கண்ணீர் அஞ்சலி சுவிஸ் காரை அபிவிருத்தி சபை

Dr.Sabaகண்ணீர் அஞ்சலி
காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி சபாபதி சபாரத்தினம் 21.03.2013இல் வியாழக்கிழமை சிவபதமடைந்தார் என்ற செய்தியை கேட்டு சுவிஸ் காரை அபிவிருத்தி சபை ஆழ்ந்த துயர் பகிர்ந்து கொள்கின்றது!
அன்னார் சமூகஆர்வலரும், எமது ஊரின் புலம்பெயர் மன்றங்களின் ஆலோசகரும், பாடசாலைக் கல்வியின் வளர்ச்சிக்கு முன்நின்று உழைத்தவரும், 2007;;ஆம் ஆண்டு எமது சபையின் ஓன்று கூடலில் கலந்து கொண்டு பல ஆலோசனைகள் வழங்கியவருமாகிய அமரர் கலாநிதி சபாபதி சபாரத்தினம் அவர்களின் இழப்பு எமக்கும், மாணவர்களுக்கும், காரைநகருக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்!!
அன்னாரது இழப்பால் துயறுற்றிருக்கும் அவரது குடும்பத்தவர், மாணவர்கள், நண்பர்கள், உறவினர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து துயர் பகிர்ந்து கொள்கின்றோம்!!!
அன்னாரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பர சௌந்தாரம்பிகா சமேத சுந்தரேஸ்வரப் பெருமானைப் பிரார்த்தித்து நிற்கின்றோம்!!!!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள