம் – 2015
பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கம் நடாத்தும் பொதுக்கூட்டம் எதிர்வரும் மார்கழி மாதம் 25ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்று எமது மன்றத்தினால் நடாத்தப்படவுள்ள 10வது ஆண்டுவிழாவிற்கான ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அத்தருணம் பிரான்ஸ் வாழ் காரை மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வரவேற்கின்றோம்.
நேரம் : பிற்பகல் 3 மணி முதல் பிற்பகல் 7 மணிவரை
இடம் : centre des 2 moins
185, rue du château des rentier
75013 Paris
metro : place d'italie
தொடர்புகளுக்கு : காரைநலன்புரிச்சங்கம்
S. தவபாலன் – 06 15 33 46 36 பிரான்ஸ்
K. சுகிர்தராஐh 06 34 17 18 10
சென்ற ஞாயிற்றுக்கிழமை 31.03.2013 அன்று பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினரால் கொண்டாடப்பட்ட புதிர் பொங்கல் நிகழ்வு
சென்ற ஞாயிற்றுக்கிழமை 31.03.2013 அன்று பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினரால் கொண்டாடப்பட்ட புதிர் பொங்கல் நிகழ்வு
கண்ணீர் அஞ்சலி KWS-UK,CKCA,SKDB,KWS-FR,AKCA
கண்ணீர் அஞ்சலி
Dr.சபாபதி
சபாரத்தினம்(குஞ்சு)
காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை
வசிப்பிடமாகவும் கொண்ட னுச.சபாபதி சபாரத்தினம்
21.03.2013 வியாழக்கிழமை சிவபதமடைந்துவிட்டார்.
அன்னார் கடந்த இரண்டு சகாப்தங்களாக சிறப்பாக
இயங்கிவரும் காரை பிரித்தானியா நலன்புரிச் சங்கத்தின்
ஸ்தாபகரில் ஒருவரும், பிரான்சு காரை நலன்புரிச் சங்க
ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.
அன்னார் காரைநகரின் கல்வி, பொரளாதாரம், அபிவிருத்தி
தொடர்பாக இறுதி மூச்சுவரை அயராது செயற்பட்டுவந்தார்.
அன்னாரது இழப்பு எமக்கும் காரைநகர் மக்களுக்கும்
ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.
அன்னாரது பிரிவால் துயறுற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்.
நண்பர்கள், உறவினர்களிற்கு எமது ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல ஈழத்து
சிதம்பர சௌந்தராம்பிகா சமேத சுந்தரேஸ்வரப்
பெருமானைப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
காரைநகர் அபிவிருத்தி சபை
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம்
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம்
கனடா காரை கலாச்சார மன்றம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
அவுஸ்திரேலியா காரை கலாச்சார மன்றம்
காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு .T .சிவாமகேசன் அவர்களுடனான கலந்துரையாடல்.
பிரான்ஸ் – காரைநகர் அப்புத்துரை பாடசாலை பழைய மாணவர்களின் அன்பளிப்பு
யா/வலந்தலை தெற்கு அ .மி .த .க.பாடசாலையின் (அப்புத்துரை பள்ளிக்கூடம்) பழைய மாணவர்சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க , இப் படாசாலையின் பிரான்ஸ் வாழ் பழைய மாணவர்கள் தங்கள் மனமுவர்ந்த பங்களிப்பினை (பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்க ஆதரவுடன்) வழங்கி உள்ளார்கள்.