சுவிஸ் காரை அபிவிருத்திசபையினால் சில உதவிப்பொருட்கள் காரைநகருக்கு அனுப்பிவைக்கப்படவிருக்கின்றன

சுவிஸ் காரை அபிவிருத்திசபையினால் சில உதவிப்பொருட்கள் காரைநகருக்கு அனுப்பிவைக்கப்படவிருக்கின்றன

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை கடந்தவருடம் (30-09-2012)ல் நடைபெற்ற மக்கள் சந்திப்பும், ஆலோசனைக்கூட்டத்தில் காரைநகர் ஆதாரவைத்தியசாலைக்கு சில உதவிகள் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எமது சபையின் தலைவர் திரு பூபாலபிள்ளை விவேகானந்தா வைத்தியசாலை அதிகாரி திரு டாக்டர் Majumudeen அவர்களுடன் தொடர்புகொண்டு அங்குள்ள குறைநிறைவுகளை கேட்டறிந்தார்.  டாக்டர் Majumudeen நோயாளர் பாவிப்பதற்கான  சக்கரநாற்காலிகள் தேவை எனக்கேட்டிருந்தார் அதற்குகிணங்க தற்பொழுது 4 சக்கரநாற்காலிகளை அனுப்புவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.  அத்துடன் மாணவர் நூல்நிலயத்திற்கு தேவையான எமது சபையால் சேகரிக்கப்பட்ட நூல்களும் அனுப்பி வைக்கப்பட விருக்கின்றன.
அன்பார்ந்த சுவிஸ்வாழ் காரைமக்களே! காரைநகர் அபிவிருத்தி சபைக்கு அனுப்பிவைக்கப்படவிருக்கின்ற அனைத்து பொருட்களும் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றவை. நீங்களும் உங்களால் இயன்ற பொருட்களை எமது சபைக்கு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஒரு பொதி அனுப்புவதற்கான செலவு 150.00Sfr. இந்த செலவினை ஏற்றக்கொளும் அன்பர்கள் சபையுடன் தொடர்பு கொள்ளவும். அனுப்பிவைக்கப்படவிருக்கின்ற பொருட்களின் நிழற்படங்களை கிழேகாணலாம்.
நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.

035 036 037 068