முதுசங்களைத் தேடி’ நூல் வெளியீட்டுத் திட்டம் -2013

முதுசங்களைத் தேடி’ நூல் வெளியீட்டுத் திட்டம் -2013
புலம்பெயர் காரை அமைப்புக்களால் கூட்டாக திட்டமிடப்பட்டிருக்கும்இ ‘முதுசங்களைத் தேடி’ வருடாந்த நூல் வெளியீட்டுக் கருத்திட்டத்தின்  இரண்டாம் ஆண்டாகிய 2013 இல்  1967 ஆம் ஆண்டு வெளியான சைவமகாசபைப் பொன்விழா மலர் மீள்பதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இத்தகவலை பலரும் அறிந்திருப்பீர்கள் என நாம் நம்புகிறோம். பொன்விழா மலரின் முதலாம் பதிப்பில் ஐம்பதிற்கும் மேற்பட்ட விளம்பரங்கள் குறித்த மலரில் இடம் பெற்றிருந்தன. முதல் பதிப்பில் இடம்பெற்ற விளம்பரங்களின் பக்கங்களில் தற்போது புதிய விளம்பரங்கள் சேர்க்கப்படுகின்றன.
இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள நலன்விரும்பிகளும் புரவலர்களும் விளம்பரங்களை குறித்த நாட்டின் காரை அமைப்புக்களுக்கு தற்போது வழங்கி வருகிறார்கள். இவ்வறிவித்தல் விளம்பரம் தர விரும்பும் ஏனைய அனைவர்க்குமான பகிரங்க கோரிக்கையாக முன் வைக்கப் படுகிறது. விளம்பரம் தர விரும்பும் அன்பர்களில் இலங்கையில் இருப்பவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபைக்கும்  காரை சங்கங்கள் செயற்படும் நாடுகளில் இருப்போர் குறித்த சங்கங்களுக்கும் இது குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏனைய நாடுகளில் இருப்போர் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தை அல்லது காரைநகர் இணையத்தினை  416 642 4912 தொடர்பு கொள்ளவும்.
நன்றிகளுடன்
முதுசங்களைத் தேடி நூல் வெளியீட்டுக் குழு.