சுவிஸ் காரை அபிவிருத்தி சபை இரண்டு குடும்பம்பங்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கி வருகின்றது

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை இரண்டு குடும்பம்பங்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கி வருகின்றது.

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை தலைவர்  2011 ஆண்டு புரட்டாதிமாதம்  காரைநகருக்கு சென்றபொழுது அங்குள்ள சில குடும்பங்களின் வாழ்கைமுறையை கண்டறிந்து அதில் சிதம்பராமூர்த்தி கேணியடியை சேர்ந்த குடும்பதலைவனை இழந்த 5பெண்பிள்ளைகளின் தாயார் சக்திவேல் நகுலேஸ்வரி அவர்களுக்கும், எமது தாயகத்தில் நடந்த கொடியபோரினால் ஒரு காலை இழந்த சடையாளி பெரியமணலை சேர்ந்த  செல்லையா சிவகுமார் அவர்களுக்கும் உதவிகள் தேவையென கிராமசேவகர் மூலம் உறுதி செய்யப்பட்ட பின்னர்  எமது நிர்வாக சபை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து ஒவ்வரு குடும்பத்திற்கும்   மாதாந்தம் 5000 ரூபாவும்,   செல்லையா சிவகுமாருக்கு சுயதொழில் ஊக்கிவிப்பு தொகையாக 50000 ரூபாவும் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை நிர்வாக சபை எடுத்த முடிவுகளுக்கு அமைய வியாவில் ஐயனார் கோயில் தேவஸ்தானம் ஊடாக கடந்த வருடம் தைமாதம் (1-01-2012)இல் இருந்து  மாதாந்த ஊக்குவிப்ப தொகையை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
செயற்குழு உறுப்பினர்கள்

சுவிஸ் வாழ் காரை மக்கள்.